tag:blogger.com,1999:blog-68448682024-03-07T14:32:51.657+05:30"ம்..."விட்டு விடுதலையாகிநிற்போம்...மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger235125tag:blogger.com,1999:blog-6844868.post-43451578474892447372023-02-21T15:42:00.003+05:302023-02-21T15:43:26.888+05:30இன்று அனைத்துலக தாய்மொழி நாள்<p>தமிழ் என்னுடைய தாய்மொழியாக அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. </p><p><br />உலகில் பெரும்பாலும் எல்லோருக்குமே இதுவொரு தற்செயல் நிகழ்வுதான். தம் தாய்மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. <br />உயிரியல் ரீதியாக எம் பிறப்பும் சமூக-அரசியல்-பொருளாதார ரீதியாக எம் வளர்ப்புச் சூழலும் எமக்கென்றொரு தாய்மொழியை வழங்குகின்றன.</p><p><br />அவ்வாறு ஒரு தாய்மொழி எமக்கு வந்தமைந்த பிறகு அது வெறும் தொடர்பாடல் ஊடகமாக மட்டுமே எமக்கு இருப்பதில்லை. </p><p><br />மொழியின் பணி வெறுமனே தொடர்பாடுவது மட்டும் தான் என பலர் தவறாக நினைக்கிறார்கள். அப்படி நினைப்பது மின்சாரத்தின் பணி மின்விளக்கை ஒளிர வைப்பது மட்டும்தான் என்பது போல் ஆகிவிடும். </p><p><br />எமது பண்பாட்டில், வாழ்வில், கல்வியில், வளர்ச்சியில், வரலாற்றில், சிந்தனையில், உளவியலில், கற்பனையில், நுட்பியலில், இன்னும் பற்பல வழிகளில் தாய்மொழி எமது இருப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. </p><p><br />நான் பயன்படுத்துவதற்குக் கிடைத்துள்ள இந்த தாய்மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எண்ணுக்கணக்கற்ற மனிதர்களின் விலைமதிப்பற்ற உழைப்பினாலும் பங்களிப்பாலும் வளர்த்தெடுக்கப்பட்டே எனக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p><br />அதனால் இனிவரும் காலங்களில் இந்த மொழியை தாய்மொழியாக பயன்படுத்தவுள்ளவர்களுக்காக இதனை பேணி வளர்த்தெடுப்பதில் பங்களிக்கவேண்டிய பெருங்கடமை எனக்கும் எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. </p><p><br />தாய்மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கான எல்லா வளங்களையும் அறிவையும் அனைத்தையும் இம் மொழிக்குள் கொண்டு வருவதற்கு உழைக்கவேண்டிய பொறுப்பும் எமக்குள்ளது. </p><p><br />உலகிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழிகளையிட்டு பெருமைப்படுவது போல, எனது தாய்மொழியையிட்டும் நான் பெருமைப்படுகிறேன். </p><p><br />எந்த மொழியும் சிறுமை கொண்டதல்ல. அதனால் என் மொழியும் எவ்வகையிலும் சிறுமை கொண்டதல்ல. அதனால் எனக்கு என் மொழியையிட்டு எந்தவிதமான தாழ்வுணர்ச்சியும் கிடையாது. </p><p><br />ஆனால், எனது மொழியும் ஏனையவற்றைப் போலவே மனிதர்களால் காலத்தோடு உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதால், போதாமைகளையும் கொண்டுள்ளது. அவை சிறுமையல்ல, வெறும் போதாமைகளே.. அவற்றைக் களைந்து என் மொழியை வளர்த்தெடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு எனக்குள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு அப்பணியை நான் செய்கிறேன்; செய்வேன். </p><p><br />எனது தாய்மொழியை இன்னொருவர் மீதான அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்துவதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். </p><p><br />இன்னொருவர் மீது என் தாய்மொழியை நான் திணிக்க மாட்டேன். திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்பேன். </p><p><br />அதேபோன்று என் தாய் மொழி மீது இன்னொரு மொழியைக்கொண்டு செலுத்தப்படும் அதிகாரத்தையும் திணிப்பையும் நான் முடிந்த வரை எதிர்த்து நிற்பேன்.</p><p><br />இன்று அனைத்துலக தாய்மொழி நாள். </p><p><br />இந்நாள் அதிகாரமற்ற மொழிகள் மீதான ஆதிக்கத்தையும் திணிப்பையும் எதிர்த்துப் நிகழ்ந்த போராட்டங்களை நினைவு கூரும் நாள். </p><p><br />உருது மொழித் திணிப்பை எதிர்த்து வங்காளதேசத்திலும் இந்திமொழித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாட்டிலும் சிங்கள மொழித் திணிப்பை எதிர்த்து இலங்கையிலும் இன்னும் உலகின் மூலை முடுக்கெங்கும் நிகழ்ந்தநிகழும் போராட்டங்கள் அனைத்தும் மனிதகுல விடுதலைக்கானவையே. </p><p><br />எம் தாய்மொழி வளர்க!<br />எம் வளர்மொழி வாழ்க!</p><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-24463697862607298952022-04-14T01:09:00.000+05:302022-04-14T01:09:24.245+05:30கோட்டா போகலாம் கோட்டாக்கள் போவதில்லை..<p><span style="color: #cc0000;"><b>Go Go கோட்டா - நீ<br />போ போ போடா!</b></span><br /><br />-<br /><br />மக்களாட்சித் தலைவர்களை<br />மன்னர்களாய் பார்க்கும் வரை<br /><br />ஓர் இனத்தின் ஒரு மதத்தின்<br />நாடிதென்று சொல்லும் வரை<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />எமது கட்சி என்றவுடன்<br />எதற்கும் முட்டுக் கொடுக்கும் வரை<br /><br />இன்னொரு இனத்தை நாங்கள்<br />எதிரி என்று நம்பும் வரை<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />மேடை போட்டு சொல்வதெல்லாம்<br />மெய் எனவே நம்பும் வரை<br /><br />ஊடகங்கள் சொல்வதெல்லாம்<br />உண்மையென்று ஏற்கும் வரை<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />ஆளை மட்டும் மாற்றிவிட்டால்<br />அரசியலே மாறுமென்றால்<br /><br />ஊழல் மட்டும் ஒழிவது தான்<br />ஒட்டுமொத்த மாற்றம் என்றால்<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />ஒற்றுமையை பேசுபவர்<br />இனத்துரோகிப் பேரெடுத்தால்<br /><br />சிறுபான்மை உரிமைகளால்<br />ஒரு நாடு பிரியுமென்றால்<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />போர்வெறியை இராணுவத்தை<br />புனிதமெனப் போற்றி நின்றால்<br /><br />புனிதர்களின் குற்றங்களை<br />பேசுவதே குற்றமென்றால்<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br />மக்களை அடக்கி வைக்கும்<br />மன்னர்களே வேண்டுமென்றால்<br /><br />மக்களை மதித்து நிற்கும்<br />மக்களாட்சி தீமை என்றால்<br /><br /><b>கோட்டா போகலாம்<br />கோட்டாக்கள் போவதில்லை..</b><br /><br />-<br /><br /><span style="color: #cc0000;"><b>Go Go கோட்டா - நீ<br />போ போ போடா!</b></span><br /><br /><br /></p><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-85389178836806675172021-06-27T18:16:00.006+05:302021-06-27T18:27:24.653+05:30கிணற்றுக் கொண்டாட்டம்..<p>தூரத்தே<br />கிணற்றுக்குள்<br />ஒலித்தபடியிருக்கிறது..<br /><br />இந்த தவளையை தண்டித்து <br />வெளியே வீசிய<br />வெற்றிக் கொண்டாட்ட <br />விழாச் சத்தம். <br /><br />-27-06-2021<br /></p><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-82862094766326240432021-05-09T01:40:00.006+05:302021-05-09T01:42:04.544+05:30ஊழிக்கரடி<p>நோவாவிடம் ஒரு கப்பல் இருந்தது. </p><p>இவனிடமோ அறுந்த கயிறுகளும் மரக்கட்டைகளுமே உள்ளன. </p><p> </p><p>பிரளயம் மாபெரும் பன்னாடை </p><p>அது உறவுகளை வடித்தெடுத்து </p><p>கட்டுமரத்தில் ஏற்றுகிறது. </p><p> </p><p>எற்றுண்டு கிடக்கிறான் ஏதுமற்றவன். </p><p>ஊழிக் கரடி
காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போகிறது..</p><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-6790069622382592112020-12-16T02:44:00.002+05:302020-12-16T02:48:14.408+05:30என்வீட்டுத் தென்னைமரம் | The Coconut Tree, By My House<p> </p><p>என் வீட்டுத் தென்னைமரம்.<br />இல்லாத தென்னை மரம்.<br /><br />--<br /><br />முன்னர் இருந்து முறிந்து விழுந்ததுவா?<br />பெய்த பெருமழையில் புரண்டு விழுந்ததுவா?<br />வண்டடித்துக் கொலையுண்டு வாழாமற் போனதுவா? <br /><br />ஒன்றுமே நடந்ததில்லை.<br />என் தென்னை<br />முற்றத்தில்<br />என்றுமே இருந்ததில்லை.<br /><br /><span><a name='more'></a></span>--<br /><br />முற்றத்தில் இல்லாத<br />என் தென்னை என்றுமே<br />முளைத்ததுமில்லை.<br /><br />முளைகொள்ள நானதனை<br />முன்னைப் பொழுதொன்றில்<br />நட்டதுமில்லை. <br /><br />நட்டு வளர்த்துக் காத்திருந்து உரமெல்லாம்<br />இட்டுக் கவனிக்க <br />ஓடியோடி வாழ்ந்த வாழ்வில்<br />சற்றும் ஓய்வென்று கிடைத்ததில்லை<br /><br />கிடைத்த சிறு<br />நேரம் ஒதுக்கி நீரூற்றி விதைபோட,<br />ஈர மண்ணூடு என் தென்னை வேர் கொள்ள ,<br />முற்றம் என்றொன்று<br />வீட்டின் முன் வாய்க்கவில்லை. <br /><br />இடப்பெயர்வு என்பதுதான் இடப்பெயராய் ஆனதிலே<br />முற்றத்தைத் கொண்டிருக்க<br />வீடொன்றும் இருந்ததில்லை. <br /><br />சின்னஞ்சிறு வீடு<br />சிறு முற்றம்<br />முற்றத்தில்<br />தென்னை மரமொன்று<br />அதனடியில் விளையாடும்<br />எந்தன் இளவல்கள்<br />என்றிங்கே வாழ்ந்திருக்க <br /><br />வீடொன்றின் முகவரிக்கு<br />வீதிகளும் வாய்க்கவில்லை <br /><br />வீதிகளும் ஒழுங்கைகளும்<br />வரைந்தெடுத்த ஊர்ப் படத்தில்<br />வாழ்வு சுரப்பதற்கு<br />ஊர் என்று ஒன்றில்லை. <br /><br />எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய<br />என்னுடைய ஊர் இன்று<br />எனக்கும் தாய்க்கும் எந்தைக்கும் இல்லை.<br />எவருக்குமில்லை. <br /><br />ஊர்கள் உருவாகி<br />உயிர்களின் கூடாகி<br />உயிர்த்தெழுந்து உன்னதமாம் நாட்டை உருவாக்கும்<br />நல்லசெயல் நடக்கவில்லை. <br /><br />ஊர்களை உருவாக்க<br />ஊர்கள் பலகூடி உன்னதமாய் உருவாக<br />நாடென்ற ஒன்று<br />நமக்கென்று இருக்கவில்லை <br /><br />நாமும் இருந்த நன்னாடோ, <br /><br />நாயே, <br /><br />உனக்கிங்கே உனதென்று<br />எதையுமே உணர உரிமையில்லை<br />என்று பெருங்குரலில் பிளிறிற்று <br /><br />போர்தொடுத்துக் <br /><br />கூடு கலைத்துக் குண்டெறிந்து <br />ஓட<br />ஓடக் கலைத்து ஏதிலியாய்க் கிடத்திற்று. <br /><br />எனதாக இல்லாத என் நாட்டில் <br /><br />எந்தையும் தாயும் அடியுண்டு விரட்டுண்ட<br />என்னுடைய ஊரில், <br /><br />ஊரை நான் இழந்தோட அழுதழுது அனுப்பிவைத்த<br />வீதி ஒழுங்கைகளில்,<br /><br />இல்லாமற்போன என்னினிய வீட்டின் முன்<br />இருக்காத முற்றத்தில் <br /><br />உடல்சிதறிச் சாகுமுன் விளையாடிக்கொணடிருந்த<br />பிள்ளைகளைப் போர்த்திருந்த<br />சின்ன நிழல் தந்து <br /><br />வாழ்வோடும்<br />வாழ்வின்<br />எல்லாக்கணங்களொடும்<br />உயிராய்ப்பிணைந்து பின்னிப் படர்ந்திருக்கும்<br />உயிர்ச் சமரின் குறியீடாய் <br /><br />திமிரோடு <br /><br />எழுந்து<br />நிற்கவில்லை<br /><br />என் வீட்டுத் தென்னை மரம்..<br /> <br />--<br /><br />மு. மயூரன்<br /><br />13-01-2011<br /></p><p><br /><br /></p><p style="text-align: right;"></p><div class="separator" style="clear: both; text-align: right;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Rx6WzAg3WI7nclfjneTAc59NJPBOwuMysa0igu0QUNsz8Iw9tPaoccAtrV44v0FN3esz2kZQk5mqbTSF6LuN7dwT-ecUuPbaLVpaakhzEarCs5dvs30V2dWUcpC6t9mQD7bheQ/s550/163855_1593940882033_1440628_n.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="413" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Rx6WzAg3WI7nclfjneTAc59NJPBOwuMysa0igu0QUNsz8Iw9tPaoccAtrV44v0FN3esz2kZQk5mqbTSF6LuN7dwT-ecUuPbaLVpaakhzEarCs5dvs30V2dWUcpC6t9mQD7bheQ/s320/163855_1593940882033_1440628_n.jpg" /></a></div><div style="text-align: right;">The coconut tree, by my house.<br />Didn’t exist.<br /><br />--<br /><br />Was it here before, it unravelled and fell?<br />Did it give into the immense turbulence that rained and fell?<br />Was it killed by the coconut beetle, did it simply perish?<br /><br />None of this ever happened.<br />My coconut tree<br />In my compound<br />Never existed.<br /><br />--<br /><br />My coconut tree, which never existed<br />In the compound <br />Never did it sprout.<br /><br />For it to sprout<br />in the past<br />I never planted it.<br /><br />To plant, care, guard, manure <br />It, tend to it<br />In this life, from running constantly<br />Even a slight rest<br />Was not had.<br /><br />To gather whatever little <br />Time, to set aside, to water and sow,<br />In the wet soil, for my coconut tree, to take root,<br />The compound<br />Never existed, by my house.<br /><br />When our disposition, becomes displacement<br />To have a compound <br />My house never existed.<br /><br />A little house,<br />A small compound,<br />In the compound a coconut tree<br />For children, or anyone<br />To play by its foot <br />And live in<br /><br />This house, for it to have an address<br />Roads didn’t exist<br /><br />The roads and lanes <br />Map a village, which<br />Didn’t even exist, to<br />Secrete life.<br /><br />For my father, nor mother, to be happy and rejoice<br />Today, my village<br />Not for my father, my mother, or anyone<br />Did it ever exist.<br /><br />For villages to form, and<br />Rise to cradle life, and<br />Forge a noble country,<br />No good deed ever happened.<br /><br />To form villages,<br />Those villages, in joy, to form<br />A country <br />never existed, for us.<br /><br />Even the country we were in,<br />You dog,<br />You have no right here<br />To feel anything as yours<br />It trumpeted in a loud voice<br /><br />Declaring war<br />Destroying nests<br />We were shelled and chased<br />Continuously, and made into refugees. <br /><br />From my country, which was never mine<br />My father and my mother, were uprooted<br />And violently chased<br />From our village,<br /><br />As I lost my village <br />In tears, the roads and lanes, guide me out<br /><br />By my sweet house<br />That no longer was there,<br />In the compound that never existed<br /><br /><br />Before they died, guts scattered, <br />To cover the children that were playing<br />To give them a little shade<br /><br />In life<br />And its<br />Every moment<br />Intertwined, woven and spread<br />As a symbol of survival, in life<br /><br /><br />With pride<br /><br />Erect <br />It never existed<br /><br />The coconut tree by my house..<br /><br />--<br />M. Mayuran<br />13-01-2011<br /></div><p style="text-align: right;"></p><p style="text-align: right;">In English : Eph.png</p><p style="text-align: right;"><br /></p><blockquote><p style="text-align: left;">Translator's Note :<br /><br /></p><div>The poem is broken into three parts. In the first part it is established that the <span class="il">coconut</span> <span class="il">tree</span> that he's talking about never existed.</div><div><br /></div><div>In the second part he wonders the things that may have happened to the <span class="il">tree</span>, for it to not exist. And then admits that none of these also happened.</div><div><br /></div><div>In the third part, he describes, the surroundings, around the <span class="il">tree</span>, and once again admits that none of these existed also.</div><div><br /></div><div>One
of the things that interests me in the third part, he steps outward to
have an aerial view, and every time he does, there is a level of
abstraction. He begins with an image of a <span class="il">coconut</span> <span class="il">tree</span>. For the <span class="il">coconut</span> <span class="il">tree</span>
to exist, there was no clearing by his house. In being displaced, the
house didn't exist. For the house to have an address, roads didn't
exist. To paint an document the life of his village, the village didn't
exist. For the village to come together and form a country, no good deed
took place.</div><div><br /></div><div>At which the abstraction peaks, and the only voice in the poem says "you dog, you have to feel anything as your own"!</div><div><br /></div><div>And
with the weight of what has just been said, and everything that has
been abstracted he rushes, all at once, through the country, the
village, the roads and lanes, the house and the clearing, none of which
existed for the <span class="il">coconut</span> <span class="il">tree</span> to exist.</div><div><br /></div><div> There is also this sense of tangibility where the poem starts and peaks, the <span class="il">coconut</span> <span class="il">tree</span> and food. <br /></div><div><br /></div><div>One
of the things i found interesting is that all the imagery brought up
exists in negation. Even at the peak of abstraction, the voice that
speaks, speaks in negation "you have no right.." The only things that
aren't negated are the war that's declared, the shelling, the scattered
guts, and being made refugees.</div><div><br /><br /></div></blockquote><span><!--more--></span><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-72472480051254471302018-10-18T23:16:00.001+05:302018-10-21T21:02:15.364+05:30MeToo வை அஞ்சி அம்பலப்படுதல்இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. <br />
<br />
இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. <br />
<br />
ஒருவர் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் வலைத்தளத்தின் (WSWS) ஊடகவியலாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். .<br />
<br />
அவரது கருத்து MeToo தொடர்பான அவர்களது கட்சியினரின் பொதுவான கருத்தையே பிரதிபலித்தது. <br />
<br />
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் MeToo போன்ற, நீதித்துறை முறைமைகளுக்கு வெளியேயான செயற்பாட்டினை கையிலெடுக்கக்கூடாது, நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவான பொறிமுறைகளூடாகவே முறைப்பாட்டினைச் செய்யவேண்டும் என்பது தான் அவர் மறுபடி மறுபடி கூறிக்கொண்டிருந்த கருத்தாகும். இதுவே அக்கட்சியினரின் கருத்துமாகும். <br />
<br />
நீதி என்றால் என்ன, நீதி எவர் கையில் இருக்கிறது, ஆண்களின் நீதித்துறை/சட்ட நடைமுறையாக்க முறைமை எப்படி பெண்களுக்கெதிராகச் செயற்படுகிறது, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஒரு பெண் நீதித்துறைய நாடுவது என்றால் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறியாமலிருப்பது ஒன்றும் வியப்பல்ல. <br />
<br />
எனக்கு வியப்பை ஏற்படுத்தியது நீதித்துறை மீது அக்கட்சியினர் காட்டும் அக்கறையும் நம்பிக்கையுமே. <br />
<br />
சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி படுகொலைகளுக்கு எதிராக நாம் இந்திய தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அங்கே வழக்கம்போல் ஆர்ப்பாட்டத்தோடு ஒட்டாமல் ஊடகவியலாளர்கள் போல வந்து படம்பிடித்துக்கொண்டிருந்த அக்கட்சியினர் தமது வலைத்தளத்தில் என்ன எழுதினார்கள்?<br />
<br />
கொல்லப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு "நீதி வழங்கு" என்று நாம் பதாகை ஏந்தியிருக்கிறோம், நாம் முதலாளித்துவ நீதித்துறையினை நம்புகிறோம், நாம் குட்டிமுதலாளி நடுத்தரவர்க்கம் (அவர்களது வழக்கமான வசவு அடைமொழிகள் அத்தனையையும் இங்கே எழுத வேண்டியதில்லை) அது இது என்று வசைபாடியிருந்தார்கள். நீதித்துறை என்றால் என்ன என்று வகுப்பெடுத்தார்கள். <span data-offset-key="epqsn-0-0"><span data-text="true">இவ்வளவு அலப்பறையும் அந்தப் பதாகையில் இருந்த "நீதி" என்ற சொல்லை அரைகுறையாக அவர்கள் புரிந்துகொண்டதால் வந்தது. </span></span><br />
<br />
முதலாளித்துவ நீதித்துறை பற்றிய அவர்களது விளக்கமெல்லாம் பெண்கள் என்று வரும்போது ஏன் புனித ஆற்றில் நீராடி முத்தி பெற்று சாம்பிராணிப்புகையுடனும் பூக்களுடனும் தெய்வீகத்தன்மை பெற்றுவிடுகிறது?<br />
<br />
தொழிலாளி வர்க்கத்துக்கு நீதி கொடுக்காத நீதித்துறையை பெண்கள் மட்டும் ஏன் நம்பி நாட வேண்டும்?<br />
<br />
ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தொழிலாள வர்க்கம்போல தமது எதிரிகளுக்கு எதிராக நீதித்துறைக்கு வெளியேயான போராட்ட வடிவங்களைக் கையிலெடுக்கக்கூடாது? <br />
<br />
ஏன்?<br />
<br />
அதுதான் ஆண்மையவாதம்! போலி இடதுசாரிகளின் இயல்பான ஆண் மையவாதம்!<br />
<br />
MeToo அசைவியக்கம் உழைக்கும்வர்க்கப் பெண்களுக்கு எட்டக்கூடிய ஒன்றல்ல. அது வெளிப்படையானதே. <br />
ஆனால், அவ்வசைவியக்கம் நிறையப்பேரை அம்பலப்படுத்துகிறது. அவ்வசைவியக்கம் ஏற்படுத்திய பதட்டத்தில் தமது வாயால் தாமே பலர் அம்பலப்பட்டுப்போகிறார்கள். <br />
<br />
அந்தவகையில் அவ்வசைவியக்கம் வெற்றிபெற்றுள்ளது. <br /><br />
--<br /><br />ஏற்கனவே குறித்த குழுவைச்சேர்ந்தவர்களுடனான உரையாடலில் MeToo இற்கு எதிராக அவர்கள் முன்வைத்த சில கருத்துக்களுக்கு நான் அளித்த பதில்கள் :<br />
<br /><br />
<blockquote class="tr_bq">
பாலியல் தொந்தரவு தொடக்கம் தீவிரமான பாலியல் வன்முறை வரைக்கும் அதிகார ஏற்றதாழ்வு தொடர்புறுகிறது.<br />பால்நிலைகளுக்கிடையிலான அதிகார ஏற்றதாழ்வு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.<br /><br />பாதிக்கப்படுவோரின் மௌனம் அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளுக்கு மேலும் மேலும் அதிகாரத்தை வழங்குகிறது.<br /><br />மௌனம் உடைக்கப்படும்போது அதிகாரத்தின் ஒரு பகுதி அச்சுறுத்தலுக்குள்ளாகிறது.<br /><br />பாலியல் தொந்தரவு/வன்முறை செய்பவரை பெண்கள் பெயர் சொல்லி காட்டிக்கொடுப்பார்கள் என்ற நிலை ஏற்படும்போது எல்லா இடங்களிலும் அச்சம் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. அது இந்த அதிகார ஏற்றதாழ்வில் சிறிதளவேனும் மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்புடையது.<br /><br />சிலர் பொய்க்குற்றம் சாட்டலாம், சிலர் பழிவாங்கலாம். பரவாயில்லை. அதுவும் நல்லதே...<br /><br />ஒரு பெண்ணிடம் அத்துமீற முன் அச்சம் ஏற்படவேண்டும்.<br /><br />தப்ப முடியாது எனும் எண்ணம் வேண்டும்.<br /><br />MeToo அசைவியக்கத்தின் வர்க்கத் தன்மை ஒருபுறமிருக்கட்டும். இந்த அசைவியக்கம் எந்த வகையிலும் பிற்போக்கானதல்ல. எந்த வகையிலும் வர்க்க அரசியலுக்கு எதிரானதல்ல.<br /><br />நான் இவ்வசைவியக்கத்தை ஆதரிக்கிறேன்.</blockquote>
<br /><br />(ரொமான்சுக்கும் பாலியல் வன்முறைக்கும் அக்குழுவினருக்கு வேறுபாடு தெரியாமல் உளறிக்கொண்டிருந்தார்கள்)<br /><br />
<blockquote class="tr_bq">
<span class=" UFICommentActorAndBody"><span><span> <span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span>Romance இற்கும் இதற்கும் தொடர்பில்லை. </span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span>அதிகார ஏற்றதாழ்வில் romance பண்ண முடியாது. காதலும் பண்ண முடியாது. </span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span>அதிகாரதில் சமமற்றவரிடையே காதல் என்பது ஒரு சுரண்டல் வடிவமே. </span></span><span><span></span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span><span>அதிகாரத்தில் சமமற்றவரிடையேயான திருமணமும் சுரண்டல் வடிவமே. </span></span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span></span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span><span>அதனால் தான் ஆண்களின் ரொமான்சும் காதலும் பெரும்பாலும் குற்றமாகவே இருக்கிறது. </span></span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span></span></span></span></span></span></span></span><br /><span class=" UFICommentActorAndBody"><span><span><span data-ft="{"tn":"K"}"><span class="UFICommentBody _1n4g"><span><span><span>திருமணத்தின்
பின் எனது துணைவன் எனது அனுமதியின்றி காலில் விழுந்து பாதத்தில்
முத்தமிட்டான் என்று எங்கேனும் ஒரு துணைவி சொல்வதற்கும் எனது முதலாளி எனது
உடல் அழகாயிருக்கிறது என்று சொன்னார் என ஒரு தொழிலாளி சொல்வதற்குமிடையே
பாரிய வேறுபாடு இருக்கிறது. முதலாளி செய்தது எந்த ஐயமுமின்றி பாலியல்
சுரண்டல் குற்றமாகிறது.</span></span></span></span></span></span></span></span></blockquote>
<br />
<br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-56497974224002318762018-03-13T14:34:00.000+05:302018-03-13T14:34:14.476+05:30இலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சிஇலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான
அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை
என பரவலாக அழைக்கப்படுகிறது என்றும் அறிந்தபோது, இலங்கையின் தமிழ்
தொலைக்காட்சி சேவைகள் பற்றிய எனது நினைவுகள் மீளெழுகின்றன. <br /><br />ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 2 மணிமுதல் 3 மணிவரை தமிழ்ப்பகுதிகளில் அப்போது ஆள் நடமாட்டம்
இருக்காது. ஏனெனில் ரூபவாகினி ஒளிபரப்பிய ஒரேயொரு தமிழ் பொழுதுபோக்கு
நிகழ்ச்சி அந்த நேரத்தில் தான் ஒளிபரப்பானது. பொன்மாலைப்பொழுது எனும்
தலைப்பில் 5 தென்னிந்திய திரைப்பாடல்களும் அதன் பின் 30 நிமிட தொலைக்காட்சி
தொடர் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. இது தவிர செவ்வாய்கிழமை மாலை வேளையில்
பள்ளிச்சிறுவர்கள் பங்குகொள்ளும் 30 நிமிட "கலையரங்கம்" ஒளிபரப்பாகும்.
மற்றபடி எப்போது தொலைக்காட்சியைத் திறந்தாலும் சிங்களத்தில் தான் ஏதாவது
போய்க்கொண்டிருக்கும். திருகோணமலையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையை
பார்க்க முடியாது. இலங்கை ரூபவாகினி தமிழ் பேசும் மக்களுக்கான சேவை அல்ல
என்பது எம் மனங்களில் மிகவும் ஆழத்தில் பதிந்துவிட்ட ஒரு கருத்து. <br /><br />திருகோணமலையில்
பனிக்காலங்களில் தென்னிந்திய அரச தொலைக்காட்சிகளை ஓரளவு தெளிவாகப்
பார்க்கலாம் (அக்காலத்தில் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சிகள் இல்லை).
அத் தொலைக்காட்சிகளில் எப்போதுமே தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை
வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் ஆன்டனாவை திருப்பித் திருப்பி
பார்த்துக்கொண்டிருப்போம். <br /><br />ஏற்கனவே இலங்கை அரசும் இலங்கை நாடும்
எம்முடையதல்ல என்ற உணர்வு இலங்கை அரசினது பல்வேறு செயற்பாடுகள் காரணமாக
தமிழரிடையே வேருன்றியிருந்த நிலையில் இலங்கையின் அரச தொலைக்காட்சியும்
எமக்கானதாக இல்லாமற்போனது எமக்கொன்றும் பெரிய ஏமாற்றமாக இருக்கவில்லை. <br /><br />தனியார்
அலைவரிசைகள் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான், தமிழ்பேசும் மக்களுக்கு
(ஆகக்குறைந்தது கொழும்பினைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்காவது)
தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு தமிழ் நிகழ்ச்சிகள் கிடைத்தன. (தனியார்
மயமாக்கத்தை எதிர்க்கும் அரசியல் நிலைப்பாடுகொண்ட எனக்கு இவ்வசனத்தை
எழுதும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.) அதன்பிறகுதான் ரூபவாகினி தனது
தமிழ் நிகழ்ச்சிகளை இன்னும் ஓரிரு மணித்தியாலங்கள் (மட்டும்) அதிகரித்தது.<br /><br />எனக்கு
நல்ல நினைவிருக்கிறது, 1999-2000 காலப்பகுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி
ஒன்றில் ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம், இலங்கையின்
இனவிகிதாசாரத்திலும் குறைவான விகிதாசரத்தில் தான் தமிழ் நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பாகின்றன; இந்நிலை ஏன் என பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ரூபவாகினி தலைவராக இருந்த டியூ குணசேகர (அவர் கம்யூனிஸ்ட் என்றும்
தன்னைச் சொல்லிக்கொள்பவர்), நைஜீரியாவில் ஏகப்பட்ட மொழிகள் இருக்கின்றன,
அங்கே இன விகிதாசாரப்படி எல்லாம் எப்படி நிகழ்ச்சிகள் ஒதுக்க முடியும், அது
நடைமுறைச்சாத்தியம் இல்லை என பதிலளித்தார். அவர் அவ்வாறானதொரு
புறக்கணிப்புத் தொனியில் பதிலைச் சொல்லிக்கொண்டிருந்தபோது இலங்கையின்
தனியார் ஊடகங்கள் தமிழுக்கென தனியான தொலைக்காட்சி அலைவரிசைகளையே உருவாக்கத்
தொடங்கிவிட்டன. அரசாங்கமோ, தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றினைத்
தனியாக உருவாக்கப் பணமில்லாத நிலையில், கோடிக்கணக்கான பணத்தை தமிழர்களின்
பகுதிகள் மீது வெடிகுண்டுகளாகக் கொட்டிக்கொண்டிருந்தது. <br /><br />இலங்கையின் அரச தொலைக்காட்சிகளில் தமிழ் மொழி இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்<br />
<div dir="ltr">
<wbr></wbr>க,
செய்மதி தொலைக்காட்சிகள் அறிமுகமாகி, இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்கு
தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகளை 24 மணிநேரமும் பார்ப்பதற்கான கதவுகளை
திறந்துவிட்டிருந்தது. வேறு வழியின்றி ரூபவாகினையைப் பர்த்துக்கொண்டிருந்த
தமிழ்பேசும் மக்கள் அதன்பின் ஒரேயடியாக ரூபவாகினியை கைவிடத்
தொடங்கியிருந்தார்கள். <br /><br />இந்தப் புதிய சூழல் ரூபவாகினி தமிழ்
நிகழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை வெளியிலிருந்து உருவாக்கியது.
இதன் விளைவாகவே புதிதாக தொடங்கிய சிங்கள அலைவரிசையான "ஐ" தொலைக்காட்சியில்
தமிழ் நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. பின்னர் இந்த
நிகழ்ச்சிகள் "நேத்ரா" எனும் பெயரில் ஒளிபரப்பாகத்தொடங்கின.
விளையாட்டுப்போட்டிகள் நடந்தாலோ, வேறேதாவது சிறப்பு ஒளிபரப்புகள்
நிகழ்ந்தாலோ, நேத்ராவின் தமிழ் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவது மிகவும்
வழக்கமான ஒரு விடயம்.<br /><br />ஏனைய தனியார் தொலைக்காட்சிகள் தென்னிந்திய
நிகழ்ச்சிகளையே இறக்குமதி செய்து கொட்டிக்கொண்டிருந்த வேளையில், அரச
தொலைக்காட்சிகள் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமையளித்ததை இந்த
இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இதற்காக, அரச தொலைக்காட்சிகளின் தமிழ்ச்
சேவைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியினையும்
பாராட்டினையும் சொல்லியாகவேண்டும். <br /><br />இப்போது நேத்ராவை தனியான
அலைவரிசையாக்கியிருக்கிறார்கள். தமிழுக்கான தனி அலைவரிசைக்குத் தமிழில்
பெயர்வைக்கவேண்டும் எனும் எண்ணம் கூட இல்லாமல், சிங்களவர்களுக்கும்
புரியும்படியான ஒரு சமஸ்கிருதப்பெயரை தெரிவுசெய்திருக்கிறார்கள். இதுவே
மிகப்பெரிய முதல் ஏமாற்றம். <br /><br />நல்லிணக்கத்துக்கான தொலைக்காட்சி என்று
சொல்வது அடுத்த ஏமாற்றம். நல்லிணக்கம் என்ற சொல்லே எனக்கு இணக்கமில்லாதது.
குறிப்பாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தச்சொல்லைப்
பயன்படுத்துவது மிகவும் முரண்பாடானது. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்
தீர்வு ஒன்றினை முன்வைக்காது, வெறுமனே நல்லிணக்கத்தைக் கொண்டுவந்துவிடலாம்
எனும் எண்ணம் இதில் தொனிக்கிறது. இலங்கையில் தேசிய இன முரண்பாடு எப்போதுமே
தீர்க்கப்படப்போவதில்லை எனும் அவநம்பிக்கையையே இது விதைக்கிறது. <br /><br />தொலைக்காட்சியின்
தொடக்க நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கூறிய ஒரு கருத்து
முக்கியமானது. நல்லிணக்கத்தை தமிழர்களுக்கு மட்டும் தான் போதிக்கவேண்டுமா
எனும் தொனியில் அவரது கருத்து அமைந்திருந்தது. இது, தமிழர்களே இலங்கையில்
பிரச்சினையை உண்டாக்கினார்கள், அதனால் அவர்களுக்கே தமிழ் மொழியில் ஒரு
தொலைக்காட்சியை உருவாக்கி நல்லிணக்கத்தைப் போதிக்க வேண்டும் எனும் எண்ணம்
இங்கே ஆழப் பதிந்துள்ளது. இந்த மனநிலை இருக்கும்வரை இலங்கையில் ஒருபோதும்
நல்லிணக்கம் ஏற்படாது. தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் இன ரீதியாக
ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும், அந்த ஒடுக்குமுறை எவ்வாறெல்லாம் அவர்களை
ஆயுதம் தூக்கும் நிலைக்குக் கொண்டு போனது என்பதையும் சிங்கள மக்களிடம்
விளக்கிச் சொல்லாமல் நல்லிணக்கம் உருவாவது சத்தியமற்றது.<br /><br />ஆனால், ஒரு
தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை என்ற விதத்தில் இந்த வளத்தினை
அத்தொலைக்காட்சியின் ஊழியர்கள் நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.உள்ளூர்
கலைஞர்களுக்கு மேடையமைத்துக்கொடுக்கவும், உள்ளூர் ஆளுமைகளுக்குக் களம்
கொடுக்கவும், எம் நாட்டின் தமிழ் பேசும் மக்களது வாழ்வையும்
பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கலைகளையும் ஆற்றல்களையும்
தொலைககட்சி ஒன்றின் வழியாக வெளிக்கொணர்வதற்கும் இதனை
நன்குபயன்படுத்திக்கொள்ளலாம். இலங்கையில் தமிழ் பேசும் மக்க்ள் செறிந்து
வாழும் வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகளில் கலையகங்களை அமைக்கலாம்.
ஊடகத்துறையில் பணியாற்ற விரும்பும் திறமை மிகுந்த தமிழ் பேசும்
இளைஞர்களுக்கு பாரபட்சமின்றி நல்ல வேலை வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்கலாம்.
