January 1, 2009

வருக: விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல்

விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல்
1-1-2009 வியாழக்கிழமை
பிற்பகல் 4.30 மணிக்கு
கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டப்பத்தில்


50வது கியூப தேசிய விடுதலை தினமும்
ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும்


தலைமை: இ. தம்பையா (மத்திய இணைப்பாளர், சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையம்)

வரவேற்புரை: ஐ. லோகநாதன்

சர்வதேச சமாதான கீதம்: த. பிரதீஸ்

சிறப்புரைகள்:

வசந்த திசாநாயக ( பீப்பிள்ஸ் மார்ச்)
பேராசிரியர் சி. சிவசேகரம்
தெ. ஞா. மீநிலங்கோ

பாடல்கள்:

த. மிருதுளா
த. பிருத்துவி
தே. கலாலக்ஷ்மி
செ. கௌரி
சோ. தேவராஜா
சுனந்த புஸ்பகுமார (நடமாடும் கலைஞர்கள் குழு)
அக்கினிமா குழுவினரின் இசை நிகழ்ச்சி
ரசிகா, காந்தி (எதிர்காலத்தின் நண்பர்கள்)


நன்றியுரை: செ. நந்தமோகன்


தேனீர் விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


ISPF
S47, 3rd Floor,
CCSMC,
Colombo - 11

4 பிற்சேர்க்கைகள்:

said...

நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி தொடர்பான பெரும் மனவருத்தம் எனக்கு இருந்து வந்தது.

நாட்டின் முற்போக்கான சிறு இடதுசாரிக்குழுக்கள் சேர்ந்து, ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுடன் இணைந்து கொண்டாடும் ஒரேயொரு நிகழ்வாக இதுவே இருந்து வந்திருக்க முடியும்.

அதுவும் தலைநகரில் இடம்பெற்றுவருகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அழைப்பு அனுப்பப்பட்டும் கியூப தூதுவராலயப்பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்வதில்லை.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே வீ பீ) நடத்தும் நிகழ்ச்சிக்கு அவர்கள் தவறாமல் கலந்துகொள்வதுண்டு..

இதற்கு நேரடியாக எனது வருத்தத்தினை தம்பையா அவர்களுக்கும் தொடர்புள்ளவர்களுக்கும் தெரிவித்து வந்துள்ளேன்.

இம்முறை இது தொடர்பாய் "சண்டை பிடிக்கும்" மனநிலையுடனேயே போனேன். ஆனால் மகிழ்ச்சிகரமாக கியூப தூதுவர் மிகுந்த நேர நெருக்கடிக்குள்ளும் எம்மை மதித்து வந்து உரையாற்றிச்சென்றார்.

கூடவே,

நிகழ்ச்சியில் பங்கெடுத்து இலங்கையின் மக்கள் சார்பு அரசியற் கூட்டணி ஒன்றில் தம்மையும் இணைத்து இயங்கத்தொடங்கியிருக்கும் சிங்கள பின்னவீனத்துவக் குழுமங்கள் ஆரோக்கியமான அரசியல் எதிர்காலம் ஒன்றிற்கான நம்பிக்கையை ஊட்டின.

said...

அன்பின் மயூரன்,

இதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html

தொடரட்டும் உங்கள் சேவை !

said...

ம்...

said...

மன்னிக்கவும்.
தாமதமாகத்தான் பதிவைப் பார்த்தேன்.

எனக்கும் சட்டத்தரணி தம்பையாவை சந்திக்க வேண்டிய தேவை உள்ளது.