April 21, 2008

P.W.D அல்லது பாதையில் வேலை செய்யும் தமிழன்

கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும்போதும் கட்டிடத்தூண்களை எழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும்போதும் வெள்ளைக்காரர்களுக்குக் கங்காணிகள் ஒரு "மந்திரம்" சொல்லிக்கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்கு தயாராகினார்கள்.

மலேஷியத்தமிழர்களை பலவந்தமாக ஜப்பானியர்கள் இழுத்துச்சென்று ரயில் பாதை அமைத்தார்கள். மிகக்கொடூரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக்காடுகளில் அகால மரணங்களால், ஆயிரமாயிரம் பேர் புதையுண்டுபோன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிமானிகளால் வெளிவரத்தொடங்குகின்றன.


இம்முறை தாயகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்த சிறுகதை ஒன்று.
இதனைப்படித்தவுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமாயிருந்தது.

தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகைக்கு மிக்க நன்றிகள்.







April 11, 2008

The truth behind the WTO

இதற்கு முந்தைய எனது பதிவில் இந்தியாவில் நிகழும் நன்னீர் முரண்பாடுகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் குறித்துக் கேள்விகள் எழுப்பியிருந்தேன்.

அங்கே அறிவன் என்பவர் அளித்த பின்னூட்டம் கவனத்தைக் கவர்ந்தது.

//ஆனால் நன்னீர் அரிய பொருளாக அறியப்பட்டு விட்ட உலகச் சூழலில் இது போன்ற நதியை விற்கும் சூழல் எல்லா நேரத்திலும் நடக்க இயலாதெனவே நான் நம்ப விரும்புகிறேன்.
இந்த பயங்களை மீறி இவை நடக்கும் என்றால்,தேசியமோ,மாநிலமோ எல்லாம் பொய்யெனவாகும்.//


இது தொடர்பாகப் பல விஷயங்களை உரையாடமுன் சிறு நிகழ்படம் ஒன்றினைப் பார்க்கலாம்.





"உலக வர்த்தக மன்றம்" அல்லது "உலக வணிக அமையம்" .

உலகின் உண்மையான நடப்பு "நிலவரமான" புதுமூலதனவாத நிலவரத்தின் குறியீடு.

சின்னஞ்சிறிய குறிப்புக்கள் சில:

* WTO 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்டது

* உலக நாடுகளின் உள்ளூர் சட்டதிட்டங்கள் உலகளாவிய திறந்த சந்தையோடு முரண்படுமானால் அவற்றைக்களைவதற்கும், உலகத்துக்கான வர்த்தக ஒப்பந்தங்களைத்தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்குவதற்குமான நிறுவனமே wto.

* இவ்வமையத்தின் ஒப்பந்தங்களுக்கு பணிய மறுப்பவர்கள் மீதான தண்டனைகளையும் இது வழங்கி வருகிறது.

* ஒப்பந்தங்கள் பெரும்பாலும் பெருவணிக நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவற்றை உலகநாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.

April 7, 2008

ஹோகனேக்கல், நன்னீர் அரசியல், சில கேள்விகள்.

இந்தக் காவிரிப்பிரச்சினை, ஹோகனேக்கல் பிரச்சினை எல்லாம் வணிகத் திரைத்துறைக் கலைஞர்களின் தலையீடுகளுடன் மிகப்பிரபலமாகிப்போய்விட்டன.

இதில் பெரும்பாலும் தமிழ்நாடு சார்பான செய்திகளே, ஊடகங்கள் வழியாக மட்டும் இப்பிரச்சினையை அவதானித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தரப்படுகின்றன.

Sometimes in April படத்தில் ஒரு வசனம் வரும் "Ok, but.. Who are the good guys?" என்று. அப்படித்தான் கேட்கவேண்டும்போலிருக்கிறது. ஆனால் என்னிடமுள்ள இந்தக்கேள்வி, கன்னடக்காரர்களா தமிழ்நாட்டுக்காரர்களா good guys என்பதை அடிப்படையாகக்கொண்டதல்ல.

1. ஹோகனேக்கல் பகுதியில் நிறுவப்படவுள்ள தமிழக அரசின் குடிநீர்த்திட்டத்துக்கு ஜப்பான் பணம் கொடுக்கிறது. இதில் எதிர்காலத்தில் ஜப்பானின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?

2. இப்போ உள்ளதுபோல நதிநீர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் , ஏதாவது பிரச்சினை வந்தால் சுப்ரீம் கோர்டில் வழக்குப்போடலாம். எல்லோரும் கேட்பதுபோல தேசியமயமாக்கி விட்டால் இப்படி வழக்குப்போட முடியாது. வரலாற்றில் நிறையத்தடவைகள் மத்திய அரசு தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறது. நாளைக்கு இந்த விசயத்திலும் ஏமாற்றினால் என்ன செய்வது? அதை இப்பவே செய்ய முடியாதா?