ஆகக்குறைந்தது இவற்றையாவது செய்ய முடிந்தால் இப்புதிய தொலைக்காட்சி
அலைவரிசை இலங்கையின் தமிழ் தொலைக்காட்சிகளின் வரலாற்றில் மதிப்பு மிகுந்த
ஓர் இடத்தினைப் பெற்றுகொள்ளும். <br /></div>
<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6844868.post-41457011512859383972017-03-01T01:18:00.002+05:302017-03-01T01:27:34.452+05:30போராட்ட நாட்குறிப்பு : ஏனையவர்கள் சொன்னவை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgggFIwicJn0d4hlE7_kAtW1K8lgCdPgJaBBxcQCVGao3rjyNA_XH-IJN1Cv1cwtaMIYaplRzxqyw1JN8weQ5um8iRtmwP_2qcqTMaDbDHprZK8SQwzSLDZLKxbrfXdpsyu5wMfNg/s1600/land-2-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="போராட்டம்" border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgggFIwicJn0d4hlE7_kAtW1K8lgCdPgJaBBxcQCVGao3rjyNA_XH-IJN1Cv1cwtaMIYaplRzxqyw1JN8weQ5um8iRtmwP_2qcqTMaDbDHprZK8SQwzSLDZLKxbrfXdpsyu5wMfNg/s320/land-2-1.jpg" title="Protest" width="320" /></a></div>
<br />
<br />
நாள் 1 : <br />
<b>துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சமூகவலைத்தளங்களிலும் அவை பகிரப்படுகின்றன.</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"சும்மா போராட்டம் அரசியல் எண்டு வாழ்க்கையை வீணாக்கமல் படிப்பையோ வேலையையோ குடும்பத்தையோ பார்"</blockquote>
<a name='more'></a><br />
<br />
நாள் 3 : <br />
<b>தெருவில் கவனயீர்ப்பு</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"அந்த மொக்குக் கூட்டம் போராடுது எண்டதுக்காக நீயும் அதில போய் நிக்கப்போறியா? புத்திசாலித்தனமா யோசிச்சு உன்ட வாழ்க்கையைப் பார்."</blockquote>
நாள் 5 : <br />
<b>ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும்</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"எத்தின பொலிஸ்காரன் அங்க நிக்கிறான் எண்டு பாத்தியா? ஒருத்தர் விடாம புலனாய்வு வந்து படமெடுத்ததைக் கண்டாய் தானே? நீயும் நாளைக்குக் காணாமல் போகப்போறியா? பேசாம இரு."</blockquote>
<br />
நாள் 10 : <br />
<b>போராட்டத்தின் தொடர்ச்சி பற்றிய செய்திகள் பரவுகின்றன.</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"விட்டுக்கொடுக்காத போராட்டமெல்லாம் ஒண்டுமில்ல.. அவங்களுக்குப் பின்னால என்.ஜி.ஓ இருக்கு. நாளைக்கு கனடாவில அகதி விண்ணப்பம் குடுக்கிறதுக்காக நிண்டு படங்காட்டுதுகள். அதுல முன்னுக்கு நிக்கிறேர் எல்லோ, அவர் அடுத்த தேர்தலுக்கு அடிப்போடுறேர் பார்.."</blockquote>
<br />
நாள் 15 : <br />
<b>போராட்டம் தொடர்கிறது...</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"இவ்வளவு நாள் போராட்டத்தை அரசாங்கம் விட்டு வச்சிருக்கெண்டா, உனக்கு விளங்க இல்லையா? அரசாங்கம் தான் போராட்டத்தை நடத்துது கண்டியோ.." </blockquote>
<br />
நாள் 18 : <br />
<b>அச்சுறுத்தல் அதிகரிக்கிறது; அரசாங்கம் போராட்டத்துக்கு எதிராகக் கருத்துச் சொல்கிறது</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"இப்ப ஏன் சும்மா தேவையில்லாம போராட்டம் உணவுத்தவிர்ப்பு எண்டு அல்லாடோணும்? நானும் அமைச்சரும் ஒண்டாத்தான் தண்ணி அடிக்கிறனாங்கள்.. சாராயம் குடிச்சிட்டுச் சாரன் அவிழத் தவழுற நேரத்தில காதுக்குள்ள சொன்னா அவர் அடுத்தநாளே பிரச்சினையத் தீர்த்துப்போடுவார்.. இதுக்குப்போய்.. கொடியப்புடிச்சுத் தட்டியத் தூக்கிக்கொண்டு... இப்பிடிச் செய்து அமைச்சரைக் கோவப்படுத்திறதாலதான் எல்லாம் பிந்துது."</blockquote>
<br />
நாள் 20 : <br />
<b>இலங்கையில் பல பகுதிகளிலும் இடதுசாரி, முற்போக்கு அமைப்புக்கள் போராட்டக் களத்துக்கு வருகை. ஊடகங்கள் மூலமும் சமூக ஊடகங்கள் மூலமும் பரப்புரை.. </b><br />
<br />
<blockquote class="tr_bq">
"ஏதோ, மக்கள் போராட்டத்தை எல்லாம் அரசாங்கமும் முதலாளிகளும் ஏகாதிபத்தியங்களும் கணக்கில எடுத்துப் பயந்து தீர்வு குடுத்திருவாங்க எண்டு இண்டைக்கும் நம்பிக்கொண்டிருக்குதுகள் இந்த இடதுசாரி மொக்குச் சனியனுகள். நாடு முழுக்கச் சிவப்புக் கொடியத் தூக்கிக்கொண்டு ஏதோ மக்கள் போராட்டம் வெல்லப்போற மாதிரி.. காலமாற்றம் தெரியாத கற்காலப் பல்லிகள்... "</blockquote>
<br />
நாள் 25 : <br />
<b>சிங்கள, தமிழ், முஸ்லிம், இடதுசாரி, முற்போக்கு அமைப்புக்கள் நாடு முழுதும் பல இடங்களில் போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டம். நாட்டின் வேறுபல மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவோரும் ஆதரவு.</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"இவங்களெல்லாம் எதுக்காக இலங்கை முழுக்கப் போராட்ட ஆதரவு எண்டு கத்திக்கொண்டு நிக்கிறாங்கள் தெரியுமா? வேறென்ன, எங்கட தமிழ்த் தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்கத்தான்.. எங்களுக்கு வாக்களிக்கிறதை விடத் தமிழ்த்தேசியத்தக் காப்பாற்றுற புரட்சி ஒண்டு இருக்குதோ தங்கச்சி? இவங்கட போராட்டப் படத்தை எல்லாம் பேஸ்புக்கில போடாத." </blockquote>
<br />
நாள் 28 : <br />
<b>போராடும் மக்கள் கோபத்துடன் வீதியில் இறங்கிப் போராட்டம்.. </b><br />
<br />
<blockquote class="tr_bq">
"எங்கட ஆட்சியிலதான் இப்பிடி எல்லாம் தொடர்ச்சியாவும் உறுதியாவும் துணிவோடயும் போராடலாம். மகிந்த இருந்தா கோத்தாட்டச் சொல்லிக் கூட்டத்தோட கொளுத்தியிருப்பான். மைத்திரிட படத்தை வீட்டில வச்சு நன்றியோட கும்பிடுங்க." </blockquote>
<br />
நாள் 30 : <br />
<b>போராடும் மக்களின் கோபம் கொண்ட அறிக்கைகளும் பேச்சுக்களும் வெளிவருகின்றன. அனைத்துலகக் கவனம் திரும்புகிறது. அரசுக்கு நெருக்கடி.</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"இப்பிடித் துணிஞ்சு நிக்குதுகள் எண்டால், கட்டாயம் இதுகளுக்குப் பின்னால மகிந்த ராசபக்ச இருக்கிறான் மச்சான்.. "</blockquote>
<br />
<blockquote class="tr_bq">
"இலுமினாட்டிகளிட பெரிய வலைப்பின்னலில ஒரு பகுதி இது" </blockquote>
<br />
<blockquote>
"இதற்குப் பின்னால் சீனப் புலனாய்வுத்துறையும் அவர்களது முத்துமாலைத்திட்டமும் பாக்கிஸ்தான் கைக்கூலிகளும் முகத்தைக் கையாற் பொத்திக்கொண்டு நிற்கிறாங்கள் என்று இந்தக் கட்டுரை கருதுகிறது என இப் பத்தியாளர் எண்ணுகிறார்" </blockquote>
<br />
நாள் 32 : <br />
<b>அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு. அரசிடமிருந்து பணிவான அறிக்கை. </b><br />
<br />
<blockquote class="tr_bq">
"ஒரு போராட்ட நாடகத்தை நடத்தி, பணியிற மாதிரிப் பணிஞ்சு நல்ல பேரெடுக்கப் பாக்குது நல்லாட்சி. இது தெரியாமச் சாப்பாடு தண்ணி இல்லாமத் தெருவல நிக்குதுகள் சனங்கள்.."</blockquote>
<br />
நாள் 34 : <br />
<b>மக்களது கோரிக்கைக்கு அரசிடமிருந்து சாதகமான பதில்</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"என்னது வெற்றியா? ஹா ஹா ஹா ஹா.. இந்தக் கீபோர்ட் கம்யூனிஸ்டுகளுக்கு இது மக்கள் போராட்ட வெற்றி எண்டு காட்டுறதில ஒரு கிளுகிளுப்பு. மக்கள் போராடமெல்லாம் வெல்லுற காலத்திலயா இருக்கிறம்? உலகம் எங்களை முந்திக்கொண்டு எங்கயோ போகுது இந்தச் சிவப்புச்சட்டைக்காரங்கள் இன்னும் மக்களரசியல் மக்கள்போராட்டம் எண்டு தட்டிக்கொண்டு திரியுறாங்கள்." </blockquote>
<br />
நாள் 34 (அதே நாள்): <br />
<b>ஊடகங்கள்- சமூக ஊடகங்கள் எங்கும் போராட்ட ஆதரவாளர்களின் வெற்றி முழக்கங்கள்..</b><br />
<br />
<blockquote class="tr_bq">
"எல்லாம் உள்ளால இராசதந்திரமா நகர்த்தப்பட்ட காய்கள். ஐ நா வுக்குள்ள பின்கதவால போய்ச் செயலாளர் நாகயத்திட கதிரைக்குக் கீழால பூந்து சொக்சுக்குள்ளால காலைச்சுரண்டி எங்கட புலம்பெயர் அமைப்புக்கள் கடிதம் கொடுத்ததால அமெரிக்கன்காரன் அழுத்தம் குடுத்திருக்கிறான். சீனா பயந்துபோய் மைத்ரிக்கு இன்பொக்ஸ் பண்ணி இருக்கு. எல்லாம் பின்னணியில மேல்மட்டங்களில நடந்த பேரம்... இதுக்குப் பின்னால பெரிய திட்டங்கள் இருக்கு. வேற மட்டங்களில நடக்கிற எங்கட நகர்வுகள உங்களால புரிஞ்சுகொள்ள முடியாது. சொன்னாலும் விளங்காது"</blockquote>
நாள் 35 : <br />
<b>ஊடகங்களில் போராட்டம் வெற்றியடைந்த செய்தி வருகிறது..</b><br />
<br />
<blockquote>
"மக்களாவது போராடி வெல்லுறதாவது... "</blockquote>
<br />
நாள் 40 : <br />
<b>போராட்ட வெற்றி முழக்கங்கள் மெல்ல மெல்லத் தணிகின்றன.</b><br />
<br />
(நசுக்கிடாமல் ஒரு கீபோர்ட் "தேர்தல் அரசியல்" ஆதரவாளர்.. பேஸ்புக்கில்.. ) :<br />
<blockquote class="tr_bq">
"சும்மா போராட்டம் அரசியல் எண்டு வாழ்க்கையை வீணாக்கமல் படிப்பையோ வேலையையோ குடும்பத்தையோ பார்<br />
அடுத்த தேர்தலுக்கு எங்கட * * * * * அண்ணனுக்கு வாக்குப்போடு. அவரை மாதிரி ஆக்கள் தான் பேஸ்புக் பின்னூட்டங்கள் வழியா இராசதந்திரமா இந்தியாட்டப் பேசி ஐநாவுக்குள்ள கக்கூஸ் வழியா ஊடுருவி, றோவையும் சீஐஏ யையும் சரியான முறையில பயன்படுத்தி அவங்கட காசிலயே தமிழீழம் வாங்கித்தருவார்."</blockquote>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
--<br />
<br />
<b>அடிக்குறிப்பு 1 : </b><br />
<br />
இப்பதிவு கேப்பாப்பிலவு போராட்டத்தினை அச்சொட்டாகப் பிரதிபலிக்கும் ஒன்றல்ல. ஏனைய பல போராட்டங்களுக்கும் பொருந்தும்படியாக எழுதப்பட்டது.<br />
<br />
<b>அடிக்குறிப்பு 2 :</b><br />
<br />
வரலாற்றின் ஒவ்வொரு அடிவைப்பையும் மக்களது போராட்டங்களே நகர்த்துகின்றன. மக்களின் போராட்டங்களாலேயே நகர்த்த முடியும். <br />
<br />
இவர்களது இராசதந்திரங்களும் புலனய்வு வலையமைப்பும் "lobby" உம் அறிக்கைகளும் காய்நகர்த்தல்களும் மக்களது துணிகரமான தொடர்ச்சியான போராட்டங்கள் கொடுக்கும் குலைநடுக்கத்தாலேயே சாத்தியமாகின்றன. <br />
<br />
இவர்களுடைய சிக்கல் மக்கள் போராடி வெல்ல முடியாது என இவர்கள் நம்புவதல்ல, மாறாக, மக்கள் போராடி வென்றுவிடக் கூடாது என்று இவர்கள் விரும்புவதாகும். <br />
மக்கள் போராடுவதைக்கண்டு அதிகாரங்கள் உள்ளூர அஞ்சி நடுங்குவதைக்கண்டு இவர்களுக்கும் குளிர் காய்ச்சல் எடுக்கிறது என்பது தான் உண்மை.<br />
<br />
<b>அடிக்குறிப்பு 3 :</b><br />
<br />
நாளை ஒரு போராட்டம். வாருங்கள், அங்கே போவோம். <div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6844868.post-5119628289207536832017-02-27T12:03:00.002+05:302017-02-27T12:54:25.075+05:30மின்வெளித் தொடர்பாடலில் தமிழ் ஒலிபெயர்ப்புச் சிக்கல்கள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
ithanai vaasippathu இன்று எவருக்கும் சிரமமில்லை. அந்தளவுக்கு 'தமிங்கிலம்' எல்லா இடங்களிலும் பரவிப் படர்ந்துவிட்டது.<br />
<br />
ஒரு மொழியை இன்னொரு மொழிக்குரிய எழுத்துக்களில் ஒலிபெயர்த்து எழுதும் தேவை வரலாறு நெடுகிலும் இருந்து வருகிறது. தமிழ் இலக்கணத்திலும் அதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. வடமொழியைத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். தமிழை அரபு எழுத்துக்களைக் கொண்டு 'அரபுத் தமிழாய்' எழுதியிருக்கிறார்கள். குடியேற்றக் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழை ஆங்கில - லத்தீன் எழுத்துக்களைக்கொண்டு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.<br />
<br />
<a name='more'></a><br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT_Allg0uszKKZK-oLyeIesEKnaD8kBElzDjdxffYFE3KkeLiCDf1OonK4vUWOb-aq5Gz658J4HreCV3QIeuzFbteaokGMEAyNgrLr94CqoufQJ2IwgcYB-ElINpyT5OaZbuDf3g/s1600/1.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="163" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT_Allg0uszKKZK-oLyeIesEKnaD8kBElzDjdxffYFE3KkeLiCDf1OonK4vUWOb-aq5Gz658J4HreCV3QIeuzFbteaokGMEAyNgrLr94CqoufQJ2IwgcYB-ElINpyT5OaZbuDf3g/s320/1.jpg" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">1554இல் அச்சிட்டு வெளியிடப்பட்ட விவிலியம். போர்த்துக்கீசிய மொழியிலும்
உரோமன் எழுத்துக்களில் ஒலிபெயர்க்கப்பட்ட தமிழ் மொழியிலும்
அச்சிடப்பட்டுள்ளது.</td></tr>
</tbody></table>
<br />
தமிழ் எழுத்துக்களைப் படிக்க முடியாதவர்கள் தமக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துக்களில் உதவியுடன் - பொருள் விளங்காவிடினும் - என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். ஆட்களது பெயர்களும் ஊர்ப்பெயர்களும் இவ்வாறு இத் தேவைக்காக ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்படுகின்றன.<br />
<br />
இவ்வாறான தேவைகளைத் தவிர்த்துப்பார்த்தால், தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கவேண்டிய தேவை அதிகம் ஏற்படுவது தொழிநுட்பக் காரணங்களாலாகும். தொழிநுட்பக்கருவிகளும் தொடர்பாடலுக்கான நடப்பொழுங்குகளும் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்படும்போது ஏனைய மொழிகளை ஆங்கிலத்துக்கு ஒலி பெயர்த்தே பயன்படுத்த வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகிறது. கம்பிவழி/கம்பியில்லா தந்திச்சேவை அறிமுகமான காலத்திலிருந்து அண்மையில் அச்சேவை கைவிடப்படும் வரை அஞ்சல் அலுவலகங்களில் தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பது பெரியளவில் நடைமுறையில் இருந்தது. <br />
<br />
தமிழில் உள்ள எல்லா உச்சரிப்புக்களும் ஆங்கிலத்தில் இல்லை என்ற நிலையில் தமிழை ஆங்கிலத்திற்கு ஒலிபெயர்ப்பதில் நிறைய முரண்பாடுகள் ஏற்படும். தமிழ் என்பதை Thamil, thamiz, tamil என்று பலவாறும் எழுதும் சாத்தியம் உண்டல்லவா? இச் சிக்கலைக் கையாளுமுகமாக அஞ்சல் அலுவலகங்கள் தமக்கெனப் பொது ஒலிபெயர்ப்பு விதிகளைப் பயன்படுத்தினர். தமிழை முழுக்க முழுக்க ஆங்கிலப் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதக்கூடியவாறு அஞ்சற் துறையின் ஒலிபெயர்ப்பு விதிகள் வடிவமைக்கப்பட்டன. அஞ்சற் துறையில் மட்டுமல்லாமல் கோப்புக்களைப் பெயரிடவும் நூலகங்களிலும் தமிழ் மொழி ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது.<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj39AjATUknhFyJ7o0BXNrSp-iJINkjR0OL5EE7dFTmn6_DqcVo2kFDWYvDBiMVXGylMsiA_EU26dQbwyeHbMF5kI2_oHMCrno7HutXzoWy4sYQk9kU-sB8mop-40H-q-Z76cv0SQ/s1600/2.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="112" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj39AjATUknhFyJ7o0BXNrSp-iJINkjR0OL5EE7dFTmn6_DqcVo2kFDWYvDBiMVXGylMsiA_EU26dQbwyeHbMF5kI2_oHMCrno7HutXzoWy4sYQk9kU-sB8mop-40H-q-Z76cv0SQ/s320/2.png" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்பட்ட விவிலியம்.</td></tr>
</tbody></table>
<br />
செல்பேசிப் பயன்பாடு அதிகரித்தபோது செல்பேசிகளில் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான மென்பொருட்கள் தமிழ் மொழிக்கு ஆதரவளிக்கவில்லை. குறுஞ்செய்திகளைத் தமிழில் அனுப்பினாலும் அதனைப் பரிமாறுவதற்கு யுனிகோடு(Unicode) ஆதரவும் இருக்கவில்லை. ஆனால் தமிழைப் பயன்படுத்தும் மக்கள் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பவேண்டிய தேவை மிக அதிகமாக இருந்தது. எல்லோருக்கும் ஆங்கிலத்தில் தகவலனுப்புமளவுக்கு அங்கில அறிவு இருப்பதில்லை. காதலர்கள் சொந்த மொழியில் காதல் மொழிகளை அனுப்பித் தம் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளவே பெரிதும் விரும்பினர். இதன்காரணமாகத் தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும் தேவை சாதாரண மக்களுக்கும் வந்தது. அதுவரை தமது பெயர்களையும் ஊர்ப் பெயரையும் மட்டுமே ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கவேண்டியிருந்த மக்களுக்கு ஒலிபெயர்ப்பு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறியது.<br />
<br />
இணைய வசதிகள் பரவலாகி இணைய அரட்டையும் மின்னஞ்சலும் இன்றியமையாதவையான காலத்தில் தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது சாதாரணமான செயற்பாடாகியது. சமூக வலைத்தளங்களின் வருகையும் இணையத் தொடர்பாடலின் பரவலாக்கமும் 'தமிங்கில'த்தை தமிழ் மொழியின் இன்னொரு வரிவடிவம் என்று கருதுமளவுக்குக் கொண்டுவந்துள்ளது. தமிழ்க் கணிமையின் வளர்ச்சியும் பரவலாக்கமும் முன்னேறி வந்திருந்தாலும் அம்முன்னேற்றம் இணையமும் கணினியும் கைக்கருவிகளும் பரவலான வேகத்தோடு ஈடுகொடுக்க முடியாமலிருந்த இடைவெளிகளுக்குள் இந்த ஒலிபெயர்ப்பு வரிவடிவம் புகுந்து நிறைந்தது.<br />
<br />
கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் தமிழை எழுதுவதற்கான விசைப்பலகைகளையும் விசைக்கோலங்களையும் நியமப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள், ஆங்கில விசைப்பலகை அமைப்புக்களைப் பயன்படுத்தியே தமிழர்கள் தமிழ் எழுத்துக்களைக்கூட எழுத வேண்டிய நிலையை உருவாக்கின. ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்த வடிவத்தில் விசைப்பலகையில் தட்டியே கணினியிலும் கைக்கருவிகளிலும் தமிழை எழுதும் நிலை ஏற்பட்டது.<br />
<br />
புலம்பெயர் தமிழர்களின் புதிய தலைமுறை தமிழில் தொடர்பாடுவதற்கு ஒலிபெயர்த்த ஆங்கில வடிவத்தையே பயன்படுத்த வேண்டியமை இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்.<br />
<br />
வரையறைக்குட்பட்ட பயன்பாடுகள் என்ற நிலையிலிருந்து மிகப்பரவலாக ஆங்கில ஒலிபெயர்ப்புப் புழக்கத்துக்கு வந்த பிறகு பொதுவான ஒலிபெயர்ப்பு விதிகளைக் கடைப்பிடிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. ஒலிபெயர்ப்புக்கான, எல்லோரும் ஏற்கும் பொதுவான நியமங்கள் உருவாகவில்லை. ஏற்கனவே இருந்த ஒலிபெயர்ப்பு விதிகளும் நியமங்களும் பொதுமக்கள் மட்டத்தில் அறியப்பட்டனவாகவும் இல்லை.<br />
<br />
சமகால இணையப் பயனர்கள் பயன்படுத்தும் ஒலிபெயர்ப்பு முறைகளின்படி, "நூலகம் செல்வது சாலவும் நன்று" என்ற வசனம் பின்வரும் வடிவங்களில் ஒலிபெயர்க்கப்படலாம்.<br />
<br />
1. noolagam chelvathu saalavum nanru<br />
2. nulaham selvathu salavum nanRu<br />
3. noolagam selwadu saalawum nandru<br />
<br />
ஆங்கில உச்சரிப்பு அறிவு போதாமலிருப்பதால் உருவாகும் தவறான ஒலிபெயர்ப்பு முறைகள் அரட்டைகளிலும் குறுஞ்செய்திகளிலும் மிக அதிகமாகப் பயன்படுகின்றன. எ என்ற எழுத்துக்கு ஆங்கில a பயன்படுத்துதல், இ என்ற எழுத்துக்குப் பதிலாக e பயன்படுத்துதல் எல்லாம் இந்த வகையைச் சாரும்.<br />
<br />
இவை வெவ்வேறு ஊர்களில்/நாடுகளில் வழங்கும் வெவ்வெறு உச்சரிப்புக்கள் ஒலிபெயர்ப்பில் மிகப்பெரிய வேறுபாடுகளைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, சோகம் என்பது sOgam/sOkam/sOham என்று மூன்று வடிவத்தில் எழுதப்படக்கூடும். நான் என்பது தமிழகத்தில் na என்றும் இலங்கையில் naan என்றும் ஒலிபெயர்க்கப்படுகிறது.<br />
<br />
தற்போது தமிழ்த் திரையிசைப்பாடல்கள் ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்பட்ட பாடல்வரிகளோடு காணொளியாக வெளிவருதல் பிரபலமாயுள்ளது. பாடல் வரிகளில் ஒலிபெயர்ப்பில் இந்த இடவழக்கும் ஒலிபெயர்ப்புக் குழப்பங்களும் தெளிவாக வெளிப்படுகின்றன. "என்னோடு நீ இருந்தால்" என்ற வரி "Yennodu nee irundhaal" என்று ஒலிபெயர்க்கப்படுகிறது. எ என்பதை 'யெ' என்றும் ஒ என்பதை 'வொ' என்றும் தமிழகப் பேச்சுவழக்கில் பயன்படுத்துவர். அது ஒலிபெயர்ப்பில் பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும். இலங்கையில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் - 'ர' ஒலிக்குப் பதிலாக 'ta' ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானது. <br />
<br />
ஒலிபெயர்ப்பிற் சந்திகளில் வல்லினம் மிகுவதைக் காட்டத் தயக்கம் நிலவுகிறது. இது ஒலிபெயர்ப்புகளில் சந்திப்பிழைகள் நிறைந்து காணப்பட வழிவகுக்கிறது.<br />
<br />
மேலே எடுத்துக்காட்டியவை ஒலிபெயர்ப்பில் ஏற்படும் சில குழப்பங்கள் மட்டுமே. ஒருபடித்தாயில்லாத இந்த ஒலிபெயர்ப்பு முறைகள் மிகவும் மாறுபடுவதால் பொதுநடையிலும் தொழிநுட்பரீதியிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.<br />
<br />
ஒருவர் ஆங்கில ஒலிபெயர்ப்பில் எழுதுவதை இன்னொருவரால் முழுமையாகப் படித்து விளங்க முடியாத நிலை நடைமுறைத் தொடர்பாடற் சிக்கல்களுள் முக்கியமானது. அதிலும் வேவ்வேறு பேச்சுவழக்குக் கொண்ட இடங்களில் இருப்பவர்கள் தமக்கிடையில் ஆங்கில ஒலிபெயர்ப்பின் வழி உரையாடும்போது இச்சிக்கல் பெரிதாகிறது.<br />
<br />
தொழிநுட்பரீதியில், இன்று இணையமெங்கும் பரந்திருக்கும் ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கப்பட்ட தமிழ் உரைப்பகுதிகளைத் தரவாக உள்ளிட்டு அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கோ, தரவுத்தளம் ஒன்றை உருவாக்குதற்கோ தமிழ் எழுத்துக்களாலான உரையாக மாற்றவோ முடியாதவாறு பெரிய சவால் எழுந்துள்ளது. Kanthan Parasuraman என்று எழுதப்பட்ட பெயரை, மென்பொருளொன்று காந்தன் பரசுராமன் என்றா கந்தன் பரசுரமன் என்றா தமிழாக்குவது என்பது ஒரு சவால். இது ஊர்ப்பெயர்கள், ஆட்களின் பெயர்களைக் கொண்ட தரவுத்தளங்களை அமைப்பதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல். இதே சிக்கல் ஏனைய உரைப்பகுதிகளுக்கும் ஏற்படுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, ஏனைய மொழிகளிலும் தமிழிலும் 'கற்கும் திறன்கொண்ட' மென்பொருட்களை உருவாக்குவதில் வல்லுனர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.<br />
<br />
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத் தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்க எல்லோரும் ஏற்கும் பொது நியமம் ஒன்றை வரையறுக்க ஏராளமான தனிமனிதர்களும் அமைப்புக்களும் முயற்சி செய்கிறார்கள். தமிழ்நெட் தளமும் நியமம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்நியமங்களை உருவாக்குவோரிடையே ஒருமித்த கருத்து இன்னும் உருவாகவில்லை என்பதால், கற்கும் திறன் படைத்த மென்பொருட்களை உருவாக்கி அவற்றின் துணைகொண்டே இச்சிக்கலைக் கையாள வேண்டிய நிலைதான் இன்னும் உள்ளது. <br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0xDqefBQcN6IAVyXGN5VexYBY62uy6Im9a9GQZgX1s8js4BzkEWaJsihJDN1EK9HF5WSwzbmWu8I4HFjq8Ig9fpFGjBJ2SFygOcGz9d1XAAlj0ox9zLAHVrmFM7lJhRtCSIhTzQ/s1600/3%25281%2529.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0xDqefBQcN6IAVyXGN5VexYBY62uy6Im9a9GQZgX1s8js4BzkEWaJsihJDN1EK9HF5WSwzbmWu8I4HFjq8Ig9fpFGjBJ2SFygOcGz9d1XAAlj0ox9zLAHVrmFM7lJhRtCSIhTzQ/s320/3%25281%2529.png" width="271" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Library of Congress இன் தமிழ் ஒலிபெயர்ப்பு நியமம்.</td></tr>
</tbody></table>
<br />
அன்றாடத் தொடர்பாடலில் முடிந்தவரை ஆங்கில ஒலிபெயர்ப்பையன்றித் தமிழையே நேரடியாகப் பயன்படுத்தல் நீண்ட கால நோக்கிற் சிறந்த தீர்வாக அமைகிறது. தமிழைப் படிக்க முடியாதவர்கள் மென்பொருட்களின் துணைகொண்டு அவற்றை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்தோ, அல்லது ஒலிவடிவில் மாற்றியோ வாசிக்கலாம். வெவ்வேறு பேச்சுவழக்குக் கொண்டவர்களும் தமக்குட் பொதுவான தமிழ் நெடுங்கணக்கையே பயன்படுத்துவதால் தொடர்பாடற் சிக்கல்கள் தோன்றுவதில்லை.<br />
<br />
இன்றுள்ள செல்பேசி இயங்குதளங்கள், மென்பொருட்கள், கணினி மென்பொருட்கள், சமூக வலைத்தளங்கள், அரட்டைச் செயலிகள் எல்லாவற்றிலும் தமிழ் யுனிகோடு ஆதரவு வந்துவிட்டது. தமிழைத் தமிழாகவே பயன்படுத்துவதில் தொழிநுட்பத்தடைகள் இன்று ஏறத்தாழ இல்லாமற்போய்விட்டதெனலாம். தமிழைத் தட்டெழுதுவது தான் பலருக்கு இன்னமும் சவாலாயிருக்கிறது. செல்பேசிகள் உள்ளிட்ட கையடக்ககருவிகளிலும் கணினியிலும் தமிழைத் தட்டெழுதுவதற்கும் உள்ளிடுவதற்குமான ஏராளமான மென்பொருட்களும் வசதிகளும் வந்துவிட்டன. அவற்றை நிறுவிக்கொள்வதும் பயன்படுத்துவதும் கூட எளிதாகிவிட்டன. அவற்றைப் பயன்படுத்தித் தமிழிலேயே எழுதுவதும் தொடர்பாடுவதும் தொடர்பாடலை எளிதாக்குவது மட்டுமன்றி தமிழ் எண்ணிம உள்ளடக்கத்தைச் சாத்தியமான எல்லா வழிகளிலும் பயன்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும்.<br />
<br />
இலங்கையில் தமிழில் மட்டுமன்றி சிங்களத்திலும் இதே ஒலிபெயர்ப்புச் சிக்கல் இருக்கிறது. மாணவர்கள் தத்தமது மொழிகளில் மின்னணுக் கருவிகளையும் தகவல் - தொடர்பாடற் தொழிநுட்பங்களையும் பயன்படுத்துவதற்குப் பாடசாலையிலேயே பயிற்சி எடுக்கும்படியாகப் பாடத்திட்டத்தை உருவாக்குவதும் அதனை ஒவ்வொரு ஆண்டும் இற்றைப்படுத்துவதும் இச்சிக்கலை ஓரளவுக்காவது குறைப்பதற்கு வழி செய்யும். பாடசாலைக்கு வெளியே பாடத்திட்டங்கள் வழங்கத் தவறும் வாழ்க்கைக்கான கல்வியை வழங்குவதற்கு மக்கள் கல்வித்திட்டங்கள் உருவாக்கப்படுதலும், அவற்றில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படுவதும் ஆக்கபூர்வமான ஒரு பணியாகும். <br />
<br />
அண்மையில் செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை எளிதாகப் பரிமாறிக்கொள்வதற்கான 'செல்லினம்' என்ற பெயர்கொண்ட செயலி ஒன்றினை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் அவர்கள் ஆக்கி வெளியிட்டிருந்தார். அவ்வெளியீட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட தென்னிந்தியத் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து முதலாவது குறுஞ்செய்தியை அனுப்பி அச்செயலியை வெளியிட்டு வைத்தார்.<br />
<br />
அவர் அனுப்பிய அந்த முதற் குறுஞ்செய்தி, "காதலி, இனி தமிழில் காதலி." <br />
<br />
<br />
(தாயகம் | ஓகஸ்ட் -டெசம்பர் 2016)<br />
--<br />
<br />
<h4>
பயன்பட்டுள்ள கலைச்சொற்கள்</h4>
<br />
இயங்குதளம் - operating system<br />
ஒலிபெயர்ப்பு - transliteration<br />
குறுஞ்செய்தி - SMS<br />
கைக்கருவிகள் / கையடக்கக்கருவிகள் - handheld devices<br />
சமூகவலைத்தளங்கள் - social netwroking websites<br />
செயலி - application /app<br />
செல்பேசி - mobile phone<br />
தகவல் - information<br />
தரவு - data<br />
தரவுத்தளம் - database<br />
நடப்பொழுங்கு - protocol<br />
யுனிகோடு - Unicode (உலக மொழிகளின் எழுத்துக்கள் அனைத்தையும் கணினியில் பயன்படுத்துவதற்கான குறிமுறை)<br />
விசைக்கோலங்கள் - keyboard layout<br />
<br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-50814682340258191972017-02-09T02:07:00.004+05:302017-02-09T02:07:39.687+05:30இலங்கையில் மென்பொருட் தொழிற்துறையில் 'உழைக்கும் வர்க்கம்'<u><b>அறிமுகம்</b></u><br /><br />இலங்கையில் பன்னாட்டு மூலதனத்தை ஈர்த்து வளரும் தொழிற்றுறையாக மென்பொருட் தொழிற்துறை வளர்ந்து வருகிறது. உள்நாட்டுச் சந்தையில் சிறிய அளவிலும் வெளிநாட்டுச் சந்தையில் மிகப்பெரியளவிலும் இத் தொழிற்துறை தங்கியுள்ளது. மென்பொருட் தொழிற்துறையில் பொறியியலாளர்கள், முகாமையாளர்கள் தொடக்கம் அலுவலகப் பணியாளர்கள் உதவியாளர்கள் வரையிலான, நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட மிகப்பெரிய தொழிலாளர்படை பணியாற்றிவருகிறது. கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறையிலும் "உழைக்கும் வர்க்கமாக" இருக்கும் இத்துறை சார்ந்த தொழிலாளர்கள், பெரியளவில் சுரண்டலுக்கும் பாதிப்புகளுக்கும் உட்பட்டுவந்தபோதிலும் தம்மைத் "தொழிலாளர் வர்க்கமாக" அடையாளம் காணமுடியாதவாறு "வர்க்க உணர்வு" அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இன்றுள்ள அரசியல் சமூகச் சூழல் இதற்கான காரணமாகிறது. <br /><br />மென்பொருட் தொழிற்றுறைத் தொழிலாளர்கள் வர்க்க உணர்வூட்டப்படுவதும் அமைப்பாக்கப்படுவதும் தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமாகிறது. தொழிலாளர் உரிமைகள் என்பதற்கு மேலாக இன்றைய உலகமயமாக்கற் சூழலில் எல்லா மக்கள் மீதும் கட்டவிழ்க்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வேலைத்திட்டத்திலும், ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்கும் இச் செயற்பாடு அவசியமாகிறது. புரட்சிகர அமைப்புக்கள் இத் தொழிற்துறையின் தொழிலாளர்களை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியது இன்றைய சமூக-பொருளாதார-அரசியற் சூழலில் இன்றியமையாததாகியுள்ளது. <br /><br /><br /><u><b>உழைக்கும் வர்க்கம்</b></u><br /><br />"தமது உழைப்புச் சக்தியைப் பேரம் பேசி விற்று அதில் வரும் கூலியையே வாழ்க்கையை நடத்துவதற்குப் பயன்படுத்துகிறவர்களும், உற்பத்திக் கருவிகளைச் சொந்தமாக வைத்திராதவர்களுமே பாட்டாளி வர்க்கம்/ உழைக்கும் வர்க்கம்" என மார்க்சிசம் வரையறுக்கிறது [1]. உழைப்புச் சக்தி என்பது உடலுழைப்பாகவோ மூளை உழைப்பாகவோ, அடிப்படையான திறன் கொண்டதாகவோ நிறையப் பயிற்சி தேவைப்படும் அதி கூடிய திறன் கொண்டதாகவோ அமைய முடியும். அதிகூடிய கூலி கிடைக்கக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், தமது வருமானத்தின் ஒரு பகுதியினைக் கொண்டு உற்பத்திக்கருவிகளைச் சொந்தமாக்கிக்கொண்டாலோ, தனிச்சொத்தைத் திரட்டிக்கொண்டாலோ அவ்வருமானத்தை மூலதனமாகக்கொண்டு உழைப்புச்சக்தியை வாங்கி இலாபம் பெற்றாலோ அவர்கள் குட்டி பூர்ஷ்வாக்கள் என்கிற வகைக்குள் அடங்குகிறார்கள். இங்கே "உற்பத்திக் கருவிகள்", "தனிச்சொத்து' என்று குறிப்பிடப்படுபவை, உழைப்புச்சக்தியை வாங்கி அவ்வுழைப்புச் சக்தியைக் கொண்டு உபரியைத் திரட்ட உதவக்கூடிய கருவிகள், நிலபுலம் போன்றவையே அன்றி, ஒரு மனிதரின் உழைப்பால் சேர்க்கப்பட்ட அவரது தனிப்பட்ட தேவைக்கான சொந்த உடைமைகள் அல்ல. (எடுத்துக்காட்டாக வருமானத்தால் வாங்கப்பட்ட காணி, வீடு, சொந்தப் பயன்பாட்டுப்பொருட்கள், உடை போன்றன) [2]<br /><br /><br /><u><b>இலங்கையின் மென்பொருட் தொழிற்துறை</b></u><br /><br />இலங்கையின் மென்பொருட் தொழிற்துறை உள்ளூர்ச் சந்தையிலும் பார்க்க மென்பொருள் ஏற்றுமதியாலேயே அதிக வருமானத்தைச் சம்பாதிக்கிறது. 2012ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 315.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மென்பொருட் தொழிற்துறை ஏற்றுமதியினால் சம்பாதித்துள்ளது. 2011ம் ஆண்டு 315 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இத் தொகை இருந்தது. 2015 அளவில் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இத் தொழிற்துறை ஏற்றுமதி மூலம் வருமானமாக ஈட்டும் என SLASCOM (Sri Lanka Association of Software and Service Companies) எதிர்வுகூறுகிறது. அதே வேளை, உள்ளூர்ச்சந்தை மூலம் 48 மில்லியன் அமெரிக்க டொலர்களையே இத் தொழிற்துறை வருமானமாக ஈட்டியுள்ளது.[3] <br /><br />ஏறத்தாழ 100 மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களும் 300 க்கும் மேற்பட்ட சிறிய, இடை நிலை நிறுவனங்களும் இலங்கையில் உள்ளன. Microsoft, Motorola, Industrial & Financial Systems (IFS), Amba Research, RR Donnelley, Quattro, Virtusa, eCollge, Valista, Millennium Information Technology and Innodata Isogen போன்ற பன்னாட்டு தகவற் தொழிநுட்ப, BPO நிறுவனங்களும் இலங்கையில் கால்பதித்துள்ளன.[3][4] <br /><br />இணைய-கணினி பயன்பாட்டின் அதிகரிப்பு, திறன்பேசிகள், கைக்கருவிகளின் வருகையைத் தொடர்ந்த புதிய புதிய தொழில்வாய்ப்புக்களின் அதிகரிப்பு போன்றன மென்பொருள் தொழிற்துறையில் பெரும் பாய்ச்சலினை ஏற்படுத்தியுள்ளது. <br /><br /><br /><u><b>மென்பொருட் தொழிற்துறையில் தொழிலாளர்கள்</b></u><br /><br />IT, BPO தொழிற்துறைகளில் ஏறத்தாழ 50,000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில்வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக SLASCOM அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது 20% இனால் அதிகரிக்கிறது[4]. பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், வெளிவாரிக் கற்கை நெறிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், அரச தொழிநுட்பக் கல்லூரிகள் போன்றன இவ்வூழியர்களுக்கான பயிற்சினையும் அடிப்படைக் கல்விச் சான்றிதழ்களையும் வழங்குகின்றன. <br /><br />மென்பொருட் தொழிற்துறையில் செயற்றிட்ட முகாமையாளர்கள் தொடக்கம், மென்பொருள் உருவாக்குனர்கள், மென்பொருள் சோதிப்பவர்கள், சந்தைப்படுத்துவோர், அலுவலக ஊழியர்கள் வரை ஏராளமான வகைகளில் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். <br /><br />இத் தொழிலாளர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமது வாழ்க்கையை நடத்த தமக்குக் கிடைக்கும் கூலியையே நம்பியிருக்கிறார்கள். பெருகிவரும் நுகர்வுக் கலாசாரம், விலைவாசி உயர்வு போன்றன காரணமாகவும் ஆடம்பர வாழ்க்கைக்கான மறைமுகமான கட்டாயம் காரணமாகவும் தமது வருமானத்தினையோ சேமிப்பினையோ இலாபமீட்டும் தொழிற்துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பற்றவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். அதிக பயிற்சியும் திறனும் தேவைப்படும் பணிகள் தொடக்கம் அலுவலக ஊழியர்கள் வரை வேலைவாய்ப்புக்கான சந்தையில் கடுமையான போட்டிகளைச் சந்தித்தே வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையும் காணப்படுகிறது. தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் வரவு, தகவற்தொழிநுட்ப அறிவின் பெருக்கம் போன்ற இப்போட்டியினை மேலும் மேலும் அதிகரிக்கிறது. இப் போட்டி அதிகரிப்பானது மென்பொருட் தொழிற்துறையின் தொழிலாளர்கள் தொழில் வழங்குவோரிடம் தமது உழைப்புச் சக்தியைப் பேரம்பேசுவதற்கான வலிமையைக் குறைக்கிறது. <br /><br />"உழைக்கும் வர்க்கம்' எனும் மார்க்சிய வரையறையினுள் அடக்கப்படக்கூடியவர்களாகவே மென்பொருட் தொழிற்துறை ஊழியர்கள் காணப்படுகிறார்கள். திறன் மிகுந்த தொழிலாளர்களாகவும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஏனைய தொழிற்துறைகளின் உடலுழைப்பாளர்களை விட வசதியான வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். <br /><br />இவர்களைத்தவிர தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை வாங்கி இலாபமீட்டாமல், சொந்தத் தொழிலாக தகவற் தொழிநுட்பச் சேவைகளையும் உற்பத்திகளையும் செய்யக்கூடியவர்கள் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகின்றனர். மென்பொருள் உற்பத்திக்கான உற்பத்திக்கருவிகள் ஏனைய உற்பத்தித் தொழிற்துறையினைப்போன்றல்லாது வேறுபட்டதாக அமைவதும் இதற்கான காரணமாகும். <br /><br /><u><b>மென்பொருட் தொழிற்துறைத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் வடிவங்கள்</b></u><br /><br />இலங்கையில் எழுத்தளவில் தொழிற்துறைச் சட்டங்கள் காணப்பட்டபோதிலும், அச்சட்டங்களில் காணப்படும் நெகிழ்ச்சியான தன்மைகளைப் பயன்படுத்தியோ, அல்லது அச்சட்டங்களை மதிக்காமலோ தொழிலாளர் மீதான சுரண்டலினை மென்பொருட் தொழிற்துறை செய்து வருகிறது. <br /><br />அதிகமதிகம் ஒப்பந்தத் தொழிலாளர்களையே பணிக்கமர்த்துவதன் மூலம் தொழிற்றுறைச் சட்டங்களை ஏய்க்கக்கூடிய வாய்ப்பினை இத்தொழிற்துறை நன்கு பயன்படுத்திக்கொள்கிறது. <br /><br />தற்போது வெளிநாட்டு வாடிக்கையாளர்களை மனங்கொண்டு வளர்ந்து வரும் தகவற் தொழிநுட்பத்துறையும் BPO துறைகளும் இத் தொழிற்துறைச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு மிகவும் முயற்சி எடுக்கின்றன. இரவில் பெண்கள் வேலைக்குப் போக முடியாதுள்ளது எனவும், சனிக்கிழமை விடுமுறை வழங்கமுடியாதுள்ளதெனவும் காரணங்களை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு[5], அடிப்படையில் தொழிலாளர்களது தொழிற்பாதுகாப்பு, கூலி உரிமைகளைச் சட்டரீதியாகவே இல்லாமலாக்கும் முயற்சியிலேயே அவை ஈடுபட்டுள்ளன. <br /><br />எட்டுமணிநேர வேலை என்பதை முற்றுமுழுதாகவே சாத்தியமற்றதாக்கியிருக்கும் இத் தொழிற்துறைகள், ஆடம்பரமான பணியிடங்கள், புதிதாக உருவாகிவரும் பணியிட நடைமுறைகள் போன்ற மாயைகளில் தொழிலாளர்களை அமிழ்த்தி, ஒரே கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்கும் உத்திகளைக் கையாளுகின்றன. <br /><br />கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, "பொருளாதார நெருக்கடி" என்று காரணம் காட்டிச் சம்பள உயர்வுகளைத் தள்ளிப்போடுவது, பெருமெடுப்பில் வேலை நீக்கங்களைச் செய்வது, வேலை நீக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துவது, கூலியைக் குறைத்து வழங்குவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. பொருளாதார நெருக்கடி என்று காரணங்காட்டி வேலை நீக்கங்கள் செய்யும்போது வேலையிலிருந்து இன்னமும் நீக்கப்படாத தொழிலாளர்கள் மீது ஒரே கூலிக்கு மேலதிகமான பணிச்சுமை சுமத்தப்படுகிறது. <br /><br />தகவற் தொழிநுட்பத்துறையில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதற்காக, அடிமட்டக் கூலியில் அதிக வேலை வாங்கப்படக்கூடிய நாடு என்று அரசே விளம்பரம் செய்யும் நிலை இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. Sourcingline தளத்தின் ஆய்வின்படி, இலங்கையில் மென்பொருட் தொழிற்துறையில் வழங்கப்படும் கூலி, அதே தொழிலுக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வழங்கப்படும் கூலியினது 10.9% மட்டுமே ஆகும். இது உலகிலேயே மிகக்குறைவான கூலி வழங்கும் பிலிப்பீன்ஸ் இந்தோனீசியா போன்ற நாடுகளுக்குச் சமமான நிலையாகும்.[6] இத் தகவல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற பொதிவான, நன்மையான விடயமாகவே காண்பிக்கப்படுகிறது. <br /><br />நிறுவனங்களின் அளவினைப்பொறுத்து இச் சுரண்டல் வடிவங்களில் சிற்சில மாற்றங்கள் காணப்பட்ட போதிலும் அடிப்படையிற் சுரண்டல் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. <br /><br />நீதித்துறையும் சட்ட அமுலாக்கல் துறையும் தொழிலாளர்களின் பக்கம் நிற்பதில் வினைத்திறனற்றிருக்கும் இலங்கை போன்ற நாடொன்றில் தொழிலாளர்களது தொழிற்பாதுகாப்பினையும் தொழில் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரேயொரு மார்க்கமான தொழிற்சங்க உரிமை என்பது முற்றுமுழுதாகவே இல்லாதொழிக்கப்பட்ட தொழிற்துறையாக மென்பொருட் தொழிற்துறை காணப்படுகிறது. "மனிதவள முகாமைத்துவம் (Human Resource Management)" என்கிற, புதிதாக உருவாகியிருக்கும், முதலாளிகளுக்குச்சார்பான நிறுவன நடைமுறை ஒன்றினூடாக தொழிற்சங்க உரிமை முற்றாகவே புறக்கணிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. தொழிலாளர்களது பிரச்சினைகளைத் தனித்தனியாகவும் துண்டு துண்டாகவும் கையாளுவதாகக் காட்டிக்கொள்ளும் மனிதவள முகாமைத்தும் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒன்று திரள்வதையும் தமக்குள் ஒன்றுபட்டுப் போராடுவதையும் சாத்தியமற்றதாக்கித் தொழிலாளரை மிகவும் நலிவடையச் செய்துள்ளது. <br /><br />ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல் மூலமும் தொழிலாளர்களது தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுகிறது. <br /><br /><br /><u><b>தொழிலாளர்களது வர்க்க உணர்வு</b></u><br /><br />ஏனைய பல தொழிற்துறைகளிற்போன்று தகவற் தொழிநுட்பத் துறையின் தொழிலாளர்கள் தமது உழைப்புச் சுரண்டப்படுவதை உணர்வதில்லை. தாம் மூலதனத்தையும் உற்பத்திக்கருவிகளையும் வைத்திருப்போரிடமிருந்து வேறானவர்கள் என்பதையும், தாம் நாட்டிலுள்ள ஏனைய தொழிலாளர்கள் போன்று ஒரே வர்க்கத்தினுள் உள்ளடங்குகிறோம் என்பதையும் பெரும்பாலும் உணர்வதில்லை. ஒப்பீட்டளவில் அதிக கூலி, ஒப்பீட்டளவில் சொகுசான பணியிடங்கள், சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு போன்ற காரணங்களால் தகவற் தொழிநுட்பத் தொழிற்துறையச் சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாள வர்க்க உணர்வினைப் பெறாமலிருக்கின்றனர். <br /><br />இலங்கையின் கல்வித்திட்டம், உயர்கல்வித்திட்டம், ஊடகங்களின் ஆளும்வர்க்கச் சாய்வு போன்றனவெல்லாமே "வர்க்க உணர்வு" அற்றவர்களாகவும் "வர்க்க அரசியலினை" அறியாதவர்களாகவும் மறுப்பவர்களாகவுமே இளந் தலைமுறையினை வடிவமைத்து வருகின்றன. "மனிதவள முகாமைத்துவம்" எனும் குறுகிய வடிவத்தினூடாக மட்டுமே தொழிலாளர் பிரச்சினைகளைப் பார்க்கின்றவர்களாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். நியாயமற்ற வேலை நீக்கங்கள், சம்பள உயர்வு மறுக்கப்படல், கூலியற்ற வேலை நேர அதிகரிப்பு, அளவுக்கு மீறிய பணிச்சுமை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்போது அவற்றைத் தனிநபர்ப் பிரச்சினையாகவே பார்க்கும்படியாக பழக்கப்படுத்தப்படிருப்பதால் மேற்கண்ட அநீதிகளின் பாதிப்பு ஒருசிலரைக் கடுமையாகத் தாக்கும்போதும் ஏனையவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் நிலை முழுமையாகவே ஒழிக்கப்பட்டிருக்கிறது. <br /><br /><br /><u><b>தொழிலாளர் உரிமைகளை மீட்பதற்கான வழிமுறைகள்</b></u><br /><br />மென்பொருட் தொழிற்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தம்மைத் "தொழிலாள வர்க்கம்" என்று ஏற்றுக்கொள்ளும் வர்க்க உணர்வினைப் பெறுவதே தேவைப்படும் மிக அடிப்படையான மாற்றமாகவுள்ளது. எழுத்திலுள்ள தொழிலாளர் உரிமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வலுப்படுத்தவும் தம்முள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கத்தக்க வகையில் இத்தொழிலாளர்களை அமைப்பாக்கவேண்டியுள்ளது.<br /><br />சட்டரீதியாகவே தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்கள் கூட தொழிற்சங்கமாக அமைப்பாக்கப்பட்டு, அவ்வமைப்புக்களால் போராட்டங்களும் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யும் தகவற் தொழிநுட்பத் தொழிற்துறையிலும் தொழிற்சங்கங்களின் தேவை அவசியமாகவுள்ளது. தொழிலாளர் உரிமைகளைக் காப்பதற்கு மேலதிகமாக, தொழிலாள வர்க்கத்தினை மேலும் மேலும் ஒடுக்குவதற்கான சட்டங்கள், சட்டத்திருத்தங்களை, அரசின் மீது அழுத்தத்தைக் கொடுத்து இப்பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் தொழிலாளரது ஒன்றுபட்ட எதிர்ப்பும் விழிப்புணர்வும் தேவையாயுள்ளது. <br /><br />வர்க்கச் சுரண்டல், வர்க்க ஒடுக்குமுறை என்பது வெறுமனே குறைந்த கூலித் தொழிலாளர்கள், உடலுழைப்பாளர்களை மட்டும் தாக்குவதில்லை. எல்லாவகையான தொழிலாளர்களையும் அது பாதிக்கிறது. மக்கள் மீதான எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் வர்க்க ஒடுக்குமுறையே அடிப்படையாகிறது. உலகமயமாக்கம் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில் தகவற் தொழிநுட்ப, மென்பொருட் தொழிற்துறையின் உழைக்கும் வர்க்கமும் வர்க்க ஒடுக்குமுறைக்கெதிராக அணிதிரள வேண்டியது மிக முக்கியமானதாகும். <br /><br />இத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வினை வளர்த்து, தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய பணி புரட்சிகர இயக்கங்களின் முன்னே காத்துக்கிடக்கிறது. <br /><br /><br />--<br /><span style="font-size: x-small;"><i>[1] Karl Marx. Capital Volume One - Chapter Six: The Buying and Selling of Labour-Power<br />[2] Communist Manifesto - Chapter II. Proletarians and Communists<br />[3] http://www.dailymirror.lk/business/other/25308-lanka-among-top-software-exporters-.html<br />[4] http://www.slasscom.lk/sri-lanka-advantage<br />[5] http://www.ceylontoday.lk/22-42753-news-detail-labour-laws-are-yet-archaic-from-colonial-times.html<br />[6] https://www.sourcingline.com/country-data/salaries-software-engineer-web-developer</i></span><br /><br /><b>[தேசிய கலை இலக்கியப் பேரவையின் 41ஆவது ஆண்டுவிழா ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை (11-05-2014)]</b><br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-78278860849002388452016-05-03T13:07:00.001+05:302016-05-03T13:07:28.978+05:30வணிக விளம்பரங்களாகும் தகவற் தொழிநுட்பப் பாடத்திட்டங்கள்எமது நாட்டின் இலவசக்கல்விப் பாட நூல்களில் வணிக விளம்பரங்கள் இருப்பதில்லை. அது பொதுவாக எமக்குத் தெரியும். பாடநூல்களில் வணிக விளம்பரங்கள் வருவதை எம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அப்படி வருமிடத்து அதை ஏற்றுக்கொள்ளவும் நாம் ஆயத்தமாயிருக்க மாட்டோம். அதிகாரத்திலிருக்கும் அரசினுடைய பிரசாரக்கருவியாக, பேரினவாதப் பிரசாரக்கருவியாக, உலகவங்கியினுடைய பிரசாரக் கருவியாகவெல்லாம் பாடநூல்கள் இயங்குவதை நாம் ஓரளவுக்கு அறிந்திருக்கிறோமெனினும் ஒரு தனியார் வணிக நிறுவனத்தின் பிரசாரக்கருவியாகப் பாடநூல்கள் இருக்கும் என்பதை நாம் பெரும்பாலும் ஏற்பதற்கில்லை.