P.W.D அல்லது பாதையில் வேலை செய்யும் தமிழன்
கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும்போதும் கட்டிடத்தூண்களை எழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும்போதும் வெள்ளைக்காரர்களுக்குக் கங்காணிகள் ஒரு "மந்திரம்" சொல்லிக்கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்கு தயாராகினார்கள்.
மலேஷியத்தமிழர்களை பலவந்தமாக ஜப்பானியர்கள் இழுத்துச்சென்று ரயில் பாதை அமைத்தார்கள். மிகக்கொடூரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக்காடுகளில் அகால மரணங்களால், ஆயிரமாயிரம் பேர் புதையுண்டுபோன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிமானிகளால் வெளிவரத்தொடங்குகின்றன.
இம்முறை தாயகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்த சிறுகதை ஒன்று.
இதனைப்படித்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாயிருந்தது.
தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகைக்கு மிக்க நன்றிகள்.
இதனைப்படித்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாயிருந்தது.
தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகைக்கு மிக்க நன்றிகள்.






6 பிற்சேர்க்கைகள்:
இக்கதை எதையோ அழித்தெழுத முயலுவதாகத் தெரிகிறது
உங்களுக்கு எப்படி மயுரன்?
அசரீரி,
அழித்தெழுதுதல் என்பதால் பொதுவாகக்குறிப்பிடப்படுவது ஏதோ ஒரு செய்தியை அதன் உண்மையை மறைத்து வேறொரு விதமாகச் சொல்வது, அல்லது உண்மையைத்திரித்து வேறு விதமாகச்சொல்வது என்பதுதானே?
இந்த அர்த்தத்திலேயே உங்கள் கருத்தை நான் விளங்கிக்கொண்டேன்.
அப்படி ஏதாவது உண்மைத்தகவலை மறைத்து அல்லது திரித்து இக்கதை சொல்ல முனைந்திருந்தால் அதுபற்றி நீங்கள் நேரடியான வார்த்தைகளிலேயே சொன்னால் நானும் ஏனைய வாசகர்களும் கதை விட்டுப்போன பகுதிகளையும் பார்க்கலாமல்லவா?
அழித்தெழுதுதல் என்ற சொற்றொடரால் நீங்கள் குறிப்பிட முனைந்தது வேறேதாவது விஷயத்தை என்றால் மன்னிக்கவும்.
இக்கதை சொல்ல வருகின்ற வரலாற்றை முழுக்கவே மறுப்பதான அர்த்தத்துடன் இதை நான் சொல்லவில்லை, ஏனெனில் வராலாற்றை மறுத்துரைக்குமளவு இது பற்றிய இதுவரைக்குமான எனது தேடல் போதாது என்பதே உண்மை.
உண்மையில் 'சொல்லப்படாத உண்மையையும் சேர்த்து திரும்ப வரலாற்றை எழுதுதல்' என்பதற்கு எந்தச் சொல்லைப் பயன்படுத்திச் சொல்வதென்பது தெரியவில்லை.
அதற்கு அழித்தெழுதுதல் என்பது பொருத்தமில்லாத அர்த்தத்தைத் தந்தால் அப்பிரயோகத்துக்காக மன்னியுங்கள்..
இக்கதையை ஏன் அவ்வாறு புரிந்து கொண்டேன் என்றால் இந்தியத் தமிழ் சகோதரர்கள் கூலிவேலைக்காக நமது நாட்டுக்கு வந்தார்கள் என்பதே இக்கதையை வாசிக்கும் வரை எனக்குத் தெரிந்த வரலாறு, அதன்பின்தான் அவர்கள் மிகமோசமான முதலாளியத்தினால் பிழியப்பட்டார்கள் என்றும், புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் அறிந்து வைத்திருந்தேன்.
ஆனால் அதிகாரத்தாலும் வன்முறையாலும் ஏமாற்றப்பட்டும்தான் அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள் என்று இக்கதையினூடாகத்தான் அறிய முடிந்தது.
(அதுவும் கூட தவறான புரிதலாகவே இருக்கலாம் )
நமது நாட்டிற்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் ஒரு புதிய அறிவாகவே எனக்கு இக் கதையினூடாகக் கிடைத்தது.
அத்தோடு
"இன்று மெல்ல மெல்ல மனிதாபிகளினால் வெளிவரத் தொடங்குகின்றன"
என்று சொல்லப்படுவதும் எதைச் சொல்ல வருகிறது என்பது கேள்வியாகவே இருக்கிறது.
இவ்வரிகள் கதையில் அழுத்திச் சொல்லப்படுவதானது இத்தனை காலமும் இவ்வுண்மைகளைச் சொல்லாமல் இருந்த மனிதாபிமானிகளைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் புரியப்படலாமல்லவா.
ஒரு பிரதியில் எல்லா வகையான புரிதலுக்கும் இடமிருப்பது இயற்கைதானே..
இதனூடாக நான் இன்னும் இவ்விடயம பற்றி அறிந்து கொள்ளவே விரும்புகிறேன்.
இத்தகைய கொடுமைகளுடன் கூடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட சிறுகதையை அறிமுகப்படுத்தியமை பாரட்டுக்குரியது. தாயகம் இன்னும் படிக்கவில்லை. எனவே கருத்துக் கூற முடியவில்லை.
நண்பன் மயூரனுக்கு
மலையகத் தமிழரின் நிலை இன்னமும் மாறவில்லை அன்று வெள்ளைக்காறர் இன்று சிங்களவர்
இதை பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்
சிவஜோதி
//மலையகத் தமிழரின் நிலை இன்னமும் மாறவில்லை அன்று வெள்ளைக்காறர் இன்று சிங்களவர்//
come on, does it make any sense to blame it on the 'sinhalese'? When are we gonna get rid of this grotesque political habit of ‘ethnicizing’ everything? Are we to forget that G. G. Ponnampalam’s “Tamil” Congress and other “Tamil” elites in the United National Party voted for the Citizenship Act of December 1948 which deprived the plantation workers of their right to vote and thus committed an unforgivable historical betrayal to the up-country Tamils? Strong opposition to this bill came from the major left parties - the Trotskyite L.S.S.P. led by Dr. N. M. Perera, the Bolshevik-Leninist party of Dr. Colvin R. De Silva, and the Communist party led by Mr. Pieter Keuneman. Most M.P.'s from these parties were Sinhalese.
it is the plantation management and the opportunistic politicians like Thondaman and Chandrasekaran that are responsible for the plight of the plantation workers…
Post a Comment