3. 21ம் நூற்றாண்டின் உலகளாவிய நன்னீர் அரசியலுக்கும் இப்போது அடிக்கடி வெடிக்கும் இந்திய மாநிலங்களுக்கிடையேயான நன்னீர் முரண்பாடுகளுக்குமிடையேயான தொடர்புகள் என்ன? (நன்னீரை நீலத்தங்கம் என்கிறார்கள். எதிர்கால உலகின் போர்களின் அடிப்படை நன்னீராகத்தான் இருக்கப்போகிறது என்கிறார்கள். இதை வைத்துத்தான் கேட்கிறேன்)

4. நதி நீரைத் தேசிய மயமாக்கு என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும் என்று எவராவது மறைமுகமாக எதிர்பார்க்கின்றனரா?

5. நதிநீரைத் தேசியமயமாக்கி விட்டால், நாளைக்கு நதிநீரைத் தனியார் மயமாக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே இலகுவாகத் தீர்த்துவிடலாம் என்ற எண்ணம் எவருக்கும் இருக்கிறதா? (தேசியமயமாக்கற் பொருளாதாரக்கொள்கை பின்னர் எவ்வாறு யாருக்கெல்லாம் சேவகம் செய்தது என்பதை நினைவிற்கொள்க)

6. நதிநீர் இணைப்பு, நதி நீர் தேசிய மயமாக்கல் இரண்டும் இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கான வழிமுறைகளாகப்போதிக்கப்பட்டு மிகக்கவர்ச்சிகரமாகப் பரப்புரைக்கப்படுகிறதே, இவையிரண்டும் இந்திய மக்களுக்கு நன்மைதருமா அல்லது வேறேதாவது நிகழ்ச்சிநிரலின் எதிர்பார்ப்புக்களா?

7. சேது கால்வாய்த்திட்டத்துக்குள் ராமன் வந்ததுபோல, இந்தப்பிரச்சினையிலும் தமிழர் - கன்னடர் முரண்பாடு தூக்கிக்கொண்டாடப்படுவது அடிப்படைப்பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் சதிவேலையா?


தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வாயிலாக மட்டுமே உங்கள் நன்னீர்ப்பிரச்சினையை அவதானித்துவரும் ஓர் ஈழத்தமிழனுள் எழுந்த கேள்விகள் இவை.

இதற்கான பதில்களை இப்பிரச்சினைக்கு அண்மையில் இருக்கும், இப்பிரச்சினையின் அரசியலை அணுகி அவதானிக்கும், மக்கள் நிலைச்செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டிருக்கும் அன்பர்கள் மட்டுமே மிகத்தெளிவாகத்தர முடியும்.

கடந்த இரு நாட்களாக இந்தப்பின்னணி அரசியல்கள் குறித்து ஏதேனும் பதிவுகள் வருமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

கர்நாடகாவா தமிழ்நாடா என்பதைத்தாண்டி, திரையுலகத்தினரின் அதிரடிப்பேச்சுக்கள் என்பதைனைத்தாண்டி, தமிழுணர்வு என்பதைத்தாண்டி என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.

தமிழ்சசி, தமிழரங்கம் போன்ற பதிவுகளில் கூட இப்பிரச்சினை பற்றிய அலசல்களைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன்..

வெங்கட் சொன்னதுபோல எசப்பாட்டுக்களை எதிர்பார்க்கிறேன் :-)

மேலும் படிக்க:

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து - தமிழரங்கம்

காலத்தை வென்று நிற்கும் கீதை - காலைச்செய்தியாய் ஒரு கவிதை.

இன்றைக்கு காலை எழுந்தவுடனேயே சுவையான செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

ஈராக், ஆப்கான் செல்லும் பிரிடிஷ் படையினருக்கு இந்துக் குரு ஒருவரால் பகவத் கீதை உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

"I tell them, 'God has given you an opportunity to protect your country and maintain peace in the world'. They need to know they are not killing anybody but just performing a duty,"


என்கிறார் அந்தக் குரு.
ஆகா... ஆகா..

இன்னும் சொல்கிறார்

"Duty is our priority. It's our karma, and we have to face it."


இந்துப்புராணங்களினதும் அவற்றின் அடியோடும் அதிகாரக்கூட்டத்துக்கு சார்பான கழிசடைகெட்ட தத்துவத்திரட்டுக்களினதும் முகத்திரை கிழிக்க எத்தனையோ பேர் எழுதிய பேசிய எத்தனையோ விளக்கங்களை படித்தும் கேட்டுமிருக்கிறேன்.

ஆனால் இந்தச்செய்தியை விட இவ்வளவு சுருக்கமாகவும் கவித்துவமாகவும் சுருக்கென்றும் பகவத் கீதையின் உண்மை முகத்தை வேறெதுவும் தோலுரித்துவிடவில்லை.

இன்றும் வாழ்கிறது பகவத் கீதை...
இன்றும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது...

அன்று தேவைப்பட்ட அதே கூட்டத்தின் சந்ததிகளுக்கு...

கவிதை... கவிதை...