<br /><br />ஆனால், உலக அளவில் மென்பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் பென்னம்பெரிய பன்னாட்டு நிறுவனமொன்று அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எமது பாடத்திட்டத்தைத் தமது வணிக விளம்பரமாக்கி வைத்திருப்பதை நாம் கண்டுகொள்ளவில்லை.<br /><br />தகவற் தொழிநுட்ப உலகின் அரசியற்போக்குகள், அங்கு நிலவும் வணிக ஏகபோகம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதும் தகவற்தொழிநுட்பக் கல்வி என்ற பெயரில் இவ்வரசியற் போக்குக்களைக் கண்டுகொள்ளாதிருக்கும் மனநிலை எம்முள் வளர்க்கப்பட்டிருப்பதும் இதற்கான காரணங்களிற் சிலவாகின்றன.<br /><br />ஒரு காலத்தில் தேயிலை, கோதுமை மா, மண்ணெய், பெற்றோல், சிகரெட் போன்றவை எம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எம் நாட்டின் வாழ்க்கை முறையில் அதற்கு முன் இருந்திராத அந்நுகர்வுப்பண்டங்களை மக்களுக்குப் பழக்குமுகமாக இலவசமாகவே அவை வீதிக்கு வீதி வழங்கப்பட்டன. அப்பண்டங்களுக்கு மக்கள் மெல்ல மெல்லப் பழகி அடிமையானதன் பிற்பாடு அவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு நல்ல இலாபம் சம்பாதிக்கப்பட்டது.<br /><br />இதேபோன்றதொரு உத்தியே தகவற் தொழிநுட்பப் பாடத்திட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது.<br /><br />Microsoft நிறுவனத்தினுடைய வணிகப்பண்டங்களை மட்டுமே மாணவர்கள் கணினியைக் கற்பதற்கான ஒரே ஒரு தெரிவாக எமது கல்வி முறை விட்டுவைத்திருக்கிறது. Word Processing கற்பதற்குப்பதிலாக எமது மாணவர்கள் MS Word இனையே கற்கிறார்கள். இந்த நிலை வெறும் Word processing என்ற அடிப்படை நிலையில் இருந்து மென்பொருள் நிரலாக்கம், வலையமைப்பு முகாமைத்துவம் வரை இருக்கிறது.<br /><br />தகவற்தொழிநுட்ப உலகின் மாற்று அரசியல் பேசும் சிறு சிறு குழுக்களின் அழுத்தம் காரணமாக ஒப்புக்கு மாற்று மென்பொருட்கள் பற்றிய ஒருசில சிறு தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவை எந்த வகையிலும் Microsoft நிறுவனத்துக்கான விளம்பரத்தைப் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளப்படுகிறது.<br /><br />Microsoft ஒரு பென்னம்பெரிய நிறுவனம்; இவ்வாறு பாடப்புத்தகங்களில் கற்பித்தெல்லாம் அவர்கள் இலாபம் பார்க்கவேண்டிய தேவை இல்லை என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படக்கூடும்.<br /><br />இலங்கை அரசாங்கத்துடன் இதுவரை பல்வேறு ஒப்பந்தங்களை அந்நிறுவனம் செய்துகொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் கல்வித்துறையில் அந்நிறுவனத்தின் மென்பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான சலுகைகளுடன் கூடிய ஒப்பந்தங்களைக்கூட செய்துகொண்டுள்ளது (செய்தி : island.lk/2005/08/12/business2.html )<br /><br />இலவசமாகவும் சலுகை அடிப்படையிலும் தானே வழங்குகிறார்கள்; மூன்றாமுலக நாடுகளின் வறிய பாடசாலைகளுக்கு இதுவொரு வரப்பிரசாதமன்றோ என்று நினைக்கத்தோன்றுவதும் உண்மைதான். இந்த இலவசங்களும் சலுகைகளும் எவ்வளவு தூரம் அப் பன்னாட்டு நிறுவனத்தின் இலாபத்தைப் பெருக்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.<br /><br />தமது விற்பனைப்பொருட்களைத்தவிர வேறு மென்பொருட்களை மாணவர்கள் கற்காமலிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதன்மூலம், தமது உற்பத்திப்பொருட்களுக்கு அடிமையான, தம்மில் தங்கியிருக்கக்கூடிய ஒரு தலைமுறையினையே அந்நிறுவனம் உருவாக்கிவிட முடியும். இது ஏறத்தாழ தேநீருக்கும் சிகரெட்டுக்கும் கோதுமை மாவுக்கும் அடிமையான ஒரு தலைமுறையை உருவாக்கியதற்குச் சமமானது.<br /><br />மூன்றாமுலக நாடுகளின் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தியும் கூட இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.<br /><br />உலகில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சிறப்பான மென்பொருட்கள் அவர்கள் உற்பத்தி செய்தவை தாம். எதிர்காலத்தில் மாணவர்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறும்போது அம்மென்பொருட்கள்தாம் இருக்கப்போகின்றன அப்படியான சூழலில் குறித்த மென்பொருட்களைக் கற்பிப்பதுதானே சரியான தெரிவாக இருக்கமுடியும் என்றும் கேட்கப்படுகிறது.<br /><br />இது ஒரு மாயத்தோற்றமாகும். கணினியில் நாம் செய்யும் பணிகளுக்குப் பயன்படுத்தும் எல்லா மென்பொருட்களும் அடிப்படையில் ஒரே பணியைத்தான் செய்கின்றன. சிறு சிறு வேறுபாடுகளே இருக்கிறது. உண்மையில் எந்தவொரு மென்பொருளைப் பயன்படுத்தியும் குறித்த பணியைச் செய்துமுடிக்கக்கூடிய வல்லமை உடையவர்களாக மாணவர்களை உருவாக்குவதே சிறந்த கல்வித்திட்டமொன்றின் கடமையாகும்.<br /><br />மென்பொருள் நிறுவனங்கள் பல மென்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவை எல்லாமே இலாப நோக்கம் கொண்டவை தாம். அப்படி இருக்க ஒரு நிறுவனத்தை மட்டும் பாடத்திட்டத்தில் முனைப்புறுத்துவது தவறென்ற அடிப்படையிலும், அது நேர்மையான வணிகத்துக்கு மாறானதென்ற அடிப்படையிலும் இப்பிரச்சினையை நான் இங்கே எழுப்பவில்லை. இந்த விடயம் அவ்வளவு மேலோட்டமானதுமல்ல. <br /><br />மென்பொருட் தொழிற்துறையிலும் தகவற்தொழிநுட்ப உலகிலும் வளர்ந்து வருகிற ஓர் அரசியற்போக்கானது எதிர்கால மானுட இருப்புக்கும் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்குமே அச்சுறுத்தலாக அமையக்கூடியது. மென்பொருட்கள் மனித வாழ்வின் எல்லா மூலைகளையும் இப்போது ஆக்கிரமித்திருப்பதால், அதனூடாக மனிதரைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் இயலுமாகிறது.<br /><br />உலகை ஆளும் மாபெரும் நிறுவனங்களும் அவற்றின் கைகளாக இயங்கும் அரசுகளும் மக்களிடமிருந்து அதிகாரங்களை மேலும் மேலும் பறித்துத் தமது அதிகாரத்தை மேன்மேலும் பெருக்கிக்கொள்வதற்கு இப்புதிய கண்காணிப்பு மார்க்கமும் தகவற்தொழிநுட்பமும் உதவி வருகின்றன.<br /><br />ஆள்வோருக்குச் சேவகம் செய்யக்கூடிய தன்மைகொண்ட Microsoft போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கையில் உலகின் ஒட்டுமொத்தத் தகவற்தொழிநுட்ப அசைவியக்கத்தையே உள்வாங்கிக்கொள்வதென்பது மேற்சொன்ன அடிப்படையில் அதிகாரமிக்க ஆள்வோருக்குச் சாதகமானது. இந்த நிகழ்ச்சிநிரலுக்குப் பாதகமாக அமையக்ககூடிய, இந்த நிகழ்ச்சி நிரலைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய, சவால் விடுக்கக்கூடிய சில குழுக்களும் இயக்கங்களும் தகவற்தொழிநுட்ப உலகில் காணப்படுகின்றன.<br /><br />அவற்றுள் கவனிக்கத்தகுந்ததொரு இயக்கம், கட்டற்ற மென்பொருள் இயக்கமாகும். வணிக ரீதியான கட்டுக்கள், கண்காணிப்புப் பொறிமுறைகள், மனித உரிமைகளை மதிக்காது மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்ட மென்பொருட்களுக்கும் தொழிநுட்பங்களுக்கும் மாற்றான மென்பொருட்களையும் தொழிநுட்பங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் பெரும் திறந்த கூட்டுழைப்பான கட்டற்ற மென்பொருள் இயக்கம் பெரும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுகே சவால் விடும் அளவுக்கு இன்று வளர்ச்சி கண்டுள்ளது.<br /><br />இக்கட்டற்ற மென்பொருள் இயக்கத்தையும் கட்டற்ற மென்பொருட்களையும் பரவாது தடுப்பதும் நாடுகளின் கல்வித்திட்டங்களில் Microsoft தலையிடுவதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.<br /><br />கல்வித்திட்டத்தினையும் பாடநூல்களையும் புனிதப் படைப்புக்களாகக்கருதி, கேள்விக்குட்படுத்தாமல் விடுவது பாரதூரமான விளைவுகளை உருவாக்கக்கூடியது. குறிப்பாக, தகவற்தொழிநுட்பப் பாடத்திட்டமானது அபாயம் மிக்க விளைவுகளை உருவாக்கக்கூடிய வண்ணம் தனியொரு நிறுவனத்தின் பிரசாரக்கருவியாகப் பயன்படுத்தப்படுவதை நாம் கேள்விக்குட்படுத்தவேண்டியுள்ளது. மனித குலத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை தரக்கூடிய கட்டற்ற மென்பொருட்களையே பாடசாலைகளும் கல்வித்திட்டமும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரிய அழுத்தங்களையும் நாம் பிரயோகிக்கவேண்டியுள்ளது.<br />
<br />
--<br />
அகவிழி 2012.6<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-34090224742724436002016-04-29T14:54:00.005+05:302016-04-29T15:00:01.493+05:30மலையக அரசியலில் பெண்களின் பங்கெடுப்பைக் கேலிக்கூத்தாகும் ரங்காரங்காவின் பிரசைகள் முன்னணிக் கட்சி மலையகப் பெண்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இச்செய்தி சரியாக மக்களைச் சென்றடைய முன்னமே, இந்தியத் தூதரகம் வாழ்த்துச்செய்தி அனுப்புகிறது. பெண்களின் அரசியலில் இது ஒரு பெரும் பாய்ச்சல் என்றவாறும் மலையகத்தின் புதிய விடியல் என்றவாறும் ரங்காவை வெளிப்படையாகவே ஆதரிக்கும் மகாராஜாவின் சக்தி, Newsfirst, சிரச ஊடகங்கள் கூவுகின்றன.<br />
<br />
அரசியல் ஆண்களுக்கு மட்டுமேயானது எனும் நிலை மாறியதும், பழைமையின் கட்டுக்களை உடைத்துக்கொண்டு பெண்கள் வாக்குரிமை பெற்றுக்கொண்டதும் அரசியலில் பங்கெடுக்கத்தொடங்கியதும் அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. நீண்ட வீரம் செறிந்த, தியாகம் மிகுந்த போராட்டங்களூடாகவே இவையெல்லாம் சாத்தியப்பட்டது. அரசியலில் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் என்பது பெண்களுக்குமட்டுமல்ல, முழு மனிதகுலத்துக்குமே நன்மைதரும் ஒன்றாகும். ஆனால், அரசியல் என்பதையே அழுகிய சாக்கடையாய் ஆக்கிவைத்திருக்கும் முதலாளித்துவ வாக்குவங்கி அரசியல், பெண்களின் அரசியற் பங்களிப்பினையும் கொச்சைப்படுத்தி வைத்திருக்கிறது. ரங்கா பெண்களின் அரசியலைக் கொச்சைப்படுத்துவதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.<br />
<br />
அண்மையில் சக்தி தொலைக்காட்சியின் செய்தியறிக்கையில் இவ்வாறு ஒரு செய்தி ஒளிபரப்பாகியது (இச்செய்தியில் உள்ள சகிக்க முடியாத இலக்கணப்பிழைகள் பற்றி அவர்களின் செய்தி ஆசிரியரிடம்தான் கேட்கவேண்டும்) :<br />
<br />
"வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மேற்குலக நாடுகளிலுமுள்ள முதிர்ச்சியடைந்த அரசியல் நாகரிகத்தைப் பின்பற்றும் நோக்கில் மலையகத்தின் பிஜைகள் முன்னணியின் வேட்பாளர்களின் ஆளுமைத்திறன் விருத்தி குறித்து இன்று அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. அடுப்பங்கரையில் முடங்கிக்கிடந்த பெண்களைப் பாராளுமன்றத்தை நோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாகப் பதினொரு பெண்கள் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி களம் காண்கிறார்கள். காலம் காலமாக பரம்பரை தொட்டு தேயிலைத்தோட்டத்தை மட்டுமே கண்டுவந்த தேயிலைத்தோட்டப் பெண்களுக்கு நாகரிக உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. தலைமைப்பண்பு, பொது இடங்களில் தோற்றம், தலைமைப் பண்பு என்பவை இன்று இவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. பிரபல அழகு நிலையத்தில் முக சீரமைப்புக்கான ஒப்பனை செய்யப்பட்டது. மலையகப் பெண்கள் பாராளுமன்றத்துக்குச் செல்லும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை மிகவும் வரவேற்பதாக அழகு நிலையத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்."<br />
<br />
வாக்குவங்கி அரசியலின் அடிப்படை இயல்பே, மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் சிலரை மக்களிடமிருந்து பிடுங்கியெடுத்து, பாராளுமன்றத்தின் சூதாட்ட அரசியலுக்கும் சலுகைகளுக்கும் பேரங்களுக்கும் பழக்கப்படுத்தி, மக்களோடு எந்தவிதமான சம்பந்தமுமற்ற வெறும் வியாபாரிகளாக மாற்றுவதுதான். இதனையே மலையகத்தில் சமூக வேலைகள் செய்துவந்த இப் பெண்களுக்கும் செய்கிறார்கள். முதற்கட்டமாக, சாதாரண மலையகப் பெண்களின் உருவத்தை அவர்களிடமிருந்து பறிக்கிறார்கள், சாதாரண மக்களின் நடை உடை பாவனையையும் முகத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கிறார்கள். கடைசியில் மலையகப் பெண்களுடனும் மக்களுடனும் சம்பந்தமில்லாத அரசியற் சூதாடிகளாகவோ பினாமிகளாகவோ இவர்களை மாற்றுவார்கள். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளை மக்களிடமிருந்து பிடுங்கிப் பிரித்தெடுப்பதைப் பெருமையாகச் செய்தியறிக்கையில் சொல்கிறார்கள். கேவலம்!<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrEkx3QYRCg7FFHzMtp28bRHmGsJB9suvadbXDQCnZ-PRSmktTYTvYaHenLmYSPafpAZGNcqD5f-AAtWZjhb2-FQ281LkrxpV9taAMXgUK1NWEtHTxi_tHzlgiuvIQGKD2AvjOAA/s1600/Screenshot+from+2015-08-03+11_46_48.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="215" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrEkx3QYRCg7FFHzMtp28bRHmGsJB9suvadbXDQCnZ-PRSmktTYTvYaHenLmYSPafpAZGNcqD5f-AAtWZjhb2-FQ281LkrxpV9taAMXgUK1NWEtHTxi_tHzlgiuvIQGKD2AvjOAA/s320/Screenshot+from+2015-08-03+11_46_48.png" width="320" /></a><br />
<br />
மலையகப் பெண்களின் உருவம் நாகரிகமற்றதா? பாராளுமன்றத்துக்குப் பொருத்தமில்லாததா? "வளர்ச்சியடைந்த நாடுகளின் முதிர்ச்சியடைந்த அரசியலுக்கு" இயல்பான மலையகப் பெண்கள் இலாயக்கற்றவர்களா? பெண்களின் ஆளுமை என்பது அழகு நிலையம் போய் ஒப்பனை பண்ணுவதிற்தான் இருக்கிறதென்று போதிக்கிறார்களா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? இவர்களா மலையக மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்? இவர்களா பெண்களின் அரசியலை முன்னெடுக்கப்போகிறவர்கள்?<br />
<br />
சில காலங்களுக்கு முன்னர் "விழுது" என்றொரு NGO பெண்களின் அரசியல் பங்கெடுப்பை அதிகரித்து பெண்களை "வலுவூட்டப்" போவதாகச் சொல்லிக்கொண்டு நல்ல நிதியளிப்போடு ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தது. கிராம மட்டங்களில் சமூக வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்களையும் மாதர் சங்கங்கள் போன்றவற்றில் ஆற்றல்மிக்கவர்களாயிருந்த பெண்களையும் அழைத்து "அரசியற் பயிற்சி" அளித்தது. கடைசியில் இவ்வாறு தயார் படுத்தப்பட்ட பெண்களை எந்தக்கட்சியெல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தச் சம்மதித்ததோ அந்தக்கட்சிக்கெல்லாம் "விநியோகித்தது". பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் தலைமை தாங்கி நின்ற கட்சிகளுக்கெல்லாம் இவ்வாறு பெண் வேட்பாளர்களை "விழுது" விநியோகித்தது. இவ்வாறு விநியோகிக்கப்பட்ட பெண்களில் பலர் அவர்களது "கணவன்"களின் பினாமிகளாகவும் ஆணாதிக்க அரசியலில் இயங்க முடியாதவர்களாகவும் மாறினர். <br />
<br />
"அரசியல்" என்றாலே பாராளுமன்றமும் வாக்குவங்கி அரசியலும் தான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வாறு மட்டுமே மக்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றுதான் ஆள்வோரும் அரசியற் சூதாடிகளும் ஏகாதிபத்தியங்களும் விரும்புகின்றன. வாக்குப்போடுவதும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போவதும் தான் மக்களின் அரசியற் கடமை என்று இவர்கள் வரையறுக்கிறார்கள். பெண்களின் அரசியலையும் அவ்வாறே வரையறுத்து முடக்க விரும்புகிறார்கள்.<br />
<br />
ஆனால் பெண்களின் அரசியற் பங்கெடுப்பு அதன் உண்மையான அர்த்தத்தோடு வேறொரு தளத்தில் வீரியம் கொள்ளவேண்டியுள்ளது. ஆங்காங்கே வீரியம் கொள்ளவும் செய்கிறது. மலையகத்தில் சம்பள உரிமை கோரும் போராட்டத்திலும் காணி உரிமை கோரியும் பெண்கள் ஒன்றுபட்டு வீதிக்கு இறங்கிப் போராடுகிறார்கள். வடக்கில் புங்குடுதீவு சித்திரவதைக் கொலைக்கு நீதி கேட்டு காவற்துறைக் கட்டுப்பாடுகளையும் மீறி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பினர் துணிச்சலுடன் போராடினார்கள். இங்கெல்லாம்தான் பெண்கள் தமது முழு ஈடுபாட்டோடு அரசியலில் பங்கெடுக்கிறார்கள். இந்தப் பங்கெடுப்பை இல்லாமற்செய்து பெண்களது வீரமிக்க போராட்டங்களின் முதுகெலும்பை உடைக்கத்தான் ரங்கா போன்றவர்களும் விழுது போன்ற NGOக்களும் களத்தில் இறங்குகிறார்கள். <br />
<br />
--<br />
(புதிய நீதி - ஓகஸ்ட் 2015 - தேர்தல் சிறப்பிதழ்)<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-34343482587467350242016-03-28T16:39:00.000+05:302016-03-28T16:39:00.149+05:30பசுமை முதலாளித்துவம் எனும் 'புல்லுத் தின்னும் புலி'. <blockquote class="tr_bq">
இன்று உலகில் போர்களையும் அழிவுகளையும் உருவாக்கி மனிதரையும் இயற்கைச் சூழலையும் குதறிக்கொண்டிருக்கும் வல்லரசுகள் எல்லாம் சூழலைக் காக்கும் பெரும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவ்வல்லரசுகளை ஆள்வோரை ஆண்டுகொண்டிருக்கும் பெரும் கார்ப்பரேட்டுக்கள் எல்லாம் பூமி வெப்பமடைதலைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் தம்மாலானதெல்லாம் செய்யப்போவதாக வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். பேரங்காடிகளிலெல்லாம் பசுமையான சூழலுக்கு நட்பான உற்பத்திப் பொருட்கள் பரவிக்கிடக்கின்றன. சூழலைக் காக்கக் களத்திலிறங்கியிருக்கும் கொலைகார வல்லரசுகளதும் பூமியை நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுக்களதும் மில்லியன் பில்லியன் கணக்கான டொலர்கள் கொடையினைக் கைகளில் ஏந்தியபடி உலகெங்கும் பச்சை நிற NGOக்கள் எண்ணற்றுப் பெருகுகின்றன. விலையுயர்ந்த வண்டிகளில் வந்திறங்கி மக்கக்கூடிய பைகளில் "சூழலுக்கு நட்பான", "மீள்சுழற்சி செய்யப்பட்ட" நுகர்பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் ஒரு கூட்டத்தினர். <br /><br />புரட்சிகர இயக்கங்களின் தலைமையில் மலைவாழ் மக்களும் பழங்குடியினரும் அடித்தட்டு மக்களும் உழவர்களும் மீனவர்களும் தம் உயிர்வாழ்க்கையோடு பிணைந்திருக்கும் தமது சூழலை சிதைத்து நாசமாக்காமல் விட்டுவையுங்கள் என்று கெஞ்சியும் மிஞ்சியும் வெறிகொண்டும் போராடும்போதெல்லாம் அவர்களை நசுக்கிக்கொண்டிருக்கும் வல்லரசுகளும் அதற்குப் பக்கபலமாய் நிற்கும் முதலாளிகளும் மக்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி ஏளனம் செய்யும் கார்ப்பரேட் ஊடகங்களும் பின்கதவால் ஞானம் பெற்றது எங்ஙனம்? இவர்களெல்லோரும் புனித நதிகளில் மூழ்கி எழுந்து பச்சையுடுத்திப் பணிந்து பவ்வியமாய் பசுமை மொழிபேசி நிற்பது ஏன்? உண்மையிலேயே இந்த உலகம் சூழலைக் காக்கும் புனிதப்போரில் கைகோர்த்துக்கொண்டு களத்தில் இறங்கி விட்டதா? பொன்னுலகம் கைக்கெட்டும் தூரம்தானா?</blockquote>
<br />
<h3>
== றியோ மாநாடுகள் ==</h3>
<br />எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் அமெரிக்க - சோவியத் கெடுபிடிப் போர் முடிவுக்கு வருகிறது. உலகம் எங்கும் ஒரு பெரும் சந்தையாக மாற்றப்படும் செயற்திட்டம் "தாராளமயம்" என்ற பெயரில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தேச எல்லைகளும் நாடுகளின் சட்டதிட்டங்களும் தகர்த்தெறியப்பட்டு நிதி மூலதனமும் நுகர் பொருட்களும் எல்லா இடங்களுக்கும் பாயத்தொடங்குகிறது.<br />
<br />
பெரும் சந்தை <-> அளவுக்கு மிஞ்சிய நுகர்வு <-> பெருமெடுப்பிலான உற்பத்தி <-> அளவு கடந்த இயற்கைவளச் சுரண்டல் <br /><br />எனும் நச்சுவட்டம் பேருருக்கொள்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இயற்கைச் சூழல் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. அறிவியலாளர்களும் புத்திசீவிகளும் எமது பூமி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் கண்டுணர்ந்து எச்சரிக்கிறார்கள். சூழற் பிரச்சினைகள் மக்களை நேரடியாகப் பாதிக்கின்றன. இயற்கை வளங்களைக் கொள்ளையிட்டுப் பெரும் இலாபம் சம்பாதிக்க முயலும் முதலாளிகளுக்கும் இயற்கை வளங்களை நம்பி உயிர்வாழும் மக்களுக்குமிடையேயான முரண்பாடுகள் வலுக்கின்றன. உலகெங்கும் சூழலியல் என்பது முதலாளித்துவத்துக்கெதிரான போராக உருக்கொள்ளத் தொடங்குகிறது. இது சந்தைப் பொருளாதாரத்தையும் முதலாளியக் கட்டமைப்பையும் காத்து நிற்கும் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கடியாக அமைகிறது. முதலாளிய அமைப்பினைக் கட்டிக்காப்பதற்காக உடனடியாக ஏதாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. முதலாளித்துவத்தால் ஏற்பட்ட இந்தச் சூழல் நாசத்தை முதலாளித்துவத்தாலேயே சரிப்படுத்த முடியும் என்று நம்பவைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. <br /><br />இப்படியானதொரு புறச்சூழலில் தான், அதற்கு முந்தைய பல சிறிய மாநாடுகளின் தொடர்ச்சியாக, றியோ டீ ஜெனிரொ (Rio de Janeiro) நகரில் ஜூன் 1992 ம் ஆண்டு "சூழலுக்கும் அபிவிருத்திக்குமான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development (UNCED))" இடம்பெறுகிறது. மிகப்பெரும் கார்ப்பரேட் ஊடகங்களின் அனுசரணையுடனும் பரப்புரையுடனும் அலங்காரம் மிக்கதாக இம்மாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டது. <br /><br />சூழலை நாசமாக்கிக்கொண்டிருக்கும் உற்பத்திமுறை, பொருளாதார அமைப்பு, நுகர்வு போன்றவற்றை அடியோடு மாற்றாமல், அவற்றை அப்படியே வைத்துக்கொண்டு சீர்திருத்தங்களூடாகவும் பெரும் நிதியளிப்புடனான செயற்றிட்டங்களூடாகவும் சூழலைக் காக்க முடியும் என்ற நிகழ்ச்சிநிரல் இம்மாநாட்டுக்குப் பிறகே தெளிவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2012 இலும் இதேபோன்றதொரு பெரிய மாநாடு றியோவில் நடத்தப்பட்டது. இந்த இருபதாண்டுகால இடைவெளியில் "பசுமை முதலாளித்துவம்" என்கிற கருத்தியல் வளர்ச்சிபெற்று வந்துள்ளது. <br /><br />"சந்தைப்பொருளாதாரத்தின் அடிப்படைகளில் நின்றுகொண்டு, சந்தைப்பொருளாதார விதிகளையே பயன்படுத்தி அரசுகளின் தலையீட்டுடன் சூழலைக் காக்கக்கூடிய நடவடிக்களை எடுத்தல்" என்று இந்தப் பசுமை முதலாளித்துவத்தைச் சுருக்கமாக விளக்கலாம். சூழலைப்பாதிக்காத பொருட்களுக்கான சந்தையை அதிகரிப்பது, சூழலை மாசடையச்செய்பவர்கள் மீதான வரிகளை விதிப்பது, கார்பன் வணிகம் போன்றவற்றை ஊக்குவிப்பதெல்லாம் இதனுள் அடக்கம். <br /></-></-></-><br />
<h3>
== சூழல் ஒப்பந்தங்களின் நடப்பு நிலவரம் ==</h3>
<br />1992 தீர்மானங்கள், கியோட்டோ ஒப்பந்தம், 2012 தீர்மானங்கள் இடையில் வந்த ஒப்பந்தங்கள் தீர்மானங்கள் எல்லாவற்றையும் பெரும்பாலான நாடுகள் கிடப்பில் போட்டுவிட்டன. பல நாடுகள் முதலில் ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு விலகிக்கொண்டன. ஆனால் சூழல் மட்டும் மேலும் மேலும் மாசடைந்து செல்கிறது. பசுமை முதலாளித்துவம் ஏன் செயற்பட முடியாமல் இவ்வாறு தோற்கிறது? <br /><br />அமெரிக்க சனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் கியோட்டோ ஒப்பந்தத்தைத் தாம் நடைமுறைப்படுத்த முடியாமை பற்றித் தெளிவான வாக்குமூலம் ஒன்றினைத் தருகிறார் :<br /><br />
<blockquote class="tr_bq">
"நாம் மத்தியகிழக்கிலிருந்து வரும் எண்ணெயில் தங்கியிருக்கிறோம். அந்த எண்ணெய் எமது தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையும் பொருளாதாரப் பாதுகாப்புப் பிரசினையுமாகும். கியோட்டொ எமது பொருளாதாரத்தைச் சிதைத்திருக்கும்." [1]</blockquote>
<br />2008ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் சூழற்பாதுகாப்புச் சட்டங்களை பிரித்தானியா அறிமுகப்படுத்தியது. இருக்கிற சந்தைப்பொருளாதாரச் சட்டகத்துள் வரிகள் விதிப்பதன் மூலம் சூழலைக் காப்பதாக அச்சட்டங்கள் அமைந்தன. பசுமைத் தலைவராக கெமரூன் போற்றப்பட்டார். ஆனால், இறுதியில் நடந்தது என்ன? அவருடைய சொற்களிலேயே அதனை அறியலாம் :<br /><br />
<blockquote class="tr_bq">
"கட்டணங்களை அதிகரிக்கின்ற சில பசுமை வரைமுறைகளையும் அறவீடுகளையும் நாம் மீளப்பெறவேண்டியுள்ளது. எனக்கு இன்னும் நிறைய கம்பனிகள் வேண்டும். எனக்கு இன்னும் சிறப்பான வரைமுறைகள் வேண்டும். எனக்கு நுகர்வோருடன் சிறப்பான பேரம் வேண்டும். அத்தோடு, ஆம், எமக்கு பசுமை அறவீடுகளை மீளப்பெறவும் வேண்டும்". - டேவிட் கமரூன் [2] </blockquote>
<br />பேராற்றல் மிக்க "முன்னேறிய" இரு முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள் சூழலைக்காப்பதற்கான 'பசுமை முதலாளியத்தை' நடைமுறைப்படுத்தினால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நெருக்கடி உண்டாகிறது என்கிறார்கள். <br /><br />
<blockquote>
“தாம் பசுமைப் பொருளாதாரத்துக்கு மாறுவது பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதாவது, முதலாளித்துவம் பச்சையாக மாறவேண்டும். இது, புலியானது தாவர உண்ணியாக மாறப்போகிறது என்று சொல்வது போல் இருக்கிறது. ”[3] </blockquote>
<br />என்கிறார் பிறேசிலைச்சேர்ந்த சூழலியலாளர் Lucia Ortiz. புலி புல்லைத் தின்னாது. அதற்கான உறுப்புக்கள் அதற்கில்லை. அப்படியே புல்லைத் தின்பதாய் முடிவெடுத்து வாழ்ந்தால் அது விரைவில் இறந்துபோய்விடும்.<br /><br />சந்தைப் பொருளாதாரத்தின் இறுக்கமான, மாறாத விதி என்னவென்றால், உற்பத்தியானது முதலாளிகளின் இலாபத்துக்கானதேயன்றி நுகர்வோரின் தேவைக்கானதல்ல என்பதுதான். நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் இலாபப்பெருக்கத்தைக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறாரேயன்றி சமூகசேவை செய்யவல்ல. தொடர்ச்சியாகச் சந்தைகளைப் பெருக்கிக்கொண்டும் நுகர்வினைப் பெருக்கிக்கொண்டும் தொழிலாளரது உழைப்புச் சக்தியை முடிந்தவரை அடிமட்ட விலைக்கு வாங்கிக்கொண்டும் மூலப்பொருட்களான இயற்கைவளங்களை முடிந்த வரையிலதிகமாகவும் குறைந்த செலவிலும் பெற்றுக்கொண்டும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சந்தைப்பொருளாதாரம் இயங்காது. சூழலைக் காப்பதற்காக இதில் ஏதாவதொன்றைக் குறைத்தாலோ, ஏதாவதொன்றின் செலவை அதிகரித்தாலோ சந்தையில் குறித்த முதலாளி ஓரங்கட்டப்படுவார். புஷ்ஷும் கமரூனும் அதைத்தான் சொல்கிறார்கள். பசுமை வரிகள், மாற்று எரிபொருள், பசுமை நுகர்வு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் உலகச்சந்தையில் போட்டி போட முடியாது. உள்ளூர் முதலாளிகளுக்கும் இலாபம் பெருகாது. அவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள், அரசை நெருக்குவார்கள். பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். <br /><br />பாரிய நிலக்கரிச்சுரங்கங்கள், கனிமச்சுரங்கங்கள், எண்ணெய்க்கிணறுகள் உட்பட சூழலுக்கு அச்சுறுத்தலான மிகப்பெரிய தொழில்களை அரசு தலையிட்டு மட்டுப்படுத்த முயன்றால், அதனால் மூடப்படும்/தொழிலாளர்களைக் குறைக்கும் நிறுவனங்களில் வேலை செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை யார் பெற்றுக்கொடுப்பது? அரசு தலையிட்டு வேலை பெற்றுக்கொடுப்பதற்கு இதுவொன்றும் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதார அமைப்பு அல்லவே, இது சந்தைப்பொருளாதாரம். அங்கெல்லாம் முதலிடப்பட்டுள்ள பாரிய தனியார் முதலீடுகளுக்கு யார் பொறுப்பு? இது அந்த நாட்டின் "பொருளாதாரத் தற்கொலை"யாகப் போய் முடியும். <br /><br />
<h3>
==கார்பன் வணிகம் ==</h3>
<br />பசுமை முதலாளியத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்றாகக் கார்பன் வணிகத்தை எடுத்துக்காட்டுவர். என்னுடைய தொழிற்சாலை சூழலைப் பாதிக்கக்கூடிய கார்பன் கழிவுகளை இவ்வளவு தான் வெளியிட முடியும் என்று ஒரு அனைத்துலக மட்டுப்பாடு இருக்கும். அதைத்தாண்டி நான் வெளியிடும் கார்பனுக்கு நான் வரிகட்ட வேண்டும். அதாவது வரிகட்டிவிட்டு நான் சூழலை மாசுபடுத்தலாம். ஒருவேளை நான் மட்டுப்பாட்டுக் குறைவாக கார்பனை வெளியிட்டால், நான் மிச்சம்பிடித்த அலகுகளை இன்னொரு தொழிற்சாலைக்கு விற்கலாம். அதாவது, இன்னொரு தொழிற்சாலை இன்னும் அதிகமாகச் சூழலை மாசுபடுத்த நான் உதவலாம். இந்தக் கார்பன் வணிகம் இன்று மிகப்பெரிய ஊழலும் இலாபமும் நிறைந்த புதியதொரு வணிகமாக மாறியிருக்கிறதே தவிர சூழலைக் காப்பதாயில்லை. <br /><br />
<h3>
== பசுமை நுகர்வு ==</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2FRBGgFrwfeGykq5BZQ150xDr_zmsctLY_H3JTCcPFxrux0pFjtdO3M4xil2s9Y_oNCIwV8_6Zn9cWLLj9EcD-U3MdrT_3wU9c8mpqEydgAFrPp4XoQbmaAJwVtMYIQtha95YIA/s1600/singer_fuelcellcars.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2FRBGgFrwfeGykq5BZQ150xDr_zmsctLY_H3JTCcPFxrux0pFjtdO3M4xil2s9Y_oNCIwV8_6Zn9cWLLj9EcD-U3MdrT_3wU9c8mpqEydgAFrPp4XoQbmaAJwVtMYIQtha95YIA/s320/singer_fuelcellcars.gif" width="280" /></a></div>
<br />சந்தைப்பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத கூறு சந்தையும் நுகர்வுமாகும். சந்தையில் எதற்கு அதிகம் கேள்வி இருக்கிறதோ, அந்தத் திசை நோக்கி உற்பத்தி நகரும் என்று சந்தைப்பொருளாதார வாதிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த விதியைப் பயன்படுத்திச் சூழலைக் காப்பதற்காகவே "பசுமை நுகர்வு (Green Consumerism)" எனும் கருத்தியல் உருவானது. சூழலுக்கு நட்பான, மீள்சுழற்சி செய்யக்கூடிய, மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்படி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அப்பொருட்களுக்கான சந்தையை அதிகரிக்க முடியும் என்று இக்கருத்தியல் நம்புகிறது. அதாவது கடைக்குப் போய் பொருட்களை வாங்குவதும் சூழலைக் காக்கும் போராட்டத்தில் ஒரு பகுதி என்று இது சொல்கிறது. நடைமுறையில் இது புதியதொரு சந்தையைத் திறந்து இலாபத்துக்கான புதியதொரு வழிமுறையாக மாறியிருக்கிறது. "சூழலுக்கு நட்பான" பொருட்கள் மேலும் மேலும் உற்பத்தி செய்யப்பட வேண்டிய தேவை உருவாகிறது. உற்பத்தி அதிகரிக்கும்போது மேலும் மேலும் இயற்கைவளங்களைப் பயன்படுத்த வேண்டியதாகிறது. உற்பத்திக்கான எரிபொருள் வலு, தொழிற்சாலைக் கழிவுகள் எல்லாம் பெருகுகின்றன. பொதுவாக சூழலுக்கு நட்பான நுகர்பொருட்களின் உற்பத்தி சுழலுக்கு நட்பானதாக இருப்பதில்லை. <br /><br />இலங்கையில் வலையமைப்புச் சந்தைப்படுத்தல் , நேரடிச் சந்தைப்படுத்தல் என்ற பெயர்களில் மக்களை ஏய்ப்பவர்கள் இத்தகைய பசுமை நுகர்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். "சூழல் நட்பு" என்று வந்தவுடன் அந்நுகர்பொருட்களின் ஏனைய மாற்றுக்களை விட அதிக விலை குறிக்க முடிகிறது. <br /><br />நுகர்வின் அதிகரிப்பு - அது பச்சையாக இருந்தாலென்ன வேறெந்த நிறமாக இருந்தாலென்ன - சூழலுக்குத் தீங்கானதாக அமையுமேயொழிய சூழலைக் காக்கப்போவதில்லை. <br /><br />
<h3>
== மாற்று எரிபொருள் ==</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguwVBcYao0pquWO-r3jWvIpv1vYD9eodbc_w9zfBQr_NNVMQCZwJI7mJBZmUnWUtE2acxW_UJnz2ZGE_dB8sHSsuHacJq775CBuwatbnShxN_GdN3PMhSZAjNyVYaOzWhW6uiSMA/s1600/ethanolcomic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguwVBcYao0pquWO-r3jWvIpv1vYD9eodbc_w9zfBQr_NNVMQCZwJI7mJBZmUnWUtE2acxW_UJnz2ZGE_dB8sHSsuHacJq775CBuwatbnShxN_GdN3PMhSZAjNyVYaOzWhW6uiSMA/s320/ethanolcomic.jpg" width="269" /></a></div>
<br />சுவட்டு எரிபொருட்களான நிலக்கரியும் பெற்றோலியமும் சூழலுக்குத் தீங்கானவை என்ற உண்மையை பொதுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால், இவற்றுக்கு மாற்றானதும் சூழலுக்கு நட்பானதுமாக விளம்பரப்படுத்தப்படும் எரிபொருட்களின் பால் இயல்பாகவே கவர்ச்சி ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக மின்வலுவில் ஓடும் கார்கள், பெற்றோலுக்குப் பதிலாக 'எதனோல்' பயன்படுத்துதல் போன்றவற்றைக் கூறலாம். இம்மாற்று எரிபொருட்கள் உண்மையில் சூழலுக்கு நட்பானவையா? <br /><br />மின்வலுவில் ஓடும் கார்களை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள், "பசுமைச் சந்தையில்" தமது இருப்பையும் இலாபத்தையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றன. கூடவே தமது தொழிற்சாலைகள் மூலம் சூழலையும் தொழிலாளர்களையும் வரைமுறையின்றிச் சுரண்டும் இக் கம்பனிகள், தம்மைப் பெரும் சூழலியல் அக்கறையாளர்களாகக் காட்டிகொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது. ஆனால், இக் கார்கள் பயன்படுத்தும் மின்வலு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற கேள்வியைக் கேட்டால் என்னவாகும்? சூழலுக்கும் மனிதருக்கும் அச்சுறுத்தலாக அமையும் நிலக்கரி மின்வலு நிலையங்கள் மூலம் அணு மின் நிலையங்கள் மூலமுமே பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய கார்களை மேலும் மேலும் வாங்கிக்குவிக்கும்போது இவற்றின் உற்பத்தி காரணமாகச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் அதிகரிக்கிறது. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் நிக்கலும் லித்தியமும் மிக ஆபத்தானவை. <br /><br />எதனோல் எரிபொருள் என்பது பெருமெடுப்பிலான "பசுமை" விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்படுகிறது. இவ்வெரிபொருளை அதிகம் பயன்படுத்தும் நாடாக பிறேசில் கொண்டாடப்படுகிறது. ஆனால் எதனோல் எரிபொருளின் மறுபக்கம் இப்போது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வரத்தொடங்கிவிட்டது. பிறேசில் நாட்டின் அமேசான் காடுகள் எதனோல் உற்பத்திக்கான கரும்பைப் பயிரிடுவதற்காக மேலும் மேலும் அழிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் எதனோலுக்கான சோளப் பயிர்ச்செய்கைக்காக மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வதற்கான பெருமளவு நிலங்களும் உணவுப் பொருட்களும் வீணடிக்கப்படுகின்றன [3]. இப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், கனரக வண்டிகளுக்கான எரிபொருள் என்று கணக்குப் போடும்போது பெற்றோலியத்தை நேரடியாகப் பயன்படுத்துவதே மேலானது என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். ஆனால் எதனோல் உற்பத்தி செய்யும் கம்பனிகள் தாம் புதிதாய்த் திறந்த சந்தையை இழப்பதற்குத் தயாராயில்லை. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilM7qdO2vNnfA_nwydr_9T7BVKCdSzy-TLzS8ed9Gn7P1E2rbB0twz3WlndepwB8BFnpWOPyP8ERf94Qk7__yvQUlx2VxQXvrjHo6z2AR8NkAbDfVxMmamt8Z0LsubNw9utf96JA/s1600/corn-ethanol-sign.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilM7qdO2vNnfA_nwydr_9T7BVKCdSzy-TLzS8ed9Gn7P1E2rbB0twz3WlndepwB8BFnpWOPyP8ERf94Qk7__yvQUlx2VxQXvrjHo6z2AR8NkAbDfVxMmamt8Z0LsubNw9utf96JA/s320/corn-ethanol-sign.jpg" width="320" /></a></div>
<br /><br />இவ்வகை மாற்று எரிபொருட்கள் பற்றி 2007ம் ஆண்டே கியூப அதிபர் ஃபிடல்காஸ்ட்ரோ இவ்வாறு எச்சரிக்கிறார்:<br /><br />
<blockquote class="tr_bq">
"மின்வலுவிலும் எரிபொருளிலும் இயங்கும் எல்லா மோட்டார் வண்டிகளையும் குறைப்பதும், அதற்கும் மேலாக அவற்றை அழித்து மீள்சுழற்சிக்குட்படுத்துதலும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே அவசரமானதும் அவசியமானதுமாகும் என்று நான் நம்புகிறேன். வலுவுக்கான செலவைக் குறைப்பது அல்ல, மாறாக உணவை எரிபொருளாக மாற்றுவது என்கிற யோசனை தான் துயர்மிக்கதாயிருக்கிறது. சராசரியாக 413 லீட்டர் எதனோலை உற்பத்தி செய்ய ஒரு தொன் சோளம் தேவைப்படுகிறது என்பது இன்று உறுதியாகத் தெரியவந்திருக்கிறது."[4]</blockquote>
<br />கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடி மடியும்போது கார்களின் செலவைக் குறைப்பதன் மூலம் கார்க் கம்பனிகளுக்கு கொள்ளை இலாபம் பெற்றுத்தருவதற்காக தொன் கணக்கில் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவது உண்மையில் மிகப்பெரிய பயங்கரவதமாகும். கார்களைக் குறைத்துவிட்டுப் பொதுப் போக்குவரத்தினை அதிகரிப்பதனூடாக மாசடைவை எத்தனையோ மடங்கு குறைத்துவிடலாம் என்பதை இவர்கள் எண்ண மாட்டார்கள். அது இலாபத்தைக் குறைத்துவிடும். <br /><br />
<h3>
== நுகர்வும் சந்தையும் முதலாளியமும் சூழலும் ==</h3>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdDuDkLB-RcGkYp_Tg_udFwOhjlbi95t-0zL28Uh-_fYOKQ3VbQVlYcwstfjqbwmtcWFtdHpP_NzLrJXFVVhRJVSWSRKe4txnqTsv7KdFVi2bg59ZU1LGpNb6ELX0-xrncon9ag/s1600/subsidyinvestment.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzdDuDkLB-RcGkYp_Tg_udFwOhjlbi95t-0zL28Uh-_fYOKQ3VbQVlYcwstfjqbwmtcWFtdHpP_NzLrJXFVVhRJVSWSRKe4txnqTsv7KdFVi2bg59ZU1LGpNb6ELX0-xrncon9ag/s320/subsidyinvestment.jpg" width="265" /></a></div>
<br />தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்று பேருருக்கொண்டிருக்கும் உலகளாவிய இலாப வேட்டை, மக்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதை ஊக்குவிக்கிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ, வாகனங்கள் தொடக்கம் உணவு வரைக்கும் வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கவேண்டியவர்களாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். எந்தப் பொருளையுமே தொடர்ந்து நீண்டகாலத்துக்குப் பயன்படுத்த முடியாதபடி ஏகப்பட்ட பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நுகர்பொருட்கள் வானத்திலிருந்து வந்து விழுவதில்லை. இயற்கை வளங்களை மிதமிஞ்சிச் சுரண்டியே இவை உற்பத்தி செய்யபப்டுகின்றன. காடுகள் வகைதொகையின்றி அழிக்கப்படுகின்றன, கடல்வளம் சூறையாடப்படுகிறது. கிரனைட் கற்களுக்காக மலைகளும் மலையின் அடிவேரும் தோண்டி எடுத்து உடைக்கப்படுகின்றன. கனிமங்களுக்காக நாடுகளில் போர்கள் உண்டாக்கப்படுகிறது. மக்கள் பட்டினியாலும் வதையாலும் மடியவைக்கப்படுகிறார்கள். <br /><br />இந்தச் சிக்கல்களுக்கான தீர்வினை இந்த சந்தைப்பொருளாதார - முதலாளியச் சட்டகத்தினுள் வைத்து ஒட்டுப் போட்டுத் தீர்க்க முயலும் முயற்சிகளின் திருவிழாவான றியோ மாநாடு எவ்வாறு முதலாளித்துவத்தினால் கேவலமாகத் தோற்று நிற்கிறது என்பதைத் தனது அறிக்கை ஒன்றில் Greenpeace அமைப்பு இவ்வாறு சொல்கிறது :<br /><br />
<blockquote class="tr_bq">
"மூன்று நாட்களும் உலகத் தலைவர்களின் வெற்று வாய்த் தோரணங்களையும் பச்சையடிக்கும் செயலையும் தான் நாம் சாட்சியாயிருந்து பார்த்தோம். வரலாற்றில் இம்மாநாடு 'பச்சையடித்தல்+20' என்றே அறியப்படும்... எமக்குத் வேண்டிய எதிர்காலத்தை நாம் றியோவிலிருந்து வெறவில்லை. ஏனெனில் எமக்குத் தேவையான தலைவர்கள் எம்மிடமில்லை. மிகப் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் வியாபாரிகளை/முதலாளிகளையே வழக்கம்போல ஆதரித்தார்கள். வெட்கக்கேடான முறையில் பூமிக் கோளையும் மக்களையும் விட தனியார் இலாபத்துக்கே முன்னுரிமை அளித்தார்கள்... எமக்குத் தேவையான எதிர்காலம் றியோவில் ஒருபோதும் தீர்மானிக்கப்படப்போவதில்லை. அது, ஒவ்வொரு நாளும் தலைநகர்களிலும் நிறுவனங்களின் கூட்ட அறைகளிலும் தான் தீர்மானிக்கப்படுகிறது. " [5]</blockquote>
<br />சூழலை நாசமாக்கும் முதலாளித்துவத்தால் சூழலைக் காக்கவும் முடியும் என்று காட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் மோசமாகத் தோற்றுவிட்டன. முதலாளிகளும் கார்ப்பரேட்டுக்களும் முதலாளித்துவ அரசுகளும் இணைந்து இயற்கையைச் சூறையாட நவீன ஆயுதங்கள் ஏந்தி நிற்கின்றன. இயற்கைச் சூழலை நேசிக்கும் தமது சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கவும் அவை தயாராகின்றன. இக் கொலைகாரக் கூட்டணி தான் "பசுமை முதலாளியம்" எனும் பச்சை நிறத்தைப் பூசிக்கொண்டு ஊடகங்களில் சிரிக்கின்றன. <br /><br />பத்திரிகைக் கட்டுரைகளாகவும் தொலைக்காட்சி ஆவணப்படங்களாவும் பாடப்புத்தகத்தின் பாடப்பகுதிகளாகவும் மட்டுமே இருந்த சூழலியற் பிரச்சினைகள் இன்று எமக்கருகில் வந்து எமது கதவுகளைத் தட்டும் காலத்தில் நாம் வாழ்கிறோம். மலையகத்தில் மேல் கொத்மலைத்திட்டத்துக்கு எதிராகவும், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்துக்கு எதிராகவும் வெலிவேரியாவில் நிலத்தடி நீர் நஞ்சாக்கப்படுவதற்கெதிராகவும் நாம் போராடவேண்டியிருந்தது. இன்று யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரைக் காப்பதற்காகவும் திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையத்தை அகற்றி எமது கடலையும் நிலத்தையும் காற்றையும் பாதுகாப்பதற்காகவும் போராடுகிறோம். அனுராதபுரத்தில் இனம்புரியாத சிறுநீரக நோயால் சாகிறோம். இவ்வாறானதொரு சூழலில் "சூழலியல்" என்கிற சொல்லைக்கொண்ட எழுத்துக்களையும் உரையாடல்களையும் போராட்டங்களையும் நாம் அன்றாடம் எதிர்கொள்ள நேர்கிறது. சூழலியல் என்ற பெயரில் வரும் கருத்துக்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஆழமானதும் தெளிவானதுமான அரசியல் நோக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது இன்று கட்டாயமாகிறது. <br /><br />முதலாளித்துவத்தையும் சந்தைப்பொருளாதாரத்தையும் தோற்கடித்து, மக்களுக்கும் இயற்கைச்சூழலுக்கும் நட்பான அரசியல் - பொருளாதார முறைமை ஒன்றினைக் கொண்டுவர வேண்டிய தேவை இன்று அவசரமாக இருக்கிறது. எமது உற்பத்தி முறையை முற்றிலுமாக மாற்றவேண்டிய தேவை உள்ளது. இந்த அமைப்பு மாற்றத்துக்காகப் போராடுபவர்களோடு கைகோர்த்துக்கொண்டு சூழலியலாளர்களும் களத்திலிறங்கவேண்டும். அதை விடுத்து, "பசுமை முதலாளியம்" எனும் மாயப் பொறிக்குள் நேர்மையான சூழலியலாளர்களும் சூழலியற் போராளிகளும் சிக்கிக்கொண்டால் அவர்கள் தம்மையறியாமல் சூழலுக்கு எதிராகச் செயற்படுவோராகவே மாறுவர். <br /><br />(புதுவசந்தம் 2015)<br /><br />உசாத்துணை: <br /><br />[1] http://www.nbcnews.com/id/8422343/ns/politics/t/bush-kyoto-treaty-would-have-hurt-economy/<br /><br />[2] http://www.bbc.com/news/uk-politics-24637499<br /><br />[3] http://foodorfuel.weebly.com/ <br /><br />[4] http://climateandcapitalism.com/2007/03/29/fidel-castro-on-biofuel-and-world-hunger/<br /><br />[5] http://www.greenpeace.org/international/en/press/releases/Greenpeace-Press-Statement-Rio20-Earth-Summit-a-failure-of-epic-proportions/<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-20301263042322691822015-11-25T18:57:00.005+05:302015-11-25T18:57:53.633+05:30எழுத்துச் சூழலில் இணையத் தொழிநுட்பச் செல்நெறிகளின் செல்வாக்கு<h2>
<span style="font-weight: normal;">இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் இலங்கைத் தமிழர்களது எழுத்துச் சூழலில் இணையத் தொழிநுட்பச் செல்நெறிகளின் செல்வாக்கு.</span></h2>
[ சிங்கப்பூர் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கென (2011) எழுதப்பட்ட கட்டுரை] <br /><br />
<h3>
முன்வரைவு</h3>
<br />இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் இணையத்தை அதனது தொடக்க காலங்களிலேயே உள்வாங்கிக் கொண்டவர்களாக உள்ளார்கள். பல்வேறு இலக்கிய, எழுத்தாக்க முயற்சிகளையும், கலைத்துறை சார்ந்த முயற்சிகளையும் அவர்கள் இணையத்தில் முன்னெடுத்து வந்துள்ளார்கள். <br /><br />அச்சிதழ்களில் எழுதிவந்த எழுத்தாளர்கள் பலரும் மின்வெளிக்கு வந்ததுடன், இணையத்திலேயே எழுதத்தொடங்கிய ஏராளமான எழுத்தாளர்களும் தோன்றினர். இவர்கள் எழுதிவந்த சொல்லும் பொருளும், அவர்கள் கையாண்ட எழுதும் முறையும், வாசகருடனான ஊடாட்டமும் இணையத்தொழிநுட்பங்களின் வளர்ச்சியுடன் வளர்ந்தும் மாற்றங்களுக்குள்ளாகியும் வந்துள்ளது. <br /><br />இணையத் தொழிநுட்பங்களின் வளர்ச்சி எனும் போது உலகப்பொதுவான இணையத் தொழிநுட்பத் தலைமுறை மாற்றங்கள் மட்டுமல்ல, தமிழ்ச்சூழலுக்கே உரிய தனித்துவமான தொழிநுட்ப மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். <br /><br />எழுதும் ஊடகத்தின் தன்மை எழுத்தின் தன்மையில் செல்வாக்குச் செலுத்துவது தவிர்க்க முடியாதது. இணையத் தொழிநுட்ப வளர்ச்சிகள் அதிலும் ஒரு படி தாண்டி, எழுத்தாளர் - வாசகர் உறவிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எனில், அவ்வாறு ஏற்பட்ட மாற்றங்கள் எவை; இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களதும், புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களதும் மின்வெளி எழுத்துக்கள் எவ்வாறெல்லாம் மாறிவந்துள்ளன; அந்த வளர்ச்சிப்படிகளின் முக்கிய கட்டங்கள் எவை என்பதையெல்லாம் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. <br /><br />கடந்த பத்தாண்டுகால தமிழ் இணைய வரலாறும், அதேயளவான காலப்பகுதியின் மின்வெளித் தமிழ் எழுத்துக்களின் வரலாறும் இதற்கென ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. <br /><br />தற்போது புதிதாய் உருவாகியுள்ள பொதுவானதும், தமிழ்ச் சூழலுக்குச் சிறப்பானதுமான இணைய, கணிமைத் தொழிநுட்பங்கள் இனி வரும் காலத்து மின்வெளி எழுத்துக்களில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தவல்லவையாக உள்ளன என்ற எதிர்வுகூறலையும் இக்கட்டுரை ஆய்வு ரீதியாக முன்வைக்கும். <br /><br /><br />
<h3>
முன்னுரை </h3>
<br /><br />அரசியல்-சமூக-பொருளாதார நிலைகளும் மாற்றங்களுமே காலத்துக்குக் காலம் எல்லா மொழிகளின் கலைகளினதும் எழுத்திலக்கியங்களினதும் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் தீர்மானித்து வந்துள்ளன. தமிழிலும் அவ்வாறே. மனித அறிவால் காலவோட்டத்தில் கண்டறியப்படும் தொழிநுட்பங்களும் எழுத்திலக்கியங்களில் கணிசமானளவு தாக்கங்களைச் செலுத்தி வந்துள்ளன. <br /><br />தமிழில் எழுத்தாக்கங்களை உருவாக்குபவர்கள், எழுத்துமூலம் கருத்துக்களைப் பதிவு செய்பவர்கள், எழுத்தாக்கங்களை வாசகர்களிடம் காவிச்செல்லும் ஊடகங்கள், எழுத்தாக்கங்களை வாசிப்பவர்கள், இவர்களுக்கிடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் உறவாடல்களும் உரையாடல்களுமாகத் தமிழ் எழுத்துச்சூழல் அமைகிறது. <br /><br />எழுத்து எனும் நுட்பம் கண்டறியப்பட்டது முதல் எழுதத்தக்க களிமண் தட்டுக்கள், ஓலைகளைப் பதப்படுத்தி அதன் மீது எழுதும் தொழிநுட்பம், காகிதம், அச்சுக்கலை என்று வளரும் தொழிநுட்பக்கண்டுபிடிப்புக்கள் இன்று கணினி, இணையம், கையடக்கக் கருவிகள், மின்னூற்கள் என்று மேலும் வளர்ந்து செல்கின்றன. இக் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் தம்மளவில் தமிழ் எழுத்தாக்கங்களின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் காலத்துக்குக்காலம் மாற்றங்களை ஏற்படுத்தியே வந்துள்ளன. எழுத்துச் சூழலிலும் இவை கணிசமான செல்வாக்கினைச் செலுத்தியுள்ளன. <br /><br />செவியால் கேட்கும் வடிவமாக இருந்த செய்யுட்கள் அச்சுக்கலையின் வருகையோடு கண்ணால் பார்த்துப்படிப்பதற்கான வடிவத்தை எடுத்துக்கொண்டதும், இன்று கணினி, பல்லூடகத் தொழிநுட்பங்களின் வருகையோடு கண்ணாலும் செவியாலும் உள்வாங்கத்தக்க வடிவத்தினை எடுத்துக்கொண்டிருப்பதும், வாசகர் இடையீடு செய்யும் சாத்தியங்கள் கொண்டதாக (Interactive) மாறியிருப்பதும் இதற்கு ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு. <br /><br />இதில் கணினி, இணையத் தொழிநுட்பங்களின் வரவு ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், செல்வாக்கு என்கிற வரையறைக்குள் இந்தக்கட்டுரை அமைகிறது. <br /><br />இம்மாற்றங்களை, <br /><br /><br />1. எழுதவும் பகிரவும் உரையாடவும் ஏற்பட்ட வசதிகள் <br /><br />2. எழுத்தைப் பகிரும் ஊடகம் <br /><br />3. எழுத்துப் பாணி, வடிவம், எழுதும் முறை, உள்ளடக்கம் <br /><br />4. எழுத்துச்சூழலின் மனநிலை மாற்றம் <br /><br />5. புதிய எழுத்தாளர்களின் வருகையும் எழுத்தாளர்களின் தன்மையும் <br /><br />6. வாசகர்கள் <br /><br />7. உரையாடல்களும் ஊடாட்டமும் <br /><br /><br />எனும் பரப்புக்களில் பார்க்கலாம். <br /><br /><br />
<h3>
கணினி </h3>
<br /><br />இலங்கைத் தமிழ்ச்சூழலில் கணினியின் வருகை இணையத்தின் வருகைக்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே நிகழ்ந்தது. அந்த வகையில் இணையத்தொடுப்பற்ற கணினி தமிழ் எழுத்துச்சூழலில் சிற்சில மாற்றங்களையே உண்டாக்கியிருந்தது. <br /><br />1995-1998/1999/2000 ம் ஆண்டுகளை இக்காலப்பகுதிக்குள் அடக்கலாம். <br /><br />இக்காலகட்டத்தில் ஏற்பட்ட தெளிவான பண்பு மாற்றம் அச்சு / பதிப்புத்துறையிலேயே ஏற்பட்டது. வீட்டிலுள்ள சிறிய மேசை ஒரு பதிப்பகமாக இயங்கும் வாய்ப்பினைக் கணினியினதும் மென்பொருட்களினதும் வருகை ஏற்படுத்தித் தந்தது. இதனால் நூல் வெளியீட்டாளரோ இதழாசிரியரோ மிக இலகுவாகவே நூல்களையும் இதழ்களையும் அச்சுக்குத் தயாரித்துவிடக்கூடியதாக ஆனது. அச்சுக்கோர்ப்பு முதலான பணிகள், அதற்குத்தேவையான ஆளணி அனைத்தும் கணிசமானளவு குறைக்கப்பட்டதால் நூல்/இதழ் வெளியீடு ஒப்பீட்டளவில் இலகுவானதாக மாறியது. கையெழுத்துப்பிரதிகள், றோணியோப் பிரதிகளாகவே இருந்துவந்த சிறிய அளவிலான எழுத்தூடக முயற்சிகள்அனைத்தும் பெரிய எழுத்தூடகங்களுக்குச் சற்றும் குறையாத நேர்த்தியுடனும் தரத்துடனும் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டது. இந்தப்புறநிலை இதழ்களின் நூல்களின் வருகையையும் பரவலையும் அதிகப்படுத்தியது. <br /><br />கணினிப் பதிப்புத்துறைக்குத் துணையாக அச்சுக்கருவிகளும் உருவாகி வளர்ந்தன. வீட்டிலேயே மிகத்துல்லியமாகத் தாளில் அச்சிட்டெடுக்கக்கூடிய, கணினியுடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறிகளும் இக்காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கிய வகிபாகத்தினைப் பெற்றுக்கொண்டன. <br /><br />அச்சிடும் கருவிகளின் வளர்ச்சியோடு நூல்களிலும் இதழ்களிலும் வண்ணத்திலாயினும் தனி நிறத்திலாயினும் ஒளிப்படங்களைத் தாராளமாகச் சேர்க்கக்கூடிய வாய்ப்பு இக்காலகட்டத்தில் ஏற்பட்டது. கணினியின் உதவியோடு படங்களை இணைப்பது முன்னைய காலங்களோடு ஒப்பிடும்போது மிக மிக எளிமையானதாக மாறியது. இது தளக்கோல வடிவமைப்பு (Layout) என்கிற கலையில் தீவிரமான மாற்றங்களை உருவாக்கியது. கணினி மயப்பட்ட வரைகலை எழுத்தூடகங்களின் மிக முக்கியமான கூறாக இணைந்துகொண்டது. ஒளிப்படங்களும் வரைபடங்களும் தமிழ் எழுத்தாக்கங்களில் இயல்பாகவே விரவியிருக்கும்படியாக வடிவமும் உள்ளடக்கமும் மாற்றம் கண்டது. <br /><br />எண்ணிம ஆவணங்களாக (Digital Documents) எழுத்தாக்கங்கள் மாறத்தொடங்கிய இக்காலகட்டத்தில் ஆவணங்களைச் சேமிப்பதும் நகலெடுப்பதும் இலகுவான செயலானதுடன் ஆவணப்படுத்தல் என்கிற துறை முற்றிலும் மாறுபட்ட திசைவழியில் செல்லலானது. மின்வருடிகளைப்(Scanners) பயன்படுத்தி ஏற்கனவே அச்சில் வெளிவந்த ஆவணங்கள், படங்கள் என்று அனைத்தையும் எண்ணிம வடிவில் அலகிட்டுக்கொள்ளக்கூடிய (Scanning) வாய்ப்பு ஆவணப்படுத்தற் துறையில் ஏற்பட்ட புரட்சியாகவே கருதப்படலாம். மின் நூல் என்கிற புதிய ஊடகம் இக்காலகட்டத்தில் தான் தோன்றியது. ஆனால் தமிழ்ச் சூழலில் இதன் வருகைக்கு இணையத்தின் வருகைவரை, தொண்ணூறுகளின் இறுதிப்பகுதி வரை காத்திருக்க வேண்டியதானது. <br /><br />தமிழ் எழுத்துச்சூழலில் கணினியின் வருகை அச்சுப்பதிப்புத்துறையிலும் அதன் வழி எழுத்தூடகத்திலும் ஏற்படுத்திய மாற்றத்தினளவுக்கு ஏனைய பரப்புக்களில் மாற்றங்களை உருவாக்கவில்லை. உள்ளடக்கம் வடிவம் என்பன சிறு சிறு மாறுதல்களுக்கே உள்ளானது. தமிழ் எழுத்துச்சூழலுக்குள் உள்ளடக்கப்படக்கூடிய தளக்கோலம் (Layout) என்கிற கலை மட்டுமே இக்காலப்பகுதியில் தீவிரமான மாற்றத்துக்கு உள்ளானது. இதழ்களின் வருகை ஊக்குவிக்கப்பட்டமையும் இதழ்களின் நூல்களின் எண்ணிக்கை பெருத்தமையும் இங்கே குறிப்பிட்டுக்கூறக்கூடிய மாற்றமாகும். <br /><br />அச்சுப்பதிப்புத்துறை வீட்டின் மேசைக்குள் வந்துவிட்ட நிலையில் தொழின்முறையாக, செவ்வையாகப் பயிற்சி பெறாத ஆரம்ப நிலையில் உள்ளவர்களும் பதிப்புத்துறைக்குள் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டமையால் முன்னைய காலங்களைப்போன்று செம்மையானவையாக அச்சிதழ்களும் நூல்களும் இல்லை என்ற விமர்சனம் இக்காலப்பகுதியில் எழுந்தது. <br /><br /><br /> <br />
<h3>
இணையம் </h3>
<br /><br />சடுதியானதும் மிகத்தாக்கமானதுமான மாற்றங்களைத் தமிழ் எழுத்துச்சூழலில் ஏற்படுத்தியது இணையத்தின் வருகைதான். இணையம் தமிழ் எழுத்துச்சூழல் இயங்கும் முறையையே மாற்றியமைத்தது. பத்தாண்டு காலத்துக்கும் மேலாக நடந்துவரும் இந்த மாற்றங்களை <br /><br />1. இணையத்தின் வருகையை அடுத்த முதலாந்தலைமுறை வலைக்காலம் (Web 1.0) <br />2. இரண்டாந்தலைமுறை வலைக்காலம் (Web 2.0) <br />3. சமூக வலையமைப்புக்களினதும், கையடக்கக்கருவிகளினதும் இணையக் கணிமையினதும் (Cloud Computing) காலம் <br /><br />என்று மூன்றாகப் பிரித்து ஆராய்வது பயனுள்ளதாயிருக்கும். <br /><br /><br /><br />
<h3>
இணையத்தின் வருகையை அடுத்த முதலாந்தலைமுறை வலைக்காலம் (Web 1.0) </h3>
<br /><br />இணையத்தினது வருகையின் தொடக்க நிலை இது. தமிழ்ச்சூழலில் தனி ஆட்களிடையே இணைய, கணினிப் பயன்பாடு பரவலாகாத காலம். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள், வசதிபடைத்தவர்கள், பல்கலைக்கழகங்களுடனோ தொழின்முறையாகக் கணினித்துறையுடனோ தொடர்புற்றவர்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பினைப் பெற்ற காலம். தமிழ்ச்சூழலில் இது தொண்ணூறுகளில் நடுப்பகுதியில் தொடங்கி 2003-2004 வரை நிலவியது. [1] <br /><br />இணையம் என்கிற புதிய தொடர்பாடல் தொழிநுட்பத்தின் சாத்தியங்கள் தமிழ் எழுத்துச்சூழலில் பரிசோதனைக்குள்ளாகிக்கொண்டிருந்த காலகட்டமாக இது அமைந்தது. இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான தொழிநுட்ப வசதிகள் பல்வேறு இழுபறிகளோடு முன்னேறிக்கொண்டிருந்ததும் இக்காலத்திற்தான். <br /><br />இக்காலத்தில் மின்னஞ்சல் தமிழ் எழுத்துச்சூழலுக்கு ஒரு தொடர்பாடல் வழிமுறையாக அறிமுகமாகிறது. இதழ்களுக்கு மடல் அனுப்புதல், ஆக்கங்களை அனுப்புதல் மின்னஞ்சலூடாக நடைபெறத்தொடங்கும்போது காலம் பெரிய அளவில் சேமிக்கப்பட்டதுடன் அனுப்பப்படும் பிரதியை திருப்பி அனுப்ப வேண்டிய தேவைகள் முற்றாகவே அற்றுப்போகவாரம்பித்தது. <br /><br />அச்சிதழ்களுக்கான உள்ளடக்கங்களை பிற மொழி இணையத்தளங்களில் இருந்து தேடிப்பெறக்கூடியதானது. இதழ்களின் ஒளிப்பட, வரைபட உள்ளடக்கம் திடீரென்று பெரும் மாற்றத்துக்குள்ளானது. அச்சிடுவதற்கான, எழுத்தாக்கம் ஒன்றுக்குப் பொருத்தமான படங்களைத் தேடிப்பெறும் சிரமம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றத்துக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாக இதழ்களின் சினிமாப்பகுதியைக் கொள்ளலாம். திரைப்படங்கள் தொடர்பான வண்ணப்படங்கள், செய்திப்படங்கள் மிக அரிதானவையாகக் காணப்பட்ட காலம் மாறி பெரும் எண்ணிக்கையில் உடனுக்குடன் இவ்வாறான படங்கள் இதழ்களில் பிரசுரமாகத்தொடங்கின. ஏனைய நடப்புச் செய்திகள் தொடர்பான படங்களுக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்தது. இலங்கையில் வெளியான தினமுரசு போன்ற பத்திரிகைகள் (Tabloids) பிரபலமடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. <br /><br />பன்மொழி வலைத்தளங்களை இலகுவில் தேடியடையக்கூடியவண்ணம் தேடுபொறிகள் வளர்ச்சியடைந்ததால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் எழுதப்படும் உரையாடப்படும் விடயங்களை உடனுக்குடன் எளிதாக வாசித்தறியும் வாய்ப்புக்கிட்டியது. இதுவரை காலமும்தமிழ் இலக்கிய-சிற்றிதழ்-எழுத்துச்சூழலில் பேசப்படாத புத்தம்புதுப் பரப்புக்களை சாதாரண ஆங்கிலம் தெரிந்த இணையப்பயனர்கள் வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர். இது தமிழ் எழுத்துச்சூழலின் உள்ளடக்கத்தில் பெரும் விருத்தியைக் கொண்டு வந்தது. இலங்கையில் இக்காலகட்டத்தில் வெளியான "அரும்பு" [2] இதழை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும். இலக்கியச்சூழலுக்கு வெளியே அறிவியல் தகவல்களை உள்ளடக்கி வெளிவந்த இதழ் இது. ஒரு மருத்துவர் இதன் ஆசிரியராக இருந்தார். நடப்பு அறிவியல் தகவல்களை இணையத்தின் வழியாகப்பெற்று தமிழில் தந்தது அரும்பு இதழ். இணையப் பயன்பாடு மிக மிகக்குறைவாக இருந்த இக்காலகட்டத்தில் அச்சிதழ்கள் இணையத்தின் உள்ளடக்கத்தை தமிழில் அச்சில் வழங்கும் பணியைச் செய்ய வேண்டியனவாக மாறிக்கொண்டிருந்ததை "அரும்பு" இதழ் எடுத்துக்காட்டுகிறது. <br /><br />மின்னஞ்சற் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, சாதாரண பயனர்களும் சிறு சிறு கவிதைகளை கணினி வரைகலையின் துணையுடன் "அளிக்கை"களாகச்செய்து நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பும் வழக்கம் அதிகரித்தது. செய்திகள், பல்வேறு விடயப்பரப்பினுள்ளும் அடங்கும் துணுக்கள் போன்றவையும் இவ்வாறு மின்னஞ்சலூடாகப் பரிமாறப்படலானது. செய்தித்தாள்கள் இதழ்களைத்தாண்டி நண்பர்களின் மின்னஞ்சல்கள் தமிழ் எழுத்தாக்கங்களைத் தாங்கிவரும் ஊடகங்களாக மாறின. பரிமாறும் நண்பரது ரசனையை நாம் அறிந்திருப்போமாகையால் வாசிப்பதற்கான தெரிவினை, பகிர்ந்தவர் யார் என்ற அடிப்படையில் செய்யக்கூடிய நிலையின் மிகத்தொடக்க நிலையாக இது இருந்தது. <br /><br />நிலைத்த வலைத்தளங்கள் (Static Websites) மெல்ல மெல்லத் தமிழில் பெருகவாரம்பித்தன. விளையாட்டு, சினிமா, செய்திகள், இலக்கியம், அரசியல் என்று பல்வேறு பரப்புக்களிலும் வலைத்தளங்கள் உருவாக்கப்படலாயின. வசதியுள்ளவர்களும் தொழிநுட்பம் அறிந்தவர்களும் தமக்கான தனியான வலைத்தளங்களையும்கூடத் தமிழில் உருவாக்கத்தொடங்கினர். பெரும்பாலும் யாகூ நிறுவனத்தின் Geocities எனப்படும் இலவச சேவை இவ்வாறான தனிப்பட்ட வலைத்தளங்களின் இருப்பிடமாயமைந்தது. <br /><br />அச்சில் வெளிவந்துகொண்டிருந்த இதழ்களுக்கு மாற்றாக மின்னிதழ்கள் உருவாகின. அச்சிதழ் போன்றே மின்னிதழ் வலைத்தளம் ஒன்றில் இருந்தது. இத்தகைய மின்னிதழ்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படுவனவாகவோ அல்லது குறித்த காலத்துக்கு ஒருமுறை இற்றைப்படுத்தப்படுவனவாகவோ அமைந்தன. இக்காலப்பகுதியில் இலங்கையில் மின்னிதழ்களின் நவீன இணையவடிவமான வலைவாசல்கள் (Portals) உருவாகத்தொடங்கின. சூரியன் டொட் கொம் [5] நிலவு, தமிழரங்கம் போன்ற வலைவாசல்கள் 2001-2003ம் ஆண்டுகளிலேயே தொடக்கப்பட்டன. மின்னிதழ்கள், அச்சிதழ்களின் அதே நடைமுறைகளையே இணையத்திலும் பின்பற்றியதால் எழுத்துச்சூழலில் பெருமளவான மாற்றங்களை உருவாக்கவில்லை. ஆயினும் எல்லாத்தொடர்புகளும் மின்னஞ்சல் வழியாக அமைந்தது சில புதிய சாத்தியங்களைத் தந்திருந்தது. அச்சிதழில் வெளிவந்த ஆக்கங்களும் பெருமளவில் மின்னிதழ்களிலும் வலைத்தளங்களிலும் மீள்பிரசுரமாயின. தொழிநுட்பவியலாளர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் கைகளிலேயே ஆரம்பத்தில் இம்மின்னிதழ்கள் இருந்தமையால் இவற்றின் உள்ளடக்கத்தில் தொழிநுட்ப விடயங்களும் புதிய புதிய விடயப்பரப்புக்களும் அதிகளவில் உள்வாங்கப்பட்டன. இந்தியத் தமிழக எழுத்தாளர்களின் செல்வாக்கே தமிழ்ச்சூழலெங்கும் வலுவாக நிலவிவந்த நிலையில் இணைய இதழ்கள் தேச எல்லைகளைக்கடந்து எழுத்தாளர்கள் ஒன்று கூடும் இடமாகத் தொழிற்பட ஆரம்பித்தன. இலங்கையின் மின்னிதழ்கள் இலங்கைத்தமிழர்களது விடுதலைப் போராட்டம் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவமளித்தன. போராட்டம் குறித்த செய்திகளை பயமற்று சுதந்திரமாகப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை இத்தளங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டன. <br /><br />இவ்வாறு உருவான வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட விடயங்கள் தாராளமாக அச்சிதழ்களால் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அச்சிதழ்களும் நாளிதழ்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்களை மீள் பிரசுரம் செய்துவிட்டு, அவ்வாக்கம் வெளியான வலைப்பக்கத்தின் முகவரியை முழுமையாகப் பிரசுரிக்கவேண்டிய தேவையை உணராமல் "நன்றி இணையம்" என்றுமட்டும் போடும் வழக்கம் இக்காலப்பகுதியில் நிலவியது. நாளிதழ்களின் இப்போக்கினை இணையத்தில் எழுதுபவர்கள் கண்டித்தார்கள். <br /><br />வலைத்தளங்களின் புதிய சாத்தியங்களை எழுத்தாளர்கள் பரிசோதிக்கத்தொடங்கியமைக்குச் சான்றாக, தமிழக எழுத்தாளர் (சுஜாதா)ரங்கராஜன் கிழமையில் ஒரு நாளில் வலைத்தளமொன்றில் குறிப்பிட்ட நேரப்பகுதியில் திறந்த "அரட்டை" ஒன்றை மேற்கொண்டமையைக் கூறலாம். எவரும் தயக்கமின்றி ரங்கராஜனோடு எழுத்துமூலம் உரையாடும் வாய்ப்பினை இது ஏற்படுத்தியிருந்தது. எழுத்தாளர் - வாசகர் இடையிலான இடைவெளியைக் குறைக்க மின்வெளியில் செய்யப்பட்ட சிறு முயற்சியாக இதனைக்கருதலாம். ஆனால் இப்போக்கு பரந்தளவில் மற்றைய எழுத்தாளர்களால் தொடரப்படுவதற்கு முன்னர் இரண்டாந்தலைமுறை வலைக்காலம் வேறு வழியில் இம்மாற்றத்தினை சாதித்துச்சென்றுவிட்டது. அதுபற்றி பின்னர் பார்க்கலாம். <br /><br />மின்னிதழ்களும் வலைத்தளங்களும் பெரியளவில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாத நிலையில் "மடலாடற்குழுக்களின்" வரவு மிகப்பெரும் மாற்றத்தினை தமிழ் எழுத்துச்சூழலுக்குள் கொண்டுவந்து சேர்த்தது. முன்னெப்போதுமிருந்திராத புதிய வெளியினை வாசகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அறிவோருக்கும் பகிர்வோருக்கும் மடலாடற்குழுக்கள் திறந்துவிட்டன. <br /><br />இலக்கியம் தொடக்கம் நுட்பியல் வரை வெவ்வேறு துறைசார்ந்தவர்கள் தத்தமக்கென மடலாடற்குழுகக்ளை உருவாக்கிக்கொண்டு அங்கே உரையாடவாரம்பித்தனர். பல்வேறு துறைகளோடும் தொடர்புடைய ஒன்றுக்குமேற்பட்ட மடலாடற்குழுக்களில் பலரும் உறுப்பினராயினர். இது பரந்தளவிலும் பெருமளவிலும் ஆட்களிடையிலான பொதுவான எழுத்துமூல உரையாடலைத் தமிழ்ச்சூழலில் ஏற்படுத்தியது. இதுவரை எழுத்துச்சூழலில் அதிகாரம் பெற்றிருந்த அச்சிதழ்கள், சிற்றிதழ்களின் மட்டுப்படுத்தப்பட்ட எழுத்தாளர் - வாசகர் வட்டத்தைத்தாண்டி மிகப்பரந்தளவில் பல்வேறு துறைசார்ந்த விடயங்களும் மடற்குழுக்களில் உரையாடப்ப்ப்படலாயின. மடலாடற் குழுவுக்கு அனுப்பும் மின்னஞ்சல் ஒன்றின் வாசகர் எண்ணிக்கை பல சிற்றிதழ்களின் வாசகர் எண்ணிக்கையை விடவும் அதிகமாயிருந்தது. அச்சிதழ்களைப் போன்றல்லாது மேன்மேலும் சனனாயகமயப்பட்டதாக இருந்த இவ்வுரையாடல்கள் தமிழ் எழுதும் பாணியை எளிமையானதாக மாற்றியது. இலக்கு வாசகர்களை மனதிலிருந்தி எழுதும் வடிவத்தைனைக் கட்டாயமாக்கியது. தயக்கம் காரணமாகவும் நடைமுறைச்சிக்கல்கள் காரணமகவும் இதழ்களில் எழுத உரையாடத் தயங்கியவர்களும் மடலாடற்குழுக்களில் உரையாடத்தொடங்கினார்கள். இதனால் புதிய புதிய பார்வைகள் வந்து சேர்ந்தன. "எழுத்தாளர்கள்" என்ற குறுகிய வட்டத்தை உடைத்துக்கொண்டு பொது வெளியை நோக்கிய தமிழ் எழுத்து உருவாகத்தொடங்கியது. தமிழ் டொட் நெட், ராயர் காப்பி கிளப், மரத்தடி குழுமம் [4] போன்றவை இங்கே நினைவு கூரத்தக்கவை. <br /><br />நுட்பியலாளர்கள், எழுத்தாளர்கள், வெவ்வேறு துறை சாந்தவர்கள், தொழின்முறை எழுத்தாளர்களாக இல்லாதவர்கள், மாணவர்கள் என்று ஒரு புதிய "இணையத்தில் தமிழில் எழுதும்" வட்டத்தினை முதலாம் தலைமுறை வலைக்காலம் உருவாக்கிவிட்டிருந்தது. இந்த வட்டம் தேச எல்லைகளைக் கடந்ததாக இருந்தது. இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எல்லோரும் ஒன்றாகச்சேர்ந்து இயங்கும் வாய்ப்பினையும் இது வழங்கியது. இந்த வட்டத்தூடாக ஏற்பட்ட நட்புக்கள் மினஞ்சல்கள் வழியாகவும் இணைய ஒலி, ஒளி வழி அரட்டை ஊடாகவும் தொடர்ந்தன. <br /><br />இலங்கையின் போர்ச்சூழல், இனவொடுக்குமுறை, காரணமாகப் புலம்பெயர்ந்து பிற தேசங்களுக்குச் சென்ற தமிழர்கள் இந்த முதலாம் தலைமுறை இணையக்காலத்தினை உள்வாங்கிக்கொண்டவர்களாக இருந்தனர். இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இதில் பெருமளவில் பங்கெடுக்கவில்லை. குறிப்பாக, புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்து/குடியுரிமை பெற்றுக்கொண்டு ஓரளவு நிலையான வாழ்க்கையைப் புலம்பெயர் தேசங்களில் அமைத்துக்கொண்டவர்களாலேயே இக்காலப்பகுதியில் இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டினைச் செய்யமுடிந்தது. <br /><br />இக்காலப்பகுதியில் "யாழ்" போன்ற அரங்கங்கள் (Forums) இலங்கைத்தமிழர் மத்தியில் மிகப்பிரபலமாயிருந்தன. இவற்றில் இலங்கைத்தமிழரின் அரசியல் விடுதலைப்போராட்டம் பற்றிய கருத்தாடல்கள் மிகத்தீவிரமாக நிகழ்த்தப்பட்டன. தொழிநுட்ப அறிவு பரவலானமையும் இங்கு நிகழ்ந்தது. <br /><br />இக்காலத்தில் மதுரைத்திட்டம்[5] தமிழ் எழுத்துச்சூழலுக்குள் மின்னூல்கள் பற்றிய அக்கறையை அதிகரித்திருந்தது. <br /><br />இக்காலப்பகுதியில் ஏற்பட்ட இன்னுமொரு முக்கிய மாற்றம் மின்னணுவியல், தகவற் தொழிநுட்பம் சார்ந்த எழுத்தாக்கங்களும் அவற்றுக்கேயுரிய புதிய எழுதும் முறை, கலைச்சொற்களஞ்சியங்கள் உருவானதுமாகும். மின்னஞ்சல் வழியாக உடனுக்குடன் கூடி உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதால் கலைச்சொல்லாக்கம் வேகமாகவும் புதிய வழிமுறைகளூடும் நிகழத்தொடங்கியது. இதன் பெறுபேறாக அழகான எளிய தமிழில் புதிதாய் எழுச்சிபெற்ற அறிவியல் துறைகளில் எழுத்தாக்கங்கள் உருவாகத்தொடங்கின. இணையத்தோடு அதிகளவில் தொடர்புற்றிருந்தவர்கள் மின்னணுவியல், தகவற்தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களகாவே இருந்ததால் அவ்வத்துறை சார்ந்த எழுத்துக்களே அதிகம் வெளிவந்தன. இவ்வாறான எழுத்தாங்களை எழுதியவர்களுக்கு இலக்கு வாசகர்களும், எழுதுவதற்கான நோக்கமும் தெளிவாக இருந்த காரணத்தாலும், இலக்கு வாசகர்கள் மொழிப்பயிற்சி அதிகமாக உள்ளவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்க முடியாத நிலை இருந்ததாலும் மொழிநடை எளிமையாக அமைந்தது. இத்தன்மையே இதற்கு முன் இருந்த தமிழ் அறிவியல் எழுத்து மரபினின்று புதிய இணையம் சார்ந்த அறிவியல் எழுத்துக்களை வேறுபடுத்தியதாகக் கொள்ளலாம். <br /><br />அச்சு, சிற்றிதழ் சூழலில் அறியப்பட்ட எழுத்தாளர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்த பெரும்பாலானவர்கள் உண்மையில் இந்த வலைக்காலத்தைத் தவறவிட்டனர். புதிய தலைமுறை எழுத்துச்சூழல் ஒன்று இணையத்தில் உருவாகியிருப்பதை அவர்கள் அறியக்கூடிய வாய்ப்புக்களும் குறைவாகவே இருந்தன. <br /><br />இணையப்பரவல் குறைவாக இருந்தமை, வலைத்தளங்களை உருவாக்கிப் பராமரித்தல் செலவுகூடியதாகவும் நுட்பியல் அறிவினைக் கோருவதாகவும் இருந்தமை போன்றவை இதற்கன காரணங்கள். <br /><br />தமிழை இணையத்தில் பயன்படுத்துவதில் இருந்த தொழிநுட்பச்சிக்கல்கள் பல தீர்க்கப்படவேண்டிய நிலையிலேயே தொடந்ததால் பெருமளவில் தமிழ் உள்ளடக்கத்தை இணையத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தகாலமாக இது அமையாமற்போனபோதும் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்கள் யாவற்றுக்குமான வலுவான அடித்தளம் இக்காலப்பகுதியிற்தான் இடப்பட்டது. <br /><br /><br />
<h3>
இரண்டாந்தலைமுறை வலைக்காலம் (Web 2.0) </h3>
<br /><br />இரண்டாம் தலைமுறை இணையக்காலம் தமிழ் எழுத்துச்சூழலில் பருமட்டாக 2003-2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கிறது. <br /><br />1. கணினிப்பயன்பாடு தமிழர்கள் மத்தியில் மேலும் பரவலானமை. <br /><br />2. இணையத்தொடுப்புக்களின் பாட்டை அகலம் (Bandwidth) அதிகரித்து இணைய வேகமும் அதிகரித்தமை. <br /><br />3. DSL, ADSL இணைப்புக்கள் மூலம் மேலதிக கட்டணங்கள் இன்றி 24 மணிநேரமும் இணையத்தைப் பயன்படுத்தத்தக்கதாயிருந்தமை. <br /><br />4. தமிழ் மொழியை இணையத்திலும் கணினியிலும் பயன்படுத்துவதில் இருந்த அடிப்படை நுட்பியல் சிக்கல்கள் பெருமளவில் தீர்க்கப்பட்டமையும் யுனிகோடின் வருகையும். <br /><br />5. தமிழ் யுனிகோடை இயல்பாகக் கையாளக்கூடியவையாக புதிய மென்பொருட்களும் இயங்குதளங்களும் இருந்தமை. <br /><br />6. தமிழ் இணைய மாநாடுகள், தமிழ்க் கணிமை இதழ்கள் வாயிலாக கணினியில் தமிழ் தொடர்பான விழிப்புணர்வு ஓரளவுக்குப் பரவலானமை. <br /><br />போன்றவை இவ் இரண்டாம் தலைமுறை வலைக்காலத்தைத் தமிழ்ச்சூழல் உள்வாங்குவதற்குத் தமிழ்ச்சூழலை ஆயத்தப்படுத்தியிருந்த காரணிகள். <br /><br /><br />இதுவரை காலமும் எழுத்துச்சூழலில் கணிமை பெருமாற்றங்கள் எதனையுமே செய்யவில்லை என்று கருதக்கூடிய அளவுக்கு இக்காலப்பகுதியில் சடுதியாகவும் பெரிய அளவிலும் இந்தச்சூழலில் மாற்றம் ஏற்பட்டது. <br /><br />இரண்டு தொழிநுட்ப நியமங்கள் இந்தப் பெருமாற்றத்துக்குக் காரணமாயின. <br /><br />1.XML பரவலான அங்கீகாரம் பெற்றதோடு அதனடிப்படையில் "செய்தியோடைகள்" பொதுவான நியமமாக வடிவெடுத்தமை. <br /><br />2. உலக மொழிகள் அனைத்துக்கும் பொதுவான "யுனிகோடு" குறிமுறை நியமப்படுத்தப்பட்டமை. <br /><br />இவற்றோடு இயங்கும் வலைத்தளங்கள் பரவலாகி web 2.0 உலகெங்கும் பேசுபொருளானது. <br /><br />உலகில் பிரபலமாகத்தொடங்கியிருந்த "வலைப்பதிவு" என்ற ஊடகத்தை தமிழர்கள் மெல்ல மெல்ல பரிசோதிக்கத்தொடங்குகிறார்கள். 2003 அளவில் முதலாம் வலைக்காலத்தைச்சேர்ந்த இணைய இதழ்களிலும் மடலாடற்குழுக்களிலும் வலைப்பதிவுகள் பற்றி பேசப்படலானது. . சுரதா யாழ்வாணன் இலவச வலைப்பதிவுச் சேவை ஒன்றினை தமிழர்களுக்கென ஆரம்பிக்கிறார். திசைகள் இணைய இதழ் 2003ம் ஆண்டு தனது இதழொன்றினை வலைபப்திவு பற்றிய சிறப்பிதழாக வெளியிடுகிறது. Blogger மென்பொருளை கூகிள் தனதாக்கிக்கொள்கிறது. <br /><br />தமிழ் எழுத்துச்சூழலுக்கு "வலைப்பதிவுகள்" அறிமுகமாகின்றன. வலைப்பதிவுகளின் பெருக்கத்துடன் பதிவுகளை ஒரேயிடத்தில் திரட்டித்தரும் வலைப்பதிவுத் திரட்டிகளும் அறிமுகமாகின்றன. புலம்பெயர்ந்த இலங்கையர்களான சுரதா யாழ்வாணன், மதி கந்தசாமி ஆகியோர் முறையே யாழ் தளம், தமிழ் வலைப்பதிவுகள் வலைப்பதிவுத்திரட்டி போன்றவற்றின் மூலம் வலைப்பதிவுகளைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். தமிழ்மணம் இதில் அழுத்தமான பெரிய மாற்றங்களை உருவாக்கிய திரட்டியாகும். <br /><br /><br />
<h3>
வலைப்பதிவுகளும் திரட்டிகளும் </h3>
<br /><br />வலைப்பதிவுகளை முதன்முதலில் உள்வாங்கிக்கொண்ட்வர்கள் பயிற்சி பெற்ற எழுத்தாளர்கள் அல்லர். அறியப்பட்ட எழுத்தாளர்களுமல்லர். அவர்கள் ஒரு புத்தம்புதிய தலைமுறையினராகவே பெரும்பாலும் இருந்தார்கள். ஏற்கனவே பார்த்தது போல், முதலாம்தலைமுறை வலைக்காலத்தின் மடலாடற்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வலைப்பதிவுகளுக்குள் வந்துசேர்ந்தார்கள். அச்சிதழ்கள் எழுதப்படவேண்டிய பொருள், வடிவம், அளவு போன்றவற்றில் கறாரான எல்லைகளைக் கொண்டிருந்தது. அந்த எல்லைகள் அனைத்தையும் இந்தப்புதிய எழுத்தாளர் தலைமுறை உடைத்தது. அன்றாட நாட்குறிப்புக்கள், அன்றுகுடித்த தேனீரில் சீனி போதாமலிருந்த பிரச்சினை, மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் புதிய நுட்பம் எப்படி மனிதகுலத்தின் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்கிற விளக்கம், தான் உருவாக்கிய புதிய "ரோபோ" எப்படித் தொழிற்படுகிறது என்கிற அறிமுகம் என்று ஒரு பரந்து விரிந்த உள்ளடக்கங்களுடன் பொதுவாசிப்புக்கென எழுத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. <br /><br />இவ்வாறான வலைப்பதிவு எழுத்துக்கென ஒரு வாசகர் வட்டம் உருவானது. வாசகர்களும் அநேகமாக வலைப்பதிவுகளை வைத்திருந்தனர். <br /><br />கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எழுத்தாக்க வடிவங்களைத்தாண்டி, அவற்றிலிருந்து வேறுபட்ட "வலைப்பதிவு" என்கிற புதிய வடிவம் தமிழ் எழுத்துச்சூழலுக்கு அறிமுகமாகியது. இப்புதிய வடிவம், <br /><br />1. இணையத்தின் ஏனைய பக்கங்களுக்கான தொடுப்புக்களைக் கொண்டிருந்தது. இதனால் மேலதிக விளக்கங்கள் தவிர்க்கப்பட்டு விளக்கம் தேவைப்பட்டவர்களை இன்னொரு பக்கத்தைப் பார்வையிடத்தூண்டியது. <br /><br />2. ஒலி, ஒளி உள்ளடக்கங்களை இயல்பாகவே எழுத்தாக்கத்தின் ஒரு பகுதியாக்கிக்கொண்டது. <br /><br />3. இணைய வாசிப்புக்கு ஏற்ற வண்ணம் அழகுபடுத்தல்களும் அளவுச்சுருக்கமும் ஏற்பட்டது. <br /><br />4. வாசகர்களின் இடையீட்டையும் உடனடி எதிர்வினையையும் அதிகம் எதிர்ப்பார்ப்பதாகவே எழுத்து நடையும் எழுதும் முறையும் மாற்றம் கண்டது. <br /><br />5. அரசுகளின், அதிகாரங்களின் கண்காணிப்புப்பற்றிய எந்தவிதமான பயமும் இன்றி சுயதணிக்கை, தணிக்கை அற்று வேறு பெயர்களில் மிகச்சுதந்திரமாக அரசியல் விடயங்களை எழுதும் போக்கு உருவானது. <br /><br />6. பின்னூட்டங்கள் என்கிற உடனடியானதும் வினைதிறன் மிக்கதுமான இணைய எழுத்தின் புதிய உரையாடற் சாத்தியம் பெரும் மனநிலை மாற்றத்தை உருவாக்கியது. எழுத்தாக்கத்துடன் உடனடியாகவே உரையாடுவதற்கும், போதாமைகளை தனது கருத்தின் மூலம் நிரப்புவதற்கும் வாசகருக்கு வாய்ப்புக்கிடைத்தது. இதனை தன்னை அடையாளம் காட்டாமலே செய்யக்கூடியதாக இருந்தமை புதியதொரு சாத்தியம். இது எழுத்தாளருக்கும் எழுத்தாக்கத்துக்கும் வாசிப்பவருக்குமான இடைவெளியைக் கணிசமாகக் குறைத்ததுடன் வாசக இடையீட்டை எழுத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டது. <br /><br />7. அச்சிதழ்களும் கூட தமக்கென வலைப்பதிவுகளை, வலைத்தளங்களை உருவாக்கிக்கொண்டன. அச்சில் வெளியாகும் விடயத்தின் நீட்சியையோ, மேலதிக தகவகளையோ வலைத்தளத்தில் பார்வையிடலாம் என்ற அறிவித்தல் அச்சிதழ்களில் தென்பட்டன. எடுத்துக்காட்டாக தீராநதியைச் சொல்லலாம். <br /><br />8. பிரபலமான எழுத்தாளர்கள், தொழின்முறை எழுத்தாளர்கள், ஆரம்ப எழுத்தாளர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரது எழுத்துக்களும் சமவாய்ப்புடன் ஒரே தளத்தில் திரட்டிகள் மூலம் வாசகருக்கு எடுத்துச்செல்லப்பட்டன. <br /><br />இக்காலப்பகுதியில் அச்சிதழ்கள், சிற்றிதழ்களின் எழுதிக்கொண்டிருந்தவர்கள் மெல்ல மெல்ல வலைப்பதிவுகளின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அச்சிதழ்களினின்றும் வேறான இணைய எழுத்தின் புதிய சாத்தியங்களை எழுத்தாளர் தலைமுறை ஒன்று உள்வாங்கிக்கொண்ட காலம் இது. இந்த இடைமாறுகாலகட்டத்தை அது வரை சிற்றிதழ்களில் எழுத்தாளராக அறியப்பட்டிருந்து 2004ம் ஆண்டில் வலைப்பதிவு எழுத வந்த "ஒரு பொடிச்சி" என்கிற புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளரின் வாக்குமூலத்தில்[6] தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். <br /><br />"ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள.... ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல." <br /><br />-ஒரு பொடிச்சி(ஒக்டோபர் 2004) <br /><br /><br />வலைப்பதிவுகளில் உருவாகிப் பிரபலம் பெற்ற புதிய எழுதும் முறையும் எழுத்தாக்க வடிவமும் ஏற்கனவே பிரபலமாக இருந்த எழுத்தாளர்களின் எழுதும் முறையிலும் மாற்றங்களை உருவாக்கியது. (இந்த மாற்றத்தினை 2005 ஓகஸ்டில் "அச்சிதழ்களின் அதிகாரம் -வலைப்பதிவுகளின் வருகை" என்ற தலைப்பில் வலைப்பதிவாக எழுதியிருந்தேன்) <br /><br /><br />இந்த மாற்றத்தினை அறியப்பட்ட எழுத்தாளரான ஜெயமோகன் பொடிச்சி எழுதத்தொடங்கி 6 ஆண்டுகளின் பின் இனங்கண்டு எழுதுகிறார்.[7] <br /><br /><br /> "ஆரம்பத்தில் ஆர்வம் காரணமாக உள்ளே வந்து என் மொழிநடைக்குப் பழக்கமில்லாமல் சிக்கலுக்குள்ளான பலர் இதன் வழியாக சிலமாதங்களுக்குள் என்னை நெருங்கியிருக்கிறார்கள். சிற்றிதழ்சார் அறிவுலகின் அறிமுகமே இல்லாமல் இந்த நடைக்குள் சட்டென்று நுழைவது கடினம். தினமும் இதில் பதிவேற்றங்கள் வந்து தினம்தோறும் வாசிக்கமுடிவதனால்தான் அவர்கள் என் எழுத்துக்கு பழகினார்கள். மாதவெளியீடுகளான சிற்றிதழ்களில் பல வருடம் எழுதினால்கூட இந்த விளைவை உருவாக்க இயலாது. ஆகவே இந்த இணையதளத்தின் பயனை நான் அடைந்துவிட்டதாகவே எண்ணுகிறேன். <br /><br /> என்னுடைய நடை தமிழின் சிற்றிதழ்சார் அறிவுத்தளத்தில் உருவாகி வந்த நடையின் வளர்ச்சி வடிவம். இதற்கென தனிக் கலைச்சொற்கள் உள்ளன. சிறப்பான சொற்றொடரமைப்பு உள்ளது. தமிழில் தொடர்ந்த அறிவார்ந்த விவாதங்கள் மூலம் உருவாகியிருக்கும் இந்த நடைக்கு ஐம்பதாண்டுக்கால மரபுண்டு. செறிவாகவும் கச்சிதமாகவும் சொல்லுவது இதன் இலக்கு. வாசிப்பார்வத்தை மேம்படுத்துவது அல்ல. மேனாட்டுமொழிகளில் எண்ணூறுகளிலேயே உருவாகி விட்ட இந்த அறிவுத்தள மொழி நமக்கு சிலபத்தாண்டுகளாகவே உருவாகியிருக்கிறது. <br /><br /> இந்த மொழியை சிற்றிதழ்களுக்குள் மட்டும் கையாண்டுகொண்டிருந்தபோது இதன் தொடர்புறுத்தும்தன்மையில் பல சிக்கல்கள் இருந்தன. இதன் வளர்ச்சி தேக்கமுற்றிருந்தது. ஏனென்றால் இந்தமொழியை தாங்களும் கையாள்பவர்களே இதை வாசித்தார்கள். ஆனால் இணையத்தில் இது இடம்பெற ஆரம்பித்தபோது இது நேரடியாக வாசகர்களிடம் உரையாட ஆரம்பித்தது. எதிர்வினைகளைப் பெற ஆரம்பித்தது. ஆகவே இதன் தொடர்புறுத்தும்தன்மை மேம்பட்டது, மேலும் மேலும் தெளிவு கைகூடியது. இதை என் நடையில் நானே உணர்கிறேன். <br /><br /> மேலும் சிற்றிதழ்ச்சூழல் ஒரு சிறிய அந்தரங்க வட்டத்துக்குள் இருந்தது. இணையத்தில் வேறுபல அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்களும் இதனுடன் உரையாட ஆரம்பித்தனர். அது மிகச்சாதகமான விளைவுகளை உருவாக்கியது. குறிப்பாக தூயதமிழ்வாதிகளுடனான உரையாடல் மூலம் சிற்றிதழ் சார்ந்த மொழிநடையின் தரம் மேம்பட்டது என்று நினைக்கிறேன். அதன் வடசொற்கள் குறைந்து தனித்தமிழ்ச்சொற்கள் மிகுந்தன." <br /><br /><br /><br />-ஜெயமோகன் (November 11th, 2010) <br /><br /><br /><br /><br />Youtube போன்ற வீடியோ பகிர்வு தளங்கள் தொடக்கம் பல்வேறு சேவைகள் இணைய எழுத்தில் வீடியோக்களையும் ஒலிவடிவங்களையும் ஒரு பகுதியாகவே இணைத்துக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதுடன், மரபான அச்சிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் அனைத்துச்சாத்தியங்களையும் உள்வாங்கிய புதிய ஊடகமாக வலைப்பதிவுகள் வளர்ந்தன. <br /><br />வலைப்பதிவுகளைக் குரலில் பதிவுசெய்யும் வாய்ப்பும் உருவானது.[8] <br /><br /><br />
<h3>
விக்கிபீடியா </h3>
<br /><br />விக்கிபீடியா[9] எனும் திறந்த கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழ் எழுத்துச்சூழலில் புத்தம்புதிய போக்கொன்றினை உருவாக்கியதும் இக்காலப்பகுதியில் தான். <br /><br /><br />மயூரநாதன் எனும் புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர் தமிழ் விக்கிபீடியாவின் தொடக்ககால வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். <br /><br />கலைக்களஞ்சியக் கட்டுரைகளை ஆக்கும் முறையில் இத்தளம் புதிய புரட்சியினை உண்டாக்கியது. பலர் கூடி ஒரு கட்டுரையை தொகுத்து ஆக்கும் எழுத்துமுறை உருவானது. வாசகரும் கட்டுரையை தொகுத்துச் சீர்படுத்தும் நிலை காணப்பட்டது. அனைத்தும் மிகச்சிறந்த சனனாயக நடைமுறைகளூடு இயங்கியது. இன்றும் தமிழ் எழுத்துச்சூழலில் காணப்படும் மிகவுயர்ந்த சனநாயக நடைமுறைகள் விக்கிபீடியாவிலேயே காணப்படுகிறது. மிகுந்த வெற்றியளித்துள்ள இந்தத் திறந்த கலைக்களஞ்சியம் இன்றும் வெற்றிகரமான அறிவுச்சுரங்கமாகத் தமிழில் இருக்கிறது. இணையத்தின் கலைச்சொல்லாக்கம் போன்றவை விக்கிபீடியாவைச்சுற்றியே தீவிரமாக நிகழ்கின்றன. எழுத்தாளர்களின் பெயர்கள் முன்னிலைபப்டுத்தப்படாமல் அறிவு சார்ந்த கலைக்களஞ்சியக்கட்டுரைகள் பலராலும் திறந்த நிலையில் கூட்டாக எழுதப்படும் இந்தப் போக்கு தமிழ் எழுத்துச்சூழலுக்குப் புத்தம்புதியது. <br /><br /><br /><br />
<h3>
அளிப்புரிமை </h3>
<br /><br />கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் வளர்ச்சி, அதன் கருத்தியல்கள் தமிழ் எழுத்துச்சூழலுக்குள்ளும் சுவறத்தொடங்கிய பிற்பாடு "பதிப்புரிமை" என்கிற மரபான சடங்கு பலமாகக் கேள்விக்குட்படுத்தப்பட்டது. காப்புரிமைக்கும் பதிப்புரிமைக்கும் மாற்றாக "அளிப்புரிமை" பரவலாகியது. எழுத்தாக்கங்களைப் பகிரவும் பயன்படுத்தவும் இருந்த சட்டத்தடைகள் களையப்பட்டு பகிர்வை முதன்மைபப்டுத்திய புதிய மனநிலை எழுத்துச்சூழலில் உருவானது. <br /><br /><br />
<h3>
மதுரைத்திட்டமும் நூலகம் திட்டமும் </h3>
<br /><br />தமிழ்நாட்டை அடிப்படையாகக்கொண்டு மதுரைத்திட்டம் எனும் மின்னூலாக்கத்திட்டமும் மின் நூலகமும் உருவாக, இலங்கையை அடிப்படையாகக்கொண்டு நூலகம் திட்டம் [10] உருவானது. இது உசாத்துணை நூல்களைப்பெற்றுக்கொள்ளுவதை புதிய வழிமுறைகளூடாகச் சாத்தியப்படுத்தியது. மின்னூல்கள் பரவலாகின. ஆவணப்படுத்தலிலும் புரட்சியை இது ஏற்படுத்தியது. இலங்கையின் பழைய பெறுமதியான கிடைப்பிலில்லாத நூல்கள் பலவற்றை நூலகத்திட்டத்தில் அதன் பழைய வடிவத்திலேயே பார்வையிடும் வாய்ப்புக்கிடைந்த்தது. இன்று இணையத்தின் ஆகப்பெரிய தமிழ் மின்னூலகமாக noolaham.org திகழ்கின்றது. <br /><br />இலங்கையின் அரசியல் முக்கியத்துவமுடைய ஆவணங்களையும் மின்னூல்களையும் திரட்டித்தரும் தளமாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் "தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்" [11] வளர்ந்திருக்கிறது. <br /><br /><br />
<h3>
சமூக வலையமைப்புக்களினதும் கையடக்கக்கருவிகளினதும் இணையக்கணிமையினதும் காலம் </h3>
<br /><br /><br />இதுவே இன்று நடப்பிலுள்ள காலப்பகுதியாகும். <br /><br />இணையச் சமூக வலையமைப்புக்களின் வருகையும் கையடக்கக்கருவிகளின் வசதிப்பெருக்கமும் இக்காலப்பகுதியின் தமிழ் எழுத்துச்சூழலில் செல்வாக்குச்செலுத்தும் முதன்மைக்காரணிகள். <br /><br />இணையப்பயன்பாடு கணிசமானளவு அதிகரித்துள்ளது. <br /><br /><br />Facebook எனப்படும் இணையச் சமூக வலையமைப்பும் Twitter எனப்படும் நுண் வலைப்பதிவுச் சேவையும் தமிழ்ச்சூழலில் பெற்றுக்கொண்ட பெருவெற்றியினைத்தொடர்ந்து இவற்றின் தாக்கம் தமிழ் எழுத்துச்சூழலில் பல்வேறு செல்வாக்குகளைச் செலுத்தவாரம்பித்தது. <br /><br /><br />தமிழ் எழுத்துசூழலில் ஆட்களுக்கிடையிலான உறவையும் தொடர்பாடல்களையும் நட்பினையும் இக்காலப்பகுதி மேன்மேலும் இறுக்கமாக்கியது. இடைவெளிகளைக்குறைத்தது. <br /><br /><br />
<h3>
Twitter </h3>
<br />140 எழுத்துக்களுக்குள் சடுதியாக மனதிற்தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்து நட்பு வட்டத்தினுள் பகிரும் புதிய எழுத்துமுறையை இச்சேவை ஆரம்பித்து வைத்தது. <br />ஏற்கனவே வலைப்பதிவுகள் வழியாக இணையத்துக்குள் வந்திருந்த "பிரபல" எழுத்தாளர்களும் Twitter இல் எழுதவாரம்பித்தனர். இது பெரு வெற்றியைப்பெற்றதுடன் இத்தகைய எழுத்துமுறை மீதான தீவிர ஈடுபாட்டையும் பரவலாக உண்டாக்கியது. <br /><br />நாட்டு நடப்புச்செய்திகள் தொடக்கம் புதிய திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் வரை கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே பதிவு செய்யப்படலாயின. <br /><br />கையடக்கக்கருவிகள், செல்பேசிகளிலிருந்து இற்றைப்படுத்தல்களைச் செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் திரையரங்கில் படத்தைப் பார்த்துக்கொண்டே திரைப்படத்துக்கான உடனடி விமர்சனங்கள் குவிந்தன. இது ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. <br /><br />கட்டுரையாகவோ, வலைப்பதிவாகவோ திட்டமிட்ட வடிவமொன்றினுள் கருத்துக்களை எழுதிப்பகிர்வதை விட இத்தகைய நுண் பதிவுகள் குறைந்தளவு எழுத்துழைப்பையே வேண்டியிருந்ததால் இதைப்பலரும் விரும்பினர். <br /><br />இது தமிழ் எழுத்துச்சூழலுக்குக் கிடைத்த புதிய எழுத்துவடிவம். 140 எழுத்துக்களாலான Twitter வெண்பாக்கள், Twitter சிறுதைகள் கூட முயற்சிகக்ப்பட்டன. <br /><br />தாம் படிக்கும் கட்டுரைகளுக்கான , ரசித்த வீடியோவிற்கான தொடுப்புகக்ளை எல்லாம் இதன் வழியாகப் பகிர்ந்தனர். <br /><br /><br />
<h3>
Facebook </h3>
<br />இது மெய்நிகர்ச் சமூக வலையமைப்பொன்றினை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியது. <br /><br />ஏற்கனவே பார்த்த Twitter இன் சாத்தியங்களையும் இது கொண்டிருந்ததுடன் பல்லூட வடிவிலான உள்ளடக்கங்களைப் பகிரக்கூடிய மேம்பட்ட வசதிகளை வழங்கியது. <br /><br />எழுத்துச்சூழலில் பங்கெடுப்பவர்கள் தமது எழுத்துலக நண்பர்களுடன் ஏனைய நண்பர்களையும் ஒரே இடத்தில் ஒரே சமூக வலையமைப்பாகக்கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு புதிய போக்குகளுக்கு வழி திறந்துவிட்டது. எழுத்துலக உரையாடல்களை ஏனைய நண்பர்களும் ஒரே இடத்தில் பார்வையிடலாயினர். <br /><br />இது படிப்படியாக தமிழ் எழுத்தாக்கங்களையும் எழுத்துலக உரையாடல்களையும் வேறொரு விரிந்த வாசகர் பரப்புக்குள் கொண்டு சென்று சேர்த்தது. Facebook Notes போன்ற வசதிகளின் வழியாக மெல்ல மெல்ல எழுதிப்பழக ஆரம்பிப்பவர்களின் எழுத்துக்களை மூத்த எழுத்தாளர்கள் கூடப் பார்வைட்டு கருத்துச்சொல்லும் நிலையை இது தோற்றுவித்தது. <br /><br /><br />வலைப்பதிவுத் திரட்டிகளின் இடத்தினை Twitterஉம் Facebook உம் மெல்ல மெல்லப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளன. <br /><br /><br />நாம் படிக்கவேண்டிய தகவல்களை, தொடுப்புக்களை, பார்க்கவேண்டிய படங்களை, பாடல்களை, ஆவணப்படங்களை எல்லாம் எம் நண்பர்கள் தாம் சுவைத்து தெரிந்து எமக்கு பரிந்துரைக்கிறார்கள். <br />இது முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருவதுடன் எமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே நண்பர்களுடன் விடயங்களை, எழுத்தாக்கங்களைப் பகிர்ந்துகொள்ளுவதை, அவை பற்றி உரையாடுவதை மாற்றிவிட்டுள்ளது. <br /><br />வலைப்பதிவில் கூட இருந்திருக்கக்கூடிய தயக்கங்களை எல்லாம் Facebook கலாசாரம் உடைத்தது. கருத்துக்கள், எழுத்தாக்கங்கள் தடையற்று விமர்சிக்கப்பட்டன. கருத்தாடல்கள் பல தளங்களில் பெருமளவில் நடக்கலாயிற்று. <br /><br /><br />இதழ்களை வாங்கியோ நூலகம் சென்றோ படிக்கும் பழக்கமுடையவர்களிடையே மட்டும் சில தாமதங்களுடன் பரவி உரையாடப்பட்டுக்கொண்டிருந்த அரசியல், சமூக, இலக்கிய விடயங்கள் இப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் உடனுக்குடன் எல்லாத்தரப்பினர் மத்தியிலும் எடுத்துச்செல்லபப்ட்டு தீவிரமாக உரையாடப்படலாகியுள்ளது. <br /><br />இலங்கையில் அச்சிதழ்களின் அரசியற்கருத்துக்களை சுதந்திரமாகவும் பயமின்றியும் வெளியிடக்கூடிய நிலை காணப்படாமையால், வலைப்பதிவுகளை விடவும் மூடியவையாக, குறிப்பிட்ட நண்பர் வட்டத்தினுள் சற்றுப் பாதுகாப்பாக உரையாடக்கூடிய களமாக சமூக வலைத்தளங்கள் இருப்பதால் அரசியல் உரையாடல்கள் அதிகளவில் சுதந்திரமாக நிகழும் இடமாக அவை இலங்கைத்தமிழர்களுக்கு இருக்கின்றன. அரசியற் பிரசாரங்களும் அறிவூட்டல் முயற்சிகளும் அறிவிப்புக்களும் கூட சமூக வலைத்தளங்களில் செய்யப்படுகின்றன. <br /><br /><br />"கண்டவர் நிண்டவர் எல்லாம்" எழுத வந்துவிட்டார்கள் என்ற கூக்குரல்களுக்கு மத்தியில் இக்காலப்பகுதி பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை இணையத்தின் தமிழ் எழுத்துச்சூழலுக்குள் கொண்டுவந்து சேர்த்துள்ளது. <br /><br />எழுத்தாக்கத்துக்கென விதிக்கப்பட்டிருந்த அறுக்கையான வடிவங்கள் யாவும் உடைக்கப்பட்டு கருத்தை எழுத்துமூலம் பகிர்வதை மட்டுமே முதன்மையாகக்கொண்டு எழுத்தாக்கங்கள் வெளிவரத்தொடங்கியிருப்பதும், தயக்கங்கள் தடைகளற்ற உரையாடல் பரவலாகியிருப்பதும், எழுத்தாக்கத்தின் ஒருபகுதியாக வாசக இடையீடு அமைவது மேலும் அதிகரித்திருப்பதும் பகிர்வினதும் எதிர்வினைகளினதும் உடனடித்தன்மையும் இக்காலகட்டத்தின் முக்கிய மாற்றங்கள். <br /><br /><br />இக்காலகட்டம் தனியாகவும் இன்னும் விரிவாகவும் ஆராயப்படத்தக்கது. விரிவினை அஞ்சி அவற்றை இங்கே தவிர்த்துள்ளேன். <br /><br /><br />வலைப்பதிவுகளின் பொற்காலம் மெல்லத் தளம் மாறியிருக்கிறது. வலைப்பதிவுகள் ஒப்பீட்டளவில் ஆழமான விடயங்கள் எழுதப்படும் இடமாகவும் சமூகவலையமைப்புக்கள் உடனடி எண்ணங்களைத் தடையற்றுப் பகிரும் இடமாகவும் மாறியிருக்கிறது. <br /><br /><br />
<h3>
முகம்காட்டாமலிருக்கும் வாய்ப்பும் தணிக்கையற்ற தன்மையும் கண்காணிப்பும் </h3>
<br /><br />இது இணைய எழுத்துச்சூழலின் ஒரு தனித்துவமாகும். <br /><br />எம்மை இனங்காட்டிக்கொள்ளாமல் எம்மால் எழுதக்கூடியதாயிருக்கும் நிலை அரசாங்கங்களினதும் அதிகாரங்களினதும் தணிக்கைகளை உடைத்துக்கொண்டு பெரும் வாசகர் பரப்புக்கு செய்திகளையும் கருத்துக்களையும் கொண்டு சென்று சேர்க்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுத்தந்துள்ளது. <br /><br />இது மரபான ஊடகங்களின் மட்டுப்பாடுகளை இனம்காட்டியிருக்கிறது. <br /><br />மிகவும் அந்தரங்கமாக இணையத்தில் உலாவக்கூடிய TOR போன்ற தொழிநுட்பங்கள் இதனை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது. <br /><br /><br />கூடவே அரசாங்கங்களினது கண்காணிப்பும் இணையத்தொடர்பாடல்கள் மீது அதிகரித்துள்ளது. கண்காணிப்பதற்கான புதிய தொழிநுட்பங்களும் பரிசோதிக்கப்படுகின்றன. இலங்கை அரசு இணையத்தொடர்பாடல்களைக் கண்காணிப்பதற்கும் மட்டுறுத்துவதற்குமான பல்வேறு எத்தனங்களையும் செய்துவருகிறது. <br /><br /><br /><br />
<h3>
இணையத்தின் புதிய எழுதும் தலைமுறையும் செயற்பாடுகளும் </h3>
<br /><br /><br />இணையத்தில் மட்டும் எழுதுகிறவர்களும், இணையத்தில் எழுதிப் பின் அச்சிதழ்களில் அறியப்படத் தொடங்கியவர்களும் அடங்கிய புதிய இலங்கைத் தமிழ் எழுத்தாளர் தலைமுறை ஒன்று இன்று தோன்றியுள்ளது. இத்தலைமுறை இணையத்தொழிநுட்பங்களிலும் தமிழ் எழுத்துத்துறையிலும் மிகுந்த பரிச்சயம் கொண்டிருக்கிறது. <br /><br />ஆண்டுதோறும் இலங்கையில் நிகழும் வலைப்பதிவர் சந்திப்புக்கள் இப்புதிய தலைமுறையின் இடைத்தொடர்பாடலையும் உறவுகளையும் வளர்த்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களின் புதிய இணைய எழுத்துத் தலைமுறையுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பாடலைக்கொண்டிருப்பதுடன் இலங்கை அல்லாத தேசங்களைச்சேர்ந்த புதிய இணைய எழுத்தாளர் தலைமுறையுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். <br /><br />புதிய எழுதும் முறை, புதிய எழுத்துப்பாணி, புதிய உரையாடற்பாணி, புதிய எழுத்தாளர்-வாசகர் இடைத்தொடர்பாடல்களைத் தொழிநுட்ப வளர்ச்சியின் வழியாக இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்கள். <br /><br />இணையத்தில் எழுத்தாக்கங்களைப் பகிர்வதுடன் நின்றுவிடாது சமூகத்தில் இலக்கியம், அரசியல் சார்ந்த செயற்பாடுகளையும் இத்தலைமுறையினர் முன்னெடுக்கின்றனர். தொழிநுட்ப, தொடர்பாடல் வசதிகளையும் முன்னேற்றங்களையும் அவர்கள் இதற்கெனப் பயன்படுத்துகின்றனர். <br /><br />இலங்கையின் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் [12] இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். தொடர்ச்சியான உரையாடல்களையும், சமூகச்செயற்பாடுகளையும் நிகழ்ச்சிகளையும் இவ்வட்டத்தினர் சமூகத்தில் முன்னெடுப்பதுடன் அதற்கு இணையத்தின் தொழிநுட்பச்சாத்தியங்களையும் சமூக வலையமைப்புகக்ளையும் திறம்படக் கையாண்டு ஒருங்கிணைக்கின்றனர். இந்த ஒருங்கிணைப்பு, இலங்கைத் தமிழ்ச்சூழலில் நம்பிக்கையளிக்கும் புதிய போக்கொன்றினை உருவாக்கியுள்ளது. <br /><br />தமிழகச்சூழலில் மக்கள் கலை இலக்கியக்கழகம், வினவு தளம் போன்றவை இணையத்தின் சாத்தியங்களை, மக்கள் மத்தியிலான தமது அரசியல் முன்னெடுப்புக்களோடு ஒருங்கிணைத்து இதற்கு முன்னர் காணப்படாத புதிய பரிமாணத்தைத் தமது வேலைத்திட்டங்களுக்கு ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். <br /><br />இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்கள் இணையத்தில் நேரடியாக வலை பரப்பப்பட்டு இணையப்பார்வையாளர்களின் கருத்தாடல்களைத் தரையில் இடம் பெறும் கூட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டன. தேசியக் கலை இலக்கியப்பேரவை 2009ம் ஆண்டு நடத்திய ஆய்வரங்கினை முழுமையாக இணையத்தில் வலைபரப்பியதுடன் இணையப்பார்வையாளர்களின் கருத்தாடல்களை நேரடியாகவே ஆய்வரங்கில் இணைத்திருந்தது. <br /><br /><br />
<h3>
எண்ணிமப் பிளவு </h3>
<br />எந்தவொரு புதிய தொழிநுட்பமும் தன் வருகையின் போது குறிப்பிட்ட வர்க்கத்தினர் மத்தியில் தான் பரவலாகும். இந்த உலகில் இருக்கவே செய்கிற தெளிவானதும் மூர்க்கமானதுமான வர்க்கப்பிளவு எண்ணிமப்பிளவாகவும் (Digital Divide) ஆகியிருக்கிறது. இணையத்தொழிநுட்பம் தமிழ் எழுத்துச்சூழலில் பல்வேறு புதிய சாத்தியங்களை, சனனாயகத்தன்மைகளை, மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தபோதும் அம்மாற்றங்கள் வெகுமக்களின் கைகளை அடையாதுவிட்டால் பயன் ஏதும் பெரிதாக விளைந்து விடப்போவதில்லை. கணினியும் இணையமும் இன்றும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் அதற்கு மேலுள்ளவர்களுக்கும் மட்டுமே எட்டக்கூடியனவாயுள்ளன. இது இன்று ஏற்பட்டுள்ள புதிய எழுத்துச்சூழல் போக்குகளில் கூட அழுத்தமான வர்க்கச்சாயலைப் பதித்துள்ளது. <br /><br /><br />
<h3>
உசாத்துணை </h3>
<br /><br /><span style="font-size: x-small;">[1] http://www.internetworldstats.com/asia/lk.htm <br />[2] http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அரும்பு <br />[3]http://web.archive.org/web/20030226094620/http://www.thisaigal.com/main.html <br />[4] http://groups.yahoo.com/group/Maraththadi/ <br />[5] http://projectmadurai.org/ <br />[6] http://peddai.blogspot.com/ <br />[7] http://www.jeyamohan.in/?p=9223 <br />[8] mmauran.net/oli <br />[9] ta.wikipedia.org <br />[10] noolaham.org <br />[11] http://www.tamilarangam.net/ <br />[12] circle.thulaa.net </span><br /><br /><br /><br /><br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-6331223706016677022015-08-15T01:54:00.001+05:302015-08-15T01:59:48.230+05:30விஜய் இட்லியும் புலியை வென்ற மகிந்தவும்[எளிதாகக் காணக்கூடிய உண்மைகளையும் எளிதாகக் காண முடியாத உண்மைகளையும் பற்றிக் கதைக்கும் பதிவு]<br />
<br />
சூரியன் நாள் தோறும் கிழக்கிற் தோன்றி மேற்கில் மறைகிறது. உண்மை தானே?<br />
<br />
இது நாம் எளிதாகக் காணக்கூடிய உண்மை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5eFMCEEfMQInsWVEzc8T84fn3XS_UOvF2DOZ31p1B9dU8W4XIbXS0YL4X17vDeiEWY9ijIAF5z6V7xrW73aLfM6fnfuNCJU0bGm87op8JeDTN26cUYg1K6Zfgu69-WCpWcCcrxg/s1600/Sunset_2007-1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5eFMCEEfMQInsWVEzc8T84fn3XS_UOvF2DOZ31p1B9dU8W4XIbXS0YL4X17vDeiEWY9ijIAF5z6V7xrW73aLfM6fnfuNCJU0bGm87op8JeDTN26cUYg1K6Zfgu69-WCpWcCcrxg/s320/Sunset_2007-1.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஆனால் சூரியன் அவ்வாறு கிழக்கிற் தோன்றி மேற்கில் மறைவதில்லை. எமக்கு அவ்வாறு தோற்றங்காட்டுகிறதே ஒழிய, நாம் வாழும் பூமி தான் உண்மையில் சுழல்கிறது. சூரியன் தோன்றுவதோ மறைவதோ இல்லை. அது அப்படியே எப்போதும் இருக்கிறது. <br />
<br />
இது நாம் எளிதாகக் காண முடியாத உண்மை.<br />
<br />
எளிதாகக் காணக்கூடிய உண்மைகளைப்பற்றிக் கதைப்பதும் அவற்றை நம்பவைப்பதும் எளிது. சின்னப் பிள்ளைகளுக்குக் கூட அவற்றைச் சொல்லி நம்பவைத்து விடலாம். காலகாலமாக சூரியன் கிழக்கில் தோன்றுவதாகவும் மேற்கில் மறைவதாகவுமே சொல்லப்பட்டு வருவதால் அதனைச் சொன்னவுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் எல்லோரிடமும் இருக்கிறது. மேலே நான் அவ்வாறு சொன்னதும் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கவில்லை தானே?<br />
<a name='more'></a><br />
ஆனால் சூரியன் அவ்வாறு தோன்றி மறைவதில்லை என்ற உண்மையைச் சின்னப் பிள்ளையொன்றுக்கு விளக்குவது மிகவும் சிக்கலான செயல். நாம் விளங்கப்படுத்தப் பயன்படுத்தும் சொற்களோ சொற் தொடர்களோ அதற்குப் புரியாது. கோள், நீள்வட்டப்பாதை, தன்னைத் தானே சுற்றுதல், தூர இருப்பதால் சிறிதாகத் தெரிதல் போன்ற கலைச்சொற்களையும் விளக்கங்களையும் புரிந்துகொள்வதற்கு அப் பிள்ளை நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டி வரும். அவ் அடிப்படைகளை எல்லாம் கற்றுக்கொடுக்க நாளெடுக்கும். <br />
<br />
சிறு குழந்தைகள் எல்லாம் சேந்து சூரியன் தோன்றி மறைவதில்லை என்ற உங்கள் கருத்தைக் கேட்டுச் <br />
<br />
<br />
<ul>
<li>சிரிக்கலாம்; </li>
<li>உங்களை முட்டாள் எனலாம்; </li>
<li>நீங்கள் எப்போதும் எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டும் விமர்சித்துக்கொண்டும் இருக்கிறீர்கள் என்று அலுத்துக்கொள்ளலாம்; </li>
<li>நீங்கள் எப்போது பார்த்தாலும் புரியாத சொற்களையும் கலைச்சொற்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று நக்கலடிக்கலாம்.</li>
<li>பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளும் விடயங்களை எதிர்ப்பதன் மூலமும் மறுப்பதன் மூலமும் விமர்சிப்பதன் மூலமும் பிரபலம் தேட முயற்சிக்கிறீர்கள் என்று தூற்றலாம். </li>
</ul>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2GINs-E6jvT6s6RZ8CJ49hraDZUxe3D2TENRe_r4JdZJmos0fs9WT2nVT8zVm3jluxOKYuH-vWrRrWhiQI0PGpXS1X1yWomNIngjU5UGUtT6wSyL1t9LE6wr_FtjNZlu-CoKLJg/s1600/mahinda-rajapaksa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
பொருளியலிலும் அரசியலிலும் சமூகவியலிலும்கூட இதுவேதான் நிகழ்கிறது. <br />
<br />
இப்போது எம்மைச் சுற்றி என்ன இருக்கிறதோ, எம்மைச் சுற்றி உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, நாம் எவற்றைப் பள்ளிக்கூடத்தில் படித்தோமோ, எம்மால் அவற்றைக் கண்ணால் காணக்கூடியதாக இருக்கிறதோ அவற்றை நாம் எளிதாக நம்புகிறோம். அவை எமக்கு எளிய உண்மைகளாக இருக்கின்றன. <br />
<br />
இந்த எளிய உண்மைகள் எளிதாக உருவாகவில்லை. அவை காலகாலமாக நிறுவப்பட்டு வந்தவையாகும். மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி உண்மையாக்கப்பட்டவையாகும். அதிகாரத்தில் இருப்பவர்களால் பெரும் உழைப்பினையும் பணத்தினையும்செலவழித்து உண்மையாக்கப்பட்டவையாகும். அந்தப் பின்னணி எல்லாம் எமக்குத் தெரியாது. நாம் அவற்றை எளிதாக நம்புகிறோம். ஏனெனில் அவற்றை நாம் எளிதாக நம்பவைக்கப்படுகிறோம். <br />
<br />
மகிந்த ராசபக்ச மேடைகளில் ஏறி தானே புலிகளை வென்றதாக முழங்குகிறார். இது எளிதாகத் தெரியும் உண்மை. ஏனெனில் ஊடகங்கள் தொடர்ந்து அவ்வாறு தான் சொல்லிக்கொண்டிருந்தன. அதிகாரத்தில் இருந்தவர்களால் அவ்வாறுதான் கூறப்பட்டு வந்தது. மகிந்த பெரிய அளவில் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த உண்மையை நிறுவினார். இந்த உண்மைக்கு மாறான எல்லாக் கருத்துக்களையும் இரும்புக் கையால் அடித்து நசுக்கினார். இவ்வாறெல்லாம் அவர் செய்தார் என்பதற்கான ஆதாரங்களையும் அவர் இல்லாதொழித்தார். <br />
<br />
இன்று மகிந்த புலிகளை அழித்தார் என்பது மக்களுக்கு எளிதாகத் தெரியும் உண்மையாக மாறிவிட்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2GINs-E6jvT6s6RZ8CJ49hraDZUxe3D2TENRe_r4JdZJmos0fs9WT2nVT8zVm3jluxOKYuH-vWrRrWhiQI0PGpXS1X1yWomNIngjU5UGUtT6wSyL1t9LE6wr_FtjNZlu-CoKLJg/s1600/mahinda-rajapaksa.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="219" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2GINs-E6jvT6s6RZ8CJ49hraDZUxe3D2TENRe_r4JdZJmos0fs9WT2nVT8zVm3jluxOKYuH-vWrRrWhiQI0PGpXS1X1yWomNIngjU5UGUtT6wSyL1t9LE6wr_FtjNZlu-CoKLJg/s320/mahinda-rajapaksa.jpg" width="320" /></a></div>
<br />
அவர் மேடையில் முழங்கும்போது மக்கள் ஆதரவுக் கூச்சல் எழுப்புகிறார்கள். ஏனெனில் அதுதான் அம்மக்களுக்குத் தெரிந்த உண்மை. <br />
<br />
இது உண்மை இல்லை எனவும், இதற்கு வெளியே நிறைய சிக்கலான விடயங்கள் உள்ளனவெனவும் போரின் பெரும்பகுதியை ரணில் ஆட்சியே முடித்து விட்டது என்பதையும் இந்தியாவே போரை முன்னின்று நடத்தியது என்பதையும் அதிலும் சரத் பொன்சேகா உட்பட்ட பலரின் பங்களிப்பு உள்ளதெனவும் விளக்க முயல்பவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்... இந்த மாற்றுக்கருத்தாளர்கள் கேலிக்குரிய உயிரினங்களாகவே மக்களுக்குத் தென்படுவார்கள். விளங்காத மொழியில் கதைப்பவர்களகாவே கேலி செய்யப்படுவார்கள். மாற்றுக் கருத்தாளர்கள் கையில் ஆதாரங்களும் போதியளவில் இருக்காது. அவற்றைத்தான் மகிந்த அழித்துவிட்டாரே..?<br />
<br />
மாற்றுக் கருத்தாளர்கள் எளிதில் தென்படாத உண்மையை விளக்கப் பாடுபடுகிறார்கள். ஆனால் அவர்களது முயற்சி நீண்ட காலத்தை எடுக்கும் வலிமை குறைந்த முயற்சியாகும். <br />
<br />
ஆனாலும் மாற்றுக் கருத்தாளர்கள் சும்மா இருப்பதில்லை. பிரபலமானவை எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். சூரியன் தோன்றி மறைகிறது என்பதைப்போன்ற கருத்துக்கள் வெளிப்படும் இடங்களில் எல்லாம் அவர்கள் கருத்துப்போர் நடத்துகிறார்கள். மகிந்த தான் போரை வென்றார் என்று ஒரே வரியில் Status போடுபவருக்கு ஆயிரம் லைக்குகள் விழும்போது அங்கே வந்து நூறு வரியில் கருத்துச் சொல்லி விளங்கப்படுத்த முயல்கிறார்கள். கேலிக்குள்ளாகிறார்கள். தாக்குதலுக்குள்ளாகிறார்கள். <br />
<br />
நீங்கள் எளிதாகக் காணக்கூடிய உண்மைகளை மட்டும் நம்பிக்கொண்டு கிணற்றுத் தவளைகளாக இருக்கப் போகிறீர்களா, அல்லது <br />
<br />
<ul>
<li>கிணற்றை விட்டு வெளியே வந்து, </li>
<li>முயற்சி செய்து, </li>
<li>சிரமப்பட்டு ஆதாரங்களையும் கருத்துக்களையும் தேடி, </li>
<li>மாற்றுக்கருத்துக்களுக்குத் திறந்த மனதோடு காது கொடுத்து,</li>
<li>வேறு கருத்துக்கள் கொண்டோரோடு மனம் திறந்து உரையாடி உண்மை எது என்பதைக் கண்டடையும் முயற்சியில் இறங்கப்போகிறீர்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். </li>
</ul>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhREyL59cEv5xZfDhBtqBdNGu6KSm4cQI7eNm0dMUx_o1JviEdG0ZowbnRZ1H2F3l22ucjR6TEEwXmRKAVXXOCUa-isseO-zsP3dq4-MNmPW3uQ0U8QiJVFksX_l5y4nXcy6yCe7A/s1600/Elephant-and-Blind-Men.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhREyL59cEv5xZfDhBtqBdNGu6KSm4cQI7eNm0dMUx_o1JviEdG0ZowbnRZ1H2F3l22ucjR6TEEwXmRKAVXXOCUa-isseO-zsP3dq4-MNmPW3uQ0U8QiJVFksX_l5y4nXcy6yCe7A/s320/Elephant-and-Blind-Men.jpg" width="320" /></a></div>
<br />
--<br />
<br />
பின்னிணைப்பு :<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJgszKjNOmdKEOesWAWRNAXS1SAv1T7EIYx24TB_kc_sP0dy1uplni8_zloTVP0SUnALLJk2k6O4RMn9QR36D41lbXiJZZlJx7kf1NevOcoluYrC314XAEQWEPOo53vcyoABPmVg/s1600/Screenshot+from+2015-08-15+01%253A11%253A18.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJgszKjNOmdKEOesWAWRNAXS1SAv1T7EIYx24TB_kc_sP0dy1uplni8_zloTVP0SUnALLJk2k6O4RMn9QR36D41lbXiJZZlJx7kf1NevOcoluYrC314XAEQWEPOo53vcyoABPmVg/s320/Screenshot+from+2015-08-15+01%253A11%253A18.png" width="286" /></a></div>
<br />
<br />
சில நாட்களுக்கு முன்னர் ரஜீவ் இப்படி ஒரு பதிவு போட்டிருந்தார். <br />
<br />
<blockquote>
கம்யூனிசம் என்பது வாயால் வடை சுடுதல்</blockquote>
<br />
அதற்கு மொத்தம் 81 லைக்குகள் விழுந்தன. <br />
<br />
இந்தப் பதிவை எழுதியவரோ அவரை ஆதரித்து நக்கலாகப் பின்னூட்டம் போட்டவர்களோ கம்யூனிசம் என்றால் என்ன, கம்யூனிஸ்டுக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எத்தனை நூல்களை/தகவல்களைத் தேடிப்படித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைத்தெரிந்துகொள்வதற்காகவே அங்கே சில கேள்விகளைக் கேட்டேன். தமது பாடத்திட்டத்துக்கும் விஜய் நடித்த படத்தின் 'இட்லி கம்யூனிச' வசனங்களுக்கும் அந்தக் கணத்தின் கூகிள் தேடலுக்கும் வெளியே அவர்கள் எதையுமே தேடிக் கற்றதாகப் படவில்லை. கம்யூனிசத்தை அவர்கள் ஆதரிக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பல்ல, எதையும் மக்களின் நன்மை கருதி தேடி அறியும் முயற்சியின்போது விமர்சிக்கவேண்டும் என்பதேயாகும். அவ்வாறான நேர்மையான விமர்சனங்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். அவற்றில் உரையாடற் தன்மை இருக்கும். அறியும் வேட்கை இருக்கும். <br />
<br />
அங்கே வந்த பின்னூட்டங்களிற் சில வருமாறு :<br />
<br />
<blockquote class="tr_bq">
KanisKar : நீங்க சொல்றது ரொம்ப சரினு நினைக்குறன்<br />
<br />
Nishanthan Vilvarajah : எல்லாத்தையும் எதிர்தல் எண்டும் சொல்லலாம்<br />
<br />
Rajeevkanth Rajkumar : ஒரு கட்டத்துக்கு பிறகு பக்கத்து வீட்டு கொடில பாவாடை காணாம போனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் காரணம் எண்டு சொல்லுவாங்க<br />
<br />
Rajeevkanth Rajkumar : நிகழ்கால மக்களுடன் ஒத்துப் போகாத ஒரு சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் கூட்டமாக அவ்ர்கள் தெரிகிறார்கள்<br />
<br />
Sanjayan Shanmuganathan : பாஸ், நீங்கள் முதலாளித்துவத்தின் முட்டாள்பயல் ..அதிகாரத்துவ அடக்குமுறையின் அப்றண்டிஸ்.. உலகமயமாக்கலின் உதவாக்கரை....!!<br />
<br />
Rajeevkanth Rajkumar Sanjayan : சுரண்டல விட்டுடீங்க பாஸ்<br />
<br />
Araniyan Sivanesaraja : அப்டீன்னா அது "இட்லி" இல்லியா மச்சான்?? சரி விடு மச்சான்.. அரைச்சதில இருந்து வடை சுட்டா என்ன? இட்லி சுட்டா என்ன?<br />
<br />
Sanjayan Shanmuganathan : காரல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய லெட்டர்ல என்ன சொல்லிருக்கார்னு தெரியுமா ஓய்...முதல்ல அத படிச்சிட்டு வாரும் அப்புறமா சுரண்டல பத்தி விவாதிப்போம்..!!<br />
<br />
Rajeevkanth Rajkumar : Araniyan 5 MB download பன்னி முடிஞ்ச பிறகு down load ஆகிற ஒவரு MBயும் இன்னொருத்தனோடது<br />
<br />
Araniyan Sivanesaraja : ஒரு கொமண்ட் போட்டாப் பிறகு போடுற ஒவ்வொரு கொமண்டும் கூட அடுத்தவனோடது...இப்பிடியும் சொல்லலாம், சொல்லிக்கொண்டே இருக்கலாம்..!!<br />
<br />
Parameswarasarma Rathakrishnasarma : Rajeevkanth Rajkumar "தீயினால் சுட்டபுண் ஆறுமே ஆறாது கமியுனிஸ்ட் வாயினால் சுட்ட வடை"<br />
<br />
Kanagalingam Vishnuraj : நீங்க இரண்டு (Sanjayan Shanmuganathan Rajeevkanth Rajkumar) பேருஉம் கலியாணம் கட்டினா பிறகு பாக்கிற ஒவ்வொரு பிகர்ரூம் Araniyan Sivanesaraja க்கு சொந்தமானது எண்டும் சொல்லலாம்<br />
<br />
Araniyan Sivanesaraja : Kanagalingam Vishnuraj அப்டீன்னா நான் கம்யூனிசத்தை வெகுவாக வரவேற்கிறேன்..!!<br />
<br />
Karthik Sivanesarajah : கொஞ்ச குரூப் இருக்கு. அவங்கட வேலையே, இந்த கம்யூனிசம், சோஷலிசம், ஏகாதிபத்தியம் இப்படி ரெண்டு மூன்டு வார்த்தைகள தெரிஞ்சு வச்சுக்கொண்டு அப்பிடியெண்டா என்ன என்டே தெரியாத என்னமாதிரி அப்பாவிகள ஏமாத்திக்கொண்டு திரியிறதுதான்... <br />
<br />
Sajeef Perinpamoorthy : சோம்பேறிகளின் தாரக மந்திரம்<br />
<br />
Thuwas Thevakadatcham : The biggest illuminati project of the 20th century was communism.</blockquote>
<br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-757407267195851632013-10-25T14:11:00.000+05:302013-10-25T14:14:27.416+05:30சதுரங்கப்பலகையில் சம்பூரின் அமைவிடம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiifNfCAkI68sO7vO-GO1RkIo9JYPd-XZLxHZk3OvIF3DNF_FDrs08CdOQktqg2T9Q9qil-ZwMDGjtZwfeUqwRpK2f5-0NXZJtoHIXWxEEMxlWk_uSp49CtsQ46PL-tt_GRz9i4-w/s1600/adayalamatiruththal-500x500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"></a></div>
<b><br />[வடலி வெளியீடாக வந்திருக்கும் சம்பூர் வதனரூபனின் "<a href="http://vadaly.com/index.php?route=product/product&product_id=82" target="_blank">அடையாளமற்றிருத்தல்</a>" கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை]</b><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiifNfCAkI68sO7vO-GO1RkIo9JYPd-XZLxHZk3OvIF3DNF_FDrs08CdOQktqg2T9Q9qil-ZwMDGjtZwfeUqwRpK2f5-0NXZJtoHIXWxEEMxlWk_uSp49CtsQ46PL-tt_GRz9i4-w/s1600/adayalamatiruththal-500x500.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiifNfCAkI68sO7vO-GO1RkIo9JYPd-XZLxHZk3OvIF3DNF_FDrs08CdOQktqg2T9Q9qil-ZwMDGjtZwfeUqwRpK2f5-0NXZJtoHIXWxEEMxlWk_uSp49CtsQ46PL-tt_GRz9i4-w/s320/adayalamatiruththal-500x500.jpg" width="320" /></a><br />
<br />
-1- <br />
<br />
<span style="color: #20124d;"><br /></span><b><span style="color: #20124d;">"இப்போதும்<br />மரநிழலில் இருந்தபடியே<br />என் ஆச்சி<br />சருகு பொறுக்கிச் சேர்ப்பாள்.<br />கேட்டால்<br />பயிர் வளர உரம் இடுவாளாம்<br />சிரிப்பு வரும்.<br />அவள் வாழ்வது அகதிமுகாம் என்பது<br />எப்பொழுதும்அவளுக்கு நினைவில் வராது. "</span></b><br />
<br />
<br />
இலங்கையின் அண்மைக்கால அரசியல் நடப்புக்கள் பற்றியும் இலங்கையின் தேசிய இன முரண்பாடு பற்றியும் போர் பற்றியும் ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு, சம்பூர் வதனரூபனின் இக் கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சொல்லவரும் பொருளையும் தொற்ற நினைக்கும் உணர்வினையும் புரிந்துகொள்வதிற் சிரமங்கள் அதிகம் இராது.<br />
<br />
எனினும், இக்கவிதைகள் உருவாகி எழுந்த பிரதேசத்தினையும் 2005இற்குப் பின்னரான அப்பிரதேசத்தின் அரசியற் போக்குகளையும் அப்பிரதேசத்து மக்களின் வாழ்வையும் அறிந்துவைத்திருப்பது இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்குச் சிலவேளை உதவியாக அமையக்கூடும்.<br />
<a name='more'></a><br />
-2-<br />
<span style="color: #20124d;"><b><br />"எனக்குப் பிடித்த வில்லுக்குளம்<br />அதில்<br />உனக்குப் பிடித்த வெண் தாமரைப் பூக்கள்.<br /><br />அறிந்தேன்..இப்போது எனக்கென்று நீயும்<br />வில்லுக்குளத்தில் தாமரையும் இல்லையென்று." </b></span><br />
<br />
<br />
45% இற்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் 35% இற்கு மேற்பட்டவர்கள் மீன்பிடித்தொழிலையும் செய்துவந்த தன்னிறைவான நிலம் சம்பூர். போர்க்காலத்திலும் போருக்குப் பின்னான காலத்திலும் இலங்கையினது அரசியலில் சம்பூர் எனும் சிறு கிராமம் மிகவும் முக்கியமானதாய் இருந்துவருகிறது. இனப்படுகொலையுடன் நிறைவுற்ற இறுதிப்போரின் உச்சகட்டக் காட்சிகள் அரங்கேறிய பகுதிகளில் எல்லாம் பெயரளவிலாவது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில், போரின் தொடக்கத்திலேயே இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டுவிட்ட சம்பூர் கிராமத்து மக்கள் இன்னமும் தமது ஊருக்குப் போக அனுமதியற்று அகதிமுகாம்களில் வாழ்ந்து வருவது ஒன்றே இந்த அரசியல் முக்கியத்துவத்தினை எளிதாக விளங்கப்படுத்திவிடும்.<br />
<br />
இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் வதனரூபனின் கவிதைகள் பெரும்பாலும் 2005-2006 இற்குப் பின்னான சம்பூரினதும் மூதூர் கிழக்கினதும் அரசியல் நிலவரத்தின் உறுத்தலாலும் உந்துதலாலும் உருவானவை. இப்பிரதேசத்தில் இந்த 2005-2006 ஏன் தெளிவான ஒரு காலப் பிரிகோடாக அமைகிறது?<br />
<br />
அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படை வெளியேறியதன் பிற்பாடு சம்பூர் விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாட்டின் கீழும் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிர்வாகத்தின் கீழுமே இருந்துவந்தது. இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டைகளும் அவ்வப்போது நிகழும் படுகொலைகளும் தொண்ணூறுகளின் 'டயர்' போடல்களும் இப்பகுதிகளில் நடந்துவந்தபோதும் அவையெதுவும் பெரியளவில் சம்பூர் மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து பிடுங்கியெறியவில்லை. மூதூரில் விடுதலைப்புலிகள் மிகவும் பலமாக இருந்த பகுதிகளுள் சம்பூரும் ஒன்று.<br />
<br />
2006 ஏப்ரல் 25ம் திகதி கொழும்பில் சரத் பொன்சேகா மீது விடுதலைப்புலிகள் தொடுத்த தற்கொலைத் தாக்குதலை உடனடுத்து சம்பூர் மீது பெருமெடுப்பில் வான்வழித்தாக்குதல்களை இலங்கை வான்படை நடத்தியது. சம்பூர் மக்களுக்கு இது அச்சம் கலந்த வியப்பாக இருந்தது. முன்னரொருபோதும் இல்லாதவாறு சம்பந்தமே இல்லாமல் இத்தாக்குதல் நடத்தப்பட்டதுபோல் தோன்றினாலும், சம்பூர் மக்களைத் தமது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்த ஒரு போரின் தொடக்கமாக அமைந்த அத்தாக்குதலுக்கான விதை 2005இல் போடப்பட்டது. திருகோணமலையின் வரைபடத்தில் சம்பூர் அமைந்திருக்கும் இடத்தினை அவதானித்தால், சம்பூரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் திருகோணமலைத் துறைமுகத்தினையும் கடற்படைத்தளத்தினையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர் என்கிற உண்மை புலப்படும்.<br />
<br />
2006 இல் விடுதலைப்புலிகள் மாவிலாற்றினை வழிமறித்தார்கள். சம்பூரிலிருந்து திருகோணமலைக் கடற்படைத்தளத்தை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள். இவ்விரு சம்பவங்களையும் சாட்டாகவைத்துக்கொண்டு போர் நிறுத்த உடன்படிக்கையையும் மீறி இலங்கை இராணுவம் போர் ஒன்றினை அறிவித்துச் சம்பூரினைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது. சம்பூர் மக்கள் அனைவரும் அகதிகளாக்கப்பட்டனர். இன்றுவரை அவர்கள் மீளக் குடியேற்றப்படவில்லை. சம்பூரில் அமைந்துள்ள கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமது இருப்பிடங்களைச் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை.<br />
<br />
-3-<br />
<br />
<span style="color: #20124d;"><b>பெருத்த நிகழ் தருகிறதென்று புத்தர் கீழே குந்தினாரோ..<br />வேறு மரம் கிடைக்காமல் அரசின் கீழ் அமர்ந்தாரோ..<br />புத்தரிருக்கப் புண்ணியம் செய்த மரம்<br />பாவம்..<br />தமிழன் பூமியில் அச்சுறுத்தலுக்கானது.</b></span><br />
<br />
அந்த ஊருக்குரிய மக்களுக்குத்தாம் இன்னமும் அவ்வூருக்கு அனுமதி மறுக்கப்படுகிறதேயொழிய இந்தியா உட்பட்ட பன்னாட்டு அரசுகளினதும் முதலாளிகளினதும் இலாப வேட்டைக்கும் வளச்சுரண்டலுக்குமாக சம்பூர் எனும் வளமான பூமி மாலையிடப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டு தயாராகவே வைக்கப்பட்டுள்ளது. சம்பூரின் 5000 ஹெக்டேயர் நிலப்பரப்பு "உயர் பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்விடத்திற்தான் இந்தியாவின் பாரிய நிலக்கரி மின் நிலையமும் 4000மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வரி விலக்களிக்கப்பட்ட மிகப்பெரிய பன்னாட்டு முதலீட்டு வலயமும் உருவாகவுள்ளன (யாழ்ப்பாணத்தின் வலிகாமம் உட்பட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள பெருமபாலான இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தினதும் கதை இதுதான்).<br />
<br />
சிற்சில இடங்களில் மீனவர்கள் தொழிலைத்தொடங்கவும் விவசாயிகள் நிலங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களெனினும் இது மிக மிகச் சொற்பமான ஆட்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள வாய்ப்பாகும். அதுவும் நிரந்தரமானது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.<br />
<br />
இவற்றுடன் கூடவே சம்பூர் என்ற பெயர் தமிழ்ப்பெயர்போல் தொனிப்பதால் "சோமபுர" என்று சிங்கள ஓசையுடைய பெயரால் இதனை இனவாதிகள் அழைக்கத் தொடங்கியுள்ளார்கள். இப்பெயரையே பொதுப்போக்கிலும் பயன்படுத்த அவர்கள் முனைகிறார்கள். கிடைக்கின்ற அரசமரங்களின் கீழெல்லாம் புத்தர் சிலை வைத்து தமிழ், முஸ்லிம் பிரதேசங்களைச் சிங்கள பௌத்த பூமியாக்கும் வழக்கமான பேரினவாத நடவடிக்கைகளும் முடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழர்களையோ முஸ்லிம்களையோ மலையகத்தமிழர்களையோ தொடர்ச்சியான நிலப்பரப்பில் வாழவிடாமல் சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் மூலம் ஊடறுக்கும் நிகழ்ச்சிநிரலே இதுவாகும். அமைதியான புத்தர் சிலை இலங்கையின் சிறுபான்மை மக்களுக்குக் கொடூரமான வன்முறைக் குறியீடாக மாறி நிற்கிறது. <br />
<br />
சிங்கள மக்களுக்கும் எதிரிகளாக, சிங்கள பௌத்தர்களையும் சுரண்டும் இந்த ஆளும் அதிகார வர்க்கம் கையிலெடுத்துள்ள இனவாதம் கூட ஓர் அடக்குமுறைக்கருவி மட்டுமே.<br />
<br />
-4-<br />
<br />
பாசிச ஆட்சியும் இராணுவச் சர்வாதிகாரமும் சிங்கள பவுத்த பேரினவாத ஒடுக்குமுறையும் ஒருபுறம் அழுத்துகின்றன. பாசிசத்தை ஒட்டி உண்டு வாழும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் ஒருபுறம் சுரண்டுகின்றனர், மக்களைச் சார்ந்திராத மேட்டுக்குடிகளின் வெறும் தேர்தல் அரசியற் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருபுறம் ஏமாற்றுகின்றன. இவற்றுக்கு நடுவே, நிமிர்ந்து வாழ்ந்த பழைய வாழ்க்கையின் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு, தம்மிடமிருந்து தமது நிலம் நிரந்தரமாகவே பிரிக்கப்பட்டுவிட்டதோ என்ற ஏக்கத்தைச் சுமந்துகொண்டு, அரசியல் எதிர்காலமும் இன்றி, வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்குமான உத்தரவாதமும் இன்றி வாழ்கின்ற அம்மக்களின் அந்தரித்த நிலையின் பல்வேறு வெளிப்பாடுகளைத்தாம் இக்கவிதைகள் தமது உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
குறிப்பாக, வாக்குச்சீட்டுத் தேர்தல் அரசியல் மாய்மாலங்களையும் போருக்குப்பின் தமிழ்ப்பகுதிகளில் பொதுப்போக்கு அரசியலாக மாறிப்போயுள்ள வெறும் வாய்ச்சவடால் தமிழ்த்தேசிய அரசியலின் பொய்முகத்தையும் மிகுந்த கோபத்தோடு விமர்சிக்கும் கவிதைகள் பல இத்தொகுப்பினுள் அடங்குகின்றன. "கடிக்கும் பூனை இல்லவிடினும் கத்தித்திரியும் பூனை ஒன்றையாவது" வளர்க்க வேண்டிய அவல நிலைக்குச் சம்பூர் மக்களைத் தள்ளியிருக்கும் தமிழ்த்தேசிய அரசியலின் வங்குறோத்து மீதான இந்தக்கடுங்கோபம், மக்கள் மீது அக்கறை கொண்ட நியாயமானதொரு அரசியற்கோபம்.<br />
<br />
பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன.<br />
<br />
<span style="color: #20124d;"><b>மண்ணை நேசித்த எல்லோராலும்<br />எல்லா நேரத்திலும்<br />மண்புழுக்களைப்போல<br />நிராகரிக்க முடியாதவர்களாக<br />மண்ணிற்குள்ளும் வெளியிலுமாக சேமிக்கப்படுகிறோம்.<br /><br />அப்பாவிகளின் பகல்களின் மீது<br />கரியள்ளிப் பூசுகிறவர்கள்<br />இன்னும் வென்றுவிடவில்லை.</b></span><br />
<br />
<br />
<br />
_____<br />
<br />
மு. மயூரன்.<br />
திருகோணமலை.<br />
25-04-2013<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ5dzmvY7r8WRSJot3Tj1TXSyaRo-6XMWA-GOIZsvlpmy0C7xxBPLYbX4oYriBUaopWGb7AOPHJBhnH1xrrG41glacEe1VIPXZeb2ZzzDyGim25YZaHizDfe_9f0iDSq7OLfG3XA/s1600/SM71812.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="244" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ5dzmvY7r8WRSJot3Tj1TXSyaRo-6XMWA-GOIZsvlpmy0C7xxBPLYbX4oYriBUaopWGb7AOPHJBhnH1xrrG41glacEe1VIPXZeb2ZzzDyGim25YZaHizDfe_9f0iDSq7OLfG3XA/s320/SM71812.jpg" width="320" /></a></div>
<br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-59110889571727629182013-07-15T17:05:00.001+05:302013-07-15T21:30:09.737+05:30தமிழ்த்தேசிய அரசியலில் மறுபடியும் கனவான் அரசியல்தமிழ்த்தேசிய அரசியலில் மறுபடியும் "<b>கனவான் அரசியல்</b>" தலைதூக்கியுள்ளது. <br />
<br />
இங்கிலாந்தில் படித்த, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தோடு ஆங்கிலத்திலேயே வாதிட்டு தமிழர்களுக்கு உரிமை வாங்கித்தரக்கூடிய கொழும்பு 7 <b>மேட்டுக்குடித் தமிழ் அரசியல் தலைமைகளும்</b>, சிங்களத் தலைமைகளுக்குச் சவால் விடுமளவுக்குச் சட்டத்தைக் கரைத்துக்குடித்த கோட்டணிந்த<b> வழக்கறிஞர் கனவான்களும்</b> தமிழர் அரசியலின் மிகப்பொருத்தமான தலைமையாகக் கருதப்பட்டனர். அந்தச் சிந்தனையே மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது. அந்த மனநிலையே ஆழ விதைக்கப்பட்டது. அப்படியொரு காலமிருந்தது.<br /><br />(அறுபதுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட சத்தியாக்கிரகம் மட்டும் தான் தமிழ்த்தேசியத்தின் ஒரேயொரு நம்பிக்கை தரும் மக்கள் அரசியலின் தொடக்கப்புள்ளியாயிருந்து புள்ளியாகவே செத்துப்போனது)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTmGMraLh0KFGRLf81G201ZOyPibV6BPQe4ooSYCRShYvtn5yU2tWM7m7lEtdH6iDrQ0SFlNE7Zg2lUbmByQIXLzeYp4WQAq4Vngj9lSkH3L5_v36MF6tAHnWDtRDc2nWUhhRNCw/s1600/Sirponramanathan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTmGMraLh0KFGRLf81G201ZOyPibV6BPQe4ooSYCRShYvtn5yU2tWM7m7lEtdH6iDrQ0SFlNE7Zg2lUbmByQIXLzeYp4WQAq4Vngj9lSkH3L5_v36MF6tAHnWDtRDc2nWUhhRNCw/s320/Sirponramanathan.jpg" width="131" /></a></div>
<br />
ஆயுதமேந்திய இளைஞர்கள் கைகளுக்கு தமிழ்த்தேசிய அரசியலின் தலைமை கைமாறியபோது, பெரும்படை நடத்தி, பெருமளவில் கொன்று, <b>பேராயுதம் தரித்த தளபதிகளே</b> தமிழரின் தனிப்பெரும் தலைமைக்கு பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் பரவலாய்க் காணப்பட்டது. <br />
<br />
நோர்வே வந்து நம்பிக்கை தந்தபோது ஒரு கொஞ்சக்காலம் வெள்ளைக்காரர்களோடு பேசவல்ல <b>இராஜதந்திரச் சுழியோடிகள்</b> தேவை என்ற எண்ணம் மின்னல் போல் தோன்றி மறைந்தது. <br />
<br />
<b>இப்போது பழைய கனவான் அரசியல் </b>புதினமான ஒரு வடிவத்தில் வந்திருக்கிறது. முன்னரெல்லாம் தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகங்களில் பங்கேற்று, கட்சி உறுப்பினராயெல்லாம் இருந்த சட்டம் படித்த ஆங்கிலமறிந்த கனவான்களைத்தான் முன்னிறுத்துவார்கள். முப்பதாண்டுகாலம் பலதும் மாறிப்போய்<b> கட்சிக்குள் கனவான்களுக்குப் பஞ்சம்</b> ஏற்பட்டுப் போனபிறகு, வெளியில் சமூகத்தில் கனவான்களாக உருவாகியிருப்பவர்களைப் பேசி அழைத்து வந்து தலைமையாய் நிறுத்தத்தொடங்கியிருக்கிறார்கள். <br />
<br />
கிழக்குமாகணத் தேர்தலில்<b> தண்டாயுதபாணி</b> நிறுத்தப்பட்டபோது இந்தச் சிந்தனையே எனக்குள் ஓடியது. இப்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில்<b> விக்னேஸ்வரன். </b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgStF1b6-kDoWHNs3xGn4jhfYUCfsIq2ue5zhlNE920b1kAdsWFjJyfKJqElY854CxLSsY_Ax3RXLVOVfZX_SKDd7F5OYAHv6mfEw9BZVLWPLdseagRr6ThyphenhyphenM6Ki8xOx5J4IbpFcA/s1600/Vigneswaran.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="211" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgStF1b6-kDoWHNs3xGn4jhfYUCfsIq2ue5zhlNE920b1kAdsWFjJyfKJqElY854CxLSsY_Ax3RXLVOVfZX_SKDd7F5OYAHv6mfEw9BZVLWPLdseagRr6ThyphenhyphenM6Ki8xOx5J4IbpFcA/s320/Vigneswaran.png" width="320" /></a></div>
<b><br /></b>தமிழ்த்தேசிய அரசியற் தலைமைகள் மாறிவந்த இந்த வரலாற்றினை மறுபடித் திரும்பிப்பார்க்கும் போது, அத்தனை மாற்றங்களும் ஒரே இழையால் கோர்க்கப்பட்டிருப்பதை உணரலாம். அதுதான், <b>மக்களை ஒன்று திரட்டி முன்னிறுத்தி அரசியல் செய்யாமல், மக்களை வெறும் பார்வையாளர்களாகவும் வாக்கு-நிதி வங்கியாகவும் வைத்திருக்கும் அரசியல். </b><br />
<br />
நீங்கள் ஒன்றும் ஒன்று திரண்டு உங்கள் உரிமைகளுக்காகப் போராடத்தேவையில்ல; எமக்கு வாக்குப்போடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனும் அரசியல். அவ்வாறு எல்லாவற்றையும் 'பார்த்துக்கொள்ளக்கூடிய', 'சாணக்கியமும் திறமையும் படிப்பும்' கொண்ட தலைமைகளை புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக முன்னிறுத்துகிறார்கள். <br />
<br />
இந்தப் புதிய நட்சத்திரங்கள் மக்களோடு மக்களாக இணைந்து இயங்கி மக்களை சாதி மதம் இனம் கடந்து ஒன்று படுத்தி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் <b>போராடக்கூடியவர்களா?</b> அவ்வாறு போராடிய பாரம்பரியமொன்று தமிழர் அரசியலில் தொடர்ந்து வந்திருந்தால் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற பலமான தலைவர்களுக்கு <b>இப்படியானதொரு பஞ்சம் ஏற்பட்டிருக்காது</b>. <br />
<br />
இவ்வாறான கனவான்கள்மீது நம்பிக்கை ஏற்படுத்தப்படுவதும், மறுபடி மறுபடி மக்களைக் கனவான்களை நம்பி வாக்குப்போட்டுவிட்டு தத்தமது வேலைகளைப் பார்க்கப்போகும்படி மக்களை வைத்திருப்பதும் எவருக்குச் சாதகமானது? <b>எந்த அரசியலை இலங்கையிலும் ஈழத்தமிழரிடையேயும் இல்லாதொழிக்கக்கூடியது?</b><br />
<br />
அந்த அரசியலை இல்லாதொழிக்க நினைக்கும் "அவர்கள்" எல்லாரும் தான் இந்தக் "கனவான்" அரசியலின் பின்னால் இருக்கிறார்கள். <div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-23157648949095294812013-03-13T20:50:00.002+05:302013-03-18T20:46:39.934+05:30தமிழருக்கு எதிரான தமிழீழக் கோரிக்கை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbY9FamHnw6HeIjGDwq1AWVsct2XXyl58ZJrIoW-iPcYrzEGSRbV2p29GS5KmRpNzHbUvhQQjNmMi8ynOe298OlQJjd3Z50xKX5K79ev3v3QstD8y-H500jedWF4JJbHt6sGcbQw/s1600/fast_1391670f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUG8OFIFuUduIwt6jnNckPtNHOio-cOZ4GBR9yE7Qp7pJvGAUiD4eslIMrlvbywDYIOEMAtVE-xIpc4F5ktYWlHGkz1OkP4-yURuee-KB1uGx50GDTIR1UHRSJNVTMeKP7lfNjpg/s1600/IPKF4.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUG8OFIFuUduIwt6jnNckPtNHOio-cOZ4GBR9yE7Qp7pJvGAUiD4eslIMrlvbywDYIOEMAtVE-xIpc4F5ktYWlHGkz1OkP4-yURuee-KB1uGx50GDTIR1UHRSJNVTMeKP7lfNjpg/s1600/IPKF4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"></a></div>
தற்போது தமிழகத்தில் ஒரு மாணவர் எழுச்சி ஏற்பட்டுள்ளது. <br />
<br />
<b>மாணவர்களின் போர்க்குணமும் புரட்சிகர உணர்வும் நேர்மையும் ஆற்றலும் மதிக்கத்தக்கவை. அதில் வேறு கருத்தில்லை</b>. ஆனால், உலக வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவ சக்தி எனும் நெருப்பு சுயநலமிகளால் சூழ்ச்சியுடன் கையாளப்பட்டுள்ளது. மாணவ சக்தியை எதிர்த்து நின்று அடக்கி ஒடுக்காமல், அதனைத் தமக்குச் சாதகமானதாகத் திசைமாற்றிக் கொள்ளி பிடுங்கியிருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இவ்வாறு திசைமாற்றப்படுவது போராடும் மாணவர்களுக்கோ ஆதரவாளர்களுக்கோ கூட தொடக்கத்தில் தெரிவதில்லை. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl9XIh9fghvahUNC_1_lTL4cj-W3TgP_35Hl9cBrgPZg1a2wAW96qb96ZZzkFRXxygu_8lmcrRu_FFk3omqtjk-J7GMrbGece3TqEAyJu0o5SsywOcC-ufXD0kERL1VFHYGNt0Ug/s1600/fast_EP1S.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"></a></div>
<br />
முள்ளிவாய்க்காலில் படுகொலை நிகழ்ந்துகொண்டிருந்தபோது தமிழகமே வெடித்தெழுந்தது. அது தூய்மையான உணர்வில் நிகழ்ந்த எழுச்சி. ஆனால் கடைசியில் அது நுணுக்கமாகத் திசைமாற்றப்பட்டு, காங்கிரசுக்கும் திமுக வுக்கும் எதிரானதாக மட்டுமே மாற்றப்பட்டு செயலலிதாவின் வெற்றியாக அறுவடை செய்யப்பட்டது. சீனாவைச்சாட்டி ஈழப் போர்க் குற்றவாளியான இந்தியாவைக் காப்பாற்றும் வேலைத்திட்டத்தையும் வெற்றிபெறச்செய்தது.<br />
<br />
<a name='more'></a><br />
போராட்டம் முற்றுமுழுதாக அறிவியல் மயப்படுத்தப்படாமல், போராட்டத்தின் சக்திகள் முழுமையும் அரசியல்மயப்படுத்தப்படாமல், பகுத்தறிவுடனான அரசியல் விளக்கம் அனைவருக்கும் வழங்கப்படாமல் வெறும் உணர்ச்சி எழுகையாக மட்டுமே அது மட்டுப்படுத்தப்படுவதால், அப்போராட்டத்தினை மற்றவர்கள் இலகுவாகக் கையாளக்கூடியதாக இருக்கிறது. உணர்ச்சியுடன் போராட்ட எழுச்சிகள் மட்டுப்படுவதாற்தான் தீக்குளிப்புக்கள் நிகழ்கின்றன. போராட்டங்கள் அதிகார வர்க்கத்தினருக்கு நல்ல அறுவடையை இறுதியில் கொடுத்துவிடுகின்றன.<br />
<br />
<b>முசுலிம்களின் நலனுக்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தாலிபான் அமைப்பினால் "அல்லாகு அக்பர்" என்றும் "ஜிகாத்" என்றும் முழக்கமெழுப்பி கேள்விகணக்கில்லாமல் முசுலிம்களின் ஆதரவைத் திரட்ட முடிந்தது.</b> அதேபோல, பல்வேறு உளவுத்துறைகளால் இயக்கப்படும் அமைப்புக்கள், இயக்கங்கள், திமுக, செயலலிதா என்று எவரும் "தமீழீழம்" என்று முழங்கி, தம்பின்னால் மந்தைக்கூட்டம் போன்று மக்களைத் திரட்ட முடிகிறது.<br />
<b><br />தமிழீழம் என்கிற இனிப்புத் தடவி எந்த நஞ்சைக்கொடுத்தாலும் அதனை விழுங்கும் நிலையில் தமிழ் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை மிகவும் ஆபத்தானது.</b><br />
<br />
<b>நஞ்சைக்கொடுக்க விரும்புபவர்களெல்லாம் இப்போது தமிழீழ இனிப்பைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்</b>. கடந்த நாற்பது ஆண்டுகளாக இதைத்தான் செய்துவருகிறார்கள்.<br />
<br />
--<br />
<br />
<b>பழைய போராளியான ஒரு நண்பர் என்னிடம் சொன்ன தகவல் அதிர்ச்சியளித்தது.</b><br />
<br />
எண்பதுகளில் "தமிழீழ வானொலி" என்றொரு ஒலிபரப்பு இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதிகளில் தெளிவாகக் கேட்கக்கூடியவண்ணம் நடத்தப்பட்டுவந்துள்ளது. தமிழீழத்துக்கான தேவை பற்றிய பிரசாரங்களைத் தொடர்ச்சியாக அவ்வானொலி செய்து வந்திருக்கிறது. அக்காலத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றிரண்டே இருந்தன. மக்களிடம் தொலைக்காட்சிப் பயன்பாடும் பெருமளவில் இருக்கவில்லை. வானொலிதான் பலமான ஊடகம்.<br />
<br />
அக்காலகட்டத்தில் தமிழீழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பங்குபற்றின. ஒவ்வொரு இயக்கமும் இவ்வானொலியினை மற்ற இயக்கம் தான் நடத்துகிறது என்று நம்பிக்கொண்டிருந்தன. பலர் இது விடுதலைப்புலிகளால் நடத்தப்படுவதென்று நம்பினார்கள். விடுதலைப்புலிகளோ இதனை EPRLF நடத்துகிறது என்று நம்பினார்கள். ஆனாலும் வானொலி ஒலிபரப்பு தொடர்ந்து நடத்தப்பட்டவண்ணம் இருந்துள்ளது.<br />
<br />
கடைசியில் இந்திய ஆக்கிரமிப்புப் படை அமைதிகாக்கும் படை என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் தரையிறங்கிய கையோடு இவ்வானொலி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிற்பட்ட காலங்களில் இவ்வானொலியினை இந்திய உளவு அமைப்பே நடத்தி வந்தமை தெரிய வந்தது.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUG8OFIFuUduIwt6jnNckPtNHOio-cOZ4GBR9yE7Qp7pJvGAUiD4eslIMrlvbywDYIOEMAtVE-xIpc4F5ktYWlHGkz1OkP4-yURuee-KB1uGx50GDTIR1UHRSJNVTMeKP7lfNjpg/s1600/IPKF4.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"></a><br />
<br />
இலங்கைத்தமிழர் மத்தியில் "தமிழீழக்" கோரிக்கை வலுப்பட வேண்டும் என்பதை இந்திய பிராந்திய மேலாதிக்கம் எப்போதும் விரும்பிவந்துள்ளது.<b> தமிழீழக் கோரிக்கையை ஒட்டிய உணர்வெழுகை இந்திய மேலாதிக்கத்துக்கு வரலாறில் பல சந்தர்ப்பங்களில் மிகுந்த உதவியாய் அமைந்துள்ளது.</b> இந்த வானொலிச் சம்பவம் சின்னஞ்சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே.<br />
<br />
<blockquote class="tr_bq">
<b>மேற்கண்ட தகவல் தொடர்பாக கலையரசன் வழங்கிய பின்னூட்டம் :</b><br />
<br />
//<span id=".reactRoot[22].[1][2][1]{comment594443400584212_103919302}.0.[1].0.[1].0.[0].[0][1]"></span><span data-ft="{"tn":"K"}" id=".reactRoot[22].[1][2][1]{comment594443400584212_103919302}.0.[1].0.[1].0.[0].[0][2]"><span class="UFICommentBody" id=".reactRoot[22].[1][2][1]{comment594443400584212_103919302}.0.[1].0.[1].0.[0].[0][2].0"><span id=".reactRoot[22].[1][2][1]{comment594443400584212_103919302}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[0]">மாயூரன்,
இந்தக் கட்டுரையில் வரும் தமிழீழ வானொலியை நடத்தியது PLOTE இயக்கம்.
தமிழ்நாட்டில் இருந்து தான் அந்த ஒலிபரப்பை நடத்தினார்கள். RAW அதற்கு உதவி
செய்ததா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் RAW
எல்லா இயக்கங்களுக்கும் உதவியது. ஆனால், RAW நேரடியாக தமிழீழ வானொலி
நடத்தியதாக கருத முடியாது.//</span></span></span></blockquote>
<br />
<blockquote class="tr_bq">
<b>கலையரசனின் பின்னூட்டத்துக்குப் பதிலளித்து, தமிழீழ வானொலி பற்றி மாயவன் மயில் வாகனம் என்பவர் அளித்த பின்னூட்டம் :</b><br /><br />//<span data-ft="{"tn":"K"}" id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2]"><span class="UFICommentBody" id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2].0"><span id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[0]">இந்தத்
தமிழீழ வானொலி 86, 87இல் ஒலித்தது. அது தன்னை தமிழீழ கம்யூனிஸ்ட்
கட்சியின் உத்தியோகபூர்வ வானொலி என்றே அறிவித்துக் கொண்டது. அது
ஆரம்பத்தில் மாத்தையாh குழவினரால் நடாத்தப்படுகிறது என்று பலராலும்
கருதப்பட்டாலும் அதன் ஒலிபரப்பாளர் சிலரின்; தமிழ் உச்சரிப்பு சந்தேகத்தையே
ஏற்படுத்தி வந்தது. இறுதியில் அது இலங்கை இராணுவத்தினரால் பலாலி இராணுவ
முகாமில் வைத்து நடாத்தப்பட்டது என்றும் இலங்கை வானொலியில் கடமையாற்றிய சில
ஒலிபரப்பாளர்கள் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்டு அதற்குப்
பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும், ஒலிபரப்பாளர்கள் கொழும்பிற்கும்
யாழ்ப்பாணத்திற்கும் இடையே மாறும் காலகட்டத்தில் இராணுவத்தில் இருந்த தமிழ்
பேசக்கூடியவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும் தெரியவந்தது. </span><br id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[1]" /><br id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[2]" /><span id=".reactRoot[1].[1][2][1]{comment594443400584212_103937462}.0.[1].0.[1].0.[0].[0][2].0.[3]">கலையரசன்
சொல்கிற வானொலி தமிழீழத்தின் குரல். அது voice of tamil eelam என்ற
பெயரில் நடாத்தப்பட்டது தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும்
அதே பெயரிலேயே ஒலிபரப்பானது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின்
உத்தியோகபூர்வ வானொலி என்ற பெயரிலேயே அது ஒலிபரப்பானது. இது 84, 85
காலகட்டத்தில் நடந்தது.//</span></span></span></blockquote>
<br />
--<br />
<br />
<span style="background-color: #fff2cc;">போர் செய்து நாட்டினைப் பிடித்துத் தனி நாடாக அறிவிப்பது என்பது இன்று வெறும் வரலாற்று நூல்களில் கூறப்படும் சம்பவமாக மாறிப்போயிருக்கிறது. அப்படி ஒரு நாட்டுப்பிரிவினை இன்றுள்ள உலக நடப்பில் சாத்தியமில்லை.<br /><br />ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக நாடுகள் பிரிவது என்பது தான் தற்போது நிகழும் பிரிவினை நடைமுறையாகும். வங்காளதேசம், கிழக்குத் திமோர், தென் சூடான், மொன்டனீக்ரோ போன்ற நாடுகளின் பிரிவினை இவ்வாறு நிகழ்ந்ததுதான். இவ்வாறான பிரிவினை ஏகாதிபத்தியங்களுக்கேயன்றி அந்நாட்டு மக்களுக்கு எந்தவகையிலும் நன்மை செய்ததாக இருக்கவில்லை. சென்டிமென்டல் திருப்தியை வேண்டுமானால் ஏற்படுத்தியிருக்கலாம். இவ்வாறான பிரிவினைகளுக்காக ஏகப்பட்ட மனித உயிர்கள் பலிகொடுக்கப்படுவதுடன் நீண்டகாலப் போருக்கான அடிக்கல்லும் நாட்டப்படுகிறது.<br /><br />மூன்றாவது வகையானது சுயநிர்ணய உரிமையாகும். இது ஓர் உயர் ஜனநாயகப் பண்பு. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதானது உயர்ந்த அரசியல் ஜனநாயக நடைமுறையால் விளையக்கூடியது. இது பிரிவினையாக அல்லாமல் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் பாதுகாப்புடனும் சேர்ந்து வாழ்வதற்கான நடைமுறையாகவே உள்ளது. இதுவே நீடித்து நிற்கக்கூடிய மக்களுக்குப் பாதகமற்ற நடைமுறையாகும்.</span><br />
<br />
இலங்கையின் பாசிச ஆட்சி ஒழிக்கப்பட்டு உயர் சனநாயகப் பண்புகளுடனான ஆட்சியும் அரசியற் பண்பாடும் ஏற்படுத்தப்படும்போதுதான் இந்த நிலையான சுய நிர்ணய உரிமை என்கிற ஏற்பாடு நிகழும். எனவே முதற்கட்டப்போராட்டம் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதாய் அமையவேண்டியுள்ளது. இது இலங்கை மக்கள் அனைவரதும் கோரிக்கையே. எனவே இப்போராட்டம் மிகப்பெரும்பான்மையான இலங்கை மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படக்கூடியது. தனியே தமிழர்கள் பலவீனமாகத் தனித்திருந்து போராடவேண்டிய தேவை இதில் இல்லை.<br />
<br />
இலங்கையில் 75% இற்கும் மேற்பட்டவர்கள் சிங்களவர்கள். 20% இற்கும் குறைவானவர்களே தமிழர்கள். இது மேலும் குறைவானதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.<br />
<br />
<span style="background-color: #fff2cc;">இவ்வாறான சூழலில், தமிழீழக் கோரிக்கையை முன்னிறுத்திய பிரிவினைவாதப் போராட்டமானது,<br /><br />1. இந்தியா உட்பட்ட ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பானதாக இயல்பாகவே அமைகிறது.<br /><br />2. இலங்கையின் தேசிய இனங்களுக்கு மத்தியில் பகைமையையும் சந்தேகத்தையும் உண்டாக்கி, தமிழரைத் தனிமைப்படுத்திப் பலவீனமடையச்செய்கிறது.<br /><br />3. பிரிவினைவாதத்தினைத் தோற்கடிக்கிறோம் என்ற பெயரில் பாசிச ஆட்சியினை நடத்தும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்க உதவுகிறது.<br /><br />4. என்றுமே சாத்தியமற்ற தமிழீழத்துக்காக முடிவற்ற போராட்டமொன்றை நிகழ்த்தி, இலங்கைத்தமிழர் மேலும் மேலும் அகதிகளாகப் புலம்பெயர்ந்து அடையாளங்களை இழக்கும் நிலையையும், இலங்கையில் தொடர்ச்சியாக பலமற்ற ஒடுக்குமுறைக்குள்ளான இனமாக வாழும் நிலையையும், மேலும் மேலும் தமது தாயகப்பகுதிகளை இழந்து உரிமைகளை இழக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறது.</span><br />
<br />
--<br />
<br />
இலங்கையில் தற்போதுள்ள அதிகார வர்க்கத்துக்கு எதிரான உணர்வு பெரும்பான்மை மக்களிடம் காணப்படுகிறது. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை, முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை, சிங்கள உழைக்கும் வர்க்கம் மீதான வரையறையற்ற ஒடுக்குமுறையும் சுரண்டலும், பேருருவெடுத்தாடும் ஊழல், குடும்ப ஆட்சி, பொருளாதாரச் சரிவு, இராணுவமயமாக்கல் போன்ற காரணங்களால் <b>முழு இலங்கையுமே இந்த ஆட்சிக்கெதிராக ஒன்றுபடும் சாத்தியம் நிறையவே காணப்படுகிறது.</b><br />
<br />
உள்நாட்டு அதிகாரவர்க்கத்துக்கும், முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரானதும் இலங்கையின் சகல இனங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவிலும் உருவாகும் புதிய ஜனநாயகத்துக்கான போராட்டமே இலங்கையில் எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழும் நிலையினை ஏற்படுத்தும். இப்போராட்டம் மிகவும் வீரியமிக்கதாக அமையக்கூடியது.<br />
<br />
<b>ஆனால் இவ்வாறானதொரு போராட்டம் உருவாகிவிடக்கூடாது என்பதில் எல்லா ஏகாதிபத்தியங்களும் இலங்கையின் அதிகார வர்க்கமும் கண்ணாக இருக்கின்றன. தமக்குள் ஒன்றுபடுகின்றன.</b><br />
<br />
பொதுபலசேனா போன்ற கடும்போக்கு பேரினவாத அமைப்புக்களுக்கான நிதியுதவி , இசுலாமிய வகாபிச அடிப்படைவாத அமைப்புக்களின் ஊடுருவல், தமிழர் மத்தியில் பிரிவினைவாதத்தை தமிழீழக்கோரிக்கையினூடாக விதைப்பது போன்றவை எல்லாம் இலங்கை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பினைச் சிதறடிப்பதற்கான ஏற்பாடே.<br />
<b><br />இவ்வாறுதான் தமிழீழக்கோரிக்கை என்பது சிங்கள அதிகார வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் உதவுகிற ஓர் அரசியற் கொள்கையாக அமைகிறது.</b><br />
<br />
--<br />
<br />
90களுக்குப் பிறகு உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து "தமிழீழப் பிரிவினை" என்கிற கோசத்தினை இனிமேலும் வைக்க முடியாது என்ற நிலையில் புலிகளும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புப் போன்ற அரசியல் அமைப்புக்களும் "சுய நிர்ணய உரிமை" என்ற சொல்லைத் "தமிழீழத்துக்குச்" சமமாகப் பயன்படுத்தத் தொடங்கின.<br />
<br />
சிங்களப் பேரினவாத அரசும் "சுய நிர்ணய உரிமை" என்பது தமிழீழப் பிரிவினை தான் என்ற பிரசாரத்தை முன்னெடுத்தது.<br />
<br />
இவ்வாறாக, <b>சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல், பிரசாரத்துக்கு ஆட்பட்டு அதனைத் தேசப்பிரிவினையாக சிங்களவர்களும் தமிழர்களும் கருதிக்கொண்டனர். இன்றும் அக்கருத்துத் தொடர்ந்து வருகிறது.</b><br />
<br />
சுயநிர்ணய உரிமை என்பது இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையின் தீமைகளைத் தடுத்து ஆரோக்கியமான ஒன்றுபட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அரசியற் திட்டம் என்கிற உண்மை இலங்கை மக்கள் மத்தியில் புரியவைக்கப்படவேண்டும். (இதற்கு எதிர்மாறாக, சுய நிர்ணய உரிமையை ஏகாதிபத்தியச் சதியாகவும் பிரிவினைவாதமாகவும் இனவாதிகளைப்போலப் பிரசாரம் செய்வது FLSP மீதான எனது விமர்சனங்களில் ஒன்றாகும்)<br />
<br />
<b>ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துத் தேசிய இனங்களினது, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் அரசியற் தீர்வு. அதை எட்டும் வரையில் இடைக்காலத்தீர்வாக வழங்கப்படும் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு அதிகாரப்பகிர்வு அரசியல் தீர்வினையும் ஆதரித்தல் என்ற கொள்கையானது நடைமுறைச் சாத்தியமானதாகும்.</b><br />
இலங்கையில் முதன்மையான பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினை வெளித்தெரிகிறது என்றளவில் அதனைத் தீர்ப்பது இன்றியமையாததாகும். <b>ஆனால், இலங்கையில் அதுமட்டுமே ஒரேயொரு பிரச்சினை அல்லவென்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.</b><br />
<br />
--<br />
<br />
இந்தப்புரிதல் இல்லாவிட்டால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான பிரிவினைவாதத் "தமிழீழ" முழக்கத்தினை எல்லோரும் காவித்திரிந்து எவரெவரதோ நோக்கங்களை நம்மையறியாமலே நிறைவேற்றிக் கொடுத்தபடியிருப்போம். <br />
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbY9FamHnw6HeIjGDwq1AWVsct2XXyl58ZJrIoW-iPcYrzEGSRbV2p29GS5KmRpNzHbUvhQQjNmMi8ynOe298OlQJjd3Z50xKX5K79ev3v3QstD8y-H500jedWF4JJbHt6sGcbQw/s1600/fast_1391670f.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbY9FamHnw6HeIjGDwq1AWVsct2XXyl58ZJrIoW-iPcYrzEGSRbV2p29GS5KmRpNzHbUvhQQjNmMi8ynOe298OlQJjd3Z50xKX5K79ev3v3QstD8y-H500jedWF4JJbHt6sGcbQw/s320/fast_1391670f.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgl9XIh9fghvahUNC_1_lTL4cj-W3TgP_35Hl9cBrgPZg1a2wAW96qb96ZZzkFRXxygu_8lmcrRu_FFk3omqtjk-J7GMrbGece3TqEAyJu0o5SsywOcC-ufXD0kERL1VFHYGNt0Ug/s1600/fast_EP1S.JPG" style="margin-left: 1em; margin-right: 1em;"></a><br /></div>
<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6844868.post-54636195685841394022013-03-05T16:41:00.003+05:302013-03-05T19:05:29.101+05:30பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்<blockquote class="tr_bq">
<span style="font-size: x-small;">பாசிசம், பாசிச ஆட்சி என்ற சொற்கள் இப்போதெல்லாம் அடிக்கடிப் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் இராணுவமயப்பட்ட சர்வாதிகார ஆட்சியைக் குறிக்கிறது என்ற அளவில் பலர் இச்சொற்களை விளங்கிக்கொள்கிறார்கள். ஆனாலும் இச்சொற்கள் மிகவும் ஆழமானதும் விரிவானதுமான அரசியற் பொருளைக் கொண்டிருக்கின்றன. ஆழமும் விரிவும் கொண்ட வாசிப்பினூடாக இச்சொற்கள் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியும். <br /><br />சுருக்கமாக, ஒரு நாட்டில் பாசிச ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்வது எப்படி? </span></blockquote>
<blockquote>
<br />
<span style="font-size: x-small;">இதனை அறிந்துகொள்ள உதவக்கூடிய ஒரு சுருக்கமான கையேடு போன்ற இந்த ஆங்கிலக் கட்டுரையினை அண்மையில் இணையத்தில் பார்க்கக்கிடைத்தது. இதில் பாசிச ஆட்சிகளில் இருக்கக்கூடிய பதினான்கு பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பதினான்கில் எத்தனை பண்புகள் எமது நாடுகளில் உள்ளன என்பதைச் சிந்திப்பது எமது நாடுகளின் நிலையை அறிந்துகொள்ள உதவும். </span><br />
<br />
<span style="font-size: x-small;">(இது ஆங்கிலப் பனுவலின் நேரடியான மொழிபெயர்ப்பாகும். இதனைத் தழுவி மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மொழியாக்கம் ஒன்றினையும் எழுதிவருகிறேன்)</span></blockquote>
<br />
<br />
<a name='more'></a><br />
<h2>
பாசிசத்தை வரையறுக்கும் பதினான்கு பண்புகள்</h2>
[<b>மூலம் : </b>http://rense.com/general37/fascism.htm | The 14 Defining Characteristics Of Fascism | <b>தமிழாக்கம் : மு. மயூரன்</b> ]<br />
<br />
ஹிட்லர் (ஜேர்மனி), முசோலினி (இத்தாலி), ஃப்ரான்கோ (ஸ்பெயின்), சுகார்ட்டோ (இந்தோனீசியா) ஆகியோரதும், பல லத்தீன் அமெரிக்க நாடுகளதும் பாசிச ஆட்சிகளை முனைவர் லோரன்ஸ் பிரிட் (Dr. Lawrence Britt ) ஆய்வு செய்துள்ளார். இவ் ஆய்வின் பயனாக, இத்தகு பாசிச ஆட்சிகளை வரையறுக்கக்கூடிய பொதுவான தன்மைகள் 14 இனைக் கண்டறிந்துள்ளார். அப் பதினான்கு தன்மைகளும் வருமாறு:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR5m-HRdX_9mBEjdbbvbPl8340k5cKn_-i8lIBTWmLuy9_ejlv1upEhzB201UVoqAi2_KxPRRgNCPmheLTVbELndHaeItI5ttlRxp4f6zxRUNf93DY6VI560xJpTL8mzD-xOXeiA/s1600/url.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjR5m-HRdX_9mBEjdbbvbPl8340k5cKn_-i8lIBTWmLuy9_ejlv1upEhzB201UVoqAi2_KxPRRgNCPmheLTVbELndHaeItI5ttlRxp4f6zxRUNf93DY6VI560xJpTL8mzD-xOXeiA/s320/url.jpeg" width="202" /></a></div>
<br />
<br />
<h3>
<b>1. வலிமையானதும் தொடர்ச்சியானதுமான தேசியவாதம் - </b></h3>
<br />
நாட்டுப்பற்று முழக்கங்கள், சுலோகங்கள், குறியீடுகள், பாடல்கள், இவை தவிர்ந்த வேறு வழிமுறைகள் போன்றவற்றை பாசிச ஆட்சிகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முனைகின்றன. ஆடைகளிலும் பொதுவான காட்சிப்படுத்தல்களிலுமாக தேசியக்கொடிகள் எங்கும் காணப்படும். <br />
<br />
<br />
<h3>
2. மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் அலட்சியம். </h3>
<br />
எதிரிகள் பற்றிய பயத்தினாலும் பாதுகாப்புத் தேவைக்காகவும், குறிப்பான சந்தர்ப்பங்களில், "தேவை" கருதி மனித உரிமைகளைக் கவனிக்காமல் விட்டுவிடலாம் என பாசிச ஆட்சியின் மக்கள் ஏற்கவைக்கப்பட்டிருப்பர். சித்திரவதை, விசாரணைகள் இன்றிய மரணதண்டனை, படுகொலை, கைதிகள் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல் போன்றவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூட மக்கள் முனைவர். <br />
<br />
<br />
<h3>
3. எதிரிகளை அடையாளப்படுத்துவதையும், பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாக இன்னொரு குழுமத்தை அடையாளப்படுத்துவதையும் மக்களை ஒருங்கிணைப்பதற்கான காரணியாகப் பயன்படுத்துதல். </h3>
<br />
'நாட்டுப்பற்று வெறி' யினைப்பயன்படுத்தி மக்கள் ஓரணியில் திரட்டப்படுவர். இந் நாட்டுப்பற்று வெறியே மக்களை ஒருங்கிணைக்கும். ஒரு பொதுவான எதிரியை அல்லது அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட வேண்டிய தேவையை முன்னிறுத்தியே இந் நாட்டுப்பற்று வெறி வளர்க்கப்படும். இன, இனத்துவ, மதச் சிறுபான்மையினர்; லிபரல்கள்; கம்யூனிஸ்டுக்கள்; சோசலிஸ்டுக்கள்; பயங்கரவாதிகள் போன்றவர்கள் இவ்வாறான பொதுவான "எதிரியாக" அல்லது "அச்சுறுத்தலாக" அடையாளப்படுத்தப்படுவார்கள்.<br />
<br />
<br />
<h3>
4. படைத்துறை மேன்மைப்படுத்தப்படல் </h3>
<br />
பரந்த அளவில் உள்நாட்டுப் பிரச்சினைகள் பல இருந்தபோதும், அளவுக்கதிகமான அரசங்கப் பணத்தை படைத்துறை பெறும். உள்நாட்டுத் திட்டங்கள் யாவும் அலட்சியம் செய்யப்படும். படைவீரர்களும் படைத்துறைச் சேவையும் கவர்ச்சிகரமானதாக்கப்படும். <br />
<br />
<br />
<h3>
5. பால்நிலை/பாலியல் ஏற்றதாழ்வுகளின் பரவுகை</h3>
<br />
பாசிச ஆட்சிகளின் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகவே இருக்க முனையும். <br />
<br />
பாசிச ஆட்சிகளின் கீழ் மரபார்ந்த பால்நிலை வகிபாகங்கள்/பாத்திரங்கள் மேலும் மேலும் இறுக்கமாக்கப்படும். மணமுறிவு, கருக்கலைப்பு, சமப்பாலுறவு ஆகியன அடக்கியொடுக்கப்படுவதுடன் "குடும்பம்" என்கிற நிறுவனத்தின் அதியுயர் காவலனாக அரசானது பிரதிநிதித்துவப்படுத்தப்படும். <br />
<br />
<br />
<h3>
6. கட்டுப்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஊடகங்கள் </h3>
<br />
சிலவேளைகளில் ஊடகங்கள் அரசாங்கங்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறில்லாத போது, அரசாங்கச் சட்டதிட்டங்களாலோ அல்லது அனுதாபம் பெற்ற ஊடகப் பேச்சாளர்கள், அதிகாரிகளாலோ ஊடங்கள் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படும். தணிக்கை, குறிப்பாக போர்க்காலங்களில் மிகவும் பொதுவானதாக அமையும். <br />
<br />
<br />
<h3>
7. தேசத்தின் பாதுகாப்பு மீதான மிகைவிருப்பு </h3>
<br />
தேசத்தின் பாதுகாப்புப் பற்றிய அச்சமானது ஒர் ஊக்கி உற்சாகப்படுத்தும் கருவியாக அரசாங்கத்தால் வெகுமக்கள் மீது பயன்படுத்தப்படும். <br />
<br />
<br />
<h3>
8. மதமும் அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாய் இருக்கும். </h3>
<br />
பொதுமக்களது கருத்தினைத் தமக்கேற்றபடி கையாள்வதற்கான கருவியாக தேசத்தின் பெரும்பான்மையானோரின் மதத்தினைப் பாசிசத் தேசங்களின் அரசாங்கங்கள் பயன்படுத்த முனையும். குறித்த மதத்தின் முக்கியமான கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் இருந்தபோதும், அரசாங்கத் தலைவர்களிடத்தில் மதம் சார்ந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களும் சொல்லாடல்களும் மிகப் பொதுவானதாக இருக்கும். <br />
<br />
<br />
<h3>
9. (கார்ப்பரேட்டுக்கள் என்றறியப்படும்) கூட்டுரு முதலாளிகளின் அதிகாரம் பாதுகாக்கப்பட்டிருக்கும். </h3>
<br />
அரசாங்கத் தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்துபவர்களாக, பாசிச ஆட்சி ஒன்றின் வணிக, தொழிற்றுறை முதலாளிகளின் உயர்குடி வர்க்கத்தினரே இருப்பர். இவர்கள் ஒருவருக்கொருவர் நன்மையாக அமையத்தக்க வணிக/அரசாங்க உறவுகளையும் அதிகார உயர்குழாத்தையும் உருவாக்குவர்.<br />
<br />
<br />
<h3>
10. தொழிலாளர் சக்தி அடக்கி ஒடுக்கப்படும். </h3>
<br />
ஏனெனில், பாசிச அரசாங்கம் ஒன்றுக்கான ஒரேயொரு உண்மையான அச்சுறுத்தல், தொழிலாளர்கள் கொண்டுள்ள, அமைப்பாக ஒன்றுசேரும் வலுவேயாகும். தொழிற் சங்கங்கள் முற்றாகத் துடைத்தழிக்கப்படும் அல்லது மிக மோசமாக அடக்கியொடுக்கப்படும். <br />
<br />
<br />
<h3>
11. கலைகளுக்கும் புத்திசீவிகளுக்கும் மதிப்பில்லாமற்போகும். </h3>
<br />
கல்விச் சமூகம் மீதும் உயர்கல்வி மீதுமான வெளிப்படையான எதிர்ப்பினைப் பாசிச நாடுகள் ஊக்குவிக்கவோ அல்லது அவ்வெதிர்ப்புக்களுக்கு நெகிழ்ச்சியாயிருக்கவோ முனையும். பேராசிரியர்களும் ஏனைய கல்வியாளர்களும் தணிக்கைக்குள்ளாவதும் கைதாவதும் சாதாரணமாக நிகழும். சுதந்திரமான கலை, எழுத்து வெளிப்பாடுகள் வெளிப்படையாகவே தாக்குதலுக்குள்ளாகும். <br />
<br />
<br />
<h3>
12. குற்றங்கள் தண்டனைகள் மீதான மிகைவிருப்பு</h3>
<br />
பாசிச ஆட்சிகளின் கீழ், சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வரையறையற்ற அதிகாரமானது காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும். காவல் துறையின் துஷ்பிரயோகங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கண்டும் காணாமலிருப்பதற்கும், சிவில் சுதந்திரங்களை நாட்டுப்பற்றின் பெயரால் கைவிடுவதற்கும் மக்கள் விரும்புவர். பாசிசத் தேசங்களில் ஏறத்தாழ எந்த வரையறையுமற்ற அதிகாரம் கொண்ட தேசியக் காவற்துறைப் படை இருக்கும். <br />
<br />
<br />
<h3>
13. குடும்ப/உறவுக் குழும ஆட்சியினதும் ஊழலினதும் பரவுகை</h3>
<br />
பாசிச ஆட்சிகள் பெரும்பாலும் எப்போதும், தம்மில் ஒருவரை ஒருவர் அரசாங்கப் பணிகளில் அமர்த்திக்கொள்ளுகின்றவர்களால் ஆளப்படும். அவர்கள் தமது நண்பர்களைப் பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து காப்பதற்கு அரச அதிகாரத்தினையும் பலத்தினையும் பயன்படுத்துவார்கள். தமக்குள் உறவுக்காரர்களும் நண்பர்களுமாக இருப்பார்கள். <br />
<br />
<br />
<h3>
14. மோசடி மிகுந்த தேர்தல்கள்</h3>
<br />
சிலவேளைகளில், பாசிச நாடுகளின் தேர்தல்கள் முழுக்க முழுக்கக் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனைய வேளைகளில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கெதிரான சேறடிப்புப் பரப்புரைகள், படுகொலைத் தாக்குதல்கள் போன்றவற்றின் மூலமும் வாக்காளர்களின் எண்ணிக்கை, மாவட்ட எல்லைகள் போன்றவற்றைச் சட்டத்துறையக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலமும் ஊடகங்களைத் தம் நோக்கங்களுக்காகக் கையாள்வதன் மூலமும் தேர்தல்கள் சூழ்ச்சியுடன் கையாளப்படும். பாசிச நாடுகள், தேர்தல்களைக் கட்டுப்படுத்தவும் சூழ்ச்சியுடன் கையாள்வதற்கும் நீதித்துறையினையும் கூட பொதுவாகப் பயன்படுத்துகின்றன. <br />
<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6844868.post-59987398287685135212012-02-15T18:36:00.000+05:302012-02-15T18:36:27.106+05:30முல்லைப்பெரியாறு : கேரள CPI(ML) கட்சியின் முன்மொழிவும் முனைப்பும்தமிழகத்திலும் கேரளத்திலும் உள்ள பல்வேறு கட்சிகளாலும் அரசியல் சக்திகளாலும் இனப்பகையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் <span style="color: #990000;">முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளத்தின் CPI(ML) கட்சி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது. </span><br /><br />கேரளத்தின் ஆளும் கட்சியும், கேரளத்தின் வாக்குவங்கிக்காக அலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட்ட பல்வேறு கட்சிகளும் மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பதுபோல் நடித்துக்கொண்டு<span style="color: #990000;"> தமது அரசியல் பொருளாதார நலன்களுக்காக இனவாதத்தினைக் கக்கத்தொடங்கியிருக்கிறார்கள். அதன் எதிர்வினையாக தமிழகத்திலும் இனப்பகை கொண்ட அரசியலினை மக்கள் மத்தியில் விதைக்கும் நச்சுச்சூழல் எழுந்திருக்கிறது. </span><br /><br />நம்காலத்தில் தமிழ்ச்சூழலில் நிகழும் முக்கியமான மாபெரும் மக்கள் எழுச்சியான கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்காமல் மக்களுக்கு எதிரானவர்களோடு கைகோர்த்து நிற்கும் அரசியல் சக்திகள் எல்லாம் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழர்களைக் காக்கவந்த தேவதைகள் போல வேடமிட்டுத் தமது சுயலாபத்துக்கான இனப்பகை அரசியலை ஊதி வளர்த்து வருகிறார்கள். <br /><br />இந்த நிலையில் கேரளத்தைச்சேர்ந்த CPI(ML) கட்சி மக்கள் நிலை நின்று சிந்தித்து இரு மாநிலத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய நியாயமான தீர்வொன்றைக் கண்டடைவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுகிறது. <br /><br /><span style="color: #990000;">முல்லைப்பெரியாறு அணையை நீரைத் திசைதிருப்பும் அணையாக வைத்துப் பராமரித்தபடி, நீரைச்சேமித்துத் தமிழகத்துக்கு வழங்கும் அணையொன்றினைத் தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே அமைப்பது</span> தொடர்பான முன்மொழிவையும் அக்கட்சி முன்வைத்துள்ளது. <br /><br />கேரளத்துக்குள்ளிருந்து இனப்பகை, இனவாத அரசியல்களை ஒதுக்கியவாறு எழும் இவ்வாறான மக்கள்சார்புக் குரல்களைத் தமிழக உணர்ச்சி அரசியலில் இழுபட்டுப் போகிறவர்கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. <br /><br /><span style="color: #990000;">குறுகிய இன உணர்வு/இனவாத வட்டத்தினுள் சுருங்கிக்கொள்ளாமல் எமக்கு வெளியே இருக்கும் இவ்வாறான சக்திகளுடன் கைகோர்த்துக்கொள்ளவேண்டிய தேவையினை தமிழ் மக்கள் உணரவேண்டும்.</span> உணர்ந்துகொண்டு இவ்வாறான மக்கள் சார்புச்சக்திகளைப் பலப்படுத்தவேண்டும். இதன் மூலம் மட்டுமே எமது அடுத்ததடுத்த சந்ததிகளுக்கு நாம் பகைமைகள் நிறைந்த நச்சுச்சூழலை அல்லாது அமைதியான நல்ல வாழ்க்கை ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முடியும். <br /><br /><br />CPI(ML) கட்சியின் செய்திமடலில் வெளியான குறிப்பின் மொழிபெயர்ப்பினையும் மூலத்தினையும் இங்கே தந்துள்ளேன்:<br /><br /><br /><br />
<blockquote class="tr_bq">
<u><b>கேரளம் : முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பான மக்கள் முன்னெடுப்பு </b></u><br /><br />கேரளத்தின் ஆளும்வர்க்கக் கட்சிகளும் CPI(M) கட்சியின் தலைமையிலான பெயரளவிலான எதிர்க்கட்சிகளும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இனமேலாதிக்க அணுகுமுறையை எடுத்துக்கொண்டுவிட்ட நிலையில், CPI (ML) கட்சியானது தொடக்கத்திலிருந்தே தமிழகத்தினதும் கேரளத்தினது உழைக்கும் மக்களிடையேயான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி வந்துள்ளது. அத்துடன் கேரளமக்களின் பாதுகாப்புக்கும் தமிழகத்துக்கான நீருக்குமான, சமநேரத்தில் அடையப்படவேண்டிய இரட்டைப் பணியிலக்குகளையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. <br /><br />இப்போது, முல்லைப்பெரியாறு ஒரு நிகழும் பிரச்சினையாக இருக்கும் நேரத்தில், எல்லாக் கசப்புணர்வுகளும் கோபமும் வெவ்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் , இரு மாநிலங்களிலும் உள்ள அரசியல்-பொருளாதார சுயலாபங்களின் பாற்பட்ட அக்கறைகளுடன் வெளிப்படுகிறது. தற்போது இது அமைதியாக இருப்பதுபோல் காணப்பட்டாலும் எந்த நேரத்திலும் வெடித்தெழக்கூடும். <br /><br />இதனடிப்படையில், CPI(ML) ஆனது, இப்பிரச்சினைக்கு நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய அறிவியல் அடிப்படையிலான தீர்வொன்றினை உருவாக்குவதற்காக, ஒத்த சிந்தனையுள்ள எல்லா சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியினைத் தொடக்கியுள்ளது. <br /><br />இடுக்கி மாவட்டத்தில் புதிய அணையொன்றினை அமைப்பதென்பது சூழலியல் ரீதியாக உவப்பானதாக இல்லாத நிலையில், நவீன அறிவியல் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையினை ஒரு நீரைச்சேமிக்கும் அணையாக அல்லாமல் "நீரைத் திசை திருப்பும் அணை"யாக வைத்துப் பராமரிப்பதுடன் முல்லைப்பெரியாறு நீரேந்துப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீரைத் தமிழ் நாட்டுக்குள் சேமிப்பதற்கும் வேண்டிய வழிமுறைகளைக் கையாள்வதே எமது முன்மொழிவாகும். <br /><br />இது அணை உடைப்புக் குறித்து இருக்கக்கூடிய அபாயத்தைத் தணிக்கும் அதேவேளை தமிழ்நாட்டுக்கான தடையற்ற நீர் விநியோகத்தையும் உறுதிப்படுத்தும். <br /><br />பெப்ரவரி 5ம் திகதி, சுயநலம் சார்ந்த அக்கறைகளை தனிமைப்படுத்தி மக்கள் நலனை முன்னிறுத்தி முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கான அறுதியான தீர்வொன்றினை உருவாக்கும் வழியினை அமைக்கும் இப் பணியிலக்கினை முன்கொண்டு செல்வதற்காக அக்கறையுள்ள மக்களுடனான கூட்டமொன்றை நடத்த எமது கட்சி முயற்சிகளை மேற்கொள்கிறது. <br /><br />RedStar Weekly<br />Volume – 1<br />Issue – 1<br />5 February 2011</blockquote>
<br /><br />
<blockquote class="tr_bq">
<u><b>Kerala: People's Initiative on Mullaperiyar Dam Issue</b></u><br /><br />While the ruling class parties and the so-called opposition led by the CPI(M) in Kerala have taken a<br />chauvinistic approach to Mullaperiyar dam issue, from the very beginning the CPI(ML) has been stressing<br />the unity and solidarity of the working people in both Tamil Nadu and Kerala and upheld the simultaneous<br />twin tasks of safety of Keralites and water for Tamil Nadu. Now, while the Mullaperiyar still continues as a<br />live issue, all the acrimonious scenes and divisive tendencies unleashed with political and economic<br />vested interests in both states, though remain dormant now, may flare up at any time. In this context the<br />CPI(ML) has initiated steps to unite all like-minded forces to draw out a long-term scientific solution to the<br />problem. Since a new dam in Iddukki district is ecologically not feasible, the proposal is for the<br />application of modern science and technology to maintain the existing Mullaperiyar dam as a 'diversion<br />dam' instead of a 'storage dam' and take appropriate steps for diverting and storing the rain water in<br />Mullaperiyar catchment area within Tamil Nadu. This will alleviate the potential threat from dam break and<br />at the same will ensure uninterrupted supply of water to Tamil Nadu. On February 5, the Party is taking<br />the initiative to call a meeting of concerned people to carry forward this task paving the way for the<br />ultimate resolution of the Mullaperiyar in the interests of the peoples of both states isolating all the vested<br />interests<br /><br /><br />RedStar Weekly<br />Volume – 1<br />Issue – 1<br />5 February 2011</blockquote>
<br /><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6844868.post-64420249263721667152011-08-08T13:51:00.001+05:302011-08-08T23:23:22.875+05:30சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.<br />
<br />
சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து "நாம் தமிழர்" அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.<br />
<br />
இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.<br />
<br />
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.<br />
<br />
பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.<br />
<br />
இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.<br />
<br />
தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.<br />
<br />
தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.<br />
<br />
ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.<br />
<br />
இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.<br />
<br />
இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.<br />
<br />
இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.<br />
<br />
சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.<br />
<br />
இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.<br />
<br />
தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம். <br />
<br />
சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.<br />
<br />
<br />
<b>தொடர்புடைய தொடுப்புக்கள் : </b><br />
<br />
<a href="http://%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%2005-08-2011%20%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%20%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%20%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%20%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%20%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%20%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%20%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%20%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%20%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%20%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%20%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf./">வேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.</a><br />
<br />
<br />
<div></div><table border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 625px;"><tbody>
<tr> <td><br />
</td> <td><br />
</td> <td><br />
</td> <td><br />
</td> </tr>
</tbody></table><table border="0" cellpadding="0" cellspacing="0" style="width: 625px;"><tbody>
<tr> <td height="0" valign="top"><br />
</td> <td height="0" valign="top"></td> </tr>
<tr> <td height="0" valign="top"><h2 class="contentheading clearfix"> <a class="contentpagetitle" href="http://www.dailymirror.lk/news/12781-sl-pilgrims-attacked-in-india.html"> SL pilgrims attacked in India </a> </h2></td></tr>
</tbody></table><br />
<br />
<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6844868.post-28674520274856390542011-01-24T01:19:00.004+05:302011-01-24T01:35:11.517+05:30[நூல் அறிமுகம்] காலனித்துவ திருகோணமலை : முடிந்துபோன காலத்தில் வாழ்ந்துபார்க்கும் அனுபவம்ஓர் இரவு ரயில் பயணத் தனிமையில் தான் இந்த நூலைப் படித்து முடித்தேன்.<br /><br />மூன்றாம் வகுப்பு உறங்கலிருக்கை வண்டியின் மங்கலான மஞ்சள் விளக்கொளி, கண்ணைச்சுற்றும் தூக்கத் தலைவலி, பராமரிப்பற்ற ரயில் பாதையின் இடையறாத ஆட்டம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு முழுமூச்சாக வாசித்து முடிப்பதற்கு இந்நூல் விறுவிறுப்பான சுவைசொட்டும் புனைகதையோ மிக மேலோட்டமான பொழுதுபோக்குப் புத்தகமோ அல்ல. ஒரு தீவிரமான வரலாற்று நூல்.<br /><br />ஆனால் ஒரே மூச்சில் படித்து முடிப்பதைத்தவிர வேறெந்தத் தெரிவையும் அந்நூல் எனக்கு விட்டுவைக்கவில்லை. அத்தனை விறுவிறுப்பு. அவ்வளவு சுவாரசியம்.<br /><br />காதலும் மோதலும் நிறைந்த வரலாற்றுப் புனைகதைகளையே மிஞ்சக்கூடிய விறுவிறுப்பும் சுவாரசியமும் ஆரம்ப நிலை வாசகர்களைக்கூட புத்தகத்தைக் கீழே வைக்க விடாது. இத்தனைக்கும் இந்நூல் மேலோட்டமான, எளிய மொழிநடையில் அமைந்ததென்று கூடச் சொல்ல முடியாது.<br /><br />உள்ளடக்கத்தின் தன்மையே இந்நூலுக்கு அத்தனை சுவையைக் கொடுக்கிறது.<br /><br />தன்னுடைய ஆய்வு முடிவுகளையோ கருத்துக்களையோ எந்த இடத்திலும் சரவணபவன் இந்நூலில் தரவில்லை. வாசகர்களின் கைகளைப்பிடித்துக்கொண்டுபோய் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்தையும் தொட்டுத் தடவி உணர வைத்திருக்கிறார்.<br /><br />--<br /><div style="text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsuG-MAHJvE1oOxSHT3T1hJg11BEgcoRlHOz2GHmxx7dUwJ8lAXsovy1fOcNAYgErMY07KFi7vhGlp4shDPkhsDNFZoXpr3uwfMu-3qmNWSGpRXLGgGvmLUz4FCrFsFbcC1-X1VA/s1600/AA.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 299px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsuG-MAHJvE1oOxSHT3T1hJg11BEgcoRlHOz2GHmxx7dUwJ8lAXsovy1fOcNAYgErMY07KFi7vhGlp4shDPkhsDNFZoXpr3uwfMu-3qmNWSGpRXLGgGvmLUz4FCrFsFbcC1-X1VA/s400/AA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5565471241177615234" border="0" /></a><br /></div><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">காலனித்துவ திருகோணமலை</span><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">ஜூலை, 2010</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">கலாநிதி கனகசபாபதி சரவணபவன்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">திருகோணமலை வெளியீட்டாளர்கள்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">18 X 22 cm அளவில் 400 பக்கங்கள்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">கிடைக்குமிடம்:</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">குமரன் பதிப்பகம்,</span><br /><span style="color: rgb(0, 0, 102);">3, மெய்கைவிநாயகர் வீதி,</span><br /><span style="color: rgb(0, 0, 102);">வடபழனி,</span><br /><span style="color: rgb(0, 0, 102);">சென்னை 26</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;">விலை:</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இந்திய ரூபாய் 180</span><br /><span style="color: rgb(0, 0, 102);">இலங்கை ரூபாய் 400</span><br /><span style="color: rgb(0, 0, 102);">கனேடிய டொலர்கள் 10</span><br /><br />--<br /><br />இலங்கை தொடர்பான வரலாற்றாய்வுகளில் திருகோணமலையின் வரலாற்றுப்பாத்திரம் உள்ளடக்கப்பட்டுவந்தபோதும் திருகோணமலையின் வரலாற்றினைத் தனித்தும் ஆழமாயும் ஆராயும் ஆய்வுகள் எம்மிடையே அதிகம் இல்லை.<br /><br />இத்தனைக்கும் இலங்கைத் தமிழர் உரிமைப்போராட்டத்தின் பல்வேறு தரப்புகளும் திருகோணமலையின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் பேசியும் வந்துள்ளன.<br /><br />சரவணபவன் எழுதி இதற்கு முன்னர் வெளிவந்த "வரலாற்றுத் திருகோணமலை" எனும் நூலின் தொடர்ச்சியாக "காலனித்துவத் திருகோணமலை"யை நாம் பார்க்கலாம். முன்னையது போர்த்துக்கீசரின் வருகை வரைக்குமான திருகோணமலையின் வரலாற்றினை ஆய்வு செய்ய, பின்னையது போர்த்துக்கீசர் வருகைக்கும் பிரித்தானியரின் படைத்துறை வெளியேற்றத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியின் வரலாற்றினை ஆய்வுசெய்கிறது.<br /><br />நானூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலில் நூலாசிரியரின் கருத்தாகவும் முடிபுகளாகவும் வரும் பகுதிகள் மிகச்சொற்பமானவையே. மற்றதெல்லாம் காலனியாதிக்கக் காலப்பகுதியில் அவ்வக்காலத்தில் வாழந்தவர்களால் எழுதப்பட்ட ஆவணங்களினதும் குறிப்புக்களினதும் கடிதங்களினதும் தொகுப்பாகவே அமைகிறது. இதுவே இந்தநூலின் சிறப்பு.<br /><br />இத்தகைய நேரடி வாக்குமூலமாக அமையும் ஆவணங்களைப் படிக்கும்போது அந்தந்தக் காலங்களில் வாழ்ந்து பார்க்கும் அனுபவம் எமக்குக் கிட்டுகிறது. கோணேசர் கல்வெட்டைத் தவிர்த்து ஏனைய ஆவணங்கள் அனைத்தும் திருகோணமலையுடன் தொடர்புடைய வெளிநாட்டு அதிகாரிகளால் எழுதப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. இதனால் கானித்துவ காலத்து திருகோணமலையை நாம் காலனியாதிக்கவாதிகளின் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. திருகோணமலை மக்களின் வாழ்வியலையும் சரி, காலனியாதிக்கக்காரர் தமக்கிடையில் போட்டுக்கொண்ட சண்டைகளையும் சரி நாம் அவர்கள் கண்களால் காண்கிறோம்.<br /><br />இன்றைய எம் மக்களது சமூக வாழ்விலும் அரசியல் இயக்கங்களிலும் காலனித்துவக்காலம் பாரியளவில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. எமது உளவியல் அமைப்பிலும் கூட காலனித்துவக்காலத்தின் தாக்கம் கணிசமான அளவில் செல்வாக்குச்செலுத்துகிறது. அந்த மிக முக்கியமான காலனித்துவக்காலத்தை, ஆதிக்கவாதிகளின் கண்களால் நாம் பார்க்கும்போது எம்மை நாம் வெளியில் இருந்து பார்த்து மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது. இந்தப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் - அவை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுகளாகவே இருந்தபோதும் - எள்ளலாகவும் நகைச்சுவையாகவும் இறுமாப்புடனும் எம் மக்களைப்பற்றி எழுதப்பட்ட பல குறிப்புகள் இந்த அடிப்படையில் எமக்கு மிகவும் உதவக்கூடியன.<br /><br />நவீன காலத்துக்கு முன்னர் திருகோணமலை பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கு மேலதிகமாக, நவீன காலத்தின் ஆரம்பம் தொடக்கம் இரண்டாம் உலகப்போரின் முடிவு வரைக்கும்கூட திருகோணமலையின் இடம்சார் அரசியல் முக்கியத்துவத்துக்கு இந்நூலில் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் மிக அழுத்தமான சாட்சியங்களாகும். திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள பல குறிப்புகள் அங்கே பிறந்து வளர்ந்த எனக்கே கூட அதிர்ச்சியும் வியப்பும் அளிப்பனவாகவே இருந்தன. போர்த்துக்கல், ஒல்லாந்து, பிருத்தானியா, பிரான்சு, செருமனி, சப்பான் போன்ற நாடுகள் திருகோணமலைக்காக பயங்கரமான சதுரங்க விளையாட்டை ஆடியிருக்கின்றன. இடையறாத போர்க்களங்களைச் சந்தித்திருக்கின்றன. அந்த அரசியல் போட்டிக்களத்தின் "உள்ளிருந்து" வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குமூலங்கள் எமக்கு மிகவும் அவசியமான அரசியற் செய்திகளைக் கொண்டுள்ளன.<br /><br />இன்று மேற்சொன்னவற்றை விட அதிக எண்ணிக்கையான வல்லரசுகள் போட்டியிடும் களமாக திருகோணமலை மாறியிருக்கிறது. இந்தத் திருகோணமலை எம் காலத்து இலங்கை, பிராந்திய அரசியலில் சடுதியான மாற்றங்களுக்கு காரணமாகியிருக்கிறது. தவிர்க்கமுடியாத இடம்சார் அரசியல் வகிபாகத்தினை ஆற்றிக்கொண்டிருக்கிறது.<br /><br />உண்மையில் இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தனியான அறிமுகக்குறிப்பு அவசியமாகிறது. இந்நூல் ஓர் ஆய்வு நூலாக அமைவதற்கு மேலதிகமாக, செய்யப்படவேண்டிய பல ஆய்வுகளுக்கு மூல நூலாக அமைகிறது. இந்நூலை மூலமாக வைத்து ஆய்வுகள் பல செய்யப்படவேண்டிய தேவை ஒருபுறமிருக்க இந்நூலின் உள்ளடக்கமாக அமையும் விடயங்கள் பரந்தளவில் ஈழத்தமிழ்ச்சூழலில் கதைக்கப்படவேண்டியவையாக உள்ளன.<br /><br />இந்நூலில் உள்ள இரண்டாம் உலகப்போர்காலத்து சப்பானின் குண்டுத்தாக்குதல் தொடர்பான அத்தியாயம் தினக்குரல் வார இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தது. திருகோணமலை மீது சப்பான் நடத்திய தாக்குதலை நிமிடத்துக்குநிமிடம் வழங்கப்படும் வர்ணனையாக ஆசிரியர் தருகிறார்.<br /><br />ஒல்லாந்த ஆளுநராகவிருந்த வான் சாண்டனின் நாட்குறிப்பு திருகோணமலை தொடர்பான மிகப்பெறுமதியான ஆவணமாகும். அவ்வாளுநர் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் சுற்றுலா சென்று தன் அனுபவங்களை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். திருகோணமலை மாவட்டத்தின் குடிசனப்பரம்பல், வாழ்வியல், தொழில், அரசியல், முக்கியத்துவமிக்க இடங்கள் என்று அந்நாட்குறிப்பெங்கணும் பெறுமதியான குறிப்புக்கள் விரவிக்கிடக்கின்றன.<br /><br />அலெக்சாண்டர் அலெக்சண்டர் போன்றவர்களது குறிப்புக்கள் திமிருடனும் எள்ளலுடனும் எழுதப்பட்டிருந்தபோதும் "மலபார்கள்" என்று அழைக்கப்பட்ட திருகோணமலை வாழ் தமிழர்களின் வாழ்க்கையை, இயல்புகளைத் தயவுதாட்சண்யமின்றிப் பதிவு செய்கிறது. பிரித்தானியச் சிப்பாய்களுக்கு கல்லெறிவது தொடக்கம் கோட்டையில் மாட்டிவிட்டு சாட்டையடி வாங்கிக்கொடுப்பது வரை உள்ளூர் மக்கள் செய்த அட்டகாசங்கள் சுவையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.<br /><br />திருகோணமலையில் காணப்பட்ட சாதியம் தொடர்பான குறிப்புக்களும் சுவையானவை. எல்லா மக்களுக்கும் ஒரே பெறுமதி வரி விதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் இதனால் எரிச்சலுற்று குறைந்த சாதியினருக்கு விதிக்கப்பட்டதிலும் கூடிய வரியினைத் தமக்கு விதிக்குமாறு கேட்டுக்கொண்ட தகவல் ஆர்வமூட்டியது.<br /><br />ஆங்காங்கே தென்படும் இலக்கணப்பிழைகள் - குறிப்பாக ஆளுநர் வான் சாண்டனின் நாட்குறிப்பில் உள்ளவை- பொருள்மயக்கத்தினைக்கூட ஏற்படுத்துமளவுக்குச் சிற்சில இடங்களில் தூக்கலாகத் தென்படுகின்றன.<br /><br />படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் இந்நூல் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.<br /><br />நூலாசிரியர் இந்நூலுக்கென தனியான வலைத்தளம் ஒன்றினை உருவாக்கி அதில் தேவையான வரைபடங்கள், ஒளிப்படங்களைப் பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். அவ்வலைத்தளத்தையே இந்நூல் பற்றிய உரையாடல்களின் நடுவமாகவும் மாற்ற முடியும்.<br /><br />இந்நூலை எழுதுவதற்கு நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சியும் செலுத்திய உழைப்பும் சாதாரணமானதாக இருந்திருக்க முடியாது. உலகின் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஆவணங்கள் கூட இந்நூலில் மொழிபெயர்க்கபட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தனை உழைப்பும் பொருட்செலவும் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இந்த நூல் உரிய முறையில் மக்களைச் சென்றடைவது அவசியமானது. அத்தோடு நூலாசிரியரை மேலும் உற்சாகப்படுத்த வேண்டியவர்களாகவும் நாமுள்ளோம்.<br /><br />கடும் உழைப்பு, பொருட்செலவோடு இந்நூலாசிரியர் பல்வேறு நூல்களை எழுதியிருக்கின்ற போதும் அவரது அகராதிகள் தவிர்த்து ஏனையவை பரவலான அறிமுகத்தைத் தமிழ்ச்சூழலில் பெற்றுக்கொள்ளாதது வியப்பளிக்கிறது.<br /><br />மொத்தத்தில் இந்த நூல் இன்றைய அரசியற்சூழலில் பரவலாகக் கதைக்கப்படவேண்டியது. தமிழ்த்தேசியம் தொடக்கம், ஏகாதிபத்திய ஆதரவு - எதிர்ப்பு வரைக்குமாக எம்மக்கள் கொண்டுள்ள பல்வேறு தவறான மதிப்பீடுகளைத் தீவிரமாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையை இநூலின் குறிப்புகள் உணர்த்துகின்றன.<br /><br /><br /><a href="http://www.trinco-publisher.de/about_author.htm">நூலாசிரியரைப்பற்றி....</a><br /><br /><a href="http://www.trinco-publisher.de/books.htm">ஆசிரியரின் ஏனைய நூல்கள்..</a><br /><br /><a href="http://www.trinco-publisher.de/index.htm">திருகோணமலை வெளியீட்டாளர்களின் வலைமனை</a><br /><br /><br />இந்தியாவில் நூலைப்பெற்றுக்கொள்ள :<br /><br />குமரன் பதிப்பகம்,<br />3, மெய்கைவிநாயகர் வீதி,<br />வடபழனி,<br />சென்னை 26<br /><br /><br />ஏனைய இடங்களுக்கு நூற்பிரதிகள் இன்னமும் அனுப்பிவைக்கப்படவில்லை. விரைவில் இணையத்திலும் ஏனைய இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.<div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6844868.post-89494519330034519572011-01-21T13:20:00.001+05:302011-01-21T13:23:10.502+05:30[கதை] மன்னரும் வழுக்கை லேகியமும்<span style="color: rgb(0, 102, 0);"></span><span style="color: rgb(0, 0, 102);">(இந்தக்கதை இன்று "இராஜ. தியாகராஜன் " Facebookகில் பகிர்ந்தது. நான் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)</span><br /><br />ஒரு அரசரின் தலை வழுக்கையை குணப்படுத்தி முடி வளரவைக்க வேண்டும் என்று பறையறிவிக்கப் பட்டது. அப்படிச் செய்பவர்க்கு இலட்சம் பொன், முடியாதவர்க்குச் சிரச்சேதம் என்றும் அறிவிக்கப்பட்டதால், எவருக்கும் முயற்சி செய்ய பயம்.<br /><br />ஆனால் ஒரு பிச்சைக்காரன் மட்டும் சரியென்று ஒப்புக் கொண்டான். இஞ்சி, தேன், முதலான சாதாரண பொருட்களைக் கொண்டு ஒரு லேகியம் தயாரித்து, அரசிடம் கொண்டு சென்றான். அந்த “லேகியத்தின்” அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு பெரிய லெக்சரே கொடுத்தான்.<br /><br />கடைசியாக அரசருக்கும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அந்த லேகியம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் எனில், அதை சாப்பிடும் போதும், சாப்பிட்டபின் அது வேலை செய்யத்தொடங்கும் வரைக்கும், குரங்கை நினைக்கவே கூடாது என்பதுதான் நிபந்தனை.<br /><br />ஒர் இலட்சம் பொன்னை வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் வீடு போய்ச் சேர்ந்தான்.<br /><br /><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">[அவ்வப்போது கண்ணில் படும், கேள்விப்படும் சின்னச் சின்னக் கதைகள் சிலவேளைகளில் எம்மை அசைத்துப்போட்டு நாள் முழுதும் சிந்தனை வயப்படுத்திவிடும். சில வேளைகளில் சிக்கலான விடயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளங்கப்படுத்த இவ்வாறான கதைகள் பெரிதும் உதவிசெய்கின்றன. இவ்வாறான கதைகளை எதிர்கொள்ள நேரும்போது அவற்றைப் பதிவு செய்து வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வதுண்டு. இதற்கெனத் தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கலாமா என்றும் கூட யோசித்ததுண்டு. கடைசியாக என்னுடைய வலைப்பதிவிலேயே கதைகளைப் பகிர்ந்து பதிவு செய்துகொள்வோம் என்று முடிவெடுத்துவிட்டேன். </span><br /><br /><span style="color: rgb(0, 102, 0);">பாட்டி சொன்ன கதைகள் தொடக்கம் விடலைப்பருவத்தில் கேள்விப்படத்தொடங்கும் பால்வினை நகைச்சுவைக் கதைகள் வரைக்கும் மனித அறிவினதும் அனுபவங்களினதும் பெருஞ் சேகரங்கள். கூடவே அவை திறந்த மூலம். மாற்றங்கள் செய்யவும் மற்றவரோடு பகிரவும் இக்கதைகளுக்குக் காப்புரிமைக் கடுங்காவற்தண்டனையை யாரும் கொடுப்பதில்லை. ]</span><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6844868.post-17371512783391508492010-12-10T07:39:00.009+05:302010-12-20T14:22:01.635+05:30Operation Payback : பழைய போர்; புதிய போர்க்களம்<span style="font-weight: bold;">பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேளுங்கள் :</span><br /><span style="font-style: italic;">(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)<br /><br /><object id="pod_audio_1" data="http://mmauran.net/oli/wp-content/plugins/podcasting/player/player.swf" style="outline: medium none; visibility: visible;" name="pod_audio_1" type="application/x-shockwave-flash" height="24" width="290"><param value="opaque" name="wmode"><param value="false" name="menu"><param value="soundFile=http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fpayback.mp3&playerID=pod_audio_1" name="flashvars"></object><br /><br /><br /></span><span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"><br />[ 0 ]</span><br /><br />சின்னச் சின்னத் துண்டுப்பிரசுரங்களாக அந்த இரகசியச்செய்தி பொதுமக்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது. வீதிகளில் சுவரொட்டிகளாகப் புரட்சிகர வாசகங்களுடன் அச்செய்தி காணப்படுகிறது. அதிகார அரசின் காவலாளிகள் அவசர அவசரமாகச் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துகிறார்கள். ஆயிரமா இரண்டாயிரமா? கோடிக்கணக்கான சுவரொட்டிகள். போராளிகள் மறைவாக வந்து சிலர் காதுகளுக்குள் செய்தியைக் கிசுகிசுத்துவிட்டுச்செல்கிறார்கள்.<br /><br />துண்டுப்பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், சங்கேத வார்த்தைகளிலும் பரிமாறப்படும் மக்களுக்கான போர்க் குறிப்பை, தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?<br /><br />றொபின் ஹூடா?<br />மருது சகோதரர்களா?<br />பகத் சிங்கா?<br />சே குவேராவா?<br /><br />யார்?<br /><br />ஓர் ஊரிலல்ல; ஒரு நாட்டிலல்ல; முழு உலகிலும் செய்தி கசிகிறது, மக்களை வந்தடைகிறது.<br /><br />இரவோடிரவாக, பகலோடு பகலாக உலகத்து மக்களின் பிள்ளைகள் முகமூடிகளை அணிந்துகொள்கிறார்கள். ஆயுதங்களைக் கையிலெடுக்கிறார்கள்.<br />தமக்கெனத் தலைமையால் ஒதுக்கப்பட்ட மறைவிடங்களில் கூடுகிறார்கள். நூறாக, ஆயிரமாக, பல்லாயிரமாக... கூடுகிறார்கள்.<br /><br />உலகம் முழுதும்.<br /><br />அதிகாரத்தின் மையங்களில் கலவர ரேகைகள்.<br />பகாசுரக் கம்பனிகளில் பயத்தின் மேகங்கள்.<br />எவர் எவரெல்லாம் இலக்காகக்கூடும் என்று போராளிகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. காவல்துறை கையைப்பிசைகிறது. அணுகுண்டுகள் செயலிழக்கின்றன. போர்விமானங்கள் படுத்துறங்குகின்றன.<br /><br />தமது முதல் இலக்கு எதுவென்று மறைவிடங்களில் போராளிகள் தமக்குள் ஆலோசனை செய்கிறார்கள்.<br /><br />இலக்குத் தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />உலகம் முழுதும் ஆணை பறக்கிறது.<br /><br />உலகத்துப் போராளிகளின் படைகள் அனைத்தும் குறித்த இலக்கை நோக்கித் திருப்பப்படுகிறது.<br /><br />ஆணை பறக்கிறது.<br /><br />பீரங்கிகள் முழங்குகின்றன!<br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);">[ 10 ]</span><br /><br /><br />எங்கிருந்தாலும் எவ்வேளையிலும் தங்குதடையின்றிச் செலவழிக்கலாம்!<br /><br />ஓ.. Paypall! Visa! Mastercard!<br /><br />மணிக்கணக்கில் செயலற்றுப்போயின.<br /><br />அவர்களுக்குத் தூசாயினும், பெருந்தொகை நட்டம்.<br /><br />தாக்குதலுக்குள்ளான எதிரி இலக்குகளும் தாக்குதல் நேரங்களும் வருமாறு:<br /><br /><table class="wikitable" border="1"><tbody><tr><th>Target<sup id="cite_ref-anontargets_74-3" class="reference"><a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"><span></span><span></span></a></sup></th> <th>Site<sup id="cite_ref-anontargets_74-4" class="reference"><a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"><span></span><span></span></a></sup></th> <th>Attack time<sup id="cite_ref-anontargets_74-5" class="reference"><a style="" href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-anontargets-74"><span></span><span></span></a></sup></th> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/PostFinance" title="PostFinance">PostFinance</a></td> <td><i>postfinance.ch</i></td> <td>2010-12-06</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Law_enforcement_in_Sweden#Swedish_Prosecution_Authority" title="Law enforcement in Sweden">Swedish Prosecution Authority</a></td> <td><i>aklagare.se</i></td> <td>2010-12-07</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/EveryDNS" title="EveryDNS">EveryDNS</a></td> <td><i>everydns.com</i></td> <td>2010-12-07</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Joseph_Lieberman" title="Joseph Lieberman" class="mw-redirect">Joseph Lieberman</a></td> <td><i>lieberman.senate.gov</i></td> <td>2010-12-08</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/MasterCard" title="MasterCard">MasterCard</a></td> <td><i>mastercard.com</i></td> <td>2010-12-08 10:30 UTC</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Claes_Borgstr%C3%B6m" title="Claes Borgström">Borgstrom</a> and Bostrom</td> <td><i>advbyra.se</i></td> <td>2010-12-08</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Visa_Inc." title="Visa Inc.">Visa</a></td> <td><i>visa.com</i></td> <td>2010-12-08 21:00 UTC</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Sarah_Palin" title="Sarah Palin">Sarah Palin</a><sup id="cite_ref-75" class="reference"><a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-75"><span></span><span></span></a></sup></td> <td><i>sarahpac.com</i></td> <td>2010-12-08</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Paypal" title="Paypal" class="mw-redirect">Paypal</a></td> <td><i>paypal.com</i></td> <td>2010-12-09 02:50 UTC</td> </tr> <tr> <td><a href="http://en.wikipedia.org/wiki/Amazon" title="Amazon">Amazon</a><sup id="cite_ref-76" class="reference"><a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback#cite_note-76"><span></span><span></span></a></sup></td> <td><i>amazon.com</i></td> <td>2010-12-09 23:00 UTC</td></tr></tbody></table><br /><br />தாக்குதல் ஒன்றுக்கான ஆணையை வழங்கிய தலைவர் யார்?<br /><br />றொபின் ஹூடா?<br />மருது சகோதரர்களா?<br />பகத் சிங்கா?<br />சே குவேராவா?<br /><br />யார்?<br /><br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);">[ 11 ]</span><br /><br /><br /><br />யாராகவும் இருக்கவேண்டியதில்லை. நாம் யாவராகவும் இருக்கமுடியும்.<br /><br />ஒரு பழைய போர், பழைய கோபம், பழைய எதிர்ப்பரசியல், பழைய தாக்குதல், பழைய கலவரம் இன்று புதிய வடிவை எடுத்திருக்கிறது. புதிய ஆயுதத்தைத் தூக்கியிருக்கிறது.<br />அதன் பெயர் <a href="http://en.wikipedia.org/wiki/Operation_Payback">Operation: Payback</a>. (திருப்பிக்கொடு)<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUHs6CWPDyCObLImAqg9sHbRVM6nbWIdeQkjj7uQJXcXzz8QOTKN6nEixvYP_ao6laHk4OB1UNiBxy2OIhx5wv1rAVtBG_e_qGhZBi6-8_lmdPQO3o3FIYFzKE9-nzDaMkHcD3CA/s1600/payback_good.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUHs6CWPDyCObLImAqg9sHbRVM6nbWIdeQkjj7uQJXcXzz8QOTKN6nEixvYP_ao6laHk4OB1UNiBxy2OIhx5wv1rAVtBG_e_qGhZBi6-8_lmdPQO3o3FIYFzKE9-nzDaMkHcD3CA/s400/payback_good.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874146739425138" border="0" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrC-QKE3LqHD290PPrGplk5sdhdn2ECqENpQbCzilsiv78eh8Um_Y0C_NE63asx9gk8K1YT9KD6wJbmfIkgNBdoe4Fx0LOwzteFRbmMxRtmyVKgYgZi-Be_uY6EyVIsCJ-jYd2Vg/s1600/74640_182700858407193_100000018415233_641086_3373255_n.jpg"><br /></a><br /><br />இன்றைய திகதிக்கு இத்தாக்குதல் சற்றே பழைய கதைதான் என்றாலும், <a href="http://en.wikipedia.org/wiki/WikiLeaks">விக்கிலீக்ஸ்</a> தளம் பற்றித் தற்போது எழுந்திருக்கும் பிரமாண்டமான கவன ஈர்ப்புக்குப்பிறகு, குறிப்பாக <a href="http://en.wikipedia.org/wiki/Julian_Assange">Julian Assange</a> கைது செய்யப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இத்தாக்குதல் மேலும் வீரியமுள்ளதாய் மாறியிருப்பதுடன் பரவலாக உலகின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.<br /><br />விக்கிலீக்ஸ் தளத்தை எதிர்த்து, அத்தளத்துக்கு இடைஞ்சல்கள் விளைவித்த அத்தனை அரச, தனியார் நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. சும்மா ரோட்டில் போகும் "ரவுடி"களின் கல்லெறித்தாக்குதல் அல்ல இது.<br /><br />ஏன் தாக்குகிறோம்; என்ன அடிப்படையில் தாக்குகிறோம்; எமது நோக்கம் என்ன; அது ஏன் மக்களின் நலனுக்கானது; எங்கே தாக்கப்போகிறோம்; எப்போது தாக்குவோம்; எப்படித் தாக்குவோம்; எல்லாம் முன்கூட்டியே சொல்லப்பட்டு மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட போராளிகளைக்கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. போதாக்குறைக்கு தாக்குதல் நடக்கும் போதே போராளிகள் ஒருங்கிணைவதையும் நிறுவனங்கள் தாக்குதலுள்ளாவதையும் நாம் எம் கண்களால் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.<br /><br />சைபர் தாக்குதல்கள் எமக்கொன்றும் புதிய செய்தி அல்ல.<br /><br />கணினியின் வருகையோடு நச்சுநிரற் தாக்குதலாக (Virus Attack), ஏய்ப்பாக (Hacking) விளையாட்டுத்தனமாக, பொறுக்கித்தனமாக இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுத்தான் வந்தன.<br />2008 இல் ரசியா ஜோர்ஜியா மீது படையெடுத்தபோது வெளிப்படையாகவே சைபர் தாக்குதல்களையும் தன் நடவடிக்கையோடு ஒருங்கிணைத்திருந்தது.<br /><br /><a href="http://en.wikipedia.org/wiki/Cyberwarfare#Various_case_histories">இந்தத்தொடுப்பில் இன்னும் பலவற்றைப் பார்க்கலாம் </a><br /><br />ஆனால் இவை எவற்றையும் விட Operation Payback மாறுபட்டது.<br /><br />முன்னையவை விளையாட்டாக, விசமமாக, தனி மனிதர்களால், நிறுவனங்களால், அரசாங்கங்களால் செய்யப்பட்டது.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">ஆனால் Operation payback, அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் எதிராக, பெரு நிறுவனங்களுக்கு எதிராக, வெளிப்படையாகச் சொல்லப்பட்ட அரசியல் அடிப்படை ஒன்றுக்காக, அரசியல் நோக்கத்தோடு, ஆட்களை ஒருங்கிணைத்து அதிகாரம் அற்ற சாதாரண மக்களால் செய்யப்படுவது. ஓர் அதிகார-எதிர்ப்பு அரசியல் இயக்கமாக நடைபெறுவது. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இதுதான் நடந்துள்ள புதிய மாற்றம். </span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeBEYNvgXctt_H43mUXEt-d_6w_eExurT_QNavtbnIu8ew79BBnU0cM_KrrikOuLth_-JPLvnr0aUXipf7uSuT3QqRENGFznHVcG4fKTZtBZqUYngbL2X-6g01AMlY2M78mRT2JA/s1600/800px-Wikileaks.png"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 247px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeBEYNvgXctt_H43mUXEt-d_6w_eExurT_QNavtbnIu8ew79BBnU0cM_KrrikOuLth_-JPLvnr0aUXipf7uSuT3QqRENGFznHVcG4fKTZtBZqUYngbL2X-6g01AMlY2M78mRT2JA/s400/800px-Wikileaks.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548873308615797186" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;">[ 100 ]</span><br /><br /><br />சைபர் வெளியில், இணையத்தின் மெய்நிகர் வெளியில் இவ்வாறு அதிகாரங்களுக்கெதிரான அரசியல் இயக்கங்கள் உருவான கதையும் அதன் பின்னணிகளும் விரிவானவை.<br /><br />சுருக்கமாகச் சொன்னால், றிச்சர்ட் ஸ்டால்மன் கொண்டுவந்த கட்டற்ற மென்பொருள் இயக்கமும் அதன் வழி உருவான "எண்மிய உரிமைகள் (Digital Rights)" பற்றிய விழிப்புணர்வும் மெல்ல மெல்ல கட்டற்ற மென்பொருள் இயக்கம் Anarchistக்கள் மத்தியில் பிரபலமானதும் அதேவேளை காப்புரிமையை மீறுவதை இயக்கமாக்கிய Pirate bay இன் செயற்பாடுகளும் அதனைத்தொடர்ந்து Pirate Party என்கிற அரசியற் கட்சி உருவானமையும் பசுமைக்கட்சிகளின் தோழமையும் இணையத்தின் பெரும் பரவலும் எல்லாம் சேர்ந்தே இப்போராட்டத்துக்கான பின்னணியை அமைத்துக்கொடுத்தன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdKZzY7AGd-56zt0iqI5XJ5wDkpFyWlgn-fXl-g-FIdleuL3hPnyb6BRwo_nEoQc9eBRby6RtOwehyn6_mV0o3YW0IO4N9BkbZpZKnDbNe-6KKS99gA1v67PMXWF26r6DQ5yI_AQ/s1600/000.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 311px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdKZzY7AGd-56zt0iqI5XJ5wDkpFyWlgn-fXl-g-FIdleuL3hPnyb6BRwo_nEoQc9eBRby6RtOwehyn6_mV0o3YW0IO4N9BkbZpZKnDbNe-6KKS99gA1v67PMXWF26r6DQ5yI_AQ/s400/000.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874149826840882" border="0" /></a><br /><br />ஒரு பந்தியில் சொல்லிவிட்டுத் தாண்டி நான் போனாலும் இந்த விடயம் விரிவாக எழுதப்படவேண்டியுள்ளது.<br /><br />மேலே சொன்ன வெவ்வேறு அரசியல் இயக்கங்களின் கூட்டணியில் விக்கிலீக்ஸ் வந்து இணைந்துகொண்டது. அது நேரடியாகவே அரச அதிகாரங்களைச் சீண்டியது.<br /><br />Operation Payback இனைச்சீண்டி எழுப்பிய முதல் நிகழ்வு இந்தியாவில் தான் நடந்தது. பொலிவூட் தொழிற்துறை, திரைப்படங்களைக் காப்புரிமையை மீறி பகிர்ந்து வந்த தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்துமுகமாகப் பெருந்தொகைப்பணத்தைச் செலவழித்து Aiplex Software என்ற இந்திய நிறுவனத்தைப் பணிக்கமர்த்தியது. தாக்குதலையும் நடத்தியது. கூடவே, இவ்வாறு தாம் சொல்லியும் நிறுத்தப்படாத "சட்டத்துக்குப்புறம்பான" தளங்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்குள்ளாக்கப்படும் என்றும் மிரட்டியது.<br /><br />இந்தச் சம்பவத்தின் போதுதான் முதன் முதலில் "திருப்பிக் கொடுக்க" வேண்டிய தேவை சாதாரண இணையப் பயனர்களுக்கு ஏற்படுகிறது. Aiplex Software நிறுவனத்தின் தளத்தின் மீதே தாக்குதல் திட்டமிடப்பட்டாலும் பின்பு, அதைவிட வலுவான தாக்கத்தை உண்டாக்குவதற்காக குறித்த பிரச்சினையை கிளப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்களைக் குறிவைத்து அவர்களது திரைப்படத்துக்கான தளம் தாக்கி முடக்கப்பட்டது.<br /><br />கூடவே இவ்வகைத்தாக்குதல்கள் இணைய வெளியில் அமைப்பாக்கப்பட்டு அரசியல் பிரகடனமும் வெளியிடப்பட்டது.<br /><br />"இணையத்தில் தலையீடு செய்யும் பெருவணிக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் நாம் எதிராகவுள்ளோம். இணையமானது கட்டற்றதாயும் அனைவருக்கும் திறந்ததாயும் இருக்கவேண்டும் என நாம் நம்புகிறோம். இதில் உடன்பாடு இல்லை என்ற காரணத்துக்காக அரசாங்கங்கள் தணிக்கை செய்ய முயலக்கூடாது"<br /><br /><a href="http://anonops.blogspot.com/2010/12/work.html?spref=tw">அவர்களது முழுமையான பிரகடனங்களை இங்கே பார்க்கலாம்</a><br /><br /><br /><br />பின்பு காலத்துக்குக்காலம் அறிவித்தல்களும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காகத் தாக்குதல்கள் பல நடத்தப்பட்டுள்ளன.<br /><br /><br />விக்கிலீக்சின் வருகைக்குப்பிறகு இணையத்தில் அரசாங்கங்களின் தலையீட்டை எதிர்ப்பது, மக்களின் தகவலறியும் உரிமையைக் காப்பது, வெளிப்படையான நிர்வாக அமைப்புக்களைக் கோருவது எல்லாமே புதிய அர்த்தத்தையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டன. கூடவே வெறுமனே காப்புரிமைக்கெதிரான போராட்டமாக, தணிக்கைக்கெதிரான போராட்டமாக இருந்த நிலை மாறி நேரடியாக அரச அதிகார இயந்திரங்களின் கொலைகாரத் தன்மைக்கெதிரான போராட்டமாக இது மாறவேண்டியதானது.<br /><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">சரி பிழைகள், சந்தேகங்கள் அனைத்தையும் தாண்டி, விக்கிலீக்ஸ் மீதான அரசுகளின் அழுத்தங்கள் இந்த இணையவெளிப் போராட்டக்குழுக்களின் வானவில் கூட்டணியைச் சாத்தியப்படுத்தி அதையொரு அரசியல் அமைப்பாக மாற்றியமைத்துள்ளது</span>.<br /><br /><span style="font-size:85%;"><span style="font-style: italic; color: rgb(102, 102, 102);">இவர்கள் V for Vendetta என்ற திரைப்படத்தின் குறியீடுகள், வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துவதிலிருந்து அவர்களது அரசியல் ரீதியான நோக்கம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படத்தை ஒருமுறை பாருங்கள். </span></span><br /><br />[ஏற்கனவே இங்கே அறிமுகப்படுத்தப்பட்ட Pirate Party தற்போது மிதவாதம் பேசுகிறது. "சட்டரீதியாக" போராடுங்கள். தாக்குதல்கள் வேண்டாம் என்று <a href="http://torrentfreak.com/pirate-parties-use-influence-to-halt-operation-payback-101120/">அறிக்கை விடுகிறது</a> ;) ]<br /><br /><br /><span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;">[ 101 ]</span><br /><br /><br />மெல்ல இந்தத்தாக்குதலின் பின்னாலுள்ள தொழிநுட்பத்தையும் பார்த்துவிடுவோம்.<br /><br />இத்தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பொதுவான உத்தி DDoS (Distributed Denial of Service attack) எனப்படுகிறது.<br /><br />வலைத்தளங்கள் வழங்கிகளில் உள்ளன. நாம் ஒரு முகவரியைப் பயன்படுத்தி வலைத்தளம் ஒன்றைப் பார்க்க விரும்பினால் உண்மையில் அவ்வழங்கிக்கு கோரிக்கை ஒன்றினை அனுப்புகிறோம். கோரிக்கைக்கேற்ப வழங்கி வலைத்தளத்தை எமக்குக் காண்பிக்கிறது. வழங்கியின் தாங்கும் திறன் மட்டுப்பட்டதே. ஒரு கடையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வந்தால் சமாளிக்கலாம். ஐந்து லட்சம் பேர் வந்தால் என்னாகும்?<br /><br />வழங்கியின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.<br /><br />வழங்கி தாங்கும் அளவுக்கு மேலாக எக்கச்சக்கமான கோரிக்கைகளை அனுப்பி அவ்வழங்கியைச் செயலிழக்கச்செய்து வலைத்தளத்தை முடக்கும் உத்திதான் இங்கே பயன்படுத்தப்பட்டது.<br /><br />பெரிய நிறுவனங்களின் சக்திவாய்ந்த வழங்கிகளை அடித்துச்சாய்க்க தனி ஒருவர் தாக்குதல் நடத்தினால் காணாது. பலரை ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் தாக்க வேண்டும். சொல்லப்போனால் படை திரட்டிப்போய்த் தாக்க வேண்டும்.<br /><br />இணையத்தில் எமது முகம் தெரியாமல் உரையாடவும் உலாவவும் கூடிய வசதிகள் உண்டு. அதற்கு உதவும் தொழிநுட்பங்கள் உண்டு. அவற்றைப்பயன்படுத்தி கூடிக்கதைக்கிறார்கள். எங்கே கூடுவது போன்ற தகவலகளை Twitter, Facebook போன்ற தற்காலத் தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பரிமாறிக்கொள்கிறார்கள். (கிளர்ச்சிக்காரர்களின் தொடர்பாடல் சாதனமாக இயங்கியதால்தான் Twitter தாக்குதலில் இருந்து தப்பித்தது. அது கிளர்ச்சிக்காரர்களின் முக்கிய இலக்காகவே இருக்கிறது)<br /><br />பிறகு ஆயுதங்களைத் தயார்படுத்துகிறார்கள்.<br /><br />இந்தத் தாக்குதலுக்கு இக்கிளர்ச்சிக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் <a href="http://en.wikipedia.org/wiki/Low_Orbit_Ion_Cannon">LOIC</a> எனப்படுகிறது. இதன் விரிவான பேர் கேட்டால் சும்மா அதிரும்.<br />"Low Orbit Ion Cannon"<br /><br />தாக்குதல் இலக்கு, தாக்குவோர், தாக்கும் முறை, தாக்குதல் எல்லாமே மெய்நிகர்த்தவை. மென்பொருள் வடிவானவை. ஆயுதமும் அப்படியே.<br />அந்தப் பீரங்கி ஒரு மென்பொருளாகும்.<br /><br />கிளர்ச்சிக்காரர்கள் அவ்வாயுதத்தை மேலும் சீர்படுத்தி அதிசக்திவாய்ந்ததாகத் தமக்கேற்றபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்.<br /><br />கூடிப்பேசி, போதுமானளவு போராளிகளைச் சேர்த்துக்கொண்டபின், இலக்கைத்தீர்மானித்து மேம்படுத்தப்பட்ட LOIC பீரங்கியால் சரமாரியாக அடிக்கிறார்கள்.<br /><br />உண்மையில் இந்த மென்பொருள் பீரங்கிகள் குறித்த வழங்கிக்கு எண்ணற்ற கோரிக்கைகளைச் சூறாவளிபோல் அனுப்புகின்றன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI0Y_wiyAlm1sTx6Yl0Q2ZfAY1wdNh0_RGG4FjWsLlMF2cCQtHwSZ9o3AmQWCYKBTuSMzNxxv_C16ESt-LPeRQf0J1L1gq_15sXg_pHdP2iTRL1Z5-Bdfrh7iIgR9ENAXOjWq4wA/s1600/800px-LOIC.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI0Y_wiyAlm1sTx6Yl0Q2ZfAY1wdNh0_RGG4FjWsLlMF2cCQtHwSZ9o3AmQWCYKBTuSMzNxxv_C16ESt-LPeRQf0J1L1gq_15sXg_pHdP2iTRL1Z5-Bdfrh7iIgR9ENAXOjWq4wA/s400/800px-LOIC.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548874153546282994" border="0" /></a><br /><br />Paypal, Visa போன்ற இணையப் பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களது வியாபாரத்தின் அச்சாணியே ஒருகணம் அதிர்ந்துபோகும். அதிர்ந்துதான் போனது. ஏகப்பட்ட பணத்தை, வாடிக்கையாளர்களை, நம்பகத்தன்மையை அந்நிறுவனங்கள் இழந்தன.<br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);">[ 111 ]</span><br /><br /><br />ரொபின் ஹூட்டுக்கு என்ன நடந்தது?<br />மருது சகோதரர்களைக் காலனியாதிக்க அதிகாரம் என்ன செய்தது?<br />பகத்சிங்கை அதிகாரம் எப்படிக் கையாண்டது?<br />கட்டபொம்மனின் மணற்கோட்டையும் மனக்கோட்டையும் எப்படி உடைந்தது?<br />சே குவேராவுக்கு என்ன முடிவு?<br />புரட்சிகர தேசங்களே கடைசியில் என்னவாயின?<br /><br /><br />அதிகாரங்கள் தூங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">அவர்களும் அவர்களுடைய புத்திகூர்மை மிக்க கைக்கூலிகளும் இரவுபகலாக அதிவேகமாகச் சிந்தித்தவண்ணமும் செயலாற்றியவண்ணமும் இருக்கிறார்கள். தமக்கான ஆபத்து மக்கள் வடிவில் எப்போதும் இருக்கிறதென்பதை அந்த மக்களை விடவும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மக்களிடம் ஏற்படும் சிறு சலனத்தையும் சிறு கிளர்ச்சியையும் எல்லாப் பலங்கொண்டும் அடக்கி வேரோடு பிடுங்கி எறிந்துவிட எல்லா வழிகளையும் தேடிக்கொண்டிருப்பார்கள்.</span><br /><br />இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதானதுமான தீவிர கண்காணிப்பும் இணையத்தொடர்பாடல் மீதான அரசுகளின் இரும்புப்பிடியும் மேலும் மேலும் அதிகரிக்கப்போகின்றன என்பதை நாம் இப்போதே எதிர்வு கூரலாம்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இத்தகையை கிளர்ச்சிகளைக் காரணம் காட்டி மனிதகுலத்துக்கெதிரான தம் கண்காணிப்புப் பொறிகளைச் சட்டரீதியானதாகவும் நியாயமானதாகவும் பரப்புரை செய்துகொள்வார்கள். </span><br /><br />கண்காணிப்பு. கண்காணிப்பே இன்று அத்தனை அதிகார நிறுவனங்களதும் பொதுவான ஆயுதம். கண்காணிப்பு வலை மேலும் மேலும் எம் கழுத்தை இறுக்கப்போகிறது.<br /><br />புதியபுதிய மாற்றுவழிகளைக் கண்டறிந்து இவ்வகைத்தாக்குதல்களைச் சமாளித்து எதிர்த்தாக்குதலும் தொடுக்குமளவுக்கு அரசுகள் கூடி எழும்.<br /><br />கிளர்ச்சிக்காரர்களும் புதிய புதிய ஆயுதங்களுடன் புதிய புதிய போர்க்களங்களில் அதிகாரங்களைச் சந்திப்பார்கள்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">மெல்ல மெல்ல ஒன்றிணைந்து, கோபம் கொண்டு, கொதிநிலையடைந்து மக்கள் கிளர்ந்தெழுந்து அடிப்பதும் பின் உடனடியாக சுதாகரித்துகொண்டு அதிகாரம் மறுபடி வெல்வதும் </span><br /><span style="color: rgb(0, 0, 102);">காலகாலமாக மீண்டும் மீண்டும் நிகழ்வது. </span><br /><br />ஆனால் போரோ ஓய்வதில்லை.<br /><br />ஏனெனில் அதிகாரமுள்ளவர்களும் அதிகாரமற்றவர்களும் இருக்கும் வரை, அதிகாரமற்றவர்களை வருத்திச்சுரண்டி அடக்கி ஒடுக்கியே அதிகாரம் வாழவேண்டிய நிலை தொடரும் வரை"திருப்பி அடிக்க" வேண்டிய தேவை சாதாரணர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். ஓயப்போவதில்லை.<br /><br />இந்த "திருப்பி அடி"த்தலை நாம் ரொபின் ஹூட்டுடன் அல்லது பகத்சிங்கின் கைக்குண்டுத்தாக்குதலுடன் ஒப்பிடலாம்.<br /><br />ஓர் அதிர்ச்சியையும், ஆளும் வர்க்கத்துக்கும் பெருவணிக நிறுவனங்களுக்கும் எதிரான நியாயமான எழுச்சியையும் இது உருவாக்கியிருக்கிறது. ஆள்வோரின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறது.<br /><br />வெடிகுண்டு போடப்பட்டிருக்கிறது. பகத்சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், இது வெறும் சத்த வெடிகுண்டே. "கேளாத செவிகளும் கேட்கட்டும்" என்பதற்காகப் போடப்பட்டது. செவிகளை நாம் கேட்கப்பண்ண வேண்டும்.<br /><br /><br />புரட்சிகர அமைப்புக்களுக்கு இது சொல்லும் செய்தி என்னவென்றால்,<br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">ஆளும் வர்க்கமோ தன் ஆயுதங்களை அதிவேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. </span><br /><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">புரட்சிகர சக்திகளும் அதற்கு ஈடுகொடுத்துத் தம் ஆயுதங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வுகளில் செயற்பாடுகளில் இறங்கியாகவேண்டும். </span><br /><br />புதிய போர்க்களங்களுக்கு ஆயத்தமாகவேண்டும்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWovlvYaTQ8a02y-5OHFBObe5EKC4ASPC0uEJvMPPqhnVxUSsIohbH6AJZrTK5MnSi6bvxmniMA5zlhyphenhyphenWTIbojBKySG8v-c9UIqRHHL1xkHXeRhVNB6D6g-ta7JfMMHe_LkrVXpg/s1600/pirate_party_demonstrators.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 243px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWovlvYaTQ8a02y-5OHFBObe5EKC4ASPC0uEJvMPPqhnVxUSsIohbH6AJZrTK5MnSi6bvxmniMA5zlhyphenhyphenWTIbojBKySG8v-c9UIqRHHL1xkHXeRhVNB6D6g-ta7JfMMHe_LkrVXpg/s400/pirate_party_demonstrators.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5548876530937058450" border="0" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUHs6CWPDyCObLImAqg9sHbRVM6nbWIdeQkjj7uQJXcXzz8QOTKN6nEixvYP_ao6laHk4OB1UNiBxy2OIhx5wv1rAVtBG_e_qGhZBi6-8_lmdPQO3o3FIYFzKE9-nzDaMkHcD3CA/s1600/payback_good.jpg"><br /></a><br /><br /><span style="font-size:85%;"><span style="font-style: italic; color: rgb(102, 102, 102);">[பின் குறிப்பு: விக்கிலீக்ஸ் ஜூலியன், தமக்கு அமெரிக்காவால் ஏதேனும் தீங்கு நடக்குமானால் பயன்படுத்தச்சொல்லி 1.5 GB அளவுள்ள வெடிகுண்டு ஒன்றை இணையக்குடிமக்கள் அனைவருக்குமாக வழங்கியிருக்கிறார்கள். எண்மிய வெடிகுண்டு. அதை இப்போதைக்கு எவராலும் திறந்து பார்க்க முடியாது. அது மிக ஆழமாக மறைகுறியாக்கப்பட்ட கோப்பு (Deeply encrypted file). அதில் அடங்கியுள்ள தகவல்கள் அமெரிக்காவை நிலைகுலையச் செய்யப் போதுமானவை என்று குறிப்பிட்டிருக்கிறார். உரிய காலம் வரும்போது அதனை திறப்பதற்கான வழி வகைகள் அறிவிக்கப்படலாம்.] </span></span><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6844868.post-8609251807853893122010-11-27T03:34:00.007+05:302010-11-27T18:12:45.936+05:30கோணேசுவரத்தில் கண்முன்னே முசுலிம் பெண்களுக்கு அனுமதி மறுப்பு - கன்னியாவைக் கைப்பற்றும் பேரினவாதத்தின் ஊற்று எது?<span style="font-weight:bold;">பதிவினை முழுமையாக ஒலி வடிவில் கேட்க :</span><br /><span style="font-style:italic;">(ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே பதிவை வாசிப்பது கூடுதல் விளக்கமாகவும் சலிப்பற்ற அனுபவமாகவும் இருக்கும்)</span><br /><br /><object id="pod_audio_1" data="http://mmauran.net/oli/wp-content/plugins/podcasting/player/player.swf" style="outline: medium none; visibility: visible;" name="pod_audio_1" type="application/x-shockwave-flash" height="24" width="290"><param value="opaque" name="wmode"><param value="false" name="menu"><param value="soundFile=http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fkonesar.mp3&playerID=pod_audio_1" name="flashvars"></object><br /> <script type="text/javascript"> <br /> AudioPlayer.embed("pod_audio_1", {soundFile: "http%3A%2F%2Fmmauran.net%2Foli_files%2Fkonesar.mp3"}); <br /> </script><br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" >== கோணேசர் கோயில் கதை ==</span><br /><br />சில மாதங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து வந்திருந்த நண்பருக்குத் திருகோணமலையின் முக்கிய பகுதிகளைச்சுற்றிக் காட்டும் சாக்கில் எனது சொந்த ஊரின் சில பகுதிகளை நீண்ட காலத்துக்குப்பிறகு மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது.<br /><br />ஆயுதப்போர் முடிந்த பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழலில் பவுத்த-சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு எப்படிப் படு தீவிரமாக நடந்தேறி வருகிறது என்பதைக் கண்ணுக்கு முன்னால் தெளிவாகவே வேதனையோடு காண முடிந்தது.<br /><br />கடைசி நாள் நாம் கோணேசர் கோயிலைப் பார்ப்பதற்காகப் போனோம். அங்கு மட்டும் இந்தச் சம்பவம் நடந்திருக்காவிட்டல் இப்பதிவின் தலைப்பு வேறொன்றாக இருந்திருக்கும்.<br /><br />(இப்பதிவுக்குத் தலைப்பெடுத்துக்கொடுத்த எம்பெருமான் கோணேசுவரருக்கு நன்றிகள். :))<br /><br />கோயிலைச் சுற்றிப்பார்த்துவிட்டு படிவழியே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு முசுலிம் குடும்பத்துக்கும் கோயிலின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMNMvF76RYCHUL89TnF5_Q9hQf8WgLllDOLNYWa7g6t2ZWu5oarbSZUHshgmKWvUohxgRugQsea34ZtxhrIfCA79NuAEc5ye5rPO3eNq7AUuxKoor1ONjOULyFanp_ThBCrMr9YA/s1600/koneswaram_700.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 171px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMNMvF76RYCHUL89TnF5_Q9hQf8WgLllDOLNYWa7g6t2ZWu5oarbSZUHshgmKWvUohxgRugQsea34ZtxhrIfCA79NuAEc5ye5rPO3eNq7AUuxKoor1ONjOULyFanp_ThBCrMr9YA/s400/koneswaram_700.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543985220639578306" border="0" /></a><br />சைவப்பழமாய் நின்றிருந்த கோயில் தர்மகர்த்தா சபையின் பிரமுகர் ஒருவர் அக்குடும்பத்தைத் திரும்பிப்போகச்சொல்லிக் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.<br /><br />நானும் நண்பரும் அக்குடும்பத்தை அணுகி என்ன நடந்ததென்று விசாரித்தபோது, தாம் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணமாக இங்கே வந்திருப்பதாகவும், <span style="color: rgb(0, 0, 102);">வந்திருந்த முசுலிம் பெண்கள் தலையை மூடி அணிந்திருந்த துணியைக் கழற்றி விட்டுத்தான் கோயிலுக்குள் போக வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சொல்வதாகவும் தாம் இது தொடர்பாக இந்தியத்தூதரகத்தில் முறையிடப்போவதாகவும் சொன்னார்கள்.</span><br /><br />அப்பெண்கள் உண்மையில் முகம், கண் எல்லாவற்றையும் மூடிய கரிய ஆடை அணிந்திருக்கவில்லை. தலையை மட்டும் மூடி முக்காடிட்டிருந்தார்கள். குடும்பத்தலைவரான ஆண் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். தொப்பி போட்டிருக்கவில்லை.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">தமிழரான பாதுகாப்பு உத்தியோகத்தர் இப்போது சிங்களத்தில் அக்குடும்பத்தை நோக்கிக் கத்தி வெருட்ட ஆரம்பித்தார்.</span><br /><br />கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அந்த முசுலிம் பெண்கள் தம் பக்க நியாயத்தைக் கோபத்துடனும் துணிச்சலுடனும் எடுத்து வைத்து வாதிட்டுக்கொண்டிருந்தனர்.<br /><br />தாம் முக்காட்டினை அகற்றப்போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்த அப்பெண்கள், கோயிலினுள் தாம் போகாவிட்டாலும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவாவது அனுமதிக்குமாறு கோரினர். தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் கருவறை வரைக்கும் செல்லக்கூடத் தம்மை அனுமதித்தார்கள் இங்கே ஏன் அனுமதிக்கிறீர்கள் இல்லை என்று கேட்டனர். அப்போது கோயிலினுள் இருந்து அவ்வழியால் கீழிறங்கிக்கொண்டிருந்த ஏனைய பெண்கள் பலர் உடலை அதிகம் மூடியிராத ஆடைகள் அணிந்திருப்பதைக் காட்டி தமது வார்த்தைகளில் "திறந்து போட்டு உள்ளே போகலாம்; மூடிக்கொண்டு போகக்கூடாதா" என்று கேட்டனர்.<br /><br /><br />உடனடியாக நான் உள்ளே சென்று கோயில் நிர்வாகத்தினரை அணுகி இக்குடும்பத்தினை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன்.<br /><br />எமக்கிடையில் நிகழ்ந்த நீண்ட தர்க்கத்தில் கோவில் நிர்வாகத்தினர் பின்வரும் வாதங்களை முன்வைத்து அக்குடும்பத்தை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் கடுமையாக நின்றனர்.<br /><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">1. அவர்கள் தமது பள்ளியினுள் மற்ற மதத்தவரை அனுமதிப்பார்களா? நாம் மட்டும் அவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்?</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">2. அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார்கள்.</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">3. இப்படியே விட்டால் இனி தொப்பி போட்டுக்கொண்டும் வருவார்கள்.</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">4. கோவிலினுள் தலையை மூடி வருவதை தடுத்திருக்கிறோம். முக்காட்டினை அகற்றினால் உள்ளே வர அனுமதிப்போம்.</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">5. இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம்.</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">6. கோணேசர் சக்தி வாய்ந்தவர். நாம் இவர்களை உள்ளே விட்டுத் தவறிழைத்தால் உரிய தண்டனையை எமக்குத் தந்துவிடுவார். இங்கு பூசைசெய்த ஒவ்வொரு பூசாரிக்கும் நடந்தது தெரியும்தானே..</span><br /><br /><span style="color: rgb(0, 51, 0);">7. அவர்கள் நம்பிக்கையோடு வரவில்லை. சிங்களவர்கள் அப்படியில்லை நம்பிகையோடு வருகிறார்கள். இது புதினம் பார்க்க வரும் இடம் இல்லை.</span><br /><br /><br />இவை ஒவ்வொன்றும் நான் அவர்களது ஒவ்வொரு வாதத்தையும் மறுத்துச் சண்டை பிடித்தபோது அடுத்தடுத்து வைக்கப்பட்டவை.<br /><br />இவ்வாதங்கள் தமக்கிடையில் முரண்படுவது வெளிப்படையாகவே தெரிகிறதில்லையா? அந்த முரண்பாடுதான் கோயில் நிர்வாகத்தினரது உண்மையான மனநிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.<br /><br /><br />மற்ற மதத்தவரை பள்ளிக்குள் அனுமதிப்பதில்லை என்ற வாதம் இங்கே தொடர்பற்றதாகும். ஏனென்றால் அவ்வாறு அனுமதிக்காத பள்ளிகள் முசுலிம்கள் தவிர்ந்த வேறெவரையுமே அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் கோவிலினுள் மற்ற எல்லாரையும் அனுமதிக்கிறீர்கள். பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்று இந்த முசுலிம்களைத் தண்டிப்பது எவ்வளவு தூரம் கேவலமாகவும் தார்மீகத் தவறாகவும் இருக்கிறது?<br /><br />யார் என்ன சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு வருகிறார்கள் என்பதை அறிய வாசலில் ஏதாவது கருவி மாட்டி வைத்திருக்கிறீர்களா? நானே அன்று ஆட்டிறைச்சியும் மீனும் சாப்பிட்டிருந்தேன். அங்கு ஒளிப்படம் எடுக்கவும் இனிய மாலைப்பொழுதைக்கழிக்கவும் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் உபவாச விரதமிருந்து புண்ணிய நதியில் நீராடிவிட்டா வந்திருக்கிறார்கள்?<br /><br />கோணேசர் கோவில் சிவாலய விதிப்படி அமைக்கப்பட்டதோ அன்றிச் சிவாலய விதிப்படி பூசைசெய்யப்படும் ஆலயமோ அல்ல. அப்படியாக இருந்திருந்தால் தலையை மூடி ஆடையணிந்து கோவிலினுள் வருவதைத் தடுப்பதற்கு அது ஓர் ஆகக்குறைந்த நியாயமாகவும் இருந்திருக்கும். சரி, அப்படியே சிவாலய விதிகளை அவர்கள் அபிநயிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தலையை மூடியபடி கோவிலுக்குள் போவதற்குச் சமமான குற்றம் ஆண்கள் மேலாடையுடன் கோவிலுக்குள் போவதுமாகும். அங்கு எந்த ஆண்களும் மேலாடைய அகற்றிவிட்டு கோவிலினுள் போவதில்லை. அப்படி இருக்க இப்போது திடீரென்று என்ன சிவாலய விதி முளைத்தது?<br /><br />அங்கே புதினம்பார்க்கவும் சுற்றுலாவாகவும் எத்தனையோ வெவ்வேறு இனத்தவர் வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு வருவதாகக் கருதும் ஆலய நிர்வாகம் முசுலிம்கள் மட்டும் நம்பிக்கையோடு வருவதில்லை என்று கருத என்ன நியாயம் இருக்க முடியும்?<br /><br />ஆக அவர்கள் சாட்டுக்காகச் சொன்ன எந்தவொரு காரணமும் உண்மை அல்ல. எல்லாம் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு வெறும் பொய்யாகி நிற்கின்றன.<br /><br />அப்படியானால் உண்மையான காரணம் என்ன?<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">"இவர்களை "இப்படி விட்டு விட்டுத்தான்" நாம் "இந்த நிலையில் " இருக்கிறோம். "</span><br /><br />என்ற அவர்களது கூற்றில் தான் அது ஒளிந்திருக்கிறது.<br /><br />ஆலய நிர்வாகத்தினரது இந்த நடத்தைக்கான உளவியல் காரணம் எது?<br /><br />அதைப்புரிந்துகொள்ள இலங்கையிலுள்ள தமிழ் இன வாதிகள் முசுலிம்கள் பற்றிக் காலகாலமாகக் கொண்டுள்ள கண்ணோட்டத்தினைப் புரிந்துகொண்டாகவேண்டும்.<br /><br /><br /><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;font-size:130%;" >== சைவ வேளாளத் தமிழ் இனவாதம் ==</span><br /><br />ஈழத்தமிழரின் தேசிய அரசியலைத் தலைமையேற்று நடத்தியதும் இன்றுவரைக்கும் காப்பாற்ற நினைப்பதும் சைவ வேளாள ஆதிக்கமே. வெள்ளைக்காரக் காலனியாதிக்கவாதிகளுக்குக் கூழைக்கும்பிடுபோட்டு, கால்பிடித்துவிட்டபடி உள்ளூர் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியதும் தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தோடு உண்மையான பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் உணர்வுகளை திசை திருப்பி நாசமாக்கியதும், எப்போதும் ஆதிக்க சக்திகளாக உள்ள எசமானருக்கு கால்பிடிப்பதும் தாம் அடக்கி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிற மக்களையும் அடக்கியாள்வதும் இந்த சைவ வேளாள ஆதிக்க மனநிலையின் தன்மைகள்.<br /><br />பெருமையுடன் வெள்ளைக்காரச் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்துக் கோடிக்கணக்காக சம்பாதிக்கும் கோயில் நிர்வாகம், வேறு வழியின்றிச் சிங்களவர்களுக்கு இடைஞ்சல் தராது அனுமதித்து வரும் நிர்வாகம், தமது ஆதிக்கத்தை நிலை நாட்டவும் தமது வக்கிர மனநிலையைக் கொட்டித்தீர்க்கவும் இன்னொரு சிறுபான்மை மீது உறுமுகிறது. இது சைவ, வேளாள, இனவாத வக்கிரமே அன்றி வேறில்லை.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">தமிழனான பாதுகாப்பு உத்தியோகத்தன், தம்மைத் தமிழராக இனங்காணும் தமிழ் நாட்டு முசுலிம் குடும்பம் ஒன்றை நோக்கி, அக்குடும்பம் அறிந்தேயிராத சிங்கள மொழியில் மனநோய் பிடித்துக் கத்துகிறான். </span>அவன் கத்திய அதே மொழியின் அதே வக்கிரத்தோடுதான் வீதிகள் தோறும் சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் தமிழரையும் முசுலிம்களையும் பார்த்துக் காலகாலமாகக் கத்துகிறது. சைவ வேளாள ஆதிக்கம், இலங்கையின் ஒடுக்கும் அதிகாரமொன்றின் வக்கிரக் கத்தலையும் அக்கத்தலின் மொழியையும் வாங்கி இன்னொரு இனத்தின் மீது ஏவுகிறது.<br /><br />ஒருபுறம் சிங்களத்தில் கத்தியவாறும், மறுபுறம் தமக்குள் வெற்றிக்களிப்புப் பூரிப்புடனும் புன்னகையுடனும் சிரித்துக்கொண்டும் நிற்கிறது சைவ வேளாளத் தமிழ் இனவாதம்.<br /><br />இது மனநோய் அன்றி வேறென்ன?<br /><br />இந்த மனநோய் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் தரித்துக்கொண்டால் என்ன செய்யும் என்பதை நாம் தொண்ணூறுகளில் வடபுலத்தில் முசுலிம்களை துரத்தியடித்தபோது பார்த்தோம்.<br /><br />இந்த மனநோய் ஒரே நேரத்தில் ஆதிக்க மனநிலையாலும் அதே நேரத்தில் தோல்வியடைந்த இயலாமையாலும் உண்டாக்கப்படுகிறது.<br /><br /><br />இந்தச்சம்பவம் நடப்பதற்குச் சில மணிநேரம் முன்னதாக ஆலய நிர்வாகசபையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்னை அணுகி, கோயில் இராசகோபுரக் கட்டுமானப்பணிகளுக்கு உதவி வழங்குமாறு கோரினார்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இலங்கையிலேயே ஆக உயரமான கோபுரமொன்றினைக் கோணேசர் கோவிலுக்குக் கட்டும் முயற்சியில் இருக்கிறார்கள்.</span><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இப்போது கோயில்கள் கட்டுவதும் இராசகோபுரம் கட்டுவதும் இந்துக்களுக்கு சைவர்களுக்கும் தனியான மதம் சார்ந்த விடயமாகவன்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்த விடயமாக மாறியிருக்கிறது.</span><br /><br />நயிணை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு கோபுரம் கட்டும் பணியையும் இதனோடு இணைத்துப்பார்க்கலாம்.<br /><br />கோணேசர் கோவில் இராவணன் வெட்டுப் பகுதியில் சில பிக்குகளுடன் கூட வந்த சிங்கள அதிகாரிகள் ஏதோ அளவீடுகள் செய்துவிட்டுப்போன கையோடு அச்சத்தில் அங்கே எட்டடி உயரத்தில் ஓர் இராவணன் சிலை அமைப்பதற்கான முயற்சிகளை கோவில்காரர்கள் முடுக்கி விட்டிருக்கிறார்கள்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">சைவத்தை "இந்து"மதம் இலங்கையில் வெற்றிகொள்ளப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்துமதத்தின் வில்லன்களுள் ஒருவனான இராவணனுக்கு சைவக்கோவில் ஒன்றில் சிலையெடுப்பு!</span><br /><br />இலங்கையில் ஆளுக்காள் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மத அடையாளங்களைத் தூக்கிக்கொண்டு இடியப்பச்சிக்கலான பனிப்போர் ஒன்றினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" ><br />== பவுத்த சிங்களப் பேரினவாதம் ==</span><br /><br /><br />இலங்கையின் மத அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் வரலாற்றுப்பின்னணி எதுவாக இருப்பினும், தற்போது எழுந்துள்ள இந்தச்சிக்கலின் முழு முதற்காரணி சிங்கள- பவுத்தப் பேரினவாதமே.<br /><br />ஒப்பீட்டளவில் முற்போக்கான தன்மைகள் கொண்ட பவுத்த நெறி படுதோல்வியடைந்துள்ள இடங்களுள் முதன்மையானது இலங்கைதான்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">எவற்றுக்கெல்லாம் எதிராக பவுத்த நெறி கலகம் செய்ததோ அவற்றிடமெல்லாம் தோற்றுக் கடைசியில் அவையாகவே ஆகிவிட்டிருக்கிறது</span>. இலங்கையில் உள்ள பவுத்த மதம் பண்டைய இலங்கை ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறைகள், இந்துமத மரபு ஆகியவற்றின் கலவையாகத்தான் இருக்கிறதே ஒழிய, பவுத்தமாக இல்லை. இந்த ஆதிக்குடி வழிபாடு-இந்துமரபு-பவுத்தச் சின்னங்கள் கொண்ட புதிய மதமான "இலங்கைப் பவுத்தம்" இலங்கையின் பெரும்பான்மை இனமொன்றின் பொது அடையாளமாக வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதுடன் <span style="color: rgb(0, 0, 102);">உலகச்சிறுபான்மை என்ற பயவுணர்வு கொண்ட மக்கள் கூட்டமொன்றின் பொது அடையாளமாகவும் ஆக்கப்பட்டுள்ளது</span>. இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVHCLav-EcYP_daMgEFMvtERaSbR-ibmKRKUF2KQDnIFsequgpxqeq4vWLcsiEoF4qXlYSp_ivapmXvQhfUvJlpRks1zkAlbx8cbuRbID_AR8kHKqHQlhlMun-Wbnrd64KLnySZQ/s1600/kandy_perahera_galleryfull.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVHCLav-EcYP_daMgEFMvtERaSbR-ibmKRKUF2KQDnIFsequgpxqeq4vWLcsiEoF4qXlYSp_ivapmXvQhfUvJlpRks1zkAlbx8cbuRbID_AR8kHKqHQlhlMun-Wbnrd64KLnySZQ/s400/kandy_perahera_galleryfull.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984543255128386" border="0" /></a><br />முன்னர் சைவ வேளாள மனநோயின் காரணங்களாக நான் கூறிய இரண்டு எதிரெதிர் மனநிலைகள் தான் இங்கும் வேலை செய்கிறது. <span style="color: rgb(0, 0, 102);">ஒரே நேரத்தில் தாழ்வுச்சிக்கலும் ஆதிக்க வெறியும்.</span><br /><br /><br />ஒரு நாட்டில் அல்லது ஒரு பிரதேசத்தில் ஒத்த பொது அடையாளங்களுடனிருக்கும் <span style="color: rgb(0, 0, 102);">பெரும்பான்மையான சமூகமொன்றில் இயல்பாகவே காணப்படக்கூடிய மேலாதிக்க மனநிலைகளைத் தட்டியெழுப்பி அந்தப்பொது அடையாளங்களைக் கோசமாக்கி அரசியல் லாபங்களை அறுவடை செய்துகொள்ளலாம்</span>. அதையே அடுத்தடுத்து வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவ்வாறு தட்டியெழுப்பப்பட்ட "பூதம்" இன்று "சிங்கள" என்ற அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்கும் படியாகச் சிங்களக் கிறித்துவர்கள் மீதே பாய வெளிக்கிடுகிறது.<br /><br />இலங்கையர் மீது பலமுறை நிகழ்ந்த தென்னிந்தியப்படையெடுப்புக்கள் இலங்கைத்தமிழரின் சமயமாகவும் இருந்த பவுத்தத்தை முற்றாகத் துடைத்தழித்துவிட்டமை இங்கே ஒரு கெடுவிளைவாகிவிட்டது.<br />(இதில் தேரவாத-மகாயான பவுத்தங்களுக்கிடையான மோதல் எவ்வளவு தூரம் பங்களிப்புச்செய்திருந்ததென்பது பற்றிச் சொல்ல எனக்கு அறிவில்லை)<br /><br />உசுப்பியெழுப்பப்பட்ட சிங்கள-பவுத்தப் பேரினவாதம் புத்தர் சிலையையும் பவுத்தச்சின்னங்களையும் அதிகாரத்தின், ஆதிக்கத்தின் குறியீடுகளாக இலங்கை முழுவதும் நட்டுவைத்து தனது மனநோயை வெளிக்காட்டத்தொடங்கியது. உலகமெங்கும் வரலாறு நெடுகிலும் ஆதிக்கத்தினதும் ஆக்கிரமிப்பினதும் குறியீடாக இருக்கும் கொடிகள், இலட்சனைகள் போன்று புத்தரின் உருவமும் சிலைகளும் ஆக்கப்பட்டுள்ளன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKlnEhQvXjO49RzBTV6ufsWHduq0vFh944DwyhtvoWoSrYZxCfuoPWbAUOHh_iNO6owLxw3HxPVmgRIXVWwHEmpNBb5rRZRhqvrxUEeoQTBB6x8yYhGy6HR1b-s6C7wkrNp0Xb7A/s1600/buddha-statue_trinco_41588_435.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKlnEhQvXjO49RzBTV6ufsWHduq0vFh944DwyhtvoWoSrYZxCfuoPWbAUOHh_iNO6owLxw3HxPVmgRIXVWwHEmpNBb5rRZRhqvrxUEeoQTBB6x8yYhGy6HR1b-s6C7wkrNp0Xb7A/s400/buddha-statue_trinco_41588_435.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984516633981746" border="0" /></a><br />ஆக்கிரமிப்பின் குறியீடாக மத அடையாளம் ஒன்று நாட்டப்படும்போது அது ஏனைய மத அடையாளங்களைத்தான் தாக்க முடியும். ஏனைய மத அடையாளங்களை அழித்துத்தான் அது தன்னை நாட்டிக்கொள்ள முடியும்.<br /><br />முதற்கட்டமாக இலங்கையின் பன்மத வழிபாட்டிடங்கள் குறிவைக்கப்பட்டன. பன்மத வழிபாட்டிடங்கள் இலங்கையின் ஒரு சிறப்பம்சம். சிவனொளிபாதம், கதிர்காமம், நயிணைதீவு போன்ற இடங்கள் எல்லா மதத்தவரும் புரிந்துணர்வோடும் வேறுபாடுகளின்றியும் கூடுகிற இடங்களாக இருக்கின்றன. அவை பவுத்த சிங்கள மயமாக்கப்பட்டன. பிறகு தமிழரதும் முசுலிம்களதும் மத அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு அங்கே பவுத்தச்சின்னங்கள் நிறுவப்பட்டன.<br /><br />இந்தப்போக்கு மத அடையாளங்கள் நெருக்கடி நிலைக்குத்தள்ளப்பட்டு தீவிரமான முரண்பாடாக எழக் காரணமானது.<br /><br />முசுலிம்களுக்கு இசுலாம் மத அடையாளமே அவர்களது முழுமையான இன அடையாளமாக இருப்பதால் அவர்கள் முழுத்தீவரத்தோடு இந்தப்பிரச்சினைக்குள் இழுக்கப்படும் வாய்ப்புக்கள் உருவாயின.<br /><br />இலங்கையின் கொதிக்கும் முரண்பாடாக இருக்கும் சிங்கள பவுத்த - தமிழர் முரண்பாட்டில் மதம் அடிப்படைக்காரணியாக இல்லாத போதிலும் வேறு வழியின்றி இழுத்துவிடப்பட்டுள்ளது.<br />மொழிசார்ந்த இன முரண்பாடே இங்கே அடிப்படையாக அமைந்த போதிலும் தட்டியெழுப்பப்பட்ட சிங்கள பவுத்த பூதம் சைவ அடையாளங்களைக் குறிவைத்துத் தாக்கத்தொடங்கியது.<br /><span style="color: rgb(0, 0, 102);">இத்தாக்குதல் அதிகம் பிற்போக்குத்தனமானதாக இல்லாமலிருந்த சைவத்தரப்புக்களைக்கூட மத அடையாளத்தை முன்னிறுத்தும் நிலைக்குத்தள்ளியது.</span> பிற்போக்குத்தனமான சைவத்தரப்புக்கள் இயல்பாகவே வெகுண்டெழுந்தன.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">பிற்காலங்களில் இங்கே பரப்பப்பட்ட இந்துமதம்</span> இந்தப்பிரச்சினைக்குள் தன்னையும் இழுத்துவிட்டுக்கொண்டது.<br /><br />கிறித்துவர்கள், பிரதான தேசிய முரண்பாட்டின் அடிப்படையான "மொழி" அடையாளத்தோடு மட்டும் தமது அணிகளைத் தெரிவுசெய்துகொண்டனர்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இதில் புதினம் என்னவென்றால் பவுத்தம் படுதோல்வியடைந்துவிட்ட காரணத்தால் சிங்கள மக்கள் தெய்வ நம்பிக்கையும், "தெய்வ அனுக்கிரகம்" பற்றிய மூட நம்பிக்கைகளையும் அதிகளவாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது "தெய்வத்" தினவுக்காக இந்து-சைவக் கோயில்களை உண்மையான பக்திப்பரவசத்துடன் நாடி ஓடுகின்றனர். படைவீரர்களும் அவ்வாறே.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">சாதாரண பவுத்த சிங்கள மக்களுக்கோ இந்து அடையாளங்கள் புனிதமானவை. பவுத்த சிங்களப் பேரினவாதத்துக்கோ அச்சின்னங்கள் போட்டியானவை.</span><br /><br />இந்தச் சமூக நிலமையை பேரினவாதம் தனித்துவமான வழிமுறையினூடாகக் கையாள்கிறது.<br /><br />பெரும்பாலான சிங்களவர்கள் நாடியோடும் இந்து-சைவ தலங்களை முதலில் பன்மத வழிபாட்டிடங்களாக மாற்றும் "நட்புரீதியான" வேலைத்திட்டத்தில் இறங்குகிறது. பின்னர் படிப்படியாக அவ்விடங்களில் பவுத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவி விடுகிறது.<br /><br />(முன்னேசுவரம், கன்னியா, கோணேசர் கோயில் போன்றன தற்காலத்தைய எடுத்துக்காட்டுக்கள்)<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZUKaej-r3Np91mfVLKuWe-qcBzqv9QbB9-iY7VOik02sHeQnLFT6f6zjTXSNyVXo07tKm66k2wYM0K-_XuUH6MHCBBZJ19iQnx55VZfCLp9M-Kr36K4fZeD7qMivldSW8laaQjg/s1600/kataragama05.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 350px; height: 269px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZUKaej-r3Np91mfVLKuWe-qcBzqv9QbB9-iY7VOik02sHeQnLFT6f6zjTXSNyVXo07tKm66k2wYM0K-_XuUH6MHCBBZJ19iQnx55VZfCLp9M-Kr36K4fZeD7qMivldSW8laaQjg/s400/kataragama05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984519931216946" border="0" /></a><br /><br />தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் கடைந்தெடுத்த சிங்கள பவுத்தப் பேரினவாத மனநிலை கொண்டவர்களது அமைச்சாக இருக்கும் தொல்லியல் அமைச்சினூடாக மற்றயவர்களின் அடையாளங்கள் பட்டப்பகலில் பலர்கண்பார்க்கக் கைப்பற்றப்படுகின்றன.<br /><br />தமிழ் பவுத்தம் பற்றி சைவ வேளாள இனவாதம் எதுவும் பேசாமல் மூடி மறைக்க, பண்டைய தமிழ் பவுத்தர்களின் விகாரைகள் எல்லாம் "சிங்களவர்" சின்னங்களாக்கபப்டுகிறது. அப்பகுதிகளெல்லாம் சிங்களவரது பூர்வீக பூமியாக நிறுவப்படுகிறது.<br /><br />கிறித்துவ வழிபாட்டிடங்களில் முதற்கட்டமாக சிங்கள மொழிமூலப் போதனைகளைத் தொடக்கி பின்னர் படிப்படியாக அதனுள்ளும் நுழைந்துகொள்கிறது. இங்கே மொழி முரண்பாடு மட்டுமே முன்நிற்கிறது.<br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இந்த மத அடையாள நடுகைகளும் பவுத்த சிங்கள மயமாக்கமும் இரண்டு முக்கிய நிபந்தனைகளைக் கொண்டவை.</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">1. அதிகார- இராணுவ உதவி</span><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">2. சிங்களக் குடியேற்றம்</span><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இதற்கு அரசொன்றின் துணை கட்டாயம் வேண்டும்.</span><br /><br />இலங்கையில் பேரினவாத பவுத்த-சிங்கள அரசு ஆட்சியிலிருப்பதால் இத்தகைய ஆக்கிரமிப்பு மிக இலகுவாகச்செய்யப்படக்கூடியதாக இருக்கிறது.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">அண்மைக்காலங்களில் இந்த அரசின் பேரினவத நிகழ்ச்சிநிரலுக்கு இருந்த ஒரேயொரு பலமிக்க சவாலான விடுதலைப்புலிகள்</span> அழிந்த விதம் இன்னும் மோசமாக இந்த ஆக்கிரமிப்புக்கு வழிதிறந்துவிட்டிருக்கிறது.<br />(இங்கே விடுதலைப்புலிகள் ஓர் எதிர்ப்பின் குறியீடாக மட்டுமே வருகிறார்கள். அவர்களது அரசியற்பலவீனங்கள் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஒட்டுமொத்தமாக நன்மைசெய்வதாகவே இறுதியில் மாறிப்போய் நின்றது)<br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" >== முசுலிம்கள் ==</span><br /><br /><br /><br />முசுலிம்களின் வகிபாகம் இங்கே மேலும் சிக்கலானது.<br /><br /><br />குர் ஆனின் படி சிலைவணங்கிகள் நரகத்துக்குரியவர்களும் "வேற்று" மனிதர்களுமாவர். இசுலாமியக் கோட்பாடுகளின் படி சிலை வணங்கிகளை, இணைவைப்பவர்களை விட இசுலாமியர்கள் உயர்ந்தவர்கள்<br />சுவனத்துக்குப் பாத்தியதையானவர்கள். கூடவே இசுலாமே ஒரேயொரு இறுதி இறை மார்க்கம். இவ்வாறானதொரு "மேட்டிமை" மனநிலை, தம்மை "வேறானவர்களாகக்" கருதும் மனநிலை இசுலாத்தினூடாக முசுலிம்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது.<br /><br />இலங்கையில் (ஒரு சில கிறித்துவப் பிரிவுகளைத் தவிர ) ஏனைய அத்தனை மத அடையாளங்களும் சிலைவணக்கத்தை அடிப்படையாகக்கொண்டவையே.<br /><br />இவற்றின் பின்னணியில் இசுலாம் அடையாளம் சிறுபானமையாக இருப்பதால் பெரும் வீரியத்தோடு நிற்கும் சிங்கள-பவுத்த அடையாளத்தினால் கைப்பற்றப்படும் நிலையில் இருக்கிறது.<br /><br />"மதம் பரப்பும்" தன்மைகொண்ட இசுலாம், பல்வேறு கிறித்துவ அடையாளங்கள் இயல்பாகவே இந்து-பவுத்த அடையாளங்களுக்குப் பிரச்சினையே.<br /><br />மத அடையாளங்களைத்தாண்டியும் முசுலிம்கள் என்ற இன அடையாளத்துடன் தமிழரோடும் சிங்களவரோடும் அவர்கள் மோத வேண்டியவர்களாகவுள்ளார்கள்.<br /><br />"தமது" இடங்களில் பள்ளிவாசல்களைக்கட்டி ஆக்கிரமிக்கிறார்கள் என்று தமிழ் இந்துக்கள் முறைப்படுவதும், தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் முசுலிம் அடையாளங்கள் பவுத்தமயமாக்கப்படுகின்றன என்ற முசுலிம் தரப்பு முறைப்பாடுகளும் அடிக்கடிக் கேட்கின்றன.<br /><br />சிங்கள பவுத்தர்களோ, முசுலிம்கள் தமது இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு பள்ளிகட்டிப் பெருகுகிறார்கள் என்று முறைப்படவும் செய்கிறார்கள்.<br /><br />போதாக்குறைக்கு இலங்கை முசுலிம்களிடையே காலகாலமாக நிலவிவந்த கபுறு வணக்கம் போன்ற சிறு வழிபாட்டுப்போக்குக்கள் தற்போதைய "ஒற்றை இசுலாம்" மயமாக்கலின் கீழ் அழிக்கப்பட்டுவருகிறது.<br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" ><br />== கன்னியாக் கதை ==</span><br /><br />மீண்டும் திருகோணமலைக்கே வருவோம்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">இந்த மாவட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மேடை. மிகச்சிறந்த காட்சிக்கூடம். சிறப்பான மியூசியமும் கூட.</span><br /><br />திருகோணமலையிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலம் கன்னியாவாகும். கன்னியாவில் ஏழு சுடு நீர்க் கிணறுகள் உண்டு.<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY-4kldMul3E7iWfpI2LsP7q9AOiblUkkQLGqGiiq0OKnRFg3bvMj1m818jcA5-AXONyDbAYhkG5tvkWpmWLyzWbAEMsXMX3J_w7k6neY9l7-4mVaYTj7yX5pHSKvlvk9ygtKJcA/s1600/IMG_1678.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 242px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhY-4kldMul3E7iWfpI2LsP7q9AOiblUkkQLGqGiiq0OKnRFg3bvMj1m818jcA5-AXONyDbAYhkG5tvkWpmWLyzWbAEMsXMX3J_w7k6neY9l7-4mVaYTj7yX5pHSKvlvk9ygtKJcA/s400/IMG_1678.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984511837904642" border="0" /></a><br />காலகாலமாக இப்பகுதி சைவர்களுக்கும் முசுலிம்களுக்கும் முக்கியமாக இருந்துவந்துள்ளது. சைவர்களுக்குச் சில கோயில்கள் இங்கே உண்டு. கூடவே இறுதிச்சடங்கு செய்யும் மிகப்புனிதமான இடமாக அவர்களுக்கு இது இருக்கிறது. முசுலிம்களுக்கு, கன்னியா சுடுநீர்க்கிணறுகளைத்தாண்டி சற்று தள்ளியுள்ள குன்றில் ஏறினால் சியாறத் ஒன்று இருக்கிறது (நாற்பதடி மனிதனின் சியாறத் என்று சொல்லுவார்கள்)<br /><br />சைவர்களுக்கு இப்பகுதி தொடர்பான புராணக்கதைகள் உண்டு. இக்கிணறுகள் இராவணனால் உருவாக்கப்பட்டவை என்றொரு நம்பிக்கை உண்டு. அதன்வழி அந்தியேட்டிச் சடங்குகள் செய்வதற்கான புனித இடமாகக் காலகாலமாக அவர்களுக்கு இந்த இடம் இருந்து வருகிறது. <span style="color: rgb(0, 0, 102);">ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சைவர்கள் அந்தியேட்டி செய்தமைக்குக் கல்வெட்டுச்சான்றுகளும் உள்ளன.</span><br /><br />முசுலிம்களின் சியாறத்தும் மிகப்பழமைவாய்ந்தது. நான் சிறுவயதில் கன்னியாக்கு போகின்றபோது என் பெற்றோர் அந்த சியாறத்தைப் பார்க்கவும் என்னை அழைத்துப்போவார்கள்.<br /><br />கன்னியாக்கிராமம் தமிழர்கள் செறிந்துவாழும் இடமாகவே இருந்தது.<br /><br />போரின்போது எல்லா இடங்களையும் போல கன்னியாவும் போர்வாயில் அகப்பட்டுக்கொண்டது. மக்கள் செத்தார்கள், சிதறி ஓடினார்கள். கன்னியாவைச் சூழவுள்ள பகுதிகள் மக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்ட படைத்துறைக் கண்காணிப்பின் கீழ் இருந்துவந்தது.<br /><br />புலிகள் ஆயுதரீதியாக ஒழிக்கப்பட்டு போரும் ஓய்ந்த பிறகு இவ்விடம் பெரும் சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறியது.<br /><br />கன்னியாச் சுற்றுலாத்தலம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. கடந்த எட்டு மாதங்களில் முப்பது லட்சம் ரூபாய்களை இச்சபை கன்னியாவிலிருந்து வருமானமாகப் பெற்றுள்ளது.<br /><br />தற்போது அரசாங்க அதிபரால் பலவந்தமாக அப்பகுதியின் நிர்வாகம் கைப்பற்றப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtbx9qgzzDN0nGoXj0yHiZaC1kTDnJ8y_du8qyLUoTcCjWiL4Pse5_HAFkRDidVnBbk9J28LtG3z5D4prm3hcgHYWOzwudoXfaATPG2O8U_O0Bnm__mHfDvcn_RvH3mR91GVApYw/s1600/NameBoad.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 316px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtbx9qgzzDN0nGoXj0yHiZaC1kTDnJ8y_du8qyLUoTcCjWiL4Pse5_HAFkRDidVnBbk9J28LtG3z5D4prm3hcgHYWOzwudoXfaATPG2O8U_O0Bnm__mHfDvcn_RvH3mR91GVApYw/s400/NameBoad.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983253962160178" border="0" /></a><br />(திருகோணமலை நகரமத்தியில் நெல்சன் திரையரங்குக்கும் முன்பாக சும்மா நின்ற அரசமரத்தையும் தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்த அரசமரத்தை பவுத்த தொல்கதைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுகள் நடக்கிறது)<br /><br />அங்கே மும்மொழியில் ஒரு அறிவித்தற்பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கன்னியா தொடர்பான சைவர்களின் நம்பிக்கைகள் போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவ்வறிவித்தற்பலகை பிடுங்கப்பட்டதுடன் அருகிலிருக்கும் வெல்கம் விகாரையுடன் கன்னியாவைத் தொடர்புபடுத்தும் தனிச்சிங்களத்தினாலான விளம்பரப்பலகைகளே எங்கும் வைக்கபப்ட்டுள்ளன.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBndZ4he95O7tXrM562qsAkDugn1Ky3kh4Ku6i_HlyMZA8ZnEDCm8Kkk44MLKnfZrE33n6LdyVZ6HnR1IZaPdWrbAI1Im5U_Y8XbYyTkpR9xeWrbF8_5vCQZagmgoW23ML7brcVA/s1600/IMG_1679.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 285px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBndZ4he95O7tXrM562qsAkDugn1Ky3kh4Ku6i_HlyMZA8ZnEDCm8Kkk44MLKnfZrE33n6LdyVZ6HnR1IZaPdWrbAI1Im5U_Y8XbYyTkpR9xeWrbF8_5vCQZagmgoW23ML7brcVA/s400/IMG_1679.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983292306112994" border="0" /></a><br />கன்னியாவுக்கும் சைவர்களுக்குமான தொடர்பு முற்றாக மறைக்கப்பட்டுக் கன்னியாவினை வெல்கம் விகாரையுடன் தொடர்புபடுத்துவதே அங்கு முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிநிரலாகும்.<br /><br /><br />இத்தனைக்கும் கன்னியா வெந்நீர்க்கிணறுகளை அண்டிச்சில இந்துக்கோயில்கள் இருந்தன. அவற்றுள் சேதமடைந்தவற்றை மீளக்கட்ட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.<br /><br />அதேவேளை அப்பகுதியில் புதிதாய் விகாரை ஒன்று கட்டுவதற்காகப் பணம் சேர்க்கும் பிரசாரத்தைக் கன்னியாவில் ஓர் அறைபோட்டு இருந்தவாறு பிக்கு ஒருவர் ஒலிபெருக்கியில் செய்துகொண்டிருக்கிறார்.<br />பெருமளவில் அங்கே வரும் சிங்களச் சுற்றுலாப்பயணிகளே அவரின் இலக்கு வாடிக்கையாளர்கள்.<br /><br />அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு பிள்ளையார் சிலை கனகாலமாக இருக்கிறது. தற்போது அந்தப்பிள்ளையார் சிலைக்கு எதிர்ப்பக்கமாக அதே அரசமரத்தின் கீழ் புத்தர் இருக்கிறார்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfZi2AnTgyv9LMdVLng3kXLKOUtMbUkd92QqnzGbLZMXoeDdbpdWAcpFwDxJotwpEbgwFdWZ9-9WH1Wki2Y6wl8G7g0gkPFUX2hY8m8kR8yFCwHKbQTAlIHp1fWLNTl__pQWebHg/s1600/IMG_1707.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 292px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfZi2AnTgyv9LMdVLng3kXLKOUtMbUkd92QqnzGbLZMXoeDdbpdWAcpFwDxJotwpEbgwFdWZ9-9WH1Wki2Y6wl8G7g0gkPFUX2hY8m8kR8yFCwHKbQTAlIHp1fWLNTl__pQWebHg/s400/IMG_1707.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983267017909442" border="0" /></a><br />கன்னியாவில் அமைந்திருந்த சியாறத்துக்குப் போவது படையினரால் தடுக்கப்பட்டுள்ளது.<br /><br />கதிர்காம வாய்ப்பாடு இங்கேயும் செயற்படுத்தப்படுகிறது.<br /><br />அதிகாரத்தைப் பயன்படுத்தித் தலையிடு - பன்மதத் தலமாக்கு - கைப்பற்று<br /><br />சைவர்கள் அந்தியேட்டிக் கிரியை செய்யப் பயன்படுத்தும் மண்டபத்தில் "சிறீ லங்கா புத்தரின் தேசம்" என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwdA702VcBJlT4Y15w7_10sVSC1M05vqCBBBOEQquSME67L9mwksKBbKQjYquyejzekFb269cQ9v-DQMC9NZPS2u4e4pS4QfXUoJmpNfQOXHHQzqw75vT1wCKshWIGgTj9XRt4jA/s1600/IMG_1704.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 366px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwdA702VcBJlT4Y15w7_10sVSC1M05vqCBBBOEQquSME67L9mwksKBbKQjYquyejzekFb269cQ9v-DQMC9NZPS2u4e4pS4QfXUoJmpNfQOXHHQzqw75vT1wCKshWIGgTj9XRt4jA/s400/IMG_1704.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983276941372082" border="0" /></a><br />கன்னியா ஒரு காலத்தில் தமிழ் பகுதியாக இருந்தது என்பதற்கு சான்றாக இடிந்துபோன நிலையில் ஒரு வாயில் வளைவும், சற்றுத்தள்ளி 8ம் வகுப்புவரையுள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையும் இருக்கிறது.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrfN7KOKMDadVHucbOQzPavZPJGrZXMYg3w0l6uLnvUZJAF57XszscAW3zzsx5f2MvqEE5jLNtEpOXOAra6Q79e5EzI0u9aFWTsNqskDjTUbgqCGqGN6iCTllWo7ioyJF88XWChg/s1600/IMG_1712.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 127px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrfN7KOKMDadVHucbOQzPavZPJGrZXMYg3w0l6uLnvUZJAF57XszscAW3zzsx5f2MvqEE5jLNtEpOXOAra6Q79e5EzI0u9aFWTsNqskDjTUbgqCGqGN6iCTllWo7ioyJF88XWChg/s400/IMG_1712.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543983261424499666" border="0" /></a><br /><br /><br /><span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" ><span style="font-weight: bold;">== முடிவுரை ==</span></span><br /><br /><br /><span style="color: rgb(0, 0, 102);">அதிகாரத்திலிருக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் சிங்கள-பவுத்தப் பேரினவாதத்துக்கும் மிக நெருக்கமான கொள்வினை கொடுப்பினைகள் உண்டு.</span><br /><br />ஆளும் வர்க்கத்தின் நலன்களும் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின் நலன்களும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இதற்கிடையில் தற்போது பிராந்திய, உலக வல்லரசுகளின் நலன்கள் ஆளும் வர்க்க நலன்களோடு பிணைந்துகொண்டுள்ளன.<br /><br />இந்த மூன்று நலன்களுக்கும் எதிராகவும் இடைஞ்சலாகவும் இயங்கிக்கொண்டிருந்த தமிழரின் ஆயுதம் தாங்கிய தேசியப்போராட்டம் முற்று முழுதாகத் துடைத்தழிக்கப்பட்டுள்ளது.<br /><br />வேறெந்த எதிர்ப்பும் இலங்கையில் இல்லை. இருதரப்பாலும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் தான் இம்மூன்று நலன்களதும் பாற்பட்ட நிகழ்ச்சிநிரல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. சிறுபான்மை இனங்களின் தாயகப்பிரதேசங்கள், குடிப்பரம்பல் எல்லாம் குலைக்கப்படுவதன் மூலம் இனியும் ஓர் எதிர்ப்பு எழாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">அதில் ஒரு கூறான பவுத்த சிங்கள ஆக்கிரமிப்பு சிறுபான்மை மக்களைப்பொறுத்தவரை உணர்ச்சிகளைத்தூண்டக்கூடிய ஒன்று.</span><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFeWce2JUwEIyCOnh2bHntMFlB-CUc1wECAUc8_UVmf7d8kk9kltBvzsXFL4pfX4AbeoWpoLUrKQUkPc9Hrhz7yCkZMQ0KV3Gr54lFgApMeMljrFVJUdv768gAzSl6orKE_yWuew/s1600/800px-Flag_of_Buddhism.svg.png"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFeWce2JUwEIyCOnh2bHntMFlB-CUc1wECAUc8_UVmf7d8kk9kltBvzsXFL4pfX4AbeoWpoLUrKQUkPc9Hrhz7yCkZMQ0KV3Gr54lFgApMeMljrFVJUdv768gAzSl6orKE_yWuew/s400/800px-Flag_of_Buddhism.svg.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543984527500896578" border="0" /></a><br />கன்னியாக் கதையை வாசிக்கும் போதும், வன்னி மண் புத்தர் சிலைகளால் நாளாந்தம் நிரப்பப்படும் செய்திகளைப்படிக்கும் போதும், நாகவிகாரையில் கொஞ்ச நேரம் நின்று அவதானிக்கும் போதும் நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். கண் கலங்குகிறோம். கோபமுறுகிறோம்.<br /><br />சாதாரண மக்கள் இவ்வாறுதான் கோபமூட்டப்படுகிறார்கள்.<br /><br />இந்த ஆக்கிரமிப்பை எப்படி எதிர்கொள்வதென்று தம்மாலியன்றளவு யோசிக்கிறார்கள்.<br /><br />அவர்களுக்கு காட்டப்படிருப்பது, தத்தமது மத அடையாளங்களை பெரிதாக்கி, நிறுவி எதிர்கொள்ளும் வழிமுறை மட்டுமே. இதுதான் இன்று மத அடையாளங்கள் சிறுபான்மை மக்களது எதிர்ப்பரசியலோடு பின்னிப்பிணைந்தமைக்கு அடிப்படை. சிங்கள மக்களுக்கும் "பயங்கரவாத, பிரிவினைவாத " நெருக்கடிக்கு ஒரே தீர்வாகப் போதிக்க்கப்பட்டிருப்பதும் இதுவேதான்.<br /><br />ஆக மொத்தத்தில் இலங்கை மக்கள் மத அடையாளங்களது பெரும் போரினுள் அமிழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.<br /><br /><span style="color: rgb(0, 0, 102);">அதைத்தாண்டியும் இலங்கையில் பிரச்சினைகள் உண்டென்று சிங்களவர்களும் மற்றவர்களும் சிந்திக்க மறுக்கிறார்கள்.</span><br /><br />இங்கே நான் மேற்சொன்ன மூன்று தரப்புக்களின் நலன்களில் பேரினவாத-பவுத்த நலன்களே பெரும்பான்மை மக்களை வெல்ல உதவும் ஒரேயொரு பிரசாரக்கருவி. அதனைச் சிங்கள மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மூன்று தரப்புக்களையுமே இலங்கை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம். (<span style="color: rgb(0, 0, 102);">சிங்கள மக்களிடையே விதைக்கப்பட்டிருக்கும் பேரினவாதத்துக்கான ஆதரவு தான் இலங்கை மக்களுக்கு எதிரான எல்லாச் செயற்பாடுகளுக்கும் மிகப்பலம் மிக்க ஆயுதமாக இருக்கிறது</span>. )<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2riDxQLtJtKM3QTrvvWhEayO3VCCRJssURgpuYKxs93B0XFR8U2RGlSO3uqcjtql080PKq1jxgEUVVnGfqffm-AQp59S3xApQ9z_YoVHHWziSH2YvW1RALJj_3Qz7UlznKaCfeg/s1600/pic1.gif"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 381px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2riDxQLtJtKM3QTrvvWhEayO3VCCRJssURgpuYKxs93B0XFR8U2RGlSO3uqcjtql080PKq1jxgEUVVnGfqffm-AQp59S3xApQ9z_YoVHHWziSH2YvW1RALJj_3Qz7UlznKaCfeg/s400/pic1.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5543985217434165218" border="0" /></a><br />அதற்கான வேலைகள் நடைபெறும்போது சமாந்தரமாக இன்னொன்றும் செய்யப்படவேண்டும் . அது சிங்கள-பவுத்த பேரினவாத்தினதும், ஆளும் வர்க்கத்தினதும், உலக - பிராந்திய வல்லரசுகளினதும் நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலுக்கு மறுபடியும் தடையையும் எதிர்ப்பையும் உருவாக்குவது.<br /><br />ஏற்கனவே இருந்த புலிப்பாணி எதிர்ப்பு ஆபத்தானது. செயற்றிறன் குறைந்தது.<br /><br />அதற்கு இலங்கையிலுள்ள சிறுபான்மைச்சமூகங்களும் ஏனைய ஒடுக்கப்படுவோரும் ஒன்று சேர வேண்டும். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இணைக்கும் அரசியற் செயற்றிட்டம் வேண்டும். அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருப்பது இந்த "அடையாளங்களை" எதிரும் புதிருமாக முன்னிறுத்தி அலைக்கழியும் நிலைமையே.<br /><br />புத்தர் சிலைகளின் படையெடுப்புக்கு எதிரான மதம் சார்ந்த சண்டைகள் கூட இவ்வாறுதான் முதன்மை நிகழ்ச்சிநிரலுக்குச் சாதகமாகிப்போகிறது.<br /><br />அதற்கு மத அடையாளங்களின் ஆக்கிரமிப்பு தொடர்பான உணர்ச்சிகர நாடகத்திலிருந்து வெளியில் வந்து இன்னும் கூர்மையாக அடிப்படைப்பிரச்சினை மீதான கவனத்தை ஏற்படுத்த வேண்டும்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);">அதாவது இருண்டதோடெல்லாம் போரிட்டுக்கொண்டிருக்காமல் பேயைக் கண்டுபிடித்து ஒழிக்கவேண்டும்.</span><div class="blogger-post-footer">--
மு. மயூரனின் "ம்..." வலைப்பதிவின் செய்தியோடை வழியாகப் பெறப்பட்டது.
This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.
--</div>மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.